Wednesday, November 28, 2012

No Bra Dayயும் சில எண்ணங்களும்!



"அதக் கேட்க நீர் யார் ஐசே? நான் வைஃபுக்கு வாங்குவேன் இல்ல மகளுக்கு வாங்குவேன்"
கடையின் பணியாளரிடம் உரத்த குரலில் சத்தமிட்டார் ஒரு கனவான்.

Share This:   FacebookTwitterGoogle+

Thursday, November 15, 2012

வாங்க பாஸ்..அழலாம்!


ரு முறை அக்கா பையனுக்கு ஊசி போட ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, நானும் கூடப் போயிருந்தேன். லட்டு லட்டா அழகான குழந்தைகள். பெண்குழந்தைகள்தான் அதிகம். 
Share This:   FacebookTwitterGoogle+

Saturday, November 3, 2012

காதல், ஜீ, பெண்ராசி - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!


பஸ்ல காதல் படம் போட்டிருந்தாங்க. 
பரத்! - நல்ல நடிகரா இருந்தார். பாய்ஸ்ல வந்த பசங்கள்ளயே முதல்ல தேறி வந்தவர் அவர்தான்.

Share This:   FacebookTwitterGoogle+

Sunday, October 28, 2012

ராஜனின் கைது ; கற்பிக்கப்படும் இணைய சுதந்திரம்?



ஒரு பெண் சம்பந்தப் படுத்தப்பட்டு, பாலியல் தொல்லையோடு  தொடர்புபடுத்தி மேற்கொள்ளும் எந்த ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு ஒன்றே சாமானியன் ஒருவரின் வாழ்க்கை முழுவதற்கும் தண்டனை தரப் போதுமானது - நம் சமூகத்தில்!
Share This:   FacebookTwitterGoogle+

Saturday, October 27, 2012

தாய்மையும் சில ஆண்களின் சாதனையும்(?)!




பேரூந்தில் ஒரு பெண் கணவனுடன் முன் இருக்கையில். இருவரும் ஏதோ மெல்லிய குரலில் பேசுவதும் கணவன் சற்று எரிச்சலுடன் பேசுவது போலவும் தெரிந்தது. முடிவில் மிகுந்த சலிப்புடன் எழுந்து நின்றார். 

Share This:   FacebookTwitterGoogle+

Thursday, October 18, 2012

In the Mood for Love


காதல் என்ற உணர்வு எப்படியெல்லாம் உருவாகிறது? அது உடல் சார்ந்த தேவைகளின் அடிப்படையாகக் கொண்டு மட்டும்தான் நிகழ வேண்டுமா? ஒருவர் மீது கொள்ளும் சிறு அக்கறையைக் காதல் என்று சொல்ல முடியாதா? அப்படியானால் அது திருமணமாகாதவர்களுக்கு இடையிலே மட்டும்தான் எழ வேண்டுமா?
Share This:   FacebookTwitterGoogle+

Thursday, October 11, 2012

Water, Mamma mia - ஓர் அனுபவம்!



ஒரு நல்ல அனுபவத்தை சரியான முறையில் பெறாமல் அரைகுறையாக அனுபவித்து பின்னர் வருத்தப்படுவது யாருக்கும் புதிதல்ல! 


Share This:   FacebookTwitterGoogle+

Monday, October 1, 2012

துப்பாக்கி!



வாழ்க்கையில் அனுபவத்தைப் போல எதுவும் பாடம் கற்றுக் கொடுப்பதில்லை. ஆனாலும் கற்ற பாடத்தை மீண்டும் பிரயோகிக்க, இரண்டாவது சந்தர்ப்பம் ஒன்றை வாழ்க்கை வழங்குவது மிகக் குறைவு.
Share This:   FacebookTwitterGoogle+

Tuesday, September 18, 2012

ஃபேஸ்புக் அலப்பறைகள்!



வேலைன்னு வந்துட்டா நமக்கு வேற எதுவுமே நினைப்புல இருக்காது அவ்ளோ சின்சியரான ஆளுங்க! அக்கம்பக்கத்தில என்ன நடக்குதுன்னே பாக்காம சமயத்தில கீ போர்டை விட்டுட்டு மேசைல தட்டிட்டு இருப்போம்னா பாருங்க!

Share This:   FacebookTwitterGoogle+

Friday, August 31, 2012

சிங்களப் பாடல்கள் - ஓர் இசை அற்புதம்!



"உனக்கு சிங்களப்பாட்டு பிடிக்குமா?"

அலுவலகத்தின் உணவு வேளையின்போது சிங்களப் பொண்ணு ஒண்ணு கேட்டது.
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, August 15, 2012

டேட்டிங்! (Dating)

"டேட்டிங் எண்டா ஃபிரண்ட்ஸ்கூட போய் சுத்தி, சாப்பிட்டு வர்றதுதானாம்!"

அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீ.

ஒரு நிமிஷம் அவனுக்கு எதுவும் புரியவில்லை. சொன்னது அலுவலகத்தில் கூடவே வேலை பார்க்கும், சின்ன வயசில இருந்தே கொழும்பில் வளர்ந்த, நன்கு படித்த இளம்பெண். 

'ஒருவேளை நம்மளக் கலாய்க்கிறாளோ?’ யோசனையுடன் பார்த்தான். ‘சேச்சே அப்பிடியிருக்காது’ கண்களில் அப்படித் தெரியவில்லை.

சீரியசாகத்தான் சொன்னார். அம்மம்மாகூட உட்கார்ந்து பூஜையறையில் தேவாரம் பாடிட்டு, கந்தன்கருணை படம் எல்லாம் பாக்கிற பெண் அப்படிச் சொன்னதில் பெரிதாக ஆச்சரியப்படவும் ஏதுமில்லை.  

குறித்த பெண் ஸ்டைலா, மொடேர்னா ட்ரெஸ் பண்ணி எப்பவும் ஐபோட்ல பாட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார். ஒரு முறை ஆர்வக் கோளாறில் அவர் ஐபோட்டைக் காதுக்கு கொடுத்துவிட்டு உடனேயே கலவரமாகித் திருப்பிக் கொடுத்த அனுபவம் ஜீக்கு இருந்தது. ஐபோட்டில் கந்தசஷ்டி கவசம் கதறிக் கொண்டிருந்தது. 

'சரி அந்தப்பிள்ளையும் என்னத்தையோ புதுசாத் தெரிஞ்சுகொண்டிருக்குது. எதுக்கும் லைற்றா ரோக்கப் (Talk) போடுவம்' என முடிவுசெய்து,   

"அப்பிடியா? எப்பிடி இப்பிடியெல்லாம்?" ஆச்சரியத்துடன் கேட்டு வைத்துவிட்டு அமைதியாக இருந்தான் ஜீ.

“அன்ரிதான் சொன்னா” அந்தப்பெண் சொல்ல ஆரம்பித்தார்.

'அதில பாருங்கோ, இந்த லேடீஸ் எல்லாம் ஒருத்தனுக்கு ஒரு விஷயத்தை ஆரம்பிச்சாலே, முழுசா சொல்லி முடிச்சுட வேணுமெண்டு முடிவெடுத்த பிறகுதான் சொல்லுவினம். அப்பிடி ஒரு தடவை முடிவு பண்ணிட்டா... பிறகு தன்னோட பேச்சை மட்டுமில்ல பக்கத்தில சிக்கி இருக்கிறவன்ர கதறல் கெஞ்சலைக்கூட கேட்க மாட்டினம் . ஒரு வழி பண்ணிடுவினம்' - இப்படியாக நம் பெரியவர்கள், அனுபவஸ்தர்கள் சொல்வதை என்னைப் போலவே நீங்களும் கேட்டிருக்கக்கூடும்.

ஜீயும் வழக்கம் போல 'எனக்கு இதுல இன்ட்ரெஸ்ட்டே கிடையாது. ஏதோ நீங்க சொல்றதால கேக்கிறன்' என்கிற ரீதியில் ஒரு முகபாவத்தை செட் பண்ணி வச்சிருந்தான்.

அன்ரி லண்டன்ல இருந்து வந்திருந்தா. அவ ஒரு 'பீட்டர் பேர்வழி' என்று தெரிந்தது.  அவ பேச ஆரம்பிக்கும் ஐந்து வசனங்களில் மூன்று 'அங்க லண்டன்ல எல்லாம்...' என்றே ஆரம்பிக்கும். மீதி இரண்டு 'என்ன இது? இங்க எல்லாம் இப்பிடி இருக்கு?' என்பதாக அமையும்.  

வெள்ளைக்காரனெல்லாம் விஞ்ஞானிகள், வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தவனெல்லாம் அறிவாளிகள் என்ற தீவிர நம்பிக்கை கொண்டது நம் தமிழ்ச்சமூகம். காலங்காலமா கதை கேட்பது, கதை சொல்வது, கதை விடுவது என்பவற்றின் மூலமாகவே நமது பொது அறிவை விருத்தி செய்துகொள்பவர்கள் நாங்கள். வெளிநாட்டில இருந்து யாராவது வீட்டுக்கு வந்திருந்தா என்ன பண்ணுவோம்? அதேதான் அங்கயும் நடந்திச்சுது. 

அன்ரியைச் சுத்தி இருந்து கதை கேட்டுக்கொண்டிருக்க, அவவும் உற்சாகமா துபாய்ல இருந்து வந்த வடிவேலு மாதிரியே சொற்பொழிவு ஆத்திக் கொண்டு இருந்திருக்கிறா. இடையிடையே மானே, தேனே போல, "என்ன ஊர் இது?", "என்ன வெக்கை?", "என்ன வெய்யில்?", "எவ்வளவு டஸ்ட்?" இப்படியான கேள்விகள் வேற. அந்தக் கேள்விகளை இன்டிரெக்டா இப்படியும் பொருள் கொள்ளலாம். "இங்கயெல்லாம் எப்பிடி இருக்கிறீங்க?", "மனுஷன் இருப்பானா இங்க?", "ஆமா, நீங்க எல்லாம் மனுஷர் தான?"- இப்பிடியே போயிட்டு இருந்திருக்குது! 

அவ்வப்போது டிரெக்டா "என்ன கன்ட்ரி இது? இன்னும் அப்பிடியே இருக்குது?" அன்ரி கேட்க, இவைக்கும் உண்மை உறைச்சு ஃபீலாயிட்டிணமாம். பிறகென்ன வழக்கம்போல, இந்தக் கண்ட்ரில பிறந்த குற்றத்தை எண்ணி வெட்கி, அவமானப்பட்டு, அசடு வழிந்து சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அன்ரியும் இதே கன்ட்ரிலதான் பிறந்து முப்பது வயசுவரை வாழ்ந்தவங்க என்பது அவ்வளவு முக்கியமல்லாத விஷயம்.

அன்ரியைப் பொறுத்தவரைக்கும் எல்லாம் நல்ல படியாத்தான் போயிட்டிருந்திருக்கு. ஆனால்  பாருங்க இடைல ஒரு ஃபுளோல பெருமையோட பெருமையா "என்ர மகளும் டேட்டிங் எல்லாம் போறவ" எண்டு சொல்லியிருக்கிறா. அங்கதான் வந்திருக்கு வில்லங்கம்.   

"டேட்டிங் எண்டா என்ன?" - ஓடியன்சில இருந்து யாரோ ஒரு காரெக்டர் கேள்வி கேட்டிருக்குது. 
நிச்சயமா இந்தப்பெண் இல்லை. ஏனெண்டா அவையின்ர குடும்பத்திலயே நாலு பொது விஷயம் தெரிஞ்ச விவரமான ஆள் அதுதான். வலு கெட்டிக்காரி என்கிற ஒரு இமேஜ் இருக்குதாம். அதை  மெயின்டெயின் பண்றதுக்காகவே, அவசரப்பட்டு எங்கேயுமே இப்பிடி கேள்வி கேட்கிறதில்ல.

இந்த இடத்திலதான் அன்ரிக்கு பெரிய பிசகு பண்ணிப்போட்டன் எண்டு விளங்கிருக்கு. உடனேயே சடன் பிரேக் போட்டுட்டு, மனுசி முழுசியிருக்கு. யோசிச்சுப்பாருங்க எம்.பீ.ஏ. படிச்ச இந்த தலைமுறைப் பெண்ணே இவ்வளவு விவரமாயிருக்குது. அப்ப, இதுக்கு முந்தின ஜெனரேஷன் அம்மா? அதுக்கும் முந்தின ஜெனரேஷன் அம்மம்மா? அவங்கள் எல்லாம் எவ்வளவு விவரமாயிருப்பாங்க? இந்த விவரக் கூட்டத்துக்கு விளங்கப்படுத்திறது எப்பிடி?

உண்மையச் சொன்னா நாளைக்கு அன்ரியையே ஒரு மாதிரியாத்தான் பாப்பினம். கொஞ்ச நேரத்திலயே இதையெல்லாம் அனலைஸ் பண்ணி அன்ரி சொன்ன பதில்தான் 'டேட்டிங் எண்டா ஃபிரண்ட்ஸ்கூட போய் சுத்தி, சாப்பிட்டு வர்றது!'

கொடுமையைப் பாருங்க தனது மகள் டேட்டிங் போறதைப் பெருமையாச் சொல்ல முடிந்த அம்மாவுக்கு டேட்டிங் எண்டா என்னங்கிறதை அதே பெருமையோட சொல்ல முடியுதா? நாங்களும் வெள்ளைக்காரனோட ஈக்குவலாத்தான் வாழுறம் எண்டுறத சொல்லுவமெண்டா முடியுதா? இவையளெல்லாம் எப்பதான் வளரப் போயினமோ? பாவம் மனுசி உள்ளுக்குள்ள நொந்து போயிருக்கும்.

அதுக்குப் பிறகு அந்தக் குடும்பமே அன்ரிகூட சந்தோஷமா அடிக்கடி 'டேட்டிங்' போயிட்டு இருக்கினமாம். அதாவது ஹோட்டல் ஹோட்டலா போய் விதம்விதமா சாப்பிட்டுக்கொண்டிருக்கினமாம்.

'ச்சே! எனக்குன்னு வந்து வாய்க்குதுங்க... எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?' - ஜீ நொந்துபோயிருந்தான்.

திடீரென ஏதோ உண்மை உறைக்க, அதிர்ச்சியடைந்து தலையில் கைவைத்துக்கொண்டிருந்தான்.

இந்த சம்பாஷனை நடந்து கொண்டிருந்த போது, ஜீயும் அந்தப் பெண்ணும் KFCல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

* * * * * * * *

மேலேயே கதை முடிந்துவிட்டது. ஆனாலும் எனக்கொரு கெட்ட பழக்கம். பிறகு என்ன நடந்தது என்பது பற்றி ஜீ என்னிடம் சொல்லியிருந்தான். அதையும் சொல்லவேணுமெண்டு நினைகிறேன். ஜீயின் அந்த அட்டகாசமான 'டேட்டிங்' நடந்த அன்றைக்கே ஜீயின் அந்தப்பெண்ணுடனான நட்பு 'பணால்' ஆகிட்டுதாம். காரணம்... 

ஜீயிடமும் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது.

தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது ஒரு விஷயத்தை தவறாகப் புரிந்து வைத்திருந்தால், உண்மையை எடுத்துச் சொல்லிப் புரியவைத்து விடவேண்டும் என்று நினைப்பான். இந்த சமூகத்தின்மீது அக்கறை உள்ளவனாக (இப்படி அவனே சொன்னான்) தனது கடமை அது என்பான். இருந்தாலும் இது கொஞ்சம் சிக்கலான விஷயம்.

அவன்கூட எல்லாம் நாலு வருஷத்துக்கு ஒருமுறைதான் போனால் போகுதென்று ஒரு பெண் வந்து ஹாய், ஹலோ சொல்லும். அதையும் அவனே வில்லங்கமாக எதையாவது சொல்லித் தெறிச்சோட வைக்கிறது வழக்கம். முதலில் எதுக்கு இப்ப தேவையில்லாம.. என்று யோசித்திருக்கிறான். 'சரி வர்றது வரட்டும் பார்க்கலாம்... நமக்கு உண்மைதான் முக்கியம்!'

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கஷ்டப்பட்டு போதுமான இடைவெளிவிட்டு பொறுமையா, பக்குவமா 'டேட்டிங்'கின் தோற்றம், வரலாறு, தாற்பரியம் பற்றிக் கிளாஸ் எடுத்தான். 

அந்தப் பெண் சிம்பிளா ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். ஜீ சொந்தச் செலவிலயே சூனியம் வச்சுட்டான் என்கிறது அந்த முதல் கேள்வியிலேயே தெரிந்தது... 

"அப்ப என்ர தங்கச்சிய கூடாதவள் என்கிறியா?"
Share This:   FacebookTwitterGoogle+

Thursday, August 2, 2012

தமிழ்ப் பெண்களின் அம்மாக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?


"தம்பி இந்த 'சீட்'டை கொஞ்சம் சரிச்சு விடுங்க"

பேரூந்தில் எனது இருக்கைக்கு அருகில், நடையை அடுத்த இரு இருக்கைகளில் யன்னலோரத்தில் அவர், கையில் குழந்தை. பக்கத்து இருக்கையில் எனக்கு அருகாமையில் அந்தப் பெண்.

எனது பெண்ராசி காரணமாக நான் பெண்களுக்கு உதவி செய்வதில் யோசிப்பதால், "அந்த பட்டனை ப்ரெஸ் பண்ணிட்டே சரியுங்க"
Share This:   FacebookTwitterGoogle+

Friday, July 27, 2012

ரீமா, செல்வராகவன், ஃபீலிங்க்ஸ் - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!


கடந்த வாரம் பஸ்ல மின்னலே படம் போட்டிருந்தாங்க. கவுதம் மேனன் படங்களில், குறைந்த பட்ஜெட்டில், அதிகமான ரிச் லுக்கில்! ஒவ்வொரு காட்சியமைப்பிலும் அவ்வளவு மினக்கெடல்!
Share This:   FacebookTwitterGoogle+

Tuesday, July 24, 2012

ஜூலை இருபத்துமூன்றுகள்!


"நீ ஏமாத்துறே...நான் போலீசில சொல்லுவேன்!"

"போலீஸ் நான் சொல்றதத்தான் நம்பும். நீ தமிழ் நீ சொல்றதக் கேக்காது"

இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த காலம். கொழும்பில், அயல் வீட்டில் ஐந்து வயதே நிரம்பிய இரு தமிழ், சிங்களக் குழந்தைகளிடையே விளையாட்டின் போதான பேச்சு! நம்பக் கஷ்டமாக இருந்தது. தமிழர்கள் சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அந்தக் குழந்தைக்கு யார் சொல்லிக் கொடுத்தது?
Share This:   FacebookTwitterGoogle+

Tuesday, July 17, 2012

The Willow Tree (2005)



கண்ணாடிச்சுவரில் தெரியும் தன் விம்பத்தைக் காணும் யூசுப் உற்சாகம் வடிந்து, அருகில் சென்று பார்க்கிறார். சிறுவயதில் பார்த்த தன் முகத்தை முப்பத்தெட்டு வருடங்களுக்குப் பின் பார்த்ததும், ஏமாற்றத்தில், அதிர்ச்சியில், அமைதியாகி விடுகிறார்.
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, July 11, 2012

இணையப் போராளி ஜீ..



ணையப் போராளி ஜீ தீவிர சிந்தனையிலிருந்தான்!

இப்போதெல்லாம் எதற்கு எழுதவேண்டும் என்றொரு கேள்வி அவன் மனதில் அடிக்கடி எழுகிறது! இதே கேள்வி மற்றவர்களிடம் எப்போதோ எழுந்தது வேறு விஷயம் 'இவனெல்லாம் எதுக்கு எழுதுறான்?'

எந்த ஒரு சீரியசான விஷயத்தையும் எள்ளலாக, நக்கலாக கூறிச் செல்லலாம் என முட்டாள்தனமாக நம்பியதால் ஒரு மொக்கைப் போராளியாக பெயர் வாங்கியிருந்தான்! அதெல்லாம் செல்லாது சமூக அக்கறை என்பது ஏ சமூகமே எனக் கேள்வி கேட்பது, உணர்ச்சியுடன் பொங்குவது, விழிப்புணர்ச்சி வழங்குவது மட்டுமே என்கிறார்கள் சமூக போராளிகள்! 
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, June 27, 2012

இந்திய அமைதிப்படையும் கேணல் ஜெயமோகனும்!



எழுத்து எவ்வளவு வலிமையானது என்பதை நான் உணர்ந்துகொண்ட தருணம் அது! வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு. என்போலவே பலரும் அன்று முழுவதும் மன உளைச்சலுடன்,தூக்கம் தொலைந்து அவதிப்பட்டிருக்கலாம். இந்திய அமைதிப்படை குறித்த ஜெயமோகனின் கட்டுரை அது!

Share This:   FacebookTwitterGoogle+

Tuesday, June 19, 2012

வெள்ளைக்கார அக்கா, பேய்வீடு - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!



பேரூந்தில் என் இருக்கைக்கு முன் இருக்கையில் ஒரு வெள்ளைக்கார ஜோடி!

படம் ஆரம்பித்தார்கள் அரவான்! ஒரே நேரத்தில் பலர் பேசுவது அல்லது கத்துவது அல்லது கூவுவது, மற்றும் அடிக்கடி குளோசப்பில் பசுபதி மற்றும் பலரின் சிவப்பேறிய வாய் எனக் குதூகலமாக ஆரம்பித்தது. 
Share This:   FacebookTwitterGoogle+

Tuesday, June 12, 2012

ஆன்டி & பூச்சாண்டி!


'எப்பவுமே முகப் பூச்சு ஓவரா பூசிட்டு திரியிற ஆன்டிங்களைப் பூச்சாண்டிகள் என கூறலாமா?'
Share This:   FacebookTwitterGoogle+

Friday, June 8, 2012

இசைராஜா!



ளையராஜாவின் ஒரு ஆச்சரியத்தை முழுமையாக சந்திக்க நேர்ந்தது, மூன்று மாதங்களுக்கு முன்னர், தற்செயலாக! இவ்வளவு நாட்கள் எப்படித் தவற விட்டேன்? அதற்கு முன்னர்பாடலின் ஆரம்பம் மட்டுமே ஓரிரு தடவை கேட்டதுண்டு.

Share This:   FacebookTwitterGoogle+

Tuesday, May 29, 2012

யானை பார்த்த கதை!



னுஷனுக்கு அவ்வளவு சந்தோஷம்!

முகமெல்லாம் சிரிப்புப் பரவ, டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில இடம்பிடிச்சுக் கொண்டான், ஊர் வழக்கப்படி முதலில் முருகனைக் கும்பிட்டுவிட்டு எல்லோரும் ஏறிக்கொண்டார்கள்.
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, May 23, 2012

தட்டி வான்(Van)!

'என்ன பிளைட் அது!யன்னலெல்லாம் லொட லொடன்னு சத்தம் போட்டுக்கொண்டு...  தட்டிவான் மாதிரி!'

ஏ -9 திறக்கப்படாத போர்க்காலத்தில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தனது விமானப்பயண அனுபவத்தைத்தான் ஒருவர் இப்படிக் கூறினார்.



Share This:   FacebookTwitterGoogle+

Thursday, May 17, 2012

The Piano Teacher (2001)


சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறிய தவறுக்காக ஆசிரியை ஒருவரிடம் மிக மோசமாக அடிவாங்கி, கைகள் கன்றிப்போய், அடிப்பதற்குப் பயன்படுத்திய தடியில் சிறு முட்கள் போல இருந்தவை கீறி ரத்தம் கசிந்தபோது, அதிர்ச்சியாகப் பார்த்த ஆசிரியர் ஒருவர் சக ஆசிரியரிடம் கூறியது - 'பிஞ்சுக்கையை எப்பிடி அடிச்சிருக்கா பார்', 'கல்யாணம் ஆகாததுதான் அவவின்ர பிரச்சினை!'

Share This:   FacebookTwitterGoogle+

Thursday, May 10, 2012

Chungking Express (1994)



ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத, சோகத்திலும் மெல்லிய நகைச்சுவை இழையோட இரண்டு கதைகள். இரண்டு கதைகளிலும் கதாநாயகன் போலீஸ் இளைஞர்கள் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. இருவருக்கும் காதல் தோல்வி!

Share This:   FacebookTwitterGoogle+

Tuesday, May 8, 2012

விஜய் காமெடி, facebook, அட்வைஸ் - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!



நேற்று பேரூந்தில படத்துக்குப் பதிலா காமெடி டி.வி.டி. போட்டிருந்தாங்க. டைட்டில் 'விஜய் காமெடி'ன்னு போட்டிருந்திச்சு! முதல் 'சச்சின்' படம் - வடிவேலுவும் விஜயும் அதகளம் பண்ணிட்டிருந்தாங்க.  கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கும் மேல! சந்தோஷமாப் பாத்துட்டிருந்தேன்.  
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, May 2, 2012

பில்லா 3 - கதை ரெடி!


இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், அஜித் நடித்து பெரு வெற்றியடைந்த  பில்லா படத்தைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான பில்லா 2 படத்திலும் இதே கூட்டணி இணைவதாக இருந்தது. சில காரணங்களால் இணைய முடியாத இக்கூட்டணி மீண்டும் இணைந்து பில்லா 3 படத்தை உருவாக்குவது குறித்து பேச்சு...
Share This:   FacebookTwitterGoogle+

Thursday, April 26, 2012

Thursday, April 19, 2012

என்னா பார்வை!

என்ன பார்வைடா சாமி! இப்படியொரு பார்வையை நான் வாழ்க்கைல சந்திச்சதேயில்ல!

பொதுவா பொண்ணுங்க நம்மளைப் பார்த்தாலே முறைச்சுத்தான் பாப்பாய்ங்க அதெல்லாம் நமக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல! ஆனாலும் இந்த வாட்டி ரொம்ப கொலவெறியோட, கொடூரமா!

Share This:   FacebookTwitterGoogle+

Monday, April 16, 2012

A Separation (2011)


உயர் நடுத்தரவர்க்க தம்பதிகளான நடேர் (Nader),சிமின் (Simin) இருவரும் விவாகரத்து வழக்கிற்காக நீதிபதி முன் அமர்ந்திருக்கிறார்கள்.

Share This:   FacebookTwitterGoogle+

Monday, April 9, 2012

டெரர் கும்மியின் அங்கீகாரம்!




நாங்க எல்லாம் சின்ன வயதில இருந்தே கதை, கட்டுரை, கவிதை போட்டிகள்னா  முதல் ஆளா............வெளிநடப்பு செய்திடுவோம்! அவ்வளவு பொருத்தம்!

Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, March 21, 2012

சமீரா - ஒரு கொடுங்கனவு!


இப்போதெல்லாம் பேரூந்துப் பயணங்களில் எந்த ஒரு தெலுங்கு மொக்கைப் படத்தைக்கூட  தாங்கும் மனவலிமையைப் பெற்றிருந்தாலும், சமீரா ரெட்டியின் படமோ, பாடலோ வந்துவிடக் கூடாதே என்ற பயம் இன்னும் தொடர்கிறது!
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, March 14, 2012

கர்ணன் - போராளி!



ர்ண கொடூரம் என்று சொல்வார்கள்தானே? எப்படி அந்தச் சொல் உருவாகியது? கர்ணனுக்கும் கொடூரத்துக்கும்  என்ன சம்பந்தம்? கர்ணன் அவளவு கொடூரமானவனா? அப்படித் தெரியவில்லை! கர்ணனை எல்லாரும் திட்டமிட்டு கொடூரமாக கொன்றதால் அப்படி ஒரு சொல் உருவாகியிருக்குமோ?

Share This:   FacebookTwitterGoogle+

Thursday, March 8, 2012

மகளிர்தினமும் தமிழன் பெருமையும்!



ஜீ பெண்களை மிகவும் மதிப்பவன், நேசிப்பவன் என்ற ஒரே காரணத்துக்காகவே இன்று இந்தப்பதிவை எழுதுகிறான். மற்றபடி இந்தப்பதிவின் மூலம் பெண்வாசகிகளை அதிகரித்துக் கொள்ளும் எந்த உள் நோக்கமும் இல்லை!

Share This:   FacebookTwitterGoogle+

Monday, March 5, 2012

The Artist (2011)


புகழின் உச்சியில் இருக்கும் ஒரு கலைஞன் தனது பெயர், அந்தஸ்து, பணம் எல்லாவற்றையும் இழந்து தனிமைப்படுத்தப் படும்போது அவனது உணர்வுகள் எப்படியிருக்கும்?

Share This:   FacebookTwitterGoogle+

Monday, February 27, 2012

சுஜாதா! சுஜாதா!



விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, எந்தவித கேள்விக்கும் உள்ளாக்காமல் மிகச்சிலரை மட்டுமே ரசிக்க, நேசிக்க முடிகிறது. அப்படி எந்த சமரசமும் செய்துகொள்ள விரும்பாமல் நான் ரசிக்கும் ஒருவர் சுஜாதா! ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது தன்னை நினைவு படுத்திப் போகிறார். என்னைப் போல பலருக்கும் இப்படியிருக்கலாம். 

Share This:   FacebookTwitterGoogle+

Tuesday, February 21, 2012

ஒரு பதிவரும் சில பெண்களும்!



ம்ம அபீஸ்ல செக்ரெட்டரி ஒரு சிங்களப் பொண்ணு! அபீஸ்ல அது மட்டும்தான் ஒரேயொரு பொண்ணு!

அந்தப் பொண்ணு இருக்கே... பார்க்கிறதுக்கு தப்சிக்கு அங்கங்க மானாவாரியா குளவி கொட்டினமாதிரி இருக்கும்!

Share This:   FacebookTwitterGoogle+

Monday, February 13, 2012

கவனிப்பு!



"ஐந்தரை மணிக்கு ஐட்டம் பஸ் ஸ்டாப்புக்கு வந்துடும்"- அறிவுறுத்தப்பட்டிருந்தேன்.

எனக்கு இது முதல் அனுபவம். உள்ளே இருக்கிற டென்ஷன் கண்களில் தெரிந்து விடாமல் கவனமாக,சுற்றுமுற்றும் போலீஸ் நடமாட்டம் இருக்கிறதா என கவனித்தேன்.

கவனிப்பு என்பது மிக முக்கியமான விஷயம். அதுவும் சில விஷயங்களில்  அதீத கவனிப்புத் தேவை.


அவளின் அடையாளம் - அழகி! ப்ளூ ஜீன்ஸ், வைட்  டீ ஷர்ட்!  டீ ஷர்ட்டின் மார்பில் Shut the front door! என்று எழுதியிருக்கும். ரீபோக் ஷூ அணிந்திருப்பாள்.

அவள்தான் ஐட்டம்! - அப்படி நீங்கள் நினைத்தால், நான் பொறுப்பல்ல!

அவள் தோளில் Laptop பை. அதற்குள் கன கச்சிதமாக அடுக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளில்...ஐட்டம், பிரவுன் சுகர்!


தோ அவள்தானா!எதிர்பார்த்த மாதிரியே என்னருகே வருகிறாள்! ஆனாலும் எதிர்பார்க்கவில்லை - இவ்வளவு அழகாயிருப்பாள் என்று! இவளுக்கு ஏன் இந்த வேலை? இவள் எல்லாம் பணம் சம்பாதிக்க இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா? எவ்வளவு ஈசியா..

எனது அடையாளம் சொல்லப்பட்டிருக்கும். ஆனாலும் கண்டு கொண்ட மாதிரியே காட்டிக்கொள்ளவில்லை - அனுபவசாலி! ஒரு சிறு சலனம்...சிறு கீற்றுப் புன்னகை...ம்ஹூம்!

ஆனால் நான்...அவள் ஒரு 'ம்..' சொன்னால் என் ஜாதகத்தையே ஒப்புவித்து விடுவேனோ எனத் தோன்றியது. வைட்  டீ ஷர்ட்டின் மார்பில் 'Shut the front door!' பார்த்து பாதி திறந்த வாயை மூடிக்கொண்டேன்.

'எதுவும் பேசாமல் உன்னோட பெட்டியை அவள் பக்கத்துல வக்கிறே நம்ம சங்கேத கேள்வி கேட்டு, பதில் கன்ஃபர்ம் பண்றே'

முதல் கேள்வி 'மன்மோகன் உப்பு யூஸ் பண்ணுவாரா?', பதில் மௌனம்!

கேட்டேன். மௌனமாயிருந்தாள்! லேசாகப் புன்னகைத்தது போல் தோன்றியது, பிரமையாகக் கூட இருக்கலாம்.

இரண்டாவது கேள்விதான் உதைத்தது. எதுக்கு இப்பிடி ஒரு கேள்வி? நானெல்லாம் பொண்ணுங்க கிட்ட வலியப் போயி பேசினதே இல்ல! பெயர்கூடக் கேட்காத என்னைப் போய்...கேள்வி இதுதான்!

- ப்ரா சைஸ் என்ன?
- 16 GB

என்ன பார்க்கிறீர்கள்? கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தம் இருந்தா பிறகென்ன சங்கேத வார்த்தை?

அது சரி..எப்படிக் கேட்பது? தயங்கி..ஒருவாறு தொழில் தர்மத்தை(?!) நினைத்து மனதைத் தேற்றித் திடப்படுத்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் நெருங்கி...

அவள் காதிலிருந்து ஹெட் ஃபோனை அகற்றுவதற்கும், நான்கேட்பதற்கும் சரியாக இருந்தது


'ஏழாக இருக்கலாம்!'

- இது பதிலில்லையே என்கிறீர்களா? அது பதிலில்லை..... அவளின் செருப்பு சைஸ்!

நல்ல கனமான ஹீல்! ஒரே அடியில் வாயில் உப்புக் கரித்தது!

காலையிலிருந்து அஃபீசில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கியவன், திடீரெனக் காதலி சந்திக்க வர முடியாதென்றதில் காண்டானவன், ஒரு 'பைல்ஸ்' ஆன்டி, பஸ்ஸில் இடித்து ஒரு பெண்ணின் முறைப்பைச் சம்பாதித்த ஆசைமட்டும் நரைக்காத பெரிய மனுஷன், முப்பத்தைந்து  கடந்தும் திருமணம் கூடிவராத பெண்மணி - எல்லோரும் ஏக காலத்தில் சமுதாய அக்கறை கொண்டதில்...
இதற்குமேல் சொல்ல வேண்டுமா?

'அய்யய்யோ என் பெட்டி தொலைந்தால் உயிரோடு விடமாட்டாங்களே...' மனம் அலறியபோது...

கையில் தவறிய எனது பெட்டியுடன், ஏதோ சொல்லிக் கூட்டத்தை விலக்கி, கீழே விழுந்து கிடந்த என்னை நோக்கி எழுவதற்குக் கைகொடுத்தாள் அவள்..

அழகி!
ப்ளூ ஜீன்ஸ், வைட் டீ ஷர்ட்.
Shut the front door!
 தோளில் Laptop பை. முக்கியமாக...ரீபோக் ஷூ!

Share This:   FacebookTwitterGoogle+

Tuesday, February 7, 2012

Samaritan Girl



சியோலிலுள்ள பள்ளி மாணவிகளான யோ-ஜின், ஜே-யோங் இருவரும் நெருங்கிய தோழிகள். ஐரோப்பாவைச் சுற்றிபார்க்க வேண்டுமென்ற ஆசை இருவருக்கும்! அதற்கு நிறையப் பணம் வேண்டுமே? என்ன செய்வது? உழைத்துச் சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார்கள். குறுகிய காலத்தில் பள்ளி மாணவிகளால் அப்படி என்ன தொழில் செய்து சம்பாதிக்க முடியும்? உலகின் புராதன தொழில்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்! ப்ராஸ்டிட்யூஷன்!

ஜே-யோங் பாலியல் தொழிலாளியாக, யோ-ஜின் அவளது ஏஜண்டாக செயற்பட, பணம் சேரத் தொடங்குகிறது! ஜே-யோங் தனது வாடிக்கையாளர் பற்றி, அவர்களுடனான உரையாடல்களை  விபரித்துக் கூறுவாள். இது யோ-ஜினுக்குப் பிடிப்பதில்லை. அவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்கிறாள் யோ-ஜின்!

தன்னை வசுமித்ரா என அழைக்குமாறு கூறுகிறாள் ஜே-யோங். வசுமித்ரா ஆதி காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த பெண் என்றும், அவளுடன் உறவுகொண்ட ஆண்கள் எல்லாரும் புத்தபிட்சுகளாக மாறிவிடுவார்கள் என்றும் அவளது அன்பு அவ்வாறு அவர்களை மாற்றிவிடுமாம் என்றும் கூறுகிறாள் ஜே-யோங்.



தனது வாடிக்கையாளர்களில் ஒரு இசைக்கலைஞனுடன் காதல் கொள்கிறாள் ஜே-யோங். இது தெரிந்ததும் யோ-ஜின் கோபப்படுகிறாள். அவன் யோ-ஜினிடம் வந்து டின்னருக்கு இருவரையும் அழைத்துச் செல்வதாகக் கூற, கடுமையாக திட்டி அனுப்பிவிடுகிறாள் யோ-ஜின். 

ஒருநாள் ஜே-யோங்கை ஒரு வாடிக்கையாளருடன் அனுப்பிவிட்டு அவளுக்காக அந்த மாடிக்கட்டடத்தின் கீழே யோ-ஜின் காத்திருக்கிறாள். திடீரென்று போலீஸ் சோதனைக்காக வர, ஜே-யோங் தான் இருந்த அறையின் யன்னலில் ஏறி கீழே குதிக்க ஆயத்தமாக நின்றுகொள்கிறாள். அறைக்குள் நுழைந்த போலீஸ் தங்களிடம் வரும்படியும் அவளைத் துன்புறுத்த மாட்டோமென்றும் கூற, கீழே ஜோவும் அவளைக் குதிக்க வேண்டாமென்று கூறி அலறுகிறாள்.

சிறிது நேரம் தடுமாறும் ஜே-யோங் எதையும் காதில்வாங்காமல் ஒரு புன்னகையுடன் கீழே குதித்துவிட, படுகாயமடையும் அவளை முதுகில் சுமந்து கொண்டு ஓடுகிறாள் யோ-ஜின்!


மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ஜே-யோங் அந்த இசைக்கலைஞனை ஒருமுறை பார்க்கவேண்டுமெனக் கூற யோ-ஜின் அவசரமாக அவனைத் தேடி ஓடுகிறாள். அவன் கொஞ்சமும் இரக்கமில்லாமல் யோ-ஜினைத் தன்னுடைய இச்சைக்கு இணங்கினால் மட்டுமே வருவேனெனக் கூறி, அவளுடைய சூழ்நிலையின் இயலாமையைச் சாதகமாக்கிக் கொள்கிறான். மிக நிதானமாக அவளது பொறுமையைச் சோதித்து ஒருவழியாக இருவரும் மருத்துவமனையை அடைய, அங்கே ஜே-யோங் இறந்து விட்டிருக்கிறாள்.

தோழியின் இறப்பினால் பெரும் துயரடைகிறாள் யோ-ஜின். இப்போது தன்னிடமுள்ள பணம் அவளுக்குத் தேவையில்லை. அதேபோல ஒருவித குற்றவுணர்வும் சேர்ந்து கொள்ள, ஜே-யோங்கின் பழைய நண்பர்களைத் தொடர்பு கொண்டு ஜே-யோங் போலவே அவர்களிடம் அன்பாக நடந்துகொண்டு அவரவர் பணத்தை உரியவர்களிடமே திருப்பிக் கொடுக்க முடிவு செய்கிறாள்.

இதன் மூலம் தோழியின் துயர் நிறைந்த நினைவுகளிலிருந்தும், குற்ற உணர்விலிருந்தும் விடுபட முடியுமென்று ஏதோ ஒரு அடிப்படையில் நம்பிக்கை கொள்கிறாள் யோ-ஜின்.


ஜே-யோங்கின் குறிப்புப் புத்தகத்தின் மூலம் ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு அவர்களுடன் தன்னைப் பகிர்ந்துகொண்டு, அவர்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்க, அனைவரும் ஆச்சரியப்பட்டு மறுக்க, யோ-ஜின் வற்புறுத்திக் கொடுக்கிறாள். 

ஒருநாள் தந்தை ஒரு கொலை தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணைக்குச் செல்லும் போலீஸ்காரரான யோ-ஜின்னின் தந்தை,எதிரிலுள்ள மாடிக்கட்டடத்தின் திறந்திருக்கும் யன்னல் வழியே, யோ-ஜின் ஒரு ஆணின் அணைப்பில் இருப்பதைப் பார்த்துவிடுகிறார். அதிர்ச்சியடையும் தந்தை இரவு யோ-ஜின் தூங்கியபின் அவள் வைத்திருக்கும் ஜே-யோங்கின் குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து தன மகள் பற்றிய கொடுமையான விஷயத்தைத் தெரிந்து கொள்கிறார்!

பின்பு அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின்தொடர்கிறார், தொடர்ந்து...? என்னவாகிறது?


தனக்குப்பின் தனது மகளின் வாழ்க்கைக்காக அவளுக்கு அவசியம் தேவையான விஷயங்களை கற்பிக்கும் ஒரு பொறுப்புள்ள தந்தையாக யோ-ஜினுக்கு கார் பழக்கும் காட்சி! 

வழக்கமான கிம் கி-டுக்கின் வழமையான படங்களின் கதாபாத்திரங்கள் போலல்லாமல், எல்லோரும் தேவையான அளவு பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இறுதிக்காட்சிகளில் மௌனமே கவிதைபோல!

ஒரு நடுத்தர வயது மனிதனின் செல்பேசியை தந்தை கையில் வைத்திருக்க, அது தெரியாத ஜோ வாடிக்கையாலரென நினைத்து தந்தையிடம் பேசும்போது அவர் சத்தம் செய்யாமல் அழும் மிகை நடிப்பில்லாத காட்சி!

கிம் கி-டுக்கின் படமாச்சே! ஏதாவது வில்லங்கம் வருமேன்னு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது வரும் அந்தக் கனவு, ஒருகணம் அதிரவைத்தது!

2004 இல் வெளியான இந்தப்படம் வழமைபோல சொந்தநாட்டில் தோல்வியைத் தழுவ, உலகத் திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது!

Berlin International Film Festival 2004 இல் இரண்டாம் இடமான வெள்ளிக்கரடி விருதைப் பெற்றது!

இயக்கம்: Kim Ki-duk
மொழி: Korean
நாடு: தென் கொரியா   

இயக்குனர் கிம் கி-டுக்கின் மற்றைய படங்களையும் பாருங்கள்! பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களியுங்கள்!

Spring, Summer, Fall, Winter... and Spring    



Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, February 1, 2012

கவுதம்மேனன்-காதல்-வசனங்கள்!


தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் படங்களின் காதலுக்குத் தனியிடம் என்றும் இருக்கும்! அதுபோல காதல் காட்சிகளின் உரையாடல்கள்/ வசனங்களுக்கும்! முழுநீளக் காதல் படங்களிலுள்ள காதலை விட 'காக்க காக்க' படத்தில் இழையோடும் மெல்லிய காதலும், வசனங்களும் ரசிக்க வைத்தன!
Share This:   FacebookTwitterGoogle+

Monday, January 30, 2012

Tickets (2005)



தொலைதூரப்  பிரயாணங்கள் கொடுக்கும் அனுபங்கள் ஏராளம். பல்வேறுபட்ட மனிதர்களும், பல நேரங்களில் சுவாரஷ்யமாகவும், சில அவஸ்தையாகவும்! ஒரு ஐரோப்பிய நாடொன்றில் மேற்கொள்ளும் பிரயாணம் எப்படியிருக்கும்? நாடு, மொழி, கலாச்சாரத்தால் வேறுபட்ட பல மனிதர்களைச் சந்திப்பது நிச்சயம் புதுமையான அனுபவமாகவே....
Share This:   FacebookTwitterGoogle+

Thursday, January 26, 2012

குல்லா!


'கால்ஷீட் கிடைச்சாச்சு, கதைய ரெடி பண்ணுங்க!'
'பண்ணிடலாம்க....வழக்கம்போல!'

'என்..னது? வழக்கம்போலயா?'
'இல்லைங்க அவரு இருக்காருல்ல அப்புறம் கதை எதுக்கு? கதைன்னு அவரு பேரையும் போட்டுறலாம்!'

Share This:   FacebookTwitterGoogle+

Sunday, January 15, 2012

நண்பன் - Hats off விஜய்!


நாம் மனதிற்குப் பிடித்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? ஆசைப்பட்டதைத்தான் படிக்கிறோமா? பார்க்கும் வேலை மனதிற்குப் பிடிக்கிறதா? ரசித்து செய்ய முடிகிறதா? வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நம்மால்தான் எடுக்கப்பட்டவையா? அவை எல்லாமே நமக்கு முற்றிலும் சம்மதமானவையா?

Share This:   FacebookTwitterGoogle+

Thursday, January 12, 2012

நண்பன்!



ரோஜருக்கு ஹெல்மெட் அணிவது பிடிக்காது!

சரியாகச் சொன்னால் ஹெல்மெட் அணிந்தவர்களைப் பிடிக்காது! ரோஜரை யாரும் ஹெல்மெட் அணியச் சொன்னதாகவும் தெரியவில்லை.
Share This:   FacebookTwitterGoogle+

Friday, January 6, 2012

இசைப்புயல் - உண்மையான Oscar நாயகன்!


நம் ஒவ்வொருவருக்கும் அடிமனதில் சில ஆசைகள், தேவைகள், ஏக்கங்கள் இனம்புரியாத என்னென்னவோ இருக்கும்! அது என்ன என்று எங்களுக்கே தெரியாமல் இருக்கும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றை கண்டடையும்போது, அடடா! இதைத்தான் எதிர்பார்த்தோமா?...எனத் தோன்றும்! இது எதற்கும் பொருந்துமல்லவா? இசைக்கும் கூட!

Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, January 4, 2012

வை திஸ் கொலவெறி சமீரா? - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!



புத்தாண்டில முதல் பஸ் பயணம் அமோகமா வெடியோட ஆரம்பிச்சுது! அதாவது பஸ்ல வெடி காவியத்தைப் பார்க்க நேர்ந்தது!

சமீரா ரெட்டி - விஷாலைவிட வாட்டசாட்டமா இருந்தாங்களா, அப்பத்தான் தோணிச்சு, உண்மையிலேயே விஷாலின் தங்கச்சி காரெக்டருக்கு சமீராதான் பொருத்தம்னு. ஹீரோயினா சமீரா...பேசாம விஷாலே நடிச்சிருக்கலாம்!

Share This:   FacebookTwitterGoogle+

Sunday, January 1, 2012

2012, பெண்களைக் கவர, குறுகிய காலத்தில் சிவப்பழகு பெற!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கடந்த ஆண்டும் வழக்கம் போல ஆப்புகள், பல்புகள், வலிகள், ஏமாற்றங்கள், என ரொம்ப ஜாலியா போச்சு! ஆனா அதுக்கு முதல் வருஷத்தோட ஒப்பிடுகையில் எவ்வளவோ பரவாயில்லை என்பதால் அந்தளவுக்கு enjoy பண்ண முடியல!

Share This:   FacebookTwitterGoogle+

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |