Wednesday, November 28, 2012
No Bra Dayயும் சில எண்ணங்களும்!
Posted under No Bra Day, அனுபவம், சமூகம், தமிழ்ப் பெண்கள் on November 28, 2012 by Unknown with
8 comments

Thursday, November 15, 2012
வாங்க பாஸ்..அழலாம்!
Posted under அழுகை, அனுபவம், குழந்தைகள், சினிமா on November 15, 2012 by Unknown with
14 comments

Saturday, November 3, 2012
காதல், ஜீ, பெண்ராசி - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!
Posted under அனுபவம், கொழும்பு, சினிமா, பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது, மொக்கை on November 03, 2012 by Unknown with
15 comments

Sunday, October 28, 2012
ராஜனின் கைது ; கற்பிக்கப்படும் இணைய சுதந்திரம்?
Posted under ஒடுக்குமுறை, சமூகம், சினிமா, சின்மயி, பிரபலங்கள், ராஜன்லீக்ஸ் on October 28, 2012 by Unknown with
20 comments

Saturday, October 27, 2012
தாய்மையும் சில ஆண்களின் சாதனையும்(?)!
Posted under கொழும்பு, சமூகம், தமிழ்ப் பெண்கள், தாய்மை on October 27, 2012 by Unknown with
13 comments

Thursday, October 18, 2012
In the Mood for Love
Posted under In the mood for love, இசை, உலக சினிமா, காதல், சினிமா on October 18, 2012 by Unknown with
9 comments

Thursday, October 11, 2012
Water, Mamma mia - ஓர் அனுபவம்!
Posted under Aayo re sakhi, mamma mia, water, அனுபவம், இசை, சினிமா on October 11, 2012 by Unknown with
6 comments

ஒரு நல்ல அனுபவத்தை சரியான முறையில் பெறாமல் அரைகுறையாக அனுபவித்து பின்னர் வருத்தப்படுவது யாருக்கும் புதிதல்ல!
Monday, October 1, 2012
துப்பாக்கி!
Posted under ஈழம், சிறுகதை, சினிமா, துப்பாக்கி on October 01, 2012 by Unknown with
21 comments

Tuesday, September 18, 2012
ஃபேஸ்புக் அலப்பறைகள்!
Posted under Facebook, அனுபவம், சினிமா, மொக்கை on September 18, 2012 by Unknown with
25 comments

Friday, August 31, 2012
சிங்களப் பாடல்கள் - ஓர் இசை அற்புதம்!
Posted under அனுபவம், இசை, சிங்களப் பெண்கள், சினிமா, மொக்கை on August 31, 2012 by Unknown with
26 comments

Wednesday, August 15, 2012
டேட்டிங்! (Dating)
Posted under Dating, அனுபவம், சிறுகதை? on August 15, 2012 by Unknown with
12 comments

"டேட்டிங் எண்டா ஃபிரண்ட்ஸ்கூட போய் சுத்தி, சாப்பிட்டு வர்றதுதானாம்!"
அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீ.
ஒரு நிமிஷம் அவனுக்கு எதுவும் புரியவில்லை. சொன்னது அலுவலகத்தில் கூடவே வேலை பார்க்கும், சின்ன வயசில இருந்தே கொழும்பில் வளர்ந்த, நன்கு படித்த இளம்பெண்.
'ஒருவேளை நம்மளக் கலாய்க்கிறாளோ?’ யோசனையுடன் பார்த்தான். ‘சேச்சே அப்பிடியிருக்காது’ கண்களில் அப்படித் தெரியவில்லை.
சீரியசாகத்தான் சொன்னார். அம்மம்மாகூட உட்கார்ந்து பூஜையறையில் தேவாரம் பாடிட்டு, கந்தன்கருணை படம் எல்லாம் பாக்கிற பெண் அப்படிச் சொன்னதில் பெரிதாக ஆச்சரியப்படவும் ஏதுமில்லை.
குறித்த பெண் ஸ்டைலா, மொடேர்னா ட்ரெஸ் பண்ணி எப்பவும் ஐபோட்ல பாட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார். ஒரு முறை ஆர்வக் கோளாறில் அவர் ஐபோட்டைக் காதுக்கு கொடுத்துவிட்டு உடனேயே கலவரமாகித் திருப்பிக் கொடுத்த அனுபவம் ஜீக்கு இருந்தது. ஐபோட்டில் கந்தசஷ்டி கவசம் கதறிக் கொண்டிருந்தது.
'சரி அந்தப்பிள்ளையும் என்னத்தையோ புதுசாத் தெரிஞ்சுகொண்டிருக்குது. எதுக்கும் லைற்றா ரோக்கப் (Talk) போடுவம்' என முடிவுசெய்து,
"அப்பிடியா? எப்பிடி இப்பிடியெல்லாம்?" ஆச்சரியத்துடன் கேட்டு வைத்துவிட்டு அமைதியாக இருந்தான் ஜீ.
“அன்ரிதான் சொன்னா” அந்தப்பெண் சொல்ல ஆரம்பித்தார்.
'அதில பாருங்கோ, இந்த லேடீஸ் எல்லாம் ஒருத்தனுக்கு ஒரு விஷயத்தை ஆரம்பிச்சாலே, முழுசா சொல்லி முடிச்சுட வேணுமெண்டு முடிவெடுத்த பிறகுதான் சொல்லுவினம். அப்பிடி ஒரு தடவை முடிவு பண்ணிட்டா... பிறகு தன்னோட பேச்சை மட்டுமில்ல பக்கத்தில சிக்கி இருக்கிறவன்ர கதறல் கெஞ்சலைக்கூட கேட்க மாட்டினம் . ஒரு வழி பண்ணிடுவினம்' - இப்படியாக நம் பெரியவர்கள், அனுபவஸ்தர்கள் சொல்வதை என்னைப் போலவே நீங்களும் கேட்டிருக்கக்கூடும்.
ஜீயும் வழக்கம் போல 'எனக்கு இதுல இன்ட்ரெஸ்ட்டே கிடையாது. ஏதோ நீங்க சொல்றதால கேக்கிறன்' என்கிற ரீதியில் ஒரு முகபாவத்தை செட் பண்ணி வச்சிருந்தான்.
அன்ரி லண்டன்ல இருந்து வந்திருந்தா. அவ ஒரு 'பீட்டர் பேர்வழி' என்று தெரிந்தது. அவ பேச ஆரம்பிக்கும் ஐந்து வசனங்களில் மூன்று 'அங்க லண்டன்ல எல்லாம்...' என்றே ஆரம்பிக்கும். மீதி இரண்டு 'என்ன இது? இங்க எல்லாம் இப்பிடி இருக்கு?' என்பதாக அமையும்.
வெள்ளைக்காரனெல்லாம் விஞ்ஞானிகள், வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தவனெல்லாம் அறிவாளிகள் என்ற தீவிர நம்பிக்கை கொண்டது நம் தமிழ்ச்சமூகம். காலங்காலமா கதை கேட்பது, கதை சொல்வது, கதை விடுவது என்பவற்றின் மூலமாகவே நமது பொது அறிவை விருத்தி செய்துகொள்பவர்கள் நாங்கள். வெளிநாட்டில இருந்து யாராவது வீட்டுக்கு வந்திருந்தா என்ன பண்ணுவோம்? அதேதான் அங்கயும் நடந்திச்சுது.
அன்ரியைச் சுத்தி இருந்து கதை கேட்டுக்கொண்டிருக்க, அவவும் உற்சாகமா துபாய்ல இருந்து வந்த வடிவேலு மாதிரியே சொற்பொழிவு ஆத்திக் கொண்டு இருந்திருக்கிறா. இடையிடையே மானே, தேனே போல, "என்ன ஊர் இது?", "என்ன வெக்கை?", "என்ன வெய்யில்?", "எவ்வளவு டஸ்ட்?" இப்படியான கேள்விகள் வேற. அந்தக் கேள்விகளை இன்டிரெக்டா இப்படியும் பொருள் கொள்ளலாம். "இங்கயெல்லாம் எப்பிடி இருக்கிறீங்க?", "மனுஷன் இருப்பானா இங்க?", "ஆமா, நீங்க எல்லாம் மனுஷர் தான?"- இப்பிடியே போயிட்டு இருந்திருக்குது!
அவ்வப்போது டிரெக்டா "என்ன கன்ட்ரி இது? இன்னும் அப்பிடியே இருக்குது?" அன்ரி கேட்க, இவைக்கும் உண்மை உறைச்சு ஃபீலாயிட்டிணமாம். பிறகென்ன வழக்கம்போல, இந்தக் கண்ட்ரில பிறந்த குற்றத்தை எண்ணி வெட்கி, அவமானப்பட்டு, அசடு வழிந்து சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அன்ரியும் இதே கன்ட்ரிலதான் பிறந்து முப்பது வயசுவரை வாழ்ந்தவங்க என்பது அவ்வளவு முக்கியமல்லாத விஷயம்.
அன்ரியைப் பொறுத்தவரைக்கும் எல்லாம் நல்ல படியாத்தான் போயிட்டிருந்திருக்கு. ஆனால் பாருங்க இடைல ஒரு ஃபுளோல பெருமையோட பெருமையா "என்ர மகளும் டேட்டிங் எல்லாம் போறவ" எண்டு சொல்லியிருக்கிறா. அங்கதான் வந்திருக்கு வில்லங்கம்.
"டேட்டிங் எண்டா என்ன?" - ஓடியன்சில இருந்து யாரோ ஒரு காரெக்டர் கேள்வி கேட்டிருக்குது.
நிச்சயமா இந்தப்பெண் இல்லை. ஏனெண்டா அவையின்ர குடும்பத்திலயே நாலு பொது விஷயம் தெரிஞ்ச விவரமான ஆள் அதுதான். வலு கெட்டிக்காரி என்கிற ஒரு இமேஜ் இருக்குதாம். அதை மெயின்டெயின் பண்றதுக்காகவே, அவசரப்பட்டு எங்கேயுமே இப்பிடி கேள்வி கேட்கிறதில்ல.
இந்த இடத்திலதான் அன்ரிக்கு பெரிய பிசகு பண்ணிப்போட்டன் எண்டு விளங்கிருக்கு. உடனேயே சடன் பிரேக் போட்டுட்டு, மனுசி முழுசியிருக்கு. யோசிச்சுப்பாருங்க எம்.பீ.ஏ. படிச்ச இந்த தலைமுறைப் பெண்ணே இவ்வளவு விவரமாயிருக்குது. அப்ப, இதுக்கு முந்தின ஜெனரேஷன் அம்மா? அதுக்கும் முந்தின ஜெனரேஷன் அம்மம்மா? அவங்கள் எல்லாம் எவ்வளவு விவரமாயிருப்பாங்க? இந்த விவரக் கூட்டத்துக்கு விளங்கப்படுத்திறது எப்பிடி?
உண்மையச் சொன்னா நாளைக்கு அன்ரியையே ஒரு மாதிரியாத்தான் பாப்பினம். கொஞ்ச நேரத்திலயே இதையெல்லாம் அனலைஸ் பண்ணி அன்ரி சொன்ன பதில்தான் 'டேட்டிங் எண்டா ஃபிரண்ட்ஸ்கூட போய் சுத்தி, சாப்பிட்டு வர்றது!'
கொடுமையைப் பாருங்க தனது மகள் டேட்டிங் போறதைப் பெருமையாச் சொல்ல முடிந்த அம்மாவுக்கு டேட்டிங் எண்டா என்னங்கிறதை அதே பெருமையோட சொல்ல முடியுதா? நாங்களும் வெள்ளைக்காரனோட ஈக்குவலாத்தான் வாழுறம் எண்டுறத சொல்லுவமெண்டா முடியுதா? இவையளெல்லாம் எப்பதான் வளரப் போயினமோ? பாவம் மனுசி உள்ளுக்குள்ள நொந்து போயிருக்கும்.
அதுக்குப் பிறகு அந்தக் குடும்பமே அன்ரிகூட சந்தோஷமா அடிக்கடி 'டேட்டிங்' போயிட்டு இருக்கினமாம். அதாவது ஹோட்டல் ஹோட்டலா போய் விதம்விதமா சாப்பிட்டுக்கொண்டிருக்கினமாம்.
'ச்சே! எனக்குன்னு வந்து வாய்க்குதுங்க... எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?' - ஜீ நொந்துபோயிருந்தான்.
திடீரென ஏதோ உண்மை உறைக்க, அதிர்ச்சியடைந்து தலையில் கைவைத்துக்கொண்டிருந்தான்.
இந்த சம்பாஷனை நடந்து கொண்டிருந்த போது, ஜீயும் அந்தப் பெண்ணும் KFCல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
* * * * * * * *
மேலேயே கதை முடிந்துவிட்டது. ஆனாலும் எனக்கொரு கெட்ட பழக்கம். பிறகு என்ன நடந்தது என்பது பற்றி ஜீ என்னிடம் சொல்லியிருந்தான். அதையும் சொல்லவேணுமெண்டு நினைகிறேன். ஜீயின் அந்த அட்டகாசமான 'டேட்டிங்' நடந்த அன்றைக்கே ஜீயின் அந்தப்பெண்ணுடனான நட்பு 'பணால்' ஆகிட்டுதாம். காரணம்...
ஜீயிடமும் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது.
தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது ஒரு விஷயத்தை தவறாகப் புரிந்து வைத்திருந்தால், உண்மையை எடுத்துச் சொல்லிப் புரியவைத்து விடவேண்டும் என்று நினைப்பான். இந்த சமூகத்தின்மீது அக்கறை உள்ளவனாக (இப்படி அவனே சொன்னான்) தனது கடமை அது என்பான். இருந்தாலும் இது கொஞ்சம் சிக்கலான விஷயம்.
அவன்கூட எல்லாம் நாலு வருஷத்துக்கு ஒருமுறைதான் போனால் போகுதென்று ஒரு பெண் வந்து ஹாய், ஹலோ சொல்லும். அதையும் அவனே வில்லங்கமாக எதையாவது சொல்லித் தெறிச்சோட வைக்கிறது வழக்கம். முதலில் எதுக்கு இப்ப தேவையில்லாம.. என்று யோசித்திருக்கிறான். 'சரி வர்றது வரட்டும் பார்க்கலாம்... நமக்கு உண்மைதான் முக்கியம்!'
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கஷ்டப்பட்டு போதுமான இடைவெளிவிட்டு பொறுமையா, பக்குவமா 'டேட்டிங்'கின் தோற்றம், வரலாறு, தாற்பரியம் பற்றிக் கிளாஸ் எடுத்தான்.
அந்தப் பெண் சிம்பிளா ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். ஜீ சொந்தச் செலவிலயே சூனியம் வச்சுட்டான் என்கிறது அந்த முதல் கேள்வியிலேயே தெரிந்தது...
"அப்ப என்ர தங்கச்சிய கூடாதவள் என்கிறியா?"
Thursday, August 2, 2012
தமிழ்ப் பெண்களின் அம்மாக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?
Posted under அனுபவம், ஆன்டி, கொழும்பு, சினிமா, தமிழன்பெருமை, தமிழ்ப் பெண்கள் on August 02, 2012 by Unknown with
24 comments

"தம்பி இந்த 'சீட்'டை கொஞ்சம் சரிச்சு விடுங்க"
பேரூந்தில் எனது இருக்கைக்கு அருகில், நடையை அடுத்த இரு இருக்கைகளில் யன்னலோரத்தில் அவர், கையில் குழந்தை. பக்கத்து இருக்கையில் எனக்கு அருகாமையில் அந்தப் பெண்.
எனது பெண்ராசி காரணமாக நான் பெண்களுக்கு உதவி செய்வதில் யோசிப்பதால், "அந்த பட்டனை ப்ரெஸ் பண்ணிட்டே சரியுங்க"
Friday, July 27, 2012
Tuesday, July 24, 2012
ஜூலை இருபத்துமூன்றுகள்!
Posted under Genocide, July 83, Rwanda, அரசியல், அனுபவம், சினிமா, தமிழ் on July 24, 2012 by Unknown with
6 comments

"நீ ஏமாத்துறே...நான் போலீசில சொல்லுவேன்!"
"போலீஸ் நான் சொல்றதத்தான் நம்பும். நீ தமிழ் நீ சொல்றதக் கேக்காது"
இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த காலம். கொழும்பில், அயல் வீட்டில் ஐந்து வயதே நிரம்பிய இரு தமிழ், சிங்களக் குழந்தைகளிடையே விளையாட்டின் போதான பேச்சு! நம்பக் கஷ்டமாக இருந்தது. தமிழர்கள் சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அந்தக் குழந்தைக்கு யார் சொல்லிக் கொடுத்தது?
Tuesday, July 17, 2012
The Willow Tree (2005)
Posted under Majid Majidi, World Cinema, உலக சினிமா, சினிமா on July 17, 2012 by Unknown with
9 comments

Wednesday, July 11, 2012
இணையப் போராளி ஜீ..
Posted under அரசியல், அறச்சீற்றம், அனுபவம், சமூகம், சிறுகதை, சினிமா, யாழ், வரலாறு, வன்னி on July 11, 2012 by Unknown with
17 comments

இணையப் போராளி ஜீ தீவிர சிந்தனையிலிருந்தான்!
இப்போதெல்லாம் எதற்கு எழுதவேண்டும் என்றொரு கேள்வி அவன் மனதில் அடிக்கடி எழுகிறது! இதே கேள்வி மற்றவர்களிடம் எப்போதோ எழுந்தது வேறு விஷயம் 'இவனெல்லாம் எதுக்கு எழுதுறான்?'
எந்த ஒரு சீரியசான விஷயத்தையும் எள்ளலாக, நக்கலாக கூறிச் செல்லலாம் என முட்டாள்தனமாக நம்பியதால் ஒரு மொக்கைப் போராளியாக பெயர் வாங்கியிருந்தான்! அதெல்லாம் செல்லாது சமூக அக்கறை என்பது ஏ சமூகமே எனக் கேள்வி கேட்பது, உணர்ச்சியுடன் பொங்குவது, விழிப்புணர்ச்சி வழங்குவது மட்டுமே என்கிறார்கள் சமூக போராளிகள்!
Wednesday, June 27, 2012
இந்திய அமைதிப்படையும் கேணல் ஜெயமோகனும்!
Posted under அரசியல், அனுபவம், இந்திய அமைதிப்படை, சினிமா, புலிகள், யாழ், ஜெயமோகன், ஷோபாசக்தி on June 27, 2012 by Unknown with
16 comments

Tuesday, June 19, 2012
வெள்ளைக்கார அக்கா, பேய்வீடு - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!
Posted under அனுபவம், சினிமா, தமிழன்பெருமை, நண்பன், பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது, பேய், விஜய் on June 19, 2012 by Unknown with
23 comments

Tuesday, June 12, 2012
ஆன்டி & பூச்சாண்டி!
Posted under அனுபவம், சினிமா, தமிழன்பெருமை, யாழ் on June 12, 2012 by Unknown with
22 comments

Friday, June 8, 2012
இசைராஜா!
Posted under A.R.Rahman, ilaiyaraaja, அனுபவம், இசை, இளையராஜா, சினிமா, தமிழ்சினிமா on June 08, 2012 by Unknown with
35 comments

Tuesday, May 29, 2012
யானை பார்த்த கதை!
Posted under Jaffna, அனுபவம், சிறுகதை, சினிமா, யாழ் on May 29, 2012 by Unknown with
13 comments

Wednesday, May 23, 2012
தட்டி வான்(Van)!
Posted under அனுபவம், சினிமா, தமிழ், யாழ், வரலாறு on May 23, 2012 by Unknown with
11 comments

Thursday, May 17, 2012
The Piano Teacher (2001)
Posted under French, World Cinema, உலக சினிமா, சினிமா on May 17, 2012 by Unknown with
15 comments

சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறிய தவறுக்காக ஆசிரியை ஒருவரிடம் மிக மோசமாக அடிவாங்கி, கைகள் கன்றிப்போய், அடிப்பதற்குப் பயன்படுத்திய தடியில் சிறு முட்கள் போல இருந்தவை கீறி ரத்தம் கசிந்தபோது, அதிர்ச்சியாகப் பார்த்த ஆசிரியர் ஒருவர் சக ஆசிரியரிடம் கூறியது - 'பிஞ்சுக்கையை எப்பிடி அடிச்சிருக்கா பார்', 'கல்யாணம் ஆகாததுதான் அவவின்ர பிரச்சினை!'
Thursday, May 10, 2012
Chungking Express (1994)
Posted under World Cinema, உலக சினிமா, காதல், சினிமா on May 10, 2012 by Unknown with
8 comments

Tuesday, May 8, 2012
விஜய் காமெடி, facebook, அட்வைஸ் - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!
Posted under Facebook, அனுபவம், சினிமா, பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது, விஜய், ஜீ... on May 08, 2012 by Unknown with
29 comments

Wednesday, May 2, 2012
பில்லா 3 - கதை ரெடி!
Posted under billa 3, அஜித், சினிமா, தமிழ்சினிமா, பில்லா 3, விஷ்ணுவர்த்தன் on May 02, 2012 by Unknown with
15 comments

Thursday, April 26, 2012
உன்னைப்போல ஒருவன் - 2
Posted under கதை?, கமல்ஹாசன், சினிமா on April 26, 2012 by Unknown with
8 comments

Thursday, April 19, 2012
என்னா பார்வை!
Posted under அனுபவம், சினிமா, மொக்கை on April 19, 2012 by Unknown with
15 comments

என்ன பார்வைடா சாமி! இப்படியொரு பார்வையை நான் வாழ்க்கைல சந்திச்சதேயில்ல!
பொதுவா பொண்ணுங்க நம்மளைப் பார்த்தாலே முறைச்சுத்தான் பாப்பாய்ங்க அதெல்லாம் நமக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல! ஆனாலும் இந்த வாட்டி ரொம்ப கொலவெறியோட, கொடூரமா!
Monday, April 16, 2012
A Separation (2011)
Posted under A Separation, Iran, Oscar 2012, World Cinema, உலக சினிமா, சினிமா on April 16, 2012 by Unknown with
16 comments

Monday, April 9, 2012
டெரர் கும்மியின் அங்கீகாரம்!
Posted under Blogger, Hall of Fame, சினிமா, டெரர் கும்மி, பதிவுலகம், விருது on April 09, 2012 by Unknown with
31 comments

Wednesday, March 21, 2012
சமீரா - ஒரு கொடுங்கனவு!
Posted under சமீரா ரெட்டி, சினிமா, நடிகை on March 21, 2012 by Unknown with
38 comments

Wednesday, March 14, 2012
கர்ணன் - போராளி!
Posted under கர்ணன், சிவாஜி, தமிழ்சினிமா, போராளி, மகாபாரதம், வரலாறு, வெற்றி on March 14, 2012 by Unknown with
32 comments

Thursday, March 8, 2012
மகளிர்தினமும் தமிழன் பெருமையும்!
Posted under Ashlynn Brooke, girls, தமிழன்பெருமை on March 08, 2012 by Unknown with
36 comments

Monday, March 5, 2012
The Artist (2011)
Posted under Oscar 2012, World Cinema, உலக சினிமா, சினிமா on March 05, 2012 by Unknown with
20 comments

Monday, February 27, 2012
சுஜாதா! சுஜாதா!
Posted under கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கமல்ஹாசன், சினிமா, சுஜாதா, தமிழ்சினிமா on February 27, 2012 by Unknown with
26 comments

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, எந்தவித கேள்விக்கும் உள்ளாக்காமல் மிகச்சிலரை மட்டுமே ரசிக்க, நேசிக்க முடிகிறது. அப்படி எந்த சமரசமும் செய்துகொள்ள விரும்பாமல் நான் ரசிக்கும் ஒருவர் சுஜாதா! ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது தன்னை நினைவு படுத்திப் போகிறார். என்னைப் போல பலருக்கும் இப்படியிருக்கலாம்.
Tuesday, February 21, 2012
Monday, February 13, 2012
கவனிப்பு!
on February 13, 2012 by Unknown with
12 comments

"ஐந்தரை மணிக்கு ஐட்டம் பஸ் ஸ்டாப்புக்கு வந்துடும்"- அறிவுறுத்தப்பட்டிருந்தேன்.
எனக்கு இது முதல் அனுபவம். உள்ளே இருக்கிற டென்ஷன் கண்களில் தெரிந்து விடாமல் கவனமாக,சுற்றுமுற்றும் போலீஸ் நடமாட்டம் இருக்கிறதா என கவனித்தேன்.
கவனிப்பு என்பது மிக முக்கியமான விஷயம். அதுவும் சில விஷயங்களில் அதீத கவனிப்புத் தேவை.
அவளின் அடையாளம் - அழகி! ப்ளூ ஜீன்ஸ், வைட் டீ ஷர்ட்! டீ ஷர்ட்டின் மார்பில் Shut the front door! என்று எழுதியிருக்கும். ரீபோக் ஷூ அணிந்திருப்பாள்.
அவள்தான் ஐட்டம்! - அப்படி நீங்கள் நினைத்தால், நான் பொறுப்பல்ல!
அவள் தோளில் Laptop பை. அதற்குள் கன கச்சிதமாக அடுக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளில்...ஐட்டம், பிரவுன் சுகர்!
அதோ அவள்தானா!எதிர்பார்த்த மாதிரியே என்னருகே வருகிறாள்! ஆனாலும் எதிர்பார்க்கவில்லை - இவ்வளவு அழகாயிருப்பாள் என்று! இவளுக்கு ஏன் இந்த வேலை? இவள் எல்லாம் பணம் சம்பாதிக்க இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா? எவ்வளவு ஈசியா..
எனது அடையாளம் சொல்லப்பட்டிருக்கும். ஆனாலும் கண்டு கொண்ட மாதிரியே காட்டிக்கொள்ளவில்லை - அனுபவசாலி! ஒரு சிறு சலனம்...சிறு கீற்றுப் புன்னகை...ம்ஹூம்!
ஆனால் நான்...அவள் ஒரு 'ம்..' சொன்னால் என் ஜாதகத்தையே ஒப்புவித்து விடுவேனோ எனத் தோன்றியது. வைட் டீ ஷர்ட்டின் மார்பில் 'Shut the front door!' பார்த்து பாதி திறந்த வாயை மூடிக்கொண்டேன்.
'எதுவும் பேசாமல் உன்னோட பெட்டியை அவள் பக்கத்துல வக்கிறே நம்ம சங்கேத கேள்வி கேட்டு, பதில் கன்ஃபர்ம் பண்றே'
முதல் கேள்வி 'மன்மோகன் உப்பு யூஸ் பண்ணுவாரா?', பதில் மௌனம்!
கேட்டேன். மௌனமாயிருந்தாள்! லேசாகப் புன்னகைத்தது போல் தோன்றியது, பிரமையாகக் கூட இருக்கலாம்.
இரண்டாவது கேள்விதான் உதைத்தது. எதுக்கு இப்பிடி ஒரு கேள்வி? நானெல்லாம் பொண்ணுங்க கிட்ட வலியப் போயி பேசினதே இல்ல! பெயர்கூடக் கேட்காத என்னைப் போய்...கேள்வி இதுதான்!
- ப்ரா சைஸ் என்ன?
- 16 GB
என்ன பார்க்கிறீர்கள்? கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தம் இருந்தா பிறகென்ன சங்கேத வார்த்தை?
அது சரி..எப்படிக் கேட்பது? தயங்கி..ஒருவாறு தொழில் தர்மத்தை(?!) நினைத்து மனதைத் தேற்றித் திடப்படுத்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் நெருங்கி...
அவள் காதிலிருந்து ஹெட் ஃபோனை அகற்றுவதற்கும், நான்கேட்பதற்கும் சரியாக இருந்தது
'ஏழாக இருக்கலாம்!'
- இது பதிலில்லையே என்கிறீர்களா? அது பதிலில்லை..... அவளின் செருப்பு சைஸ்!
நல்ல கனமான ஹீல்! ஒரே அடியில் வாயில் உப்புக் கரித்தது!
காலையிலிருந்து அஃபீசில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கியவன், திடீரெனக் காதலி சந்திக்க வர முடியாதென்றதில் காண்டானவன், ஒரு 'பைல்ஸ்' ஆன்டி, பஸ்ஸில் இடித்து ஒரு பெண்ணின் முறைப்பைச் சம்பாதித்த ஆசைமட்டும் நரைக்காத பெரிய மனுஷன், முப்பத்தைந்து கடந்தும் திருமணம் கூடிவராத பெண்மணி - எல்லோரும் ஏக காலத்தில் சமுதாய அக்கறை கொண்டதில்...
இதற்குமேல் சொல்ல வேண்டுமா?
'அய்யய்யோ என் பெட்டி தொலைந்தால் உயிரோடு விடமாட்டாங்களே...' மனம் அலறியபோது...
கையில் தவறிய எனது பெட்டியுடன், ஏதோ சொல்லிக் கூட்டத்தை விலக்கி, கீழே விழுந்து கிடந்த என்னை நோக்கி எழுவதற்குக் கைகொடுத்தாள் அவள்..
அழகி!
ப்ளூ ஜீன்ஸ், வைட் டீ ஷர்ட்.
Shut the front door! தோளில் Laptop பை. முக்கியமாக...ரீபோக் ஷூ!
Tuesday, February 7, 2012
Samaritan Girl
Posted under Kim Ki-duk, samaritan girl, World Cinema, உலக சினிமா on February 07, 2012 by Unknown with
25 comments

சியோலிலுள்ள பள்ளி மாணவிகளான யோ-ஜின், ஜே-யோங் இருவரும் நெருங்கிய தோழிகள். ஐரோப்பாவைச் சுற்றிபார்க்க வேண்டுமென்ற ஆசை இருவருக்கும்! அதற்கு நிறையப் பணம் வேண்டுமே? என்ன செய்வது? உழைத்துச் சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார்கள். குறுகிய காலத்தில் பள்ளி மாணவிகளால் அப்படி என்ன தொழில் செய்து சம்பாதிக்க முடியும்? உலகின் புராதன தொழில்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்! ப்ராஸ்டிட்யூஷன்!
ஜே-யோங் பாலியல் தொழிலாளியாக, யோ-ஜின் அவளது ஏஜண்டாக செயற்பட, பணம் சேரத் தொடங்குகிறது! ஜே-யோங் தனது வாடிக்கையாளர் பற்றி, அவர்களுடனான உரையாடல்களை விபரித்துக் கூறுவாள். இது யோ-ஜினுக்குப் பிடிப்பதில்லை. அவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்கிறாள் யோ-ஜின்!
தன்னை வசுமித்ரா என அழைக்குமாறு கூறுகிறாள் ஜே-யோங். வசுமித்ரா ஆதி காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த பெண் என்றும், அவளுடன் உறவுகொண்ட ஆண்கள் எல்லாரும் புத்தபிட்சுகளாக மாறிவிடுவார்கள் என்றும் அவளது அன்பு அவ்வாறு அவர்களை மாற்றிவிடுமாம் என்றும் கூறுகிறாள் ஜே-யோங்.
தனது வாடிக்கையாளர்களில் ஒரு இசைக்கலைஞனுடன் காதல் கொள்கிறாள் ஜே-யோங். இது தெரிந்ததும் யோ-ஜின் கோபப்படுகிறாள். அவன் யோ-ஜினிடம் வந்து டின்னருக்கு இருவரையும் அழைத்துச் செல்வதாகக் கூற, கடுமையாக திட்டி அனுப்பிவிடுகிறாள் யோ-ஜின்.
ஒருநாள் ஜே-யோங்கை ஒரு வாடிக்கையாளருடன் அனுப்பிவிட்டு அவளுக்காக அந்த மாடிக்கட்டடத்தின் கீழே யோ-ஜின் காத்திருக்கிறாள். திடீரென்று போலீஸ் சோதனைக்காக வர, ஜே-யோங் தான் இருந்த அறையின் யன்னலில் ஏறி கீழே குதிக்க ஆயத்தமாக நின்றுகொள்கிறாள். அறைக்குள் நுழைந்த போலீஸ் தங்களிடம் வரும்படியும் அவளைத் துன்புறுத்த மாட்டோமென்றும் கூற, கீழே ஜோவும் அவளைக் குதிக்க வேண்டாமென்று கூறி அலறுகிறாள்.
சிறிது நேரம் தடுமாறும் ஜே-யோங் எதையும் காதில்வாங்காமல் ஒரு புன்னகையுடன் கீழே குதித்துவிட, படுகாயமடையும் அவளை முதுகில் சுமந்து கொண்டு ஓடுகிறாள் யோ-ஜின்!
சிறிது நேரம் தடுமாறும் ஜே-யோங் எதையும் காதில்வாங்காமல் ஒரு புன்னகையுடன் கீழே குதித்துவிட, படுகாயமடையும் அவளை முதுகில் சுமந்து கொண்டு ஓடுகிறாள் யோ-ஜின்!
மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ஜே-யோங் அந்த இசைக்கலைஞனை ஒருமுறை பார்க்கவேண்டுமெனக் கூற யோ-ஜின் அவசரமாக அவனைத் தேடி ஓடுகிறாள். அவன் கொஞ்சமும் இரக்கமில்லாமல் யோ-ஜினைத் தன்னுடைய இச்சைக்கு இணங்கினால் மட்டுமே வருவேனெனக் கூறி, அவளுடைய சூழ்நிலையின் இயலாமையைச் சாதகமாக்கிக் கொள்கிறான். மிக நிதானமாக அவளது பொறுமையைச் சோதித்து ஒருவழியாக இருவரும் மருத்துவமனையை அடைய, அங்கே ஜே-யோங் இறந்து விட்டிருக்கிறாள்.
தோழியின் இறப்பினால் பெரும் துயரடைகிறாள் யோ-ஜின். இப்போது தன்னிடமுள்ள பணம் அவளுக்குத் தேவையில்லை. அதேபோல ஒருவித குற்றவுணர்வும் சேர்ந்து கொள்ள, ஜே-யோங்கின் பழைய நண்பர்களைத் தொடர்பு கொண்டு ஜே-யோங் போலவே அவர்களிடம் அன்பாக நடந்துகொண்டு அவரவர் பணத்தை உரியவர்களிடமே திருப்பிக் கொடுக்க முடிவு செய்கிறாள்.
இதன் மூலம் தோழியின் துயர் நிறைந்த நினைவுகளிலிருந்தும், குற்ற உணர்விலிருந்தும் விடுபட முடியுமென்று ஏதோ ஒரு அடிப்படையில் நம்பிக்கை கொள்கிறாள் யோ-ஜின்.
ஜே-யோங்கின் குறிப்புப் புத்தகத்தின் மூலம் ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு அவர்களுடன் தன்னைப் பகிர்ந்துகொண்டு, அவர்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்க, அனைவரும் ஆச்சரியப்பட்டு மறுக்க, யோ-ஜின் வற்புறுத்திக் கொடுக்கிறாள்.
இதன் மூலம் தோழியின் துயர் நிறைந்த நினைவுகளிலிருந்தும், குற்ற உணர்விலிருந்தும் விடுபட முடியுமென்று ஏதோ ஒரு அடிப்படையில் நம்பிக்கை கொள்கிறாள் யோ-ஜின்.
ஜே-யோங்கின் குறிப்புப் புத்தகத்தின் மூலம் ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு அவர்களுடன் தன்னைப் பகிர்ந்துகொண்டு, அவர்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்க, அனைவரும் ஆச்சரியப்பட்டு மறுக்க, யோ-ஜின் வற்புறுத்திக் கொடுக்கிறாள்.
ஒருநாள் தந்தை ஒரு கொலை தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணைக்குச் செல்லும் போலீஸ்காரரான யோ-ஜின்னின் தந்தை,எதிரிலுள்ள மாடிக்கட்டடத்தின் திறந்திருக்கும் யன்னல் வழியே, யோ-ஜின் ஒரு ஆணின் அணைப்பில் இருப்பதைப் பார்த்துவிடுகிறார். அதிர்ச்சியடையும் தந்தை இரவு யோ-ஜின் தூங்கியபின் அவள் வைத்திருக்கும் ஜே-யோங்கின் குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து தன மகள் பற்றிய கொடுமையான விஷயத்தைத் தெரிந்து கொள்கிறார்!
பின்பு அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின்தொடர்கிறார், தொடர்ந்து...? என்னவாகிறது?
பின்பு அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின்தொடர்கிறார், தொடர்ந்து...? என்னவாகிறது?
தனக்குப்பின் தனது மகளின் வாழ்க்கைக்காக அவளுக்கு அவசியம் தேவையான விஷயங்களை கற்பிக்கும் ஒரு பொறுப்புள்ள தந்தையாக யோ-ஜினுக்கு கார் பழக்கும் காட்சி!
வழக்கமான கிம் கி-டுக்கின் வழமையான படங்களின் கதாபாத்திரங்கள் போலல்லாமல், எல்லோரும் தேவையான அளவு பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இறுதிக்காட்சிகளில் மௌனமே கவிதைபோல!
ஒரு நடுத்தர வயது மனிதனின் செல்பேசியை தந்தை கையில் வைத்திருக்க, அது தெரியாத ஜோ வாடிக்கையாலரென நினைத்து தந்தையிடம் பேசும்போது அவர் சத்தம் செய்யாமல் அழும் மிகை நடிப்பில்லாத காட்சி!
கிம் கி-டுக்கின் படமாச்சே! ஏதாவது வில்லங்கம் வருமேன்னு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது வரும் அந்தக் கனவு, ஒருகணம் அதிரவைத்தது!
2004 இல் வெளியான இந்தப்படம் வழமைபோல சொந்தநாட்டில் தோல்வியைத் தழுவ, உலகத் திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது!
Berlin International Film Festival 2004 இல் இரண்டாம் இடமான வெள்ளிக்கரடி விருதைப் பெற்றது!
இயக்கம்: Kim Ki-duk
மொழி: Korean
நாடு: தென் கொரியா
2004 இல் வெளியான இந்தப்படம் வழமைபோல சொந்தநாட்டில் தோல்வியைத் தழுவ, உலகத் திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது!
Berlin International Film Festival 2004 இல் இரண்டாம் இடமான வெள்ளிக்கரடி விருதைப் பெற்றது!
இயக்கம்: Kim Ki-duk
மொழி: Korean
நாடு: தென் கொரியா
இயக்குனர் கிம் கி-டுக்கின் மற்றைய படங்களையும் பாருங்கள்! பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களியுங்கள்!
Spring, Summer, Fall, Winter... and Spring
Spring, Summer, Fall, Winter... and Spring
Wednesday, February 1, 2012
Monday, January 30, 2012
Tickets (2005)
Posted under World Cinema, உலக சினிமா on January 30, 2012 by Unknown with
14 comments

Thursday, January 26, 2012
Sunday, January 15, 2012
நண்பன் - Hats off விஜய்!
Posted under amirkhan, shankar, vijay, தமிழ்சினிமா, நண்பன், விஜய் on January 15, 2012 by Unknown with
30 comments

Thursday, January 12, 2012
Friday, January 6, 2012
Wednesday, January 4, 2012
வை திஸ் கொலவெறி சமீரா? - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!
Posted under பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது on January 04, 2012 by Unknown with
40 comments
