Friday, June 28, 2013
Saturday, June 22, 2013
தலைவா, சினிமாப்பெண்கள், அலப்பறை - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!
'தலைவா'க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சமீப காலமாக (நண்பனுக்குப் பின்) விஜய் படங்களைப் பார்க்கலாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். தலைவா- இயக்குனர் விஜய்தான் சற்று யோசிக்க வைக்கிறார்.
* * * * * * * *
* * * * * * * *
தமிழ்சினிமாவும் பெண்களும்
போன பதிவில் சிங்கம் பற்றிச் சொல்லிவிட்டு அனுஷ்காவை மறந்துபோனேன். தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் லூசுப் பெண்களாக இருப்பது தொன்று தொட்ட வழக்கம்தான். தற்போது பெரிய ஹீரோக்கள் படத்தில் தவிர்க்க முடியாமல் அது ஒன்றுதான் வழி. இருந்தாலும் அனுஷ்கா மாதிரி ஒருவர் நடிக்கும்போது சகிக்கவில்லை. ஒரு தமன்னா லூசுப்பொண்ணா நடிச்சா ஒக்கே. தோற்றத்துக்கு அது செட்டாகும். அனுஷ்கா அப்படி நடிப்பதைப் பார்க்கும்போது, 'எருமை மாதிரி வளர்ந்திருக்கே கொஞ்சம்கூட அறிவே வளரலைப் பாரு' என்று மட்டுமே தோன்றியது.தமிழ்சினிமாவின் இயல்புக்கு மாறான பெண்கள்!
துறுதுறுப்பான பெண் (அதாவது படத்திலயே லூசுன்னு சொல்லுவாங்க) - ரேவதி, ராதிகா மற்றும் பலர்.
புர்ச்சிப் பெண் - அந்தக் காலத்தில் சுஜாதா பின்னர் அறிவுஜீவி சுகாசினி!
ஆம்பிளைப் பெண்- விஜயசாந்தி
ராவான ரவுடிப் பொண்ணு - பானுபிரியா, ராதிகா
அறிவு வளராத ஓவரா வளர்ந்த பொண்ணுங்க - மீனா, ரம்பா மற்றும் பலர்.
'மெண்டலி டிப்ரெஷன்' காரெக்டர் (படபடப்பா, பதற்றமா இருப்பாங்க) - சில படங்களில் ரேவதி, எல்லா படங்களிலும் கீதா!
அப்புறம் பொண்ணுங்க மா....திரி - சமீரா ரெட்டி!
இயல்பான பொண்ணுங்க அப்பப்ப வரலாம். மற்றப்படி லூசுப் பொண்ணுங்கதான். இதைப்பார்த்து சில பொண்ணுங்க ஹீரோயின் ஆவதற்கு 'ட்ரை' பண்ணுவதுதான் உச்சகட்ட கொடுமை! அதாவது தாங்களும் லூசுப்பொண்ணு என்று ஃபேஸ்புக்கில் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கென்றே இருக்கிறார் ஜெனிலியா. சமகாலத்தில் லூசுப்பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஜெனிலியாவைத் தவிர யாரும் இல்லை என்பதே யதார்த்தம்.
* * * * * * * *
அலப்பறை!
நண்பன் ஒருத்தன் வெளிநாட்டிலருந்து வந்திருந்தான்.
அப்பிடியே வழக்கம்போல ரோட்ல நின்றுகொண்டிருந்தோம். திடீர்னு சொன்னான்.
"கொழும்பில கார் கூடிப்போச்சு"
"இங்க எப்பவுமே அப்பிடித்தானே ..புதுசா சொல்லுற"
"இல்லடா நான் நிக்கேக்க இப்பிடி இல்ல.என்ன டிராஃபிக்"
ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தேன். பயபுள்ளைக்கு என்னாச்சு? நல்லாத்தானே இருந்தான்?
"அங்க பார் பென்ஸ் .. கிறைஸ்லர்..அந்தா அங்க பி. எம். டபிள்யூ!" ஆச்சரியமா சொன்னான்.
"இதில என்ன புதுசா இருக்கு.. இங்கதான் பென்ஸ், பி.எம்.டபிள்யூ எல்லாம் குப்பையா (நிறைய என பொருள்படும்) இருக்கே!"
"நான் இங்க இருக்கேக்க பார்த்ததே இல்ல?"
"டேய் நீ எங்கடா காரைப் பார்த்தே? நாங்கள் காரைப்பற்றிக் கதைச்சாலும் என்னமோ லூசுப்பயலுகள் என்கிறமாதிரியே பார்ப்பே!"
"--"
"மச்சி மனச்சாட்சியோட பேசு.. இங்க இருக்கும்போது, உனக்கு பென்ஸ், BMW லோகோ எல்லாம் தெரியுமா? உனக்கு அது தெரியுறதுக்கே வெளிநாடு போக வேண்டியிருந்திருக்கு"
உச்சக்கட்டக் கடுப்பாகியிருந்தேன்.
பொதுவாக வெளிநாட்டிலிருந்து வரும் உறவுகள் கொழும்பில் பார்த்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம் இந்தக் கார்கள். குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் நண்பர்கள். புதிதாக வரும் எந்தக் கார்களையும் உடனேயே இறக்குமதி செய்து விடுவார்கள். இங்கே வரி 400% என்பது குறிப்பிடத்தக்கது. 2010 இல் ஒரு கொரொல்லாவின் உண்மையான விலை இலங்கை மதிப்பில் 16 லட்சம். ஆனால் இலங்கையில் 80 லட்சம். (ஒரு இந்திய ரூபாய் = 2.17 இலங்கை ரூபாயாம் இப்போது - புத்தகங்களெல்லாம் 4 மடங்கு விலை) அப்போது பென்ஸ் (2010 மொடல்) 50 லட்சம் போட்டிருந்தார்கள். அப்படியிருந்தும் வாங்கிக் குவிக்கிறார்கள். கடந்த வருடம் BMW - X1 வந்தபோது, வீதியில் இறங்கும்போதெல்லாம் புதிது புதிதாக X1 கண்ணில் படும்.
உறவினர் ஒருவர் வெளிநாட்டில் கார் வாங்கியதை ஒருவர் பெருமையாகச் சொன்னார். ஒரு ஐரோப்பிய நாட்டில் கார் வாங்குவது பெரிய விஷயமா என்ன? உண்மையில் இங்கே இருந்துகொண்டு ஒரு கார் வாங்குவதுதான் பெரிய விஷயம். கனடா சென்ற என் நண்பனொருவன் ஒரே மாதச் சம்பளத்தில் ஒரு செகண்ட் ஹாண்ட் கொரொல்லா வாங்கினான். இலங்கை மதிப்பில் 3 லட்சம். ஆனால் அதே செகண்ட் ஹாண்ட் கார் இலங்கையில் 30 லட்சம். நம்மைப் போல சாதாரணர்கள் இங்கேயிருந்துகொண்டு ஒரு நல்ல கார் (Benz, BMW, Jaguar ....etc ) வாங்குவதென்பது சாத்தியமில்ல்லை. நண்பனொருவன் அடிக்கடி சொல்வான் இதைஎல்லாம் வாங்குறதுனனா, ஒன்றில் பிறக்கும்போதே கோடீஸ்வரனாகப் பிறக்க வேண்டும். அல்லது ஏழையானாலும் ஐரோப்பாவில் பிறக்க வேண்டும்.
இதையெல்லாம் யோசிச்சு நொந்து நூடுல்சாகியிருக்கோம். இதுல இவன் வேற வந்து காமெடி பண்ணிக்கிட்டு..
அதில பாருங்க, ரோட்டில நிற்கும் பசங்க பொதுவா இரண்டு வகை. பொண்ணுங்களை சைட் அடிக்கிறவங்க பெரும்பான்மை. மிகச்சிறுபான்மை ஒன்றிருக்கு கார்களை சைட் அடிப்பவர்கள். நானும் ஜெயனும் சேர்ந்து சின்சியரா அதைத்தான் பண்ணுவோம், நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடும்போது. (காருக்குள்ள இருக்கிற பொண்ணுங்களை சைட் அடிக்கிற இன்னொரு வகையும் இருக்கு - அதுவும் முதலாவது வகைக்குள் அடங்கும்)
றோட்டில இறங்கின பொண்ணுங்களை மட்டுமே பார்த்த இந்த நாதாரி இப்போ புதுசா ஆச்சரியப்பட்டா காண்டாகுமா இல்லையா?
"டேய் அங்க ஜாகுவா."
"டாய்ய்ய்ய்!!!..கொண்டேபுடுவன்"
இதையெல்லாம் கூட விட்டுடலாம். இன்னொரு விஷயம்தான் தாங்க முடியல.
"என்னடா இங்க ஒரே டஸ்டா இருக்கு.. பார் காலைல புதுசாப் போட்ட டிஷர்ட் ஊத்தையாயிருக்கு .. அங்கயெண்டா.."
"தோய்க்காமலே நாலு மாசம் போடுவீங்களா?"
இதுல முக்கியமான் ஒரு விஷயம்..தலைவர் வெளிநாடு போய் மூன்றே மூன்று வருஷம்தான் ஆகுது! இதுக்கே இவ்வளவு அலப்பறை. ஆமா, பொதுவாப் பொண்ணுங்கதானே ஆறுமாசம் கொழும்பில இருந்துட்டு திரும்ப யாழ்ப்பாணம் வந்து, ஜாஃப்னா கிளைமேட் ஒத்தே வருதில்லன்னு இப்பிடி ஓவராப் பண்ணுவாங்க?
Saturday, June 15, 2013
அவஸ்தை, அட்வைஸ், சிங்கம் - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!
சமீபத்தில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு எதிர்பாராத அவசரப்பயணம் செய்யவேண்டியிருந்தது. டிக்கட் புக் பண்ணப் போறதிலருந்து வழக்கமான ப்ரொசீஜர் ஆரம்பிச்சுது.
என்னதான் சொகுசு பஸ் என்று சொன்னாலும் அதில ஏதாவது கோல்மால் பண்ணி வச்சிடுவாங்க நம்மாளுங்க. ஒன்றரை வருஷம் தொடர்ந்து, வார இறுதியில் ரெண்டுநாள் திருமலை - கொழும்பு பயணம் (சொகுசு பஸ்தான்) செய்ததில் முள்ளந்தண்டு டமேஜ் ஆகிட்டுதோன்னு டவுட் வர்ற அளவுக்கு நொந்துபோயிருந்தேன். இருக்கை மிகச்சரியாக முதுகுக்கு இம்சை கொடுக்கக்கூடிய சாய்விலிருக்கும். அதைவிட குஷன் ரஃபா, வழுக்கும். இதுல ஏ.சி வேற நடுச்சாமத்தில 10 டிகிரி செல்சியஸ்ல இருக்கும். வேறு சொகுசு பஸ் இல்லாததால் அது ஒன்றே கதி. வெளியில பார்க்க பஸ் புதுசா, சூப்பரா இருக்கும் என்பது முக்கியமானது.(இதைப்பார்த்தே பலபேர் யாழ்ப்பாணத்துக்கும் அதே பஸ் நிறுவனத்தில் டிக்கட்போட்டு நொந்துபோய் வர்றாங்க)
யாழ்ப்பாணத்துக்கு ஓடுகின்ற பெரும்பாலான பேரூந்துகள் வாங்குற காசுக்கு மோசம் செய்யாதவை - அவை பார்க்க பழசாக இருந்தாலும்!
ஆனாலும் நம்ம ராசி இருக்கே! அதனால எப்பவும் முன்னேற்பாடா டிக்கட் போடும்போது, நல்ல கம்ஃபோர்ட்டபிளான்னு நாலு தரம் கேட்டு கன்ஃபர்ம் பண்ணி, அவன் பஸ் படம் முதற்கொண்டு காட்டி எங்களை நம்ப வச்சு, அதிலயே(?!) சீட் எல்லாம் செக் பண்ணி, சரின்னு காசைக் கொட்டி டிக்கட் போடுவம்.
இதுல போனமுறை டிக்கட் காசு வழமையைவிட நூறு ரூபா குறைவா இருக்க, "நல்ல பஸ்தானே?"
"சுப்பர் பஸ் தம்பி"
"அப்ப ஏண்ணே குறைவா இருக்கு?".
'அட காசு குறைவா இருக்கிறது ஒரு குற்றமாய்யா?' அதிர்ச்சியாப் பார்த்தார்.
பஸ்ல ஏறினதும் சீட்ல இருந்து பார்த்து சொன்னமாதிரியே இருக்கு ஏமாத்தலன்னு நிம்மதியாகி, அப்பிடியே லைட்டா திரும்பி பார்த்தா பக்குன்னு இருக்கும். நம்ம ஏழரை பிரகாரம், வழக்கம்போல பின் சீட்ல ஒரு ஆன்டியும் பொண்ணுமோ, இல்ல ரெண்டு பொண்ணுங்களோ இருக்கும்.
என்ன சோதனை! பெண்ணாதிக்க வாதியா இருப்பாங்களோ,சீட்டைப் பதிச்சா சவுண்டு விடுவாளுகளோன்னு கொஞ்சநேரம் பம்மிட்டே இருக்கணும். அதால அவங்களுக்கு எந்தப்பிரச்சினையும் இருக்காது என்கிறது வேற விஷயம். சரியான இடைவெளி இருக்கும். இருந்தாலும் என்னமோ அவங்க மடிலயே சாய்ஞ்சாமாதிரி ஒரு கண்ணகி எஃபெக்ட் குடுப்பாங்க. என்ன, சிலபேர் காலைத்தூக்கி சீட்ல வச்சிருக்கிறது மாதிரியான குரங்கு சேட்டை பண்ணிட்டு இருப்பாங்க. பாவம், அவங்களுக்கு கஷ்டம்தான்.
சரின்னு வெய்ட் பண்ணி பஸ்காரன் பின்பக்கம் வரும் டைம் பார்த்து சீட்டை சரிப்பம். அப்ப பஞ்சாயத்து வந்தா, அவனே விளக்கத்த குடுப்பான். நாம அனாவசியமா வாயத் திறக்க வேண்டியதில்ல பாருங்க!
ஒருமாதிரி அப்பாடான்னு சாய்ஞ்சு ரெஸ்டுக்குப் போனா, அப்பத்தான் வந்த பக்கத்து சீட்காரன் அவன் சீட்டை நிரப்பி, பத்தாததுக்கு நாம சீட்லயே பாதி பங்கு கேட்கிற மாதிரியே மேல விழாத குறையா ஒட்டிட்டு இருப்பானுங்க. அப்ப வரும் பாருங்க ஒரு காண்டு!
'ஏண்டா கடல் பன்னி மாதிரி உடம்ப வளர்க்கத் தெரியுது ஒரு கரப்பான் பூச்சி சைசுக்காவது மனச்சாட்சிய வளர்க்கமாட்டீங்களாடா?அடுத்தவன இமசை பண்ணாம இருக்கப் பழகவே மாட்டீங்களாடா? ஒன்றரை சீட் தேவைப்படுறவனெல்லாம் எப்பிடிறா கூசாம ஒரு சீட் மட்டும் புக் பண்ணி வர்றீங்க? ஏண்டா காசு வாங்குறீங்க இல்ல.. ஒரு சீட்டுக்கு காசு வாங்கிட்டு அரை சீட்ல எப்பிடிறா இருக்கவைப்பீங்க? பக்கத்துல மனுஷ சைஸ்ல யாரையாவது இருத்த மாட்டீங்களா? லொறில, டிப்பர்ல போறவன எல்லாம் ஏண்டா பஸ்ல ஏத்துறீங்க?' - அப்பிடீன்னு ஃபேஸ்புக்ல பொங்குறதுக்கு நிறையக் கேள்விகள் மனசுல தோணும். வெளில கேக்க முடியாது, ஊருக்குப் போகணுமா இல்லையா?
இந்த இடத்தில்தான் ரெண்டு இருக்கைக்கும் நடுவில இருக்கிற மடக்கி விடக்கூடிய Hand rest முக்கிய இடம்பெறும். இந்த ஹான்ட் ரெஸ்ட் இருக்கே .. சும்மா இருக்கிறவன எல்லாம் ஓவர் நைட்ல சிவாஜி, கமல் ரேஞ்சுக்கு கொண்டுபோயிடும். எவனொருவன் முதல்ல தத்ரூபமா தூங்கிறமாதிரி 'காரெக்டராவே' மாறிடுறானோ அவனுக்கே அது கிடைக்கும். அந்த ஹான்ட் ரெஸ்ட்டை அமுக்கி ரெண்டுபேருக்கும் இடையில ஒரு எல்லையைப் போடும்போது ஒரு வில்லத்தனமான சிரிப்பு இயல்பாவே வரும்.
இவ்வளவு துன்பத்தையும் எதிர்கொண்டு அல்லது எஸ்கேப்பாகி, நிம்மதியா சாய்ஞ்சா, கரெக்டா அந்த நேரத்தில் படத்தைப் போடுவானுங்க. ஒருத்தன் நிம்மதியா, வசதியாத் தூங்கிக் கொண்டு போகத்தானே இப்பிடியான பேரூந்தை தெரிவு செய்வான். பிறகு படம் போட்டு இம்சை பண்றதுக்குப் பெயர் மேலதிக வசதியா? அப்படித்தான் பலரும் நம்புகிறார்கள்.
அன்றைக்கும். சற்றுத் தள்ளியிருந்த யாரோ ஒரு அறிவு ஜீவி குரல் கொடுத்தார் "தம்பி படத்தைப் போடுங்கோ!". பின்பு சொன்னார் "இதுக்கும் சேர்த்துத்தானே காசு வாங்குறாங்கள் இல்ல பார்த்துக் கொண்டு போவம் ஹே ஹே ஹே" - சிரிப்பு வேற! குடுத்த காசு வேஸ்ட் ஆகக்கூடாதுன்னு வலுக்கட்டாயமா நித்திரை முழிச்சு படம் பாக்கிறவன்லாம் இருக்கானுங்க போல.
நிறையநாளா பஸ் பயணம் டச் விட்டுப் போனதில் தூக்கமே வரவில்லை.'சென்னையில் ஒருநாள்' படம் போட்டிருந்தார்கள். சவுண்ட் சரியாக கேட்கவில்லை. வசனங்கள் கேட்க வேண்டிய அவசியமும் பெரிதாக இருக்கவில்லை. நல்லாத்தான் போயிட்டிருந்தது. திடீர்னு வெள்ளைச்சட்டை போட்டுக் கொண்டு சூர்யா வந்ததும் குழம்பிப் போனேன். ஏதாவது அப்பள விளம்பரமோ அல்லது பல்பொடி விளம்பரமாக இருக்குமோ என. சானலை மாத்துங்கப்பா என மனசு கூச்சலிட்டது. ஒரு கட்டத்தில சூர்யா படத்துக்கு தியேட்டருக்குப் போயிட்டே விளம்பரம் பார்க்கிறமாதிரி மக்கள் ஃபீல் பண்ணப் போகிறார்கள்.
விறுவிறுப்பாக படம் போய்க்கொண்டிருக்க, இடையிடையே படு ஸ்லோவாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். கைகளை உயர்த்தி ஆத்து ஆத்து என்று ஆத்திக் கொண்டிருந்தார். அநேகமா சாதிக்க வேணும், துணிஞ்சு நிக்கவேணும், போராட வேண்டும், தன்னம்பிக்கை, கடமை இப்படி ஏதாவது சொல்லியிருப்பார் என நம்புகிறேன். படம் முடிஞ்ச பிறகும் விடாமல் சொற்பொழிவு ஆத்திக் கொண்டிருந்தார். எதுக்கு இந்தக் கொடூரமான ஐடியா?
யோசித்துக் கொண்டேயிருக்கும்போது இரண்டாவது படத்தை ஆரம்பிச்சாங்க..
'ஏண்டா ஏன்? வழக்கமா ஒன்றுதானே? நான் வர்றது தெரிஞ்சு பிளான் பண்ணீட்டாங்களா?' மனசு அலறியது.
ஆரம்பமானது.. பல மொக்கையான, கேவலமான, மொண்ணைத்தனமான, கேனத்தனமான, மானங்கெட்டதனமான காதல் காட்சிகளுடன் பெருவெற்றி பெற்ற சிங்கம்!
Subscribe to:
Comments (Atom)


