Wednesday, August 11, 2010

Tsotsi

ஒரு நல்ல படத்தை, எவ்வளவு கேவலமாகத் தமிழில் எடுக்கலாம்? அல்லது எடுக்கிறார்கள்?

Tsotsi , யோகி

Tsotsi - ஒரு அருமையான படம்
யோகி - தொலைக்காட்சியில், பாடல் காட்சிகளிலும், சிறு காட்சிகளிலும் பார்த்தது (அது போதாதா?) முழுன்மையாகப் பார்க்கும் அளவுக்கு என் மனம் இன்னும் பக்குவப் படவில்லை.

Tsotsi


 
எதற்கும் கவலைப்படாத ஒரு சேரிப்புற ரவுடியின் வாழ்வில் எதிர்பாராமல் ஒரு குழந்தை இணைந்து கொள்ள, என்னவாகிறது? - இதுதான் படத்தின் தீம்.

சிறுவயதில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, இரக்கமற்ற தந்தையிடமிருந்து ஓடிவந்து சேரிப்புறத்தில் தஞ்சமடைந்து, வளர்ந்த சொற்சி, நண்பர்களோடு சேர்ந்து வழிப்பறி, கொள்ளை, கொலை என வாழ்ந்து வருகிறான்.


       ஒருநாள் பென்ஸ் காரொன்றை திருடும்போது, உள்ளே ஒரு குழந்தை, தாயை சுட்டு விடுகிறான். குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல், அனாதையாக விட்டுச் செல்லவும் மனமில்லாமல், இறுதியில் தனது வீட்டுக்குக் கொண்டு செல்கிறான். ஒருவருக்கும் தெரியாமல் தானே வளர்க்க முடிவு செய்கிறான். வீட்டுக்கு வரும் நண்பர்களை உள்ளே நுழைய விடாமல், சந்தேகப் படும் அவர்களை ஒருவாறு சமாளித்து அனுப்புகிறான்.

        கைக் குழந்தையுடன் செல்லும் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று, அவளை மிரட்டி பாலூட்ட வைக்கிறான். முதலில் வற்புறுத்தலால் சம்மதிக்கும் அவள், நாளாக அக்குழந்தையின் மேல் பாசம் கொள்கிறாள்.


         ஒரு நாள் நண்பர்களுடன் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்க செல்லும்போது, அது அந்தக் குழந்தையின் வீடு எனத் தெரிய வருகிறது. குழந்தையின் தந்தையிடமிருந்து அதன் தாய் அவன் சுட்டதால், இடுப்புக்கு கீழ் வழங்காமல் இருப்பதையும், குழந்தையைப் பிரிந்து இருவரும் மிகவும் வருந்துவதையும் உணர்கிறான். பணம், நகையை விட்டு குழந்தையின் விளையாட்டு பொம்மைகள், உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கிறான்.

ஒரு சிறு குழப்பத்தில் குழந்தையின் தந்தையை சொற்சியின் சகா கொல்லப் போக, அவனைக் கொன்று தந்தையைக் காப்பாற்றுகிறான். இன்னொரு சகா வெறுத்துப் போய் அவனிப்பிரிந்து செல்கிறான்.

      இப்பொழுது அவனுடன் குழந்தை மட்டுமே. அதான் ஆடம்பரமான பெரிய வீட்டைப் பார்த்த அவனுக்கு தனது குடிசையில், பாதுகாப்பின்றி வைத்திருப்பது அவன் மனதுக்கு கஷ்டமாக இருக்க, போலீஸ் வேறு அவனைத் தேட, முதன்முறையாக தான் வாழ்க்கையில் நேசித்த, அன்பு கொண்ட ஒரேயொரு ஜீவனைப் பிரிந்து விட முடிவு செய்கிறான்.


குழந்தையை அதன் வீட்டில் கொண்டுபோய் விட தூக்கி செல்லும்போது, அந்தப் பெண் எங்கே எடுத்துச் செல்கிறாய்? அவனை நான் வளர்க்கிறேன் என்னிடம் விட்டுவிடு எனக் கேட்க, அவன் எதுவுப் பேசாமல் போகிறான்.

      துப்பாகிகளால் குறிவைத்தபடி போலீசார் சுற்றிநிற்க, குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, அழுதபடி, சொற்சி கைகளை மேலே மெதுவாக தூக்க படம் நிறைவடைகிறது.

மிகத் தெளிவான, எளிமையான, குழப்பமற்ற திரைக்கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு (குறிப்பாக அந்த 'ஸ்லம்' காட்டப்படும் விதம்)

சொற்சி பாத்திரத்தின் இயல்பான நடிப்பு, குழந்தைக்குப் பாலூட்டுவதை பார்க்கும்போது வெளிப்படும் (தாய்ப் பாசத்துக்கு ஏங்கும்) முகபாவனை

இயக்கம் - Gavin Hood
Country- South Africa
Award - Academy Award for Best Foreign Language Film 2005
           - Nominated for Golden Globe for Best Foreign Language Film 2006

யோகி

tsotsi என்றால் ரவுடி / பொறுக்கி
யோகி என்றா? ( பெயரிலேயே வித்தியாசமா யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க)

அதில டீன் ஏஜ் ஹீரோ.
இதில நம்ம 'யூத்து' அமீர்.

அதில பெயருக்கு ஏற்றமாதிரி ஹீரோ ரவுடி. மற்ற எல்லாரும் இயல்பான பாத்திரங்கள்.
இதில தமிழ் சினிமா விதிகளின்படி ஹீரோ நல்லவர், வல்லவர், நியாயமானவர் இன்னபிற. அவர்தான் ஹீரோவாச்சே.. அப்போ மற்ற எல்லாரும் கெட்டவங்க.

அதில, அவன் கெட்டவனாகவே வாழ்கிறான். அவன்தான் படத்தில் வில்லன். அதையும் தாண்டி இறுதிக் காட்சியில் அவன் மேல் எங்களுக்கு இரக்கம் ஏற்படும்.
இதில இவர் 'ஹீரோ'வா இருக்கிறார், நடக்கிறார், இறுதியில் சாகிறார். எங்களுக்கு? (அப்பாடா! போயிட்டானா? அவ்வளவு சேட்டை, தாங்க முடியல!)

ஆனா இரண்டிலையும் ஹீரோயின் சறம் கட்டி இருக்காங்க. அபிரிக்காவில பெண்கள் சறம் கட்டுவாங்க ஒக்கே. தமிழ் நாட்டிலையும் கட்டுறாங்களா? எனக்குத் தெரியல.

          ஒண்ணு மட்டும் எனக்குப் புரியவே மாட்டேங்குது. யோகிய ஏன் இரண்டு வருஷமா எடுத்தாங்க? ஒன்னுமே தெரியாத நானே, புது முகங்களை வைத்து (பழைய முகம்னா 'நடிக்கத்' தொடங்கிடுவாங்களே), ஒவ்வொரு ஸீனா பாத்துப் பாத்து, காட்சியமைத்து (அவ்வளவு தெளிவா இருக்கு படம்), ஆறு மாசத்தில எடுத்துடலாம் ன்னு நினைக்கிறேன்.
அமீருக்கு ஏன் இவ்வளவு நாள்? இதில டைரக்க்ஷன் வேற ஒருத்தர், கதை அமீரோடதாம் (பார்ரா!!)

tsotsi யை அப்படியே தமிழில் எடுத்திருந்தால், தமிழ் சினிமாவின் ஒரு நல்ல படைப்பாக இருந்திருக்கும். ம்ம் என்னமோ போங்க!

3 comments:

  1. இந்த மாரி தேவயே இல்லாம குழப்பமும் கேள்வியும் வருமென்டு தான் நான் "யோகி" பார்கல்ல....(சாருவால தான் "tsoski" தான் "யோகி" என்டு தெரியும்)

    ReplyDelete
  2. 'யோகி' யை அப்படியே சுட்டு Tsotsi எடுத்தவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். இதெல்லாம் ஒரு பிழைப்பா? கதாசிரியர் அமீர் பெருந்தன்மை உள்ளவர் என்பதால் அவர்கள் மேல் வழக்கு தொடுக்கவில்லை. இனியாவது இது போன்ற செயல்களை வெளிநாட்டவர்கள் நிறுத்த வேண்டும். ராஸ்கோல்ஸ்!!

    ReplyDelete
  3. In Tsotsi, There will be 3 ends. In one End the Police will shoot him when he takes out the milk bottle from his pocket.
    In another end he jumps over the fence and run away.
    The third end will be he will raise the hand and just move behind.
    The director comments that he has left the audience to guess what happens next. He don't want to put the end by making him die or run over the fence into the Slum place.

    I was impressed with the creativity.
    Siraj

    ReplyDelete