Showing posts with label Why this kolaveri?. Show all posts
Showing posts with label Why this kolaveri?. Show all posts

Saturday, May 28, 2011

தமிழ்ப் பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? - நம்மவர்!


வார இறுதிகளில் நெடுந்தூரப் பேருந்துப் பயணங்கள் பெரும்பாலும் கொடுமையானதாக மாறிவிடுகிறது. 

பேரூந்தில் ஏறியதுமே முதலில் நோட்டமிடுவது எனது சீட்டுக்குப் பின் சீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதையே! இளம்பெண்கள் இருந்துவிட்டால் பகீரென்று விடுகிறது! - அவ்வளவுதான்! அன்றைய பயணம் நரகம்தான்!

சொகுசு பஸ்களை ரிசேர்வ் பண்ணி பயணம் செய்வதன் முக்கிய காரணமே ஏசி, சௌகர்யமான அட்ஜஸ்ட்டபிள் சீட் என்பதால் தூங்கிட்டே பயணிக்கத்தான்! அதாவது மற்றவர்களுக்கு இடையூறில்லாமல், பின்னாலிருப்பவர்களின் முழங்காலில் இடிக்காமல் இருக்கையை சாய்த்து, வசதியாக!

ஆனால் இருக்கையை சாய்க்க விடாது தடுத்தால் எப்படியிருக்கும்? இதைத்தான் செய்து வருகிறார்கள்! - பெரும்பாலான பெண்கள்!

முதல்முறை அப்படித்தான் ஒரு பெண்! மிக அழகான பெண்! பெண்ணின் அருகிலிருந்த அங்கிளிடம் பார்க்கச் சொன்னேன் எவ்வளவு தூரம் அட்ஜஸ்ட் செய்யலாமென்று பார்க்க! அவர் சொன்னார் 'நீங்க தாராளமா சரியுங்க தம்பி'ன்னு. ஆனால் அந்தப் பெண் சிறிதும் அனுமதிக்கவில்லை, அவரும் பேசிப்பார்த்து பலனில்லை! 

நான் எதுவும் பேசவில்லை என்ன பேசுவது? எப்படிப் பேசுவது இப்படியான பெண்மணிகளுடன்? கொஞ்சம் கூட மனிதப் பண்புகள் , அடுத்தவனும் மனுஷன் என்று நினைக்கும் குணம் இல்லாதவர்களைச் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. 

முதலில் எரிச்சலாக இருந்தாலும் அதனாலும் எனக்குத்தானே பாதிப்பு? அப்பத் தோணிச்சு பாருங்க - ஏழு மணித்தியாலம் அந்தப் பெண்ணுக்கு முன்னாலிருந்து பயணம் செய்வதே இவ்வளவு கஷ்டமா இருக்குதுன்னா அதை கல்யாணம் செய்பவன் கதி? - எப்புடியெல்லாம் யோசிச்சு மனசைத் தேத்த வேண்டியிருக்கு?

அப்படியே நிமிர்ந்தவாறே தூக்கமுமின்றி பயணம் செய்து மறுநாள், கழுத்து, உடம்பு வலியால் அலுவலகத்தில் அவஸ்தை! 

இன்னொரு நாள். எனக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒருபெண்! எனது முழங்காலில் அவருடைய இருக்கை சாய நானும் ஒவ்வொரு முறையும் சீட்டில் தட்டுவேன் உடனே சிறிது உயர்த்துவார். சற்று நேரத்தில் காலின்மீது சரிக்க நான் திரும்பவும்....பயணம் முழுவதும் அவஸ்தை தொடர்ந்தது. தூக்கமுமில்லை! 

இவ்வளவிற்கும் எல்லாரும் படித்த பெண்கள். முக்கியமான விஷயம் தமிழ்ப் பெண்கள்! 

ஏன் தமிழ்ப் பெண்கள் மட்டும் இப்படி நடந்து கொள்கிறார்கள்? அடுத்தவன் அவஸ்தைகள், மனநிலையை மதிக்காமல் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி மனசாட்சியே இல்லாமல் வாழ எப்படி முடிகிறது?

சரி! அதைக்கூட விட்டு விடுங்கள்! இவ்வளவு அநியாயம் பண்ணிட்டு, கடைசியில் இறங்கிப்போகும்போது ஏதோ நாமதான் என்னமோ 'ஈவ் டீசிங்' பண்ணினமாதிரி கண்ணகி கசின் ரேஞ்சில ஒரு 'லுக்கு' விடுவாங்க பாருங்க! அதாங்க பெரிய கொடுமை! 

தாங்கள் ஒழுங்காக சௌகர்யமாக அமரும் இந்தப் பெண்கள், மற்றவர்களும் அதே வசதிக்காகத்தான் அதிக விலை கொடுத்து சொகுசுப் பேரூந்துகளில் வருகிறார்கள் என்பதை ஏன் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்? 

இயல்பாகவே தமிழ்ச் சமூகம் பெண்களுக்குத் தரும் மரியாதையை, ஒரு பரிவை அல்லது சலுகையை தங்களுக்கு ஒரு வேலியாகப் பயன்படுத்திக்கொண்டு வந்து அந்த வேலியே பின்பு தடித் தோலாக மாறிவிட்டதா? 

இந்த மாதிரியான தடித்தோல் பேர்வழிகளிடம் எப்படிப் பேச முடியும்? என்னதான் அநியாயத்தைக் கண்முன்னால்  பார்த்துக் கொண்டிருந்தாலும், ஒரு பெண்ணிற்கெதிராகப்  பேசினா நம்ம நடுத்தர , வயோதிக அன்பர்கள்  சண்டைக்கு வந்துவிட மாட்டார்களா?

அதுவும் அழகான பெண்கள் என்றால் எமது சமுதாயத்துக்கே ஒரு பெரிய வீக்னெஸ் அல்லவா?

இதுக்கென்றே ஒரு கூட்டம் இருக்கே! பெண்கள் துயர்துடைக்க(?!) எங்கடா சான்ஸ் கிடைக்கும்னு அலைஞ்சிட்டு! இது தாய்க்குலத்தைக் காப்பாற்றும் கூட்டமா அல்லது 'கவர்' செய்ய முயலும் கூட்டமா என்பது ஆராயப்பட வேண்டியதொன்று! 

பெரும்பாலான ஆண்கள் வயது வித்தியாசமின்றி இளம்பெண்களைக் கண்டுவிட்டாலே குரலை உயர்த்தி அடிக்கடி அந்தப் பக்கம் ஒரு லுக் விட்டுக் கொண்டே ஹீரோவாக முயற்சி செய்யும் ஒரு சைக்கோ சமூகத்தில், பெண்கள் இப்படித்தான் இருப்பார்களா?

பெண்களையும் , ஆண்களையும் அருகருகே உட்கார இடமளிப்பதில்லை நம்ம தமிழ் ஏரியா பேருந்துகளில்! கலாச்சாரத்தைக் காப்பாற்றும்(?!) முயற்சியாம்! (ஜோடியாக பதிவு செய்தல் ஓக்கே!)  மிக்க நல்லது!அதை அப்பிடியே தனித்தனி வரிசையாகவே மாற்றிவிட்டால், நம்மள மாதிரி அப்பாவி ஜீவனுகள் பிழைச்சுப் போகும்! 

இன்று அதிகாலையும் தூக்கமின்றி வந்தேன்! நாளை திரும்பவும் போகணும்! புதுசா என்ன கொடுமையோ? இப்பவே கண்ணைக் கட்டுது!  

இந்தப் பதிவைப் படிக்கும் பெண்கள் ஒருநிமிஷம் நியாயமாக யோசியுங்கள், உங்கள் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!  ஏனெனில் நீங்களோ, உங்கள் தோழியோ கூட இதில் அடங்கலாம்!

இதில் ஒட்டு மொத்தமாக எல்லாப் பெண்களையும் குறை கூறவில்லை! மற்றவர்களையும் மனிதராக மதிக்கும் பெண்களும் பலர் இருந்தாலும், நம்மவரில் பெரும்பான்மை இவர்கள்தான்!   
  
நீங்களும் இப்படியான அவஸ்தைகளைச் சந்தித்திருக்கிறீர்களா?ஆண்களால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி நிறையப் பேசுகிறார்கள்! பெண்களால் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை யாரிடம் சொல்வது?

பிராணிகளுக்கு எல்லாம் ப்ளூ கிராஸ் இருக்கு..ஆனா அப்பிராணி ஆண்களுக்கு?