tag:blogger.com,1999:blog-90073811972595240652024-03-13T18:18:15.040+05:30வானம் தாண்டிய சிறகுகள்..jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger231125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-43804006468684166972019-02-01T16:35:00.003+05:302019-02-01T16:35:35.614+05:30செல்லக்குட்டி<div style="text-align: justify;">
யாழ்ப்பாணம் சென்று சேர்ந்த அந்தக் குளிர்காலைப் பொழுதில் சரியாக ஏழரை மணிக்கு செல்லக்குட்டி என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தது. இல்லை நான்தான் பார்த்தேன். அது தன்பாட்டில் வீட்டுக்குள் சுற்றிக்கொண்டிருந்தது. துரத்த முயன்றால் கண்டுகொள்ளவில்லை. ஒரு தடவை நேருக்கு நேராக இரண்டடி இடைவெளியில் எதிரே நின்று பயப்படாமல் பார்த்தது. அதன் வரலாறு தெரிந்ததால் எனக்குத்தான் சற்றுப் பயமாயிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செல்லக்குட்டி ஒரு மர அணில். மர அணில்கள் சிநேகபூர்வமாக பழகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இது அயல் வீட்டுப் பெண்மணிக்கு கையில் கீறியதில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது தெரியும். எங்கள் வீட்டுக்கு முதன்முறையாக வந்திருக்கிறது. பிறகு தும்புத் தடியை எடுத்துவந்து சற்றே அசைத்துக் காட்டியதும் வெளியே போய்விட்டது. யாரிடமாவது அடிவாங்கியிருக்குமோ என்னவோ.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சற்று நேரத்தில், அதன் அம்மா தேடி வந்தார். அதனை வளர்க்கும் பெண்மணி. "செல்லக்குட்டி.. செல்லக்குட்டி" என்றழைத்தார். வரவில்லை. அவன் வழமையாக பக்கத்து வீட்டுக்கு மட்டும்தான் போவானாம். முதன்முறையாக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். தவிர, அவனுக்கு போக மட்டும்தான் தெரியுமாம். திரும்பி வீட்டுக்கு வர வழி தெரியாதாம். அம்மா வந்து அழைத்துச் செல்ல வேண்டும். எல்லாரையும் தம் வீட்டு ஆக்கள்போலவே நினைத்து தாவிவிடுமாம். யாராவது அடித்து விடுவார்களோ என்று தனக்குப் பயம் என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரைமணி நேரத்தில் மறுபடியும் வந்து ஒருதடவை வீட்டைச் சுற்றிப்பார்த்துவிட்டு வெளியே போனது செல்லக்குட்டி. வேப்பமரத்தில் குதூகலமாகத் தாவி ஓடித்திரிந்தது. வெளியே வந்துநின்ற என்னை ஆர்வமாகப் பார்த்தது. பிறகு கீழே இறங்கி நின்று அன்பாகப் பார்த்தது. நானும் பார்த்தேன். பின்பு கொஞ்சம் நெருங்கி ஐந்தடி தூரத்தில் நின்று அன்பாகப் பார்த்தது. நானும் அன்பாகப் பார்த்தேன். பின்பு இன்னும் நெருங்கி என் காலடியில் நின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதுவரையில் எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடிரென்று அன்பாகத் தாவிக் காலில் ஏறியது. டெனிம் ஜீன்ஸ் தாண்டி அதன் கூரான நகம் தொடையில் பதம் பார்த்தது. உதற முயற்சித்தால் பலனில்லை. பாரமாக வேறு இருந்தது. முதுகுப் புறமாக ஏறியது. கைகளால் பிடித்து இழுக்கலாமா என்கிற யோசனையைச் சடுதியாக நிறுத்த வேண்டியதாயிற்று. அப்போது தோளில் ஏறி, பின் கழுத்துக்கு அருகில் உரசிக்கொண்டிருந்தது. நேராக கழுத்திலேயே கடித்துவிடுமோ என்கிற பீதியில் அசையாமல் நிற்க, சாவகாசமாக இறங்கிப்போனது. கையில் நகம் கீறி இரத்தம் கசிந்தது. ஆங்காங்கே பலமாக எரியத் தொடங்கியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மாவுக்கு செல்பேசியில் தகவல் சொன்னதும், அழைத்துச் செல்ல சிறிய கூடொன்றுடன் வந்திருந்தார். வீட்டில் பெரிய கூடு இருக்கிறதாம். அவ்வப்போது திறந்து விடச்சொல்லி அடம் பிடிப்பானாம். கூட்டின் கதவைக் கட்டும்போது பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பின்பு அந்த இடத்தில் கைகளால் அடித்து திறக்க முயற்சிகள் மேற்கொள்வானாம். பிறகு சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபடும்போது கூட்டைத் திறந்துவிடுவாராம். தனக்கும் அடிக்கடி நகம் கீறி விடுவதாக அம்மா சொன்னார். ஊசி ஏதும் போட்டுக்கொண்டதில்லை, சன்லைட் சோப் போட்டுக் கொள்வாராம் என்றார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யாருக்கும் கடித்ததில்லை. கோபம் வந்தால் கடிப்பது போல பாசாங்கு செய்வதாகச் சொன்னார். குழந்தையின் குழப்படியைச் செல்லும் அம்மா போலப் பேசிக்கொண்டிருந்தார். காயங்களின் எரிச்சலையும் மீறி கதை கேட்க நன்றாயிருந்தது. ஆனால் செல்லக்குட்டிக்குத் தன் கதை அவ்வளவு சுவாரசியமாக இல்லைப்போல. குறுகிய கூட்டில் பொறுமையிழந்து கைகளால் ஓங்கித்தட்டத் தொடங்கினான். அம்மா அழைத்துச் சென்றுவிட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போது குழப்பமாக இருந்தது. தடுப்பூசி போடவேண்டுமா? கடிக்கவில்லையே? எதற்கும் வைத்தியசாலை சென்று கேட்டுவிடலாம் எனப் புறப்பட்டேன். வெளிநோயாளர் பிரிவில் பெண் மருத்துவர். சற்றுத் தயக்கமாக ஆரம்பித்தேன். எனக்குப் அடுத்ததாக வந்து நின்ற பெரியவரும் என்கதையைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மருத்துவர் பெண்மணி ஆச்சரியமாகப் பார்த்தார். 'இந்தியன்' படத்தில் ஒட்டகத்திடம் கடிவாங்கிய கவுண்டமணியைப் பார்த்து செந்தில், 'ஒட்டகம் கடிக்குமா, அது வாயில்லா ஜீவனாச்சே' என்பாரே அதுபோல பார்வை.</div>
<div style="text-align: justify;">
அணில் கடிக்குமா? மர அணிலா? இங்க இருக்கா? இப்பிடி யாரும் வந்ததில்லையே என ஆச்சரியப்பட்டார். பின்பு அருகிலிருந்த முதிர்ந்த பெண் மருத்துவரிடம் ஊசி போட வேணுமா? என்றார். அவர் யோசித்து, "எதுக்கும் போட்டுடலாம்.. போடத்தான் வேணும்" என்றார் தீர்மானமாக. டொக்சைட், ARS, ARV எல்லாம் போடுவதாக முடிவாயிற்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ARS க்காகக் காத்திருந்தேன். என்கதை கேட்ட பெரியவரும் அருகிலிருந்தார். இன்னும் பலர். அவரவர் தம் பிரச்சினையை பகிர்ந்தளாவிக் கொண்டார்கள். பெரிய சம்பவங்களோடு எல்லாம் வந்திருந்தார்கள். ஓரிருவர் அடிதடி தாக்குதல். இந்த இடத்தில் நம் அணில் சம்பவம் கொஞ்சம் கௌரவக் குறைச்சலாக இருக்குமோ? அதனாலென்ன? நாம்தான் யாருடனும் இதுபற்றிப் பேசப் போவதில்லையே. எந்தக் சலனமுமில்லாமல் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரியவர் தன் கதையைச் சொன்னார். பல வருடமாக வளர்த்த அவரது நாய் கையில் கடித்துவிட்டது. இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்தார். ஒருவேளை அதனால்தான் நாய் டென்ஷனாகி கடித்திருக்குமோ எனத் தோன்றியது. அவரோ, "எல்லாம் கிரகபலன் சரியில்லாமத்தான், விதி! ஒண்டும் செய்யேல்லாது" என்றார். பின்பு, விதியின் வலிமையை மேலும் எடுத்துரைக்கும் விதமாக, "இவரைப் பாருங்கோ.. காலமைதான் கொழும்பிலருந்து வந்து அணிலிட்ட கடி வாங்கிட்டார்".</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'அணில் கடிச்ச தம்பி', 'அணில் கடிச்ச அண்ணா' என்று அழைக்கப்படுமளவிற்கு மிகக் குறுகிய காலத்திலேயே அங்கே நான் பிரபலமடைந்திருந்தேன். ARS போட்டுக்கொள்ளும்போது பெரிதாகத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்ததும், மறுநாள் முழுவதும் தோன்றியது, பேசாமல் இருந்திருக்கலாமோ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ARV எழுதிக்கொடுக்கும்போது அந்த மருத்துவரும் ஆர்வமாக கதை கேட்டார். 'கடிக்கேல்லைத்தானே.. இருந்தாலும் அணிலுக்கு ஏதும் கடிச்சிருந்தா? அதுக்கு ஊசி போடினமோ தெரியாதுதானே நாங்கள் எல்லா ஊசிகளையும் போட்டுக்கொள்ளுறது ஒரு பாதுகாப்புத்தானே' எனப் பொருள்படப் பேசினார். 'கடிவாங்கினார்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பதுபோல நீங்கள் கொழும்பிலும் எந்த அரசாங்க வைத்தியசாலையிலும் போட்டுக்கொள்ளலாம் என்றார். பின்பு இன்னொரு முக்கிய தகவலையும் தெரிவித்தார். இந்த ஊசிகளையெல்லாம் தவற விடாது போட்டுக் கொண்டால் ஐந்து வருடங்களுக்கு கவலைப்படவே வேண்டியதில்லை. நாய், பூனை, நரி, அணில், ஆடு போன்ற பிராணிகளிடம் தைரியமாகக் கடி வாங்கலாம். பெருமையாக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்கு நாட்களில் இரண்டாவது ஊசிக்காகச் செல்லும்போது நினைத்துக்கொண்டேன். வெறிநாய்த் தடுப்பூசிதானே அது. இனி அணில் பற்றி பேச்செடுக்கக் கூடாது. நுழைகையிலேயே சிநேகபூர்வமாகப் பார்த்த பெண்மணி, ஆர்வமாக விசாரித்தார் 'உங்களுக்குத்தானே அணில் கடிச்சது?' அருகில் நின்றவர்களும் திரும்பிப் பார்த்தார்கள். அடுத்த நான்கு நாட்களில் மூன்றாவது ஊசி. 'இங்கே மருந்து இல்லை. யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்குப் போங்கோ' என்கிறார் முதல்நாள் பார்த்த பெண்மருத்துவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கே ஊசி போடும் அறையில் மருத்துவர், இரண்டு தாதியர்கள் இருந்தார்கள். மருத்துவர் அன்பாகப் பேசினார். ஊசி போட்டுக்கொண்டு எழுந்து வரும்போது, "தம்பி நாய் உயிரோட இருக்குத்தானே?" என்றார். ஏதோ யோசனையில் மூளை எச்சரிக்கை செய்ய முதலே வாய் முந்திக்கொண்டு, "அது நாயில்ல..அணில்". இப்போது தாதியர்களும் ஆர்வமாக என்பக்கம் திரும்ப, அவசரமாக வெளியேறினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செல்லக்குட்டி பத்திரமாயிருக்குதா? யோசனை வந்தது. வீட்டுக்கு வந்ததும் செல்லக்குட்டி மிகவும் தெம்பாக உற்சாகமாக இருக்கும் தகவல் தெரிந்தது. காலையில் அது இன்னொரு பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கிறது. அங்கே ஒரு அண்ணாவின்மீது அன்பாகத் தாவியிருக்கிறது. அவர் கொஞ்சம் முரட்டுத் தனமாகப் பிடித்து இழுத்திருக்கிறார். செல்லக்குட்டி மிகுந்த கோபமாகி பிராண்டியதில் கையெல்லாம் ரத்தமாம்! </div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-62191595601185474842017-09-07T15:42:00.000+05:302017-09-07T15:42:54.450+05:30பள்ளிக்கால வன்முறை!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-jiH9W1oL6Mc/WbEbErWOF3I/AAAAAAAAAKQ/wGt3Kn1yHEkbEOkj3Nr3mJhURpR52SHYwCLcBGAs/s1600/School-student.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="466" data-original-width="831" height="222" src="https://4.bp.blogspot.com/-jiH9W1oL6Mc/WbEbErWOF3I/AAAAAAAAAKQ/wGt3Kn1yHEkbEOkj3Nr3mJhURpR52SHYwCLcBGAs/s400/School-student.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><b><br />யா</b></span>ழ்ப்பாணத்தின் பள்ளி நாட்களில், விமானக்குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் எல்லாவற்றையும் தாண்டி அதிகம் அச்சுறுத்தியது ஆசிரியர்களின் வன்முறைதான்! இயல்பாக சிறுவர்களாக இருக்கவிடாமல் எப்போதும் மிகுந்த பதட்ட உணர்வையும், எச்சரிக்கையையும் ஒருங்கே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அடிக்கடி தோன்றும் விஷயம் இது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒழுக்கம் என்பது தண்டனைக்குப் பயந்திருப்பது என்று நம்பும் சமூகம். மனித உரிமைகள் ஆணைக்குழு பற்றிக் கேள்வியேபட்டிராத காலம். பலருக்கு வீட்டிலும் சொல்லமுடியாது. அப்படியே ஒரு பெரிய மனுஷனிடம் சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். தங்கள் வாத்தியார் கைகளை மடக்கச்சொல்லி, மொழியில் அடிமட்டத்தால் அடிப்பர் என்பதை பெருமையாக நினைவு கூர்வார். அல்லது முஷ்டியை மடக்கி மண்டையில் எப்படி ஓங்கி கொட்டும், தொட்டுத் தொடரும் ஒரு கொட்டுப் பாரம்பரியம் பற்றிப் பரவசமாகப் பேசுவார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விளைவு? பள்ளிக்கால வன்முறையைக் கேட்க ஆளே கிடையாது. சரி, இப்போது சிந்திக்க தெரிந்த, வளர்ந்துவிட்ட நண்பர்களிடம் கேளுங்கள். 'அந்தக்காலத்தில் அடிச்சு வளர்த்ததாலதான் நான் இப்ப இப்பிடியொரு மனுஷனாகி..' என ஆரம்பிப்பார்கள். இல்லாவிட்டால் வால் முளைத்துக் குரங்காகி மரத்தில் தாவிக் கொண்டிருப்பார்களாம் என்பது அவர்கள் நம்பிக்கை. எதையெல்லாம் ரொமாண்டிசைஸ் செய்துகொள்கிறோம், என்ன உளறுகிறோம் என்கிற விவஸ்தையே நமக்குக் கிடையாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு கல்லூரிக்கு குறைந்தபட்சம் இரண்டு பிரதான சைக்கோ ஆசிரியர்கள் இருப்பார்கள். சில 'ஒழுக்கமான' பாடசாலைகளில் இன்னும் அதிகம். 'குற்றவாளி' மாணவனை வகுப்புக்கு வெளியில் நிற்கவைத்தால் போதும். 'இவன் ஏன் அடிக்கிறான்?', 'இவன் எனக்குப் படிப்பிக்கவில்லையே?' என்றெல்லாம் கேட்க முடியாது. இதற்காகவே பிரத்தியேகமாக சட்டம் ஒழுங்கு பேணும் சைக்கோ ஆசிரியர்கள் இருந்தார்கள். இவர்கள் எந்த வகுப்புக்குள்ளும் புகுந்து யாரையும் அடிப்பார்கள். முதலில் அடித்துவிட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பார்கள். இந்த ஒழுக்கவியல் ஆசிரியர்களுக்கு இருக்கும் முக்கியமான தகுதி - அவர்களிடம் எந்தவிதமான ஒழுக்கமும் கிடையாது என்பதுதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><b>கொ</b></span>ழும்பில் நம் ஆசிரிய நண்பன் நேர்த்தியாக உடை, சப்பாத்து அணிந்து வேலைக்குச் செல்லும்போது அறையிலிருந்த ஒருவன் கூறினான். 'எதுக்கு டீசண்டா இருக்கே? தலையைக் கலைச்சு விடு. கைய ஒழுங்கா மடிக்காதே ஏறி இறங்கி நிற்கட்டும். பழைய சிலிப்பர் போட்டு ஒற்றைக்காலை லேசா இழுத்து நட! அதானடா சரியா இருக்கும்?' என்று சிரித்தான். அவன் வார்த்தைகளில், கிண்டலுக்குஅப்பால் இருந்த ஓர் உண்மை மிக மோசமானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையில் நம் ஆசிரியர்கள் பாவம். தென்னாசியாவிலேயே இலங்கையில்தான் அரசாங்க ஆசிரியர்களுக்குச் சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை என நினைக்கிறேன். யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு பாகிஸ்தான் சென்று கற்பிக்கும் யோசனையில் சில ஆசிரியர்கள் இருந்தார்கள். அங்கே நல்ல சம்பளம் என்றார்கள்.சமுகத்தில் ஆசிரியர்களின் பணி மகத்தானது. அதுவும் சிறுவர் பள்ளி ஆசிரியர்கள் மிக முக்கியமானவர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையில் பெருவிருப்பத்தோடும், ஆர்வத்தோடும் இளைஞர்களாக கற்பிக்க வரும் ஆசிரியர்கள் சில வருடங்களில் தேங்கி, சலிப்படைந்து விடுகிறார்கள். அவர்களில் சிலர் கேலிக்குள்ளாகிறார்கள். சிலர் வன்முறையாளர்களாகிறார்கள். பலர் எப்போதும் உற்சாகமாக மாணவர்களோடு தம்மையும் புதுப்பித்துக் கொள்கிறார்கள். அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.வளர்ந்த நாடுகள் போல, எந்தத்தொழிலைச் செய்தாலும் தன்னிறைவான வாழ்க்கையொன்றை வாழமுடியும் என்கிற நிலை இருக்கவேண்டும். அதன்பின்பே செய்யும் தொழிலில் 'சேவை', 'அர்ப்பணிப்பு' என்கிற பேச்செல்லாம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆரம்பப் பள்ளியிலேயே நாம் கொடுமைகளுக்குபழக்கப்பட்டிருந்தோம். அந்த ஆசிரியர்களில் சிலர் உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கலாம். அவர்களை நம்பிப்பிஞ்சுகளை ஒப்படைப்பது மிகக்கொடூரமானது. ஒரு கணத்தில் அன்பே உருவாகப் பேசும் ஆசிரியர்கள், அடுத்த கணத்திலேயே பெரும் வன்முறையாளராகி விடுவார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐந்தாம் ஆண்டில் ஸ்கொலர்ஷிப் படிப்பில் எங்கள் ஆசிரியர் புள்ளி குறைந்தவர்களை அடிப்பது ஒரு சடங்கு. ஒரு தும்புத்தடியின் பாதி அளவு விட்டத்தில் பெரியதொரு கம்பால் பின்பக்கத்தில் ஓங்கி அடிக்கும்போது,‘ப்ளடி ஃபூல்’ என்று பல்கலைக் கடித்து உறுமியவாறு அடிப்பார். பின்பொரு முறை நானும் ஜனகனும்பேசிக்கொண்டிருந்தோம். ‘எப்படி அவரால் முடிந்தது?’. அவரது மூத்த மகன் இயக்கத்திற்குச் சென்றதிலிருந்துதான் இப்படி ஒரு பாதிப்பு அவருக்கு என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது. அவரது கடைசி மகன் எங்கள் வகுப்புதான். வேறொரு டிவிஷனில் படித்தான். ஒழுங்காக வீட்டுப்பாடங்கள் எதையும் செய்யமாட்டான். புத்தகங்கள் கொண்டுவர மாட்டான். அவன் வகுப்பாசிரியர் அவனை நேராக எங்கள் வகுப்புக்கு தகப்பனிடம் கூட்டி வந்துவிடுவார். எங்கள் வகுப்பிலோ பயிற்சிப்புத்தகம் கொண்டுவராமல் விடுவது ஏறக்குறைய கொலைக்குற்றம். மகன் மீதான புகார்களை கூறும்போது கொஞ்சம் முறைத்தபடி கண்டிக்கும் பாவனையில் பேசுவார். அவனோ ஏதோ பாராட்டுரையைக் கேட்பதுபோல சிரித்தபடி நிற்பான். அவன் சிரிப்பைப்பார்க்க எங்களுக்கே நாலு அப்பு அப்பலாம் போலிருக்கும். பாவம் பெற்ற தந்தை அவருக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா?அவனும் இயக்கத்திற்குப் போய்விடுவான் என்ற பயம் அவருக்கு இருந்திருக்கக்கூடும். அது அவருக்கு மேலதிக உளவியல் தாக்கம்தான். அதனாலென்ன? சற்று நேரத்தில் எங்கள் வகுப்பில் யாரோ ஒருவன் சிக்குவான் இல்லையா? சேர்த்துக் கவனித்துக் கொள்வார்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுபற்றி பின்னர் நண்பன் பார்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சந்தேகம் வந்தது. அது இன்னொரு ஆசிரியர் பற்றியது. வேட்டையாடும் மிருகம் போன்ற பளபளக்கும் கொள்ளிக் கண்கள். சிரிக்கும்போது இன்னும் பயமாக இருக்கும். இன்னும் பளபளக்கும் விழிகள். குரூரமான சிரிப்பு. அவருக்குப் பயந்து இரண்டு பேர் வேறு பள்ளிக்குச் சென்றிருந்தார்கள். அவர்பற்றித்தான் கேட்டேன். ‘அந்தாளுக்கு என்ன பிரச்சினைடா? என்ன பாதிப்பு?’<br />பார்த்தி யோசிக்காமல், அவசரமாக சொன்னான், "அவன் பிறவிச் சைக்கோ!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><b>ஒ</b></span>ரு வகையில் வன்முறைக்கு உள்ளாகுபவனுக்கு எந்தப் பாதிப்புமில்லை. அல்லது பழகிவிடும். கடந்து போய்விடுவான். ஆனால் பக்கத்திலிருந்து பார்ப்பவன் நிலைமை மோசமானது. தற்காப்பு உணர்வும்,எச்சரிக்கையான அவதானிப்பும் ஒரு தத்தளிப்பான நிலையில் மனதை எப்போதும் வைத்துக்கொள்ளும். அப்படியான சந்தர்ப்பங்களில் பயந்திருக்கிறேன் எங்கே நானும் எழுத்தாளனாகி விடுவேனோ என்று. நண்பர்கள் புண்ணியத்தில் அப்படியொரு அசம்பாவிதம் நிகழவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புவி என்றொரு பேர்வழி. நல்ல உயரமாக கச்சலாக நிற்கவே தெம்பில்லாத மாதிரி ஆடிக்கொண்டே இருப்பார். இளைஞர்! எப்போதும் தோளுக்கு மேலே ஓங்கியபடியே இருக்கும் கையில் பிரம்பு ஆடிக்கொண்டிருக்கும். ஆஸ்துமா இருக்கவேண்டும். இழுத்துக் கொண்டிருக்கும். வாயைத் திறந்தால்குப்பை கூழங்களைப் பறக்கவைப்பது போலகாற்று ‘ஹூய்ய்ய்’ என்று வரும். கிரீச்சிடும் குரலில் பேச முயற்சிப்பார். அவர் என்ன பாடம் படிப்பிகிறார்? எதுவும் தெரியாது. இங்கே என்னதான் செய்துகொண்டிருந்தார்? தெரியாது! ஆனால் நாம் என்ன செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும் எப்படியும் அடித்துவிடுவார் என்று மட்டும் தெரியும். சிலருக்கு அவர் மனிதர்தானா என்றே சந்தேகம். இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய், ‘புவி செத்துப்போய் மூன்று வருசமாச்சு’ என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏதோ ஒரு அசுபயோக அசுப தினத்தில் புவியிடம் விசாரணையில் மாட்டிக்கொண்டேன்.<br />"உய்ய்ய் எங்க கர்ர்ர் யார்ர்?”<br />"உ ஹ்ஹ்ஹ் ர்ர்ர்ர் எந்த கிளாஸ்? சொல்லு"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரமாரியாக கேள்விகள்.முதல் கேள்விக்குப் பதில் சொல்ல அவகாசமில்லை. அடுத்தடுத்து கேள்விகள். வழக்கம்போல பதிலை எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது. கையில் பிரம்பு ஆடிக்கொண்டிருந்தது. சரமாரியாக இரண்டு முறை என் தோளுக்கருகே அடி விழுந்தபோதுகோபம் தலைக்கேறியது.வகுப்பில் படிப்பிக்கும் எந்த ஆசிரியரிடமும் அடி வாங்கியதில்லை. பிரம்பைப் பிடித்து பறித்து இழுத்தேன். முறிக்க முயற்சித்தேன். அனிச்சையாக என் வலதுகை சற்று உயர்ந்தது சுட்டு விரல் எதோ சொல்லும் பாவனையில் நீண்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சம்பவத்தில் புவி அதிர்ச்சியடைந்தமாதிரியிருந்தது. எதுவும் பேசவில்லை. மேலதிக விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்டேன். விசாரணை அதிகாரி சம்பவம் பற்றிக் கேட்டதும், கன்னத்தில் ஓங்கி அறைந்தபோது கண்கள் இருட்டி மின்னல் வெட்டி ஒரு முழு வட்டத்தை சுற்றியிருந்தேன். சொல்லமுடியாது, அது மூன்று வட்டமாகக்கூட இருக்கலாம். என் சுட்டுவிரல் மடக்கப்பட்டபோது நியாயமாக என் அலறல் என் வகுப்புக்குக் கேட்டிருக்க வேண்டும். அநியாயமாகவோ, அதிர்ச்சியிலோ சத்தம் போடவில்லை. முகத்தில் சரமாரியான தாக்குதலில் கண் மங்கலாகத் தெரிந்தது. குத்து மதிப்பாக நடந்து வகுப்புக்குள் சென்றபின்னர் கவனித்ததில், சட்டைப்பொத்தான் ஒன்று அறுந்திருந்தது. வாய்க்குள் உதடு கிழிந்து உப்புக்கரித்தது. முகம் வீங்கியிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீட்டில் அப்பா கேட்டபோது. வகுப்பில் அடிதடி சண்டை என்றேன். பையன்களுடன் சண்டை என்பதால் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. பிரச்சினையைச் சொல்லியிருந்தால் பள்ளிக்கு வந்திருப்பார். எனக்கு அவர்மீது எக்கச்சக்க கோபம் இருந்தது.சின்ன வயதில் சொல்லி வளர்த்துபோல ஸ்கொலர்ஷிப் இழவெல்லாம் பாஸ் பண்ணித் தொலைத்தும் என்னை யாழ் இந்துவில் சேர்க்காமல் கொக்குவில் இந்துவில் படிக்க விட்டது குறித்தது அது. அவருக்கு அதற்குக் காரணங்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் அந்தப் பள்ளியுடன் ஒன்றவே முடிந்ததில்லை. நாட்டுச் சூழல் காரணமாக நாலைந்து பள்ளிகளில் படித்திருந்தும் இரண்டு வருடங்கள் படித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் பள்ளிக்காலம் சுதந்திரமாக, சுவாரசியமாக இருந்தது அங்கேதான். ஒருவேளை அன்று அப்பாவிடம் சொல்லியிருந்தால் மறுநாளே பள்ளியை மாற்றியிருக்கக்கூடும். உண்மையில் பள்ளியிலேயே எனக்குத் தண்டனையாக மறுநாள் அப்பாவை அழைத்துவரச் சொல்லியிருப்பார்கள். ஆச்சரியமாக அப்படி நடக்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதையெல்லாம் விட எனக்குப் பெரிய கவலை ஒன்றிருந்தது. மேற்குறித்த சம்பவத்தில் நான் நொந்து நூடுல்ஸாகி வகுப்புக்கு வந்தது மட்டுமே சக மாணவர்களுக்குத் தெரியும். அதற்கு முன்னர் நான் நிகழ்த்திய அந்த வீரச்சம்பவம் யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால், கன்ரீனில் இலவச டீ, றோல் கிடைக்கும். வகுப்புத்தோழன் ஒருத்தன் என்னிடம் ‘இனிமே எல்லாம் அப்பிடித்தான்’ என்று சொல்லியிருப்பான். இதெல்லாம் நடக்காமல் போய்விட்டதே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதன் பிறகு புவி என்னிடம் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. பிறகு இடம்பெயர்ந்து சென்றபின்னர் நானும் கேள்விப்படவில்லை. புவியும் ஒரு விசித்திரமான மனிதர். அவருக்கு என்ன பாதிப்பு இருந்ததோ தெரியவில்லை. என் வலதுகை சுட்டுவிரலில் அவ்வப்போதுசற்றுப் பிரச்சினை இருக்கிறது. அது எதனால் என்றும் புரியவில்லை!<br /></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-63715058013745774232017-09-06T16:47:00.005+05:302017-09-06T16:47:57.572+05:30கெட்டவார்த்தை!<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; font-size: large; margin: 0px;"><b>த்</b></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">ரிஷாவும்
நண்பர்களும் நள்ளிரவு தாண்டிய அகாலவேளைகளில் நடுவீதியில் கூடிக் கும்மாளமடி<a href="https://www.blogger.com/null" name="_Hlk492457577">ப்</a>பது குறித்து ஏரியா வாசிகளுக்குப் புகார்கள் இருந்தன.
ஆனாலும் பெரிய இடத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக அமைதி
காத்தார்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அப்புமணி குறித்து யோசிக்கும்போது, ‘பெரிய
இடம்’ என்பதை விடப் ‘பெரிய வாய்’ என்பது சரியாக இருக்கலாம். வாயைத்திறந்தால்,
தமிழ் மொழிப் பரிச்சயமே இல்லாத த்ரிஷாவின் நண்பர்களே தெறித்து ஓடிவிடுவார்கள். மற்றபடி,
த்ரிஷா பற்றியதோ, திரிஷாவுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு பிள்ளையார் கோவிலில்
நடந்ததைப் பற்றியதோ அல்ல இந்தப்பதிவு. கெட்டவார்த்தைகள் பற்றியது. த்ரிஷா பற்றிப்
பின்னர் பார்க்கலாம்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">இப்போது நினைத்தால் வெட்கமாகவும்</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">வேதனையாகவும் இருக்கிறது.
என்ன மாதிரியான இலக்கிய வறட்சி மிக்க சூழலில் வளர்ந்திருக்கிறேன்</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">? </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">ஒன்பது வயதில்
ஒருவனுக்குக் கெட்டவார்த்தை தெரியாமல் இருப்பது எவ்வளவு கொடுமையானது</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">? </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அதுவரை காதில்
விழுந்ததிலையா அல்லது கவனிக்கவில்லையா</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">? </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அந்த இடம்பெயர்வு மட்டும் இல்லையென்றால் இந்தக் குறைந்தபட்ச விழிப்புணர்வு கூட
இருந்திருக்காதே! </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">என்னைவிட வயதொன்று குறைந்த என்
விளையாட்டுத் தோழி.<span style="margin: 0px;"> </span>அவளுக்குத்
தெரிந்திருந்தது. எனக்குத்தான் தெரியவில்லை. என்ன ஒரு அவமானம் பாருங்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அதைவிடக் கொடுமை, அவள் தம்பி</span><span lang="TA" style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";"> </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">தூஷணத்தில் மிகுந்த புலமை
பெற்று விளங்கியதாகப் பேசிக்கொண்டார்கள். அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த ஆகச்
சிறந்த கெட்ட வார்த்தையான சனியன்</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">மூதேவியை எப்போதாவது வாய்தடுமாறிச் சொன்னாலே அம்மாவால் கடுமையாகத்
தண்டிக்கப்பட்ட எனக்கு அது மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அவன் வயது. <br />
<br />
மூன்று வயது ! இந்தச் சின்னவயதில் என்ன ஒரு ஞானம்! என்மனதில் அவனுக்குத் திருஞான
சம்பந்தருக்குச் சமமான இடத்தை வழங்கச் சித்தமாயிருந்தேன்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அவன்தான் என் அப்போதைய ஒரே நம்பிக்கை.
அவனைக் குருவாகக் கொண்டு சீண்டி</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">உசுப்பேத்தி அவன் உதிர்க்கும் முத்துக்களைப் பொறுக்கிவிடலாம் என ஐடியா வந்தது.
ஆனால் என் நேரம்! அவன் தூஷண பிரசங்கத்தை சமீப காலத்தில்தான் நிறுத்தியிருந்தான்.
அவன் சித்தப்பா</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">மாமா
அத்தைகள் என்று வருவோர் போவோர் எல்லாரும் மேற்கொண்ட சரமாரியான தாக்குதல்களை
அடுத்து</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">தனது போராட்ட
வழிமுறையை மாற்றியிருந்தான். அதாவது இரசாயன ஆயுதப் பிரயோகத்தில் ஈடுபடத் தொடங்கியிருந்தான்.
எதிரி மீது துப்பிவிடுவது! ஆக</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">என் நம்பிக்கைகள் எல்லாம் தகர்ந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த அந்த நாளில்தான்
அந்த நல்ல சேதியைத் தோழி பகிர்ந்துகொண்டாள். அருகாமையில் ஒரு வீட்டு மதிற்சுவரில்
யாரோ கெட்டவார்த்தைகள் எழுதியிருக்கிறார்கள் என்றாள். </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">இந்த இடத்தில் விவரமாக இருப்பதாக
நினைத்துக்கொண்டு</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அப்பாவித்தனமான<span style="margin: 0px;"> </span>முகபாவனையோடு கேட்டேன்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">"என்ன எழுதியிருக்கு</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">?"</span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">"தூஷணம்"</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">"அதான் என்ன எழுதியிருக்கு"
</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">“அதான் தூஷணம்"</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">"எப்பிடி.. எழுதியிருக்கு</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">?”</span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">"அதச் சொல்லக்கூடாதே" -
அவள் என்னைவிட விவரமாக இருந்தாள். </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">பெண்கள் எப்போதுமே எந்த வயதிலுமே
எங்களைவிட விவரமாகத்தான் இருக்கிறார்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">"நீயே போய்ப் பார். மூண்டாவது
வீடுதாண்டி ஒழுங்கை முடக்கில இருக்கிற மதில்ல எழுதிருக்கு" உதவிக்
குறிப்புகள் தந்தாள்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">ஆவல்</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">தேடலுடன் சிட்டாய்ப்
பறந்தேன். திரும்பி வரும்போது </span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">'</span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">பாத்துட்டியா</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">' </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">என்பதுபோல
தலையசைத்துப் புன்னகைத்தாள். என் முகத்தில் தெரிந்த ஒளி அவளுக்கு நம்பிக்கையைக்
கொடுத்திருக்க வேண்டும். நானும் ஒரு மாதிரி உண்டு</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">இல்லை</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">,
</span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">பொய்</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">மெய்</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">நன்மை</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">தீமை எல்லாம் கடந்த</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">நடுவில் இருக்கக்கூடிய
ஞானச்சிரிப்பு சிரித்துவைத்தேன்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">ஆனால்</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">முகத்தில் தெரியும் ஒளி ஞானம் பெற்றதால் மட்டுமே
வருவதில்லை. நாம் வாங்கிய பல்பும் ஒளியைக் கொடுக்கும் அல்லவா</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">? </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அந்த மதிற்சுவர்
முழுவதும் என்னென்னமோ எல்லாம் எழுதியிருந்தது. அதில தூஷணத்தை எங்க போய்க்
கண்டுபிடிக்கிறது</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">?</span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; font-size: large; margin: 0px;"><b>கெ</b></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">ட்டவார்த்தை பேசுபவர்கள் எல்லோரும்
கெட்டவர்கள் என்றொரு பொதுவான நம்பிக்கை சிறுவயதில் பள்ளி நாட்களில் எனக்கும்
இருந்தது. இப்போதும்கூட பலருக்கும் இருக்கலாம். சரமாரியாக வார்த்தைக்கு வார்த்தை
அடைமொழியாகப் பேசும் ஒருவன்</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">,
</span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">சினிமாப்பாடல்களை செந்தமிழில் மாற்றிப் பாடும் நண்பனொருவன் என பல
விற்பன்னர்கள் நம்மோடு படிப்பார்களில்லையா</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">?</span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">எங்கள் பள்ளியில் ஒரு பீ.டி.
வாத்தியார் புதிதாக வந்திருந்தார். பொதுவாக இங்க்லீஷ் வாத்தியார்களுக்கு பள்ளியில்
ஒரு மதிப்பு இருப்பதுபோல பீ.டி.வாத்தியார்கள் மீதும் ஒரு பார்வை இருந்தது.
அவர்களைக் கைகழுவி விட்டதுபோல என்ன செய்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. எப்போதோ
துவைத்த ட்ராக் சூட் அணிந்துகொண்டுதான் பள்ளிக்கு வருவார். வாயில் தமிழ் துள்ளி
விளையாடும். சாதாரணமாக அவரால் பேச முடியாதோ என்பதுபோலிருக்கும் அவர் பேச்சு.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">பள்ளிக்கு அவர் வந்து அப்போதுதான் ஒரு
வாரம் ஆகியிருந்தது. எங்கள் வகுப்போடு பரிச்சயமாகியிருந்தார். காலையில் வரிசையாகச்
சென்றுகொண்டிருந்தபோது ரணகளமாக கமெண்ட் அடித்தார். "பெரிய ஆக்களாடா நீங்க</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">? </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">ட்ரவுசரையும் மாட்டிக்
கொண்டு, சூத்தையும் ஆட்டிக்கொண்டு போறதப் பாரு!"</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அன்று உதைபந்தாட்டப் பயிற்சி. “பந்தை
நிலத்தில் வைத்து சுயாதீனக் காலை பந்துக்குப் பக்கவாட்டில் வைத்து, இயங்கும் காலை
பின்னோக்கி இழுத்து உள்ளங்கால் வளைவால் மெதுவாக உருட்டவேண்டும்” என்றார். </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">பின்பு, "எங்க நான் சொன்னதைச்
சொல்லு" - ஒருவனிடம் கேட்டார்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அவன் சொல்ல ஆரம்பித்தான்</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, "</span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">பந்தை நிலத்தில் வைத்து
சுகயீனக் காலை பக்கவாட்டில" என்றபோதே புரிஞ்சு போச்சு. ஒருத்தன்
சிக்கிட்டான்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">"டேய் என்னது சுகயீனக்காலா"
வாத்தி டென்ஷனாகி</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">சீரியசாகக்
கேட்பதுபோல</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">,</span></span><span dir="RTL" lang="AR-SA" style="color: black; font-family: "iskoola pota" , sans-serif; margin: 0px;"><br />
</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">"</span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">இங்க வேற
யாருக்காவது சுகயீனக் கால் இருக்கா</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">?" </span></span><span dir="RTL" lang="AR-SA" style="color: black; font-family: "iskoola pota" , sans-serif; margin: 0px;"><br style="mso-special-character: line-break;" />
<br style="mso-special-character: line-break;" />
</span></div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">யாரோ ஒரு அப்பாவி அதை நம்பி
"சேர் எனக்கிது<span style="margin: 0px;"> </span>வாதக் கால்" என்றான்.
<br />
<br />
எல்லாரும் சிரிப்புடன் வாத்தியையே பார்த்துட்டு இருந்தோம். வாத்தி, "ஹூம் இனி
ஒவ்வொருத்தனா சொல்லுவானுகள் வாதக்கால், ஓதக்கொட்டை!”</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">மு</span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">ன்பு வேலைசெய்த அலுவலகத்தில்
ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் பிரவாகமாக ஓடும். ஒவ்வொரு வார்த்தைக்கும்
அடைமொழியாக கெட்டவார்த்தையாக பேசியிருக்கிறேன். அப்போதுதான் உணர்ந்தேன். நம்
சொந்தமொழியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ள எந்தவித மனத்தடையும்
இருப்பதில்லை. பின்பு தமிழிலும். என் பொறுமையின் எல்லையைத் தாண்டச்செய்யும்போது
வேறு சரியான தமிழ் வார்த்தைகள் கிடைப்பதில்லை. உண்மையைச் சொன்னால் நான் கெட்ட
வார்த்தைகளில் சரமாரியாக உரையாடியது எல்லாம் ஒருசில பெண்களுடன் மட்டும்தான் என்பதை
நினைக்கும்போது ஒரு மாதிரியாகத்தானிருக்கிறது.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; font-size: large; margin: 0px;"><b>சி</b></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">ல வருடங்களுக்குமுன் முன்,
யாழ்ப்பாணம் கசூரினா கடலில் குளித்துக் கொண்டிருந்தோம். கரைக்குச் சமீபமாக ஒரு
ஏரியாவில் மீனவர்கள் வலை கட்டி மீன் பிடிக்கும் செட்டப் செய்திருந்தார்கள்.
அதற்குள் ஆர்வக் கோளாறுத்தனமாக சிலர் சென்றுவிட்டார்கள். "டேய்.." குரல்
கேட்டது. கரையிலிருந்து ஒருவர் சிறு கட்டுமரத்தில் வந்தார். கையிலிருந்த
துடுப்பினால் ஓங்கி தண்ணீரில் அடித்து எல்லோரையும் வெளியே அனுப்பினார். கூடவே
செந்தமிழ்ப்பாட்டும். குடித்திருந்தார். அவர் கோபம் நியாயமானது. அந்தத் துடுப்பு
மட்டும் தவறுதலாக மேலே பட்டுவிட்டால்</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">பத்து நாளைக்கு எழும்ப முடியாது என்பதால் எல்லோரும் சிரித்துகொண்டு அவசரமாக
வெளியேறினார்கள். நாங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அந்தக் கூட்டத்தில் ஒரு
வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் இருந்தார். யாழ்மக்கள் வெளிநாட்டுக்காரர்
விஷயத்தில் மறப்போம்</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">மன்னிப்போம்
கொலகையையே கடைப்பிடிப்போம். அதுபோல அவர்களும் எந்த முட்டாள்தனமான காரியமென்றாலும்
முன்னின்று முகம்கொடுப்பார்கள். அப்படித்தான் நடந்த தவறுக்கு அவராகவே விளக்கம்
கொடுக்க முன்வந்தார்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">"இல்ல நாங்கள் வந்து வெளிநாட்டில
இருந்து வந்ததால.."</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">“அவர் வெளிநாட்டு பு---</span><span lang="TA" style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";"> </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அவரும் அவற்ர ஸ்டைல் பு--</span><span lang="TA" style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";"> </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">கழுத்தில ஒரு சங்கிலிப் பு---</span><span lang="TA" style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";"> </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அதில </span><span lang="TA" style="color: black; font-family: "nirmala ui" , sans-serif; margin: 0px;">சு--</span><span lang="TA" style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";"> </span></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">ஆட்டிக் கொண்டு
வந்திட்டார் விளக்கம் குடுக்க!”</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">பாராட்டு வாங்கியவர் <span style="margin: 0px;"> </span>உட்பட, எல்லாரும் சிரித்தார்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">சரி ஒற்றை வார்த்தையில் முடிக்கலாம்
என்று நினைத்துச் <span style="margin: 0px;"> </span>சொன்னார்</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">, "Sorry"</span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">"ம்ம்ம் அவற்ற இங்கிலீஷ் பு----</span><span style="color: black; margin: 0px;"><span style="font-family: "calibri";">!"</span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; font-size: large; margin: 0px;"><b>மீ</b></span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">ண்டும்
த்ரிஷாவுக்கே வருவோம். </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அன்றொருநாள்
காலை நேரத்தில் பிள்ளையார் கோவிலுக்குப் போனபோது ‘த்ரிஷா வெளில போ வெளில..’ என்று
சுதா அய்யா குரல் விரட்டியது. த்ரிஷா பதில் சொல்லாமல் போக மனமில்லாததுபோல
பார்த்துக் கொண்டிருந்தது. ஆச்சரியம் தாங்கவில்லை. என்னவொரு பொருத்தம். வெள்ளையாக</span><span style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">, </span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">உயரமாக வெடவெடவென ஸ்லிம்மாக இளமையாக. யார்
வைத்திருப்பார்கள் அந்தப் பெயரை. என் ஆச்சரியம்</span><span style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">, </span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">யோசனை பற்றிக் கண்டுகொள்ளாமல் த்ரிஷா ஓடிப்போய்விட்டது.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அப்புமணி
வீட்டில் நாலைந்து நாய்கள் இருந்தன. வேறு யார் பெயர்களும் தெரியாது.
எல்லாவற்றுக்கும் காரண</span><span style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">, </span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அகாரணப்
பெயர்கள் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக எந்தவொரு கோபமான தருணத்திலும் அவற்றின்
பெயர் கொண்டே மரியாதையாக அழைக்கபட்டார்கள் என்றும் பின்னர் தெரிந்தது. பாருங்கள்</span><span style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">, </span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">அதுவும் திரிஷாவின் மூலமாகத்தான்!</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">ஓர்
மழைக்கால மாலை. இருளடைந்திருந்த அப்புமணி வீட்டு வராந்தாவில் அவர் தூங்கிக்
கொண்டிருந்ததை நாங்கள் யாரும் காணவில்லை. எங்கிருந்தோ த்ரிஷா ஓடிவர</span><span style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">, </span><span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">பின்னாலேயே த்ரிஷாவின் ஆண் நண்பர்கள் பத்துப்
பன்னிரண்டுபேர் பின்னாலேயே ஓடி வந்தார்கள். த்ரிஷா அப்புமணியைக் கண்டிருக்க
வேண்டும். லாவகமாக அவரைத் தாண்டிப்பாய்ந்து ஓடிவிட்டாள். சுவாரசியமாகத்
துரத்திகொண்டுவந்த நண்பர்கள் அப்புமணி தூங்கிக்கொண்டிருந்ததைக் கவனிக்காமல்,
அப்புமணி மீது இடறி விழுந்து புரண்டெழும்பினார்கள். </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">என்ன
நடந்ததென்றே தெரியாமல் எக்கச்சக்க அதிர்ச்சியுடன் பதறி எழுந்துகொண்ட அப்புமணி
அவிழ்ந்த சாரத்தை இறுக்கப் பிடித்துக்கொண்டு ஆக்ரோசமாகக் கத்தினார். </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0px 0px 11px; text-align: justify;">
<span lang="TA" style="color: black; font-family: "latha" , sans-serif; margin: 0px;">“இவள்
த்ரிஷா பு---- தான் ஓ---காக இஞ்ச எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்துட்டாள்”</span></div>
<div style="text-align: justify;">
<b></b><i></i><u></u><sub></sub><sup></sup><strike></strike></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-77853550369175259202017-07-02T19:17:00.002+05:302017-07-02T19:17:31.792+05:30சிஷ்யன்!<div style="text-align: justify;">
மழை ஓய்ந்துவிட்டிருந்தது. கடற்கரை வீதியிலிருந்து பிரதான வீதியை இணைக்கும் அந்தச் சிறு வீதி குளித்துக் கொஞ்சமாக கிரவல் பூசியிருந்ததில், சர்க் சர்க் சத்தத்துடன் நடந்துகொண்டிருந்தோம். சற்றே குறுகலான வீதி. எதிரே தூரத்தில் கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. கவனிக்காதவன் போல நடு வீதியிலேயே சிஷ்யன் நடந்துகொண்டிருந்தான். அனிச்சையாக அவனை எச்சரிக்கை நினைத்தேன். விவேகானந்தர் இதுகுறித்து ஏதேனும் சொல்லித் தொலைத்திருப்பாரோ? என நினைத்து பேசவில்லை.<br />
<br />
விவேகானந்தரோடு எனக்குத் தனிப்பட்ட ரீதியில் எந்தவித பிரச்சினையோ வாய்க்கால் தகராறோ கிடையாது. அவருடன் காத்திரமான ஃபேஸ்புக் விவாதமோ, கருத்துப்பரிமாற்ற முரண்பாடுகளோகூட எனக்கில்லை. ஏனெனில் அப்போது ஃபேஸ்புக் அறிமுகமாகியிருக்கவில்லை. இப்போது விவேகானந்தர் ஃபேஸ்புக்கில் இருக்கிறாரா என்பது பற்றிக்கூட எனக்குத் தெரியாது. ஓரிருமுறை அவர் படங்களை ப்ரொபைல் பிக்சராகப் பார்த்திருக்கிறேன். ஆனால் பெயர்கள் வேறாயிருந்ததில் அவை ஃபேக் ஐடிகள் எனப் புரிந்துபோனது. அப்படியிருக்க, விவேகானந்தரோடு எனக்கென்ன பிரச்சினை? எல்லாம் சிஷ்யனின் கைங்கர்யம். ஒரே மணித்தியாலத்தில் எனக்கு எதிரியாக்கிவிட்டான். விவேகானந்தரின் போதனைகள் குறித்து அச்சமாயிருங்கள் என மாலை மூன்று மணிக்கு யாரேனும் சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்கமாட்டேன். மூன்று பத்துக்கு சிஷ்யனைச் சந்தித்திருந்தேன்.<br />
<br />
அழைப்புமணியை அழுத்தியதும் கதவைத் திறந்தவன், 'எப்பிடி இடத்தை டக்கென்று கண்டுபிடிச்சிட்டியோ?' என்றான்.<br />
'நம்பர்தான் தெளிவா இருக்கே?'<br />
<br />
கண்டுகொள்ளாமல் 'இதைத்தான் மச்சான் விவேகானந்தர்..' எனச் சிறுசிரிப்புடன் அவன் ஆரம்பித்தபோது நான் அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அடுத்த அரைமணி நேரத்தில் எட்டுத் தடவைகள், 'மச்சான் விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார் எண்டா' என்றபோது கொஞ்சம் அசாதாரணமாயிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து நண்பனை இப்படிப் பார்க்க கொஞ்சம் அதிர்ச்சியாயிருந்தது. என்னவாகியிருக்கும்? கடைசியாக, ரெண்டு வருஷத்துக்கு முதல் சந்தித்தபோது சரியாக இருந்தான். அதைவிட, விவேகானந்தருக்கு இப்பிடி ஒரு சிஷ்யனா? அந்தக் காளியே கனவில் வந்து சொல்லியிருந்தாலும் கூட அவரே நம்பியிருப்பாரா என்கிற சந்தேகம் வந்தது.<br />
<br />
விவேகானந்தர் பெயரை உச்சரிக்கும்போது அவன்முகத்தில் ஒரு மந்தகாசம். ஆழ்மனத் தேடலில் மெய்ப்பொருள் கண்டுணர்ந்தவன்போல, உள்ளிருந்து ஞான ஒளியை அப்படியே வெளியே பரவ விடுவதுபோல பாவித்துக்கொண்ட மந்தகாசம். ஒரு பக்குவப்பட்டவன் போன்ற பாவனையுடன் அடிக்கடி கண்களை சற்று மேல் நோக்கி சூனியத்தை வெறிப்பதுபோல ஞானிகளுக்கு உரித்தான பார்வை வேறு பார்த்தான்.அப்போதுதான் கவனித்தேன். மேசையில் விவேகானந்தர் பற்றிய புத்தகம். புரிந்தது. அதுவரை அவனுக்கு வாசிப்புப் பழக்கம் இருந்ததாக தெரியவில்லை. வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் என இரண்டுவகை மனிதர்களிடமும் பிரச்சினையில்லை. ஆனால் வாசிப்புப் பழக்கம் அறவே இல்லாதவர்கள் வாழ்நாளில் ஒரே ஒரு புத்தகத்தைப் படித்துத் தொலைத்துவிட்டால் என்ன ஆகும்? கொஞ்ச நாளைக்கு அது பற்றியே பேசிப்பேசி ஒரு வழி பண்ணிவிடுவார்கள் இல்லையா? விவேகானந்தருடையதோ அல்லது என்னுடையதோ கெட்டகாலம். அவன் கையில் புத்தகமாகச் சிக்கித் தொலைத்துவிட்டார்!<br />
<br />
சரியாக நான் பயந்தபடியே நடந்தது. 'விவேகானந்தரைப் பற்றி படிச்சிருக்கிறியா?' என்றான் இல்லையென்ற பதிலை எதிர்பார்த்து. 'வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை இழந்துவிடடாய் நீ' தோரணை இப்போது மந்தகாசத்தில் தெரிந்தது. ஆகவே இதற்கான பதிலை நான் ஒருவரியில் சொல்வது அவ்வளவு சரியாயிருக்காது. 'எனக்கு ஆர்வமில்லை. ஆனா தேவையான அளவுக்குத் தெரிந்து வச்சிருக்கிறேன். அவர் நல்லவர், நாலும் தெரிஞ்சவர், நிறைய தத்துவங்கள் சொல்லியிருக்கார், சிக்காகோல சகோதர, சகோதரிகளேன்னு பேச ஆரம்பிச்சதால எல்லாரோட மனசையும் டச் பண்ணினதால பயங்கர கரகோஷமாம், நிறையப்பேர் விசில் கூட அடிச்சாங்களாம்.. அதுபோக கம்மார்க்கோ சிக்காக்கோ என்கிற சுலோகத்தையும் அவர்தான் முதலில் சொன்னதாக சொல்கிறார்கள்' என்றேன்.<br />
<br />
அவன் கண்டுகொள்ளாமல், அறியாமையில் உழலும் மூடனுக்கு அருள்பாலிக்கும் ஞானகுருவின் பாவனையுடன் புன்னகை செய்து, 'இந்தப் புத்தகத்தை வாசிச்சுப்பார்' என்றான். நான் அவசரமாக 'மச்சான் வொஷ் ரூம் எங்க?' என்றேன்.<br />
<br />
குளியலறைக்கு வழிகாட்டிய காட்டிய சிஷ்யன், "நான் இங்க நிறைய நேரம் நிக்கிறதில்ல மோசமான வைபரேஷன் இருக்கு" - மேலதிகமாக உதவிக் குறிப்பொன்றை வழங்கினான். குழப்பமாக இருந்தது. இந்தக்குறிப்பு எவ்வகையில் எனக்கு உதவக்கூடும்? நானும் அதிக நேரம் அங்கே நிற்பதாகவோ, குளிப்பதாகவோ இல்லை. நிச்சயமாக அங்கே தூங்கும் எண்ணம் கிடையாது. அதிகபட்சம் இரண்டு நிமிடம். வைபரேஷன் குழப்பியது. பக்கத்தில் ரயில்பாதை இருப்பதால் வைபரேஷன் இருப்பது நியாயம்தான். ஆனால், அது குளியலறைக்குள் மட்டும் எப்பிடி? ஒருவேளை அமானுஷ்யமாக ஏதாவது?<br />
<br />
வந்ததும் கேட்டேன், 'என்ன மச்சான் அது வைபரேஷன்?'<br />
'இல்லடா, இங்க ஏழெட்டுப் பேர் இருக்கிறாங்கள், வந்து போறவங்கள் வேற. எல்லாரும் என்னென்ன மாதிரி யோசினைல இருப்பாங்களெண்டு தெரியாதுதானே. அந்த வைபரேஷன் மோசமான சிந்தனையள கொண்டுவந்திடும், அதான் நான் அங்க மினக்கெடுறேல்ல' என்றான். ஏதோ ஆன்மிக விஷயம் என்கிற அளவில் புரிந்தது. விவேகானந்தர் பயம் இருந்ததால் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.<br />
<br />
இருவரும் வீதிக்கு இறங்கியபோது, 'மச்சான் ஒருக்கா நெட்கஃபே போகவேணும்' என்றான்.<br />
<br />
நெட்கஃபே! - இந்த வார்த்தையைக் கேட்ட மறுகணமே ஒரு நடிகை குளித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை என் மனத்திரையில் தத்ரூபமாக ஒட்டிட முயன்று தோற்றதை ஒளிவு மறைவில்லாமல் இந்தச் சமூகத்துக்குக் கூறுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் விவேகானந்தரின் சீடனிடம் சொல்லமுடியுமா? என்னை ஒரு காமக்கொடூரனாக நினைத்துவிடக்கூடுமல்லவா? அமைதி காத்தேன்.<br />
<br />
நெட்கஃபேயில், ஒரு கணணியைத்தேர்ந்து, முன் தரையை,இருக்கையை, கீபோர்ட்டை பரிசோதித்தான் சிஷ்யன். இருவரும் ஒரே கணனியில் அமர்ந்திருந்தோம். பரபரப்பாக இருந்தான் சிஷ்யன். எனக்கு அங்கே எந்த வேலையுமில்லை. ஜீமெயிலில் எப்போதாவது நண்பர்கள் பகிரும் உலகின் பத்து அதிசய புகைப்படம், இருபது பொன்மொழிகள் போன்றவை தவிர எதுவும் வருவதில்லை. சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அதிக கணனிகள் ஆட்களின்றிக் காத்திருந்தன. திடீரென எங்கள் முன் அவசரமாக ஒரு உருவம் தோன்றி, ஸ்தம்பித்து நின்றது. அது எங்கள் கணனியைக் குறிவைத்து வந்திருந்தது. முகம் கோண, மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பித் தளர்ந்து நடந்தது. அதான் இவ்வளவு மெஷின் இருக்கே.. என்னாச்சு இவனுக்கு? யோசித்துக்கொன்டே திரும்ப, இங்கே சிஷ்யனும் ஏறக்குறைய அதேபோன்ற முகபாவனையுடன் இருந்தான். <br />
<br />
"என்னடா?"<br />
"முக்கியமான மெயில் ஒண்டு வந்திருக்கவேணும்...'ச்சே!"<br />
<br />
என்ன மெயில் அது? ஒருவேளை விவேகானந்தர் ஆசிரமத்திலிருந்து ஏதாவது? கேட்கவில்லை. ஏமாற்றமும், இயலாமை கலந்த கோபத்தோடும் பரிதாபமான முகபாவத்தோடு இருந்தான்.<br />
<br />
மதியம் பன்னிரண்டு மணிக்கு சந்திக்க நேரம் குறித்து வைத்திருக்கிறார் உங்கள் காதலி. வெய்யிலில் மண்டை காய்ந்துகொண்டு நிற்கிறீர்கள். நேரமாகிறது. பொறுமையிழந்து நிற்கும்போது, இன்றைய சந்திப்பு ரத்து என்று காதலியிடமிருந்து குறுந்தகவல் வருகிறது. எப்படியிருக்கும்? இந்த அனுபவத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையா, விடுங்கள்! நானும் உணர்ந்ததில்லை. சும்மா ஒரு பேச்சுக்காகக் கேட்டேன். அப்படியொரு நிலையில் இப்போது சிஷ்யன் இருந்தான்.<br />
<br />
"என்னடா என்ன மெயில்?"<br />
"சும்மா.. ஃபிரண்ட் ஒருத்தன் அனுப்பிறேண்டு.."<br />
<br />"சும்மாவா, அதுக்கா இவ்ளோ ஃபீல் பண்ணுறே?"<br />
இப்போது அவன்முகத்தில் ஒரு அசட்டுச்சிரிப்பு. ஒரு விதமாக நாணிக்கோணி, "இல்ல மச்சி... அது வந்து...த்"<br />
<br />"அடப்பாவி! இந்த விஷயம் மட்டும் விவேகானந்தருக்கு தெரிஞ்சா.."<br />
"டேய் இதான் உனக்கு சொல்லேல்ல.. நீ பாத்தியா?"<br />
<br />"நான் பாக்கேல்ல.. ஆனா நீ எப்பிடிறா பாக்கலாம்? என்ன இருந்தாலும் விவேகானந்தற்ற சிஷ்யன் நீ...'ச்சே! ஏண்டா இவ்ளோ கேவலமா இருக்கீங்க... அதுசரி எவ்ளோ நேரம்?"<br />
<br />"மூண்டு நிமிஷமாம். ஃபிளாஷ் மெமரி எல்லாம் கொண்டு வந்தனான், வாங்கினதுக்கு இதத்தான் முதன்முதலா கொப்பி பண்ணலாமெண்டு.. " சமீபத்தில் கேள்விப்பட்டிருந்த அந்த வஸ்துவை முதன்முறையாகப் பார்த்தேன்.<br />
<br />
"என்ன இருந்தாலும் எங்கட காலத்தில நடந்த ஒரு விஷயத்தை நாங்கள் மிஸ் பண்ணிட்டம் எண்டிருக்கக்கூடாது.. பிறகு ஒரு நேரத்தில.." எங்கள் முன்னோர் போல நாங்களும், நம் காலத்தின் முக்கியமான நிகழ்வை ஆவணப்படுத்தாமல், அசட்டையாக இருந்துவிடக்கூடாது என்கிற கவலை, அக்கறையுடன் பேசினான்.<br />
<br />
"விடு மச்சி யாராவது டவுன்லோட் பண்ணியிருப்பான். நெட் கனெக்சனே தேவைப்படாம நெட்கஃபேக்கு வர்ற கோஷ்டி ஒண்டிருக்கு. எனக்கென்னமோ இது முக்கியமான மெஷின்போல இருக்கு. ஒருத்தன் அழாக்குறையா திரும்பிப் போனான் பார். இதில இருக்குன்னு பட்சி சொல்லுது"<br />
<br />இப்போது நம்பிக்கை தொனிக்க என்னைப் பார்த்தவன் கட்டளை கொடுத்தான். இப்போது திரை முழுவதும் வீடியோ ஃபைல்கள் ஏழுதிரைகள் தாண்டி வியாபித்திருந்தன. "ஒப்பின் பண்ணி பார்க்க ஒரு நாள் வேணுமே"<br />
'ட்ரை பண்ணலாம், எதையும் ஒப்பன் பண்ண வேணாம்.. மெதுவா ஸ்க்ரோல் பண்ணு' என்றேன். இப்போது சிஷ்யன் என்னைப் பார்த்த பார்வை அவ்வளவு சரியில்லை. <br />
<br />
நமக்கென்று ஒரு பாரம்பரியமிருக்கிறது. முன்னொரு காலத்தில், யாராவது சிடி வைத்திருந்தால், அதைக் கையில்வாங்கி சற்றே மேலே தூக்கி பார்த்துப் பரிசோதிக்கவேண்டும். அது படமோ, பாட்டோ எதுவாயிருந்தாலும் பதிந்திருப்பது நம் கண்களுக்கு அப்படியே தெரிவதுபோல பாவனையுடன் பார்க்கவேண்டும். அது ஒரு பண்பாடு. நீங்களும் ஒருமுறையேனும் அதைச் செய்திருக்கலாம். அந்த அசட்டுத்தனத்துக்குச் சற்றும் குறையாத கிறுக்குத்தனமாக எனது செயல் சிஷ்யனுக்குப்பட்டிருக்கலாம்.<br />
<br />
'மச்சி இத ஒப்பன் பண்ணு'<br />
என்னை ஒருமாதிரியாகப் பார்த்தவாறே, வேற வழியும் இல்லாமல் அந்த வீடியோ கிளிப்பை திறந்தான். ஆச்சரியத்தில் கூவினான், 'டேய் எப்பிடிறா?' இப்போது சிஷ்யன் என்னைப்பார்த்த பார்வை, விவேகானந்தர் அளவுக்கு இல்லையென்றாலும் என்னையும் ஒரு குருவாக ஏற்றுக்கொள்வான் போலிருந்தது.<br />
<br />
"எல்லாம் ஓரு ஞான திருஷ்டிதான்!" வீடியோ நடிகையின் பெயரின் ஆங்கில முதல் மூன்று எழுத்துக்களில் பெயரிடப்பட்டிருந்ததுதான் காரணம் என்று சொல்வது இப்போது அவசியமா என்ன? அதி அவசியமானதொரு தகவலை மட்டும் சொன்னேன், 'இந்த அஞ்சும் ஃபைலு ம் அதான்போல'<br />
<br />
மிகுந்த பிரமிப்புடன், 'டேய் அவன் ஒண்டுதாண்டா சொன்னான். நீ வந்து.... பார் ஐஞ்சு! நல்லவேளை நீ மட்டும் வரேல்லையெண்டா..' சிஷ்யன் கொடூரமான வில்லனிடமிருந்து காப்பாற்றப்பட்ட அபலைப் பெண் போலவே பேசினான். நான் எதுவும் பேசவில்லை. அவனைத்தாண்டி அலட்சியமாக வெளியே வெறித்தேன். அதேவேளையில், 'இதிலென்ன இருக்கு? நான் என் கடமையைத்தானே செய்தேன்' தோரணை தெரியுமாறும் பார்த்துக்கொண்டேன்.<br />
<br />
வீடு செல்லும் வரையில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அறையில் சிஷ்யன், எதிர்கால சந்ததியினருக்காக அந்த ஆவணத்தை மிகவும் கர்ம சிரத்தையாகத் தனது கணனியில் சேமித்துக் கொண்டிருந்தான். நான் மேசையிலிருந்த விவேகானந்தரின் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். சிஷ்யன் கவனித்த மாதிரியுமிருந்தது. கவனிக்காத மாதிரியும் இருந்தது. பிறகு அவன் விவேகானந்தர் பற்றி பேசுவதில்லை.</div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-15759527479784495822017-02-03T18:52:00.000+05:302017-02-03T18:52:47.187+05:30சுதந்திரம்!<div style="text-align: justify;">
<span style="font-size: large;">'க</span>ப்பலேறிப் போயாச்சு' பாடலின் ஆரம்பத்தில் உச்சஸ்தாயியில் ஒலிக்கும் புல்லாங்குழலும் தொடரும் கோரஸ் இசையும் இப்போதும்கூட புதிதாகச் சுதந்திரத்தைப் பெற்றுவிட்ட புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அடிமைத் தழையிலிருந்து விடுதலை பெறுவதை இசையூடாக உணரச் செய்த பாடல். முதன்முதலாக படம் பார்த்தபோது, அந்தப் பாடல் ஒருவித புல்லரிப்பை, சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அப்போது கொடுத்த மனவெழுச்சியை இப்போது கேட்கும்போதும் உணரமுடிகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அது ஏனோ தெரியவில்லை சுதந்திரம் என்பதை இந்திய சுதந்திரத்தோடு மட்டுமே பொருந்திப்பார்க்க முடிகிறது. முதன்முதலாக எதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் மனநிலையில், வயதில் 'இந்தியன்' படத்தைப் பார்த்ததால் அப்படியா? இந்தியன் படத்தில் மட்டுமே சுதந்திரம் பற்றிய முழுமையான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதாலும் இருக்கலாம். அப்படியானால் சுதந்திரம் என்பதையே படம் பார்த்து உணரவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோமா? சரியாகச் சொல்ல முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்படியோ இந்திய சுதந்திரத்துக்கும் இலங்கையின் சுதந்திரத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. சுதந்திரப் போராட்டம் என்ற ஒன்று இலங்கையில் நடந்ததாக எமக்கு யாரும் சொன்னதில்லை. இந்தியா இனித் தேவையில்லை என்று வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்தபோது, இனி இலங்கை தேவையில்லை என்பதால் விட்டுச் சென்றுவிட்டார்கள் என்பதாகவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பள்ளி நாட்களில், வரலாற்றுப் பாடத்தில் 'இலங்கையின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள்' என்று ஏராளமானோரின் பெயர்கள் கூறபட்டிருந்தன. பரீட்சையில் புள்ளிகளைப் பெறுவதற்காகத் தேவைப்படும் என்பதைத் தவிர்த்து யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுவும் தவிர வரலாற்றுப் பாடத்தில் யாருக்கும் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏதோ கதை சொல்கிறார்கள் என்ற வகையில் கேட்டுக் கொள்வதில் தடையேதுமிருக்கவில்லை. ஆனால் அதிலிருந்து கேள்விகள் கேட்டது மட்டுமே கடுமையான உபாதையாக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுதந்திரதினம் என்பது பள்ளிவிடுமுறை நாள் என்பதைத் தவிர வேறெந்த முக்கியத்துவமும் இல்லாதிருந்தது. கடந்த சில வருடங்களில் கடுப்பேற்றும் நாள் என்பதாகவும் மாறியிருந்தது. தொண்ணூற்று எட்டாம் ஆண்டின் சுதந்திர தினம் என்று நினைவு. வவுனியாவில் இருந்தபோது அப்போது பரீட்சார்த்த ஒலிபரப்பிலிருந்தது 'வானம்பாடி' என்றொரு வானொலிச் சேவை. அதில் சுதந்திரதின விசேட உரை அல்லது வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பலர். அவர்கள் எல்லோரும் இலங்கையின் சுதந்திரத்துக்க்காகப் போராடிய தலைவர்கள், தியாகிகள் பற்றி நினைவுகூர, நன்றி தெரிவிக்கவும் தவறவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மறைந்த அமைச்சர் ஒருவர். அவர் பேச்சைக் கேட்பதே மிகவும் சுவாரசியமானது. என் நண்பர்கள் பலரைப்போலவே எனக்கும் மிகப்பிடித்த பேச்சாளர், தமிழ் ஆளுமை. அதிரடியாகப்பேச்சை ஆரம்பித்தார். இங்கே பலரும் என்னமோ பல தியாகிகள் போராடிச் சுதந்திரத்தைப் பெற்றதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியெலாம் எதுவுமில்லை. இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தபோது துரதிருஷ்டவசமாக இலங்கைக்கும் கொடுத்துவிட்டார்கள் என்றார். அன்றிலிருந்து அவர்மேல் மேலும் மரியாதை அதிகரித்திருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">இ</span>லங்கைக்கு துரதிருஷ்டவசமாக சுதந்திரம் கிடைத்தது பற்றி எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் இருக்கவில்லை. யாழ்ப்பணத்தில் 2002 இல் சமாதான உடன்படிக்கை ஏற்படும் வரையில் ஊரடங்கு இரவு எட்டரை மணிக்கு அமல் படுத்தப்படும் காலப்பகுதி. ஆகவே, இரவு எட்டு மணிவரை நீடிக்கும் எங்கள் வீதியோர அரட்டைப் பேச்சுக்களில் சுதந்திரம் குறித்தும் பேசியிருக்கிறோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுதந்திரம் மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால்..? என்பது பற்றிய கனவு அது. </div>
<div style="text-align: justify;">
<br />'மச்சி நாங்களெல்லாம் இங்க்லீஷ் மீடியத்திலேயே படிச்சிருப்போம். வெள்ளைக்காரன் புண்ணியத்தில இங்க்லீஷ் மீடியத்தில படிச்சுட்டு, ஓட்டை உடைசல் இங்க்லீஷ் பேசிக்கொண்டு, கணக்குப் பாடத்தில் கூட கிராமர் மிஸ்டேக் கண்டுபிடிக்கும் இந்த அப்பன்காரன்களை ஸ்டைலா இங்க்லீஷ் கதைச்சு தெறிச்சோட வைக்கலாம்' </div>
<div style="text-align: justify;">
<br />'ஓமடா பேப்பர்ல எழுதினத அப்பிடியே வாசிக்கிறமாதிரி ஒரு இங்க்லீஷ். இதில படிச்சவங்களாம் எண்டொரு பெருமை'. </div>
<div style="text-align: justify;">
<br />'எங்கள் எல்லாரிட்டையும் சைக்கிளுக்குப் பதிலா ஆளுக்கொரு கார் இருக்கும். இந்த நேரத்தில இப்பிடியெல்லாம் வெட்டியா நிக்காம டிஸ்கோ, நைட்கிளப் என்று பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடலாம்' </div>
<div style="text-align: justify;">
<br />இப்படியாகப் பல 'காத்திரமான' கருத்துக்கள் முன்வைக்கப்படும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதைவிட மிக முக்கியமான ஒரு விஷயமிருந்தது. எங்களுக்கெல்லாம் குறைந்தபட்சம் ஆளுக்கொரு கேர்ள் ஃபிரண்ட் இருப்பார்கள் என்பதுதான் அது. <br /><br />எங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக அதையே கருதினோம். எங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட் கிடைக்காமல் போனதற்கான ஒரே காரணம் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்ததுதான் என்று தீவிரமாக நம்பிக் கொண்டிருந்த காலம் அது. இதே நம்பிக்கையுடன் பலரும் இருந்ததாகத் தெரிகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">க</span>டந்த முறை யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது சந்தித்த நண்பன் ராகுல், அடிக்கடி செல்பேசியில், 'இப்ப வெளிக்கிட்டு வந்துட்டிருக்கேன்', 'இப்ப அங்கதான் போயிட்டிருக்கேன்', 'அரைமணித்தியாலத்தில வீட்ட நிப்பன்' <br />- மனைவியிடம் ரன்னிங் கமெண்டரி கொடுத்துக் கொண்டிருந்தான். <br /><br />கட் செய்ததும் கொஞ்சம் ஆசுவாசமாக தலையை அசைத்தவன் (அது என் பிரமையாக இருக்கலாம்)</div>
<div style="text-align: justify;">
<br />"என்ன மச்சான் பாக்கிற?" என்றான்.</div>
<div style="text-align: justify;">
"இல்ல மச்சி அந்தக்காலத்தில இரவு பத்துமணி வரைக்கும் ரோட்ல சுத்திட்டிருந்த பயபுள்ள... அப்பல்லாம் வீட்டில ஒருவார்த்த சொல்லியிருப்பியா? இப்ப ஆறுமணிக்கே.."</div>
<div style="text-align: justify;">
"விடுறா விடுறா"</div>
<div style="text-align: justify;">
"என்ன ஆட்டமடா போட்டீங்க...இந்தச் சந்தீல ஒருமணித்தியாலம் நிப்பாங்களாம்.. அப்பிடியே வீட்ட போறமாதிரியே வெளிக்கிட்டு அந்தச் சந்தீல போய் ரெண்டு மணித்தியாலம் நிப்பாங்களாம்.. வெளீல கொட்டிட்டு சாமத்தில வீட்ட போய் பாவம் மினக்கெட்டு அம்மா சமைச்சு வச்சத சாப்பிடாமலே படுப்பாங்களாம் என்னா அராஜகம்.."</div>
<div style="text-align: justify;">
"கதைப்பீங்கடா கதைங்க" </div>
<div style="text-align: justify;">
"இல்ல மச்சி அப்பிடிப்பாத்த உன்ன, இப்ப இப்பிடி....மனசுக்கு ரொம்பக்க்க் கஷ்டமாயிருக்குடா"</div>
<div style="text-align: justify;">
"சரி சரி விடு காணும்"</div>
<div style="text-align: justify;">
"மச்சி எப்பவாவது சுதந்திரத்த இழந்துட்டம்னு ஃபீல் பண்ணியிருக்கியா?"</div>
<div style="text-align: justify;">
"அப்பிடியெல்லாம் இல்லடா... முதல்ல வெளிலருந்து யோசிச்சா அப்பிடித்தானிருக்கும் ஆனா அப்பிடியில அது ஒரு சுதந்திரம் இதுவுமொரு சுதந்திரம்தான்... நல்லாருக்கு"</div>
<div style="text-align: justify;">
"அத ஏண்டா அழுறமாதிரியே சொல்றே"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதிதாகத் திருமணமான நண்பன் சில நாட்களோ, மாதங்களோ எதையோ பறிகொடுத்த மாதிரி கண்களுடன், சோகமாக இருப்பதுபோலத் தோன்றுவதெல்லாம் - உண்மையில் அவன் அப்படி இருக்கிறானா, இல்லை நாங்கள் அப்படி ஒரு கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்க்கிறோமா என்பது சரியாகத் தெரிவதில்லை. திருமணமானால் சுதந்திரம் அவ்வளவுதான் என்றொரு நம்பிக்கை நம்மிடையே எப்போதுமுண்டு. நினைத்த நேரத்தில் ஊர்சுற்ற முடியாது என்பதுதான் பிரதான கவலை. நண்பர்களிடமிருந்து தவிர்க்க முடியாமல் விலக நேரிடும். ஏதோ ஒரு மாட்டிக்கொண்ட உணர்வு வந்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நண்பன் ஜோதி கொழும்பு வரும்போதெல்லாம் நாங்கள் தங்கியிருந்த பெரிய வீட்டில் வந்து தங்குவான். வேலைக்குப் போய்விட்டு வந்து இரவு கட்டாக்காலிகள் போல கேட்பாரின்றிச் சுற்றிக் கொண்டிருந்த எங்களை ஏதோ விசித்திர ஜந்துகளைப் பார்ப்பது போலவே பார்த்துக் கொண்டிருப்பான். <br /><br />கொழும்பில் பாதுகாப்புக் கெடுபிடிகள் நிலவிய காலகட்டம். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். பார்ட்டி, குடி, வீதியில் அரட்டை என ஒன்பது, பத்து, பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நாள் தவறாமல் 'நைட் கிளப்' சென்று அதிகாலை மூன்று மணிக்கு வீடு திரும்புவான் இன்னொருத்தன். யாருக்காவது பிறந்தநாள் வந்துவிட்டால் வீடே அமர்க்களப்படும். ஷைல் தனக்குத் தெரிந்த சாப்பாட்டுக்கடை நண்பனிடம் சொல்லி பெருமெடுப்பில் கோழிகள் பொரித்து, முட்டைகள் அவித்து (அது சைவக்கடை என்பது முக்கியமானது) இன்னும் என்னென்ன முடியுமோ அதெல்லாம் செய்வித்து, இரவு ஏழுமணிக்கு த்ரீவீலரில் கொண்டுவந்து இறக்கும்போது, சயந்தன் இன்னொரு த்ரீவீலரில் போத்தல்களைக் கொண்டுவந்திருப்பான். கௌரி, வெள்ளை, சங்கர், எனக்கெல்லாம் ஆளாளுக்கு ஒருவேலை பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும். எல்லாம் கச்சிதமாக ஆரம்பித்தால் விடிகாலைவரை திருவிழாதான்! யாரும் கேள்வி கேட்க இல்லாத கொண்டாட்டம் அது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதெல்லாம் அவனுக்குப் புதிதாக, பிரமிப்பாக இருந்திருக்க வேண்டும். பாவம், அவன் பள்ளியில் படித்து, உயர்கல்வி முடித்து வேலையில் சேர்ந்து முதல் மாதச் சம்பளம் வாங்கும்போதே வீட்டில் அவனுக்கு மனைவி! நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருந்தது. இதுகுறித்து ஒருநாள் மிகவும் கவலைப்பட்டு, தீவிர சோகத்தில் ஆழ்ந்து அதை மறக்க ஒரு சோகப் பார்ட்டி வேறு!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"டேய் முப்பது வயதுக்கு மேலதான் கட்டவேணும் என்னடா?" </div>
<div style="text-align: justify;">
ஒருமுறை மிகுந்த ஏக்கத்தோடு கேட்டான். என்ன சொல்வதென்று தெரியவில்லை. <br />வாழ்க்கையில் சுதந்திரத்தையே அனுபவிக்காத ஒரு அபலை(?) ஆணின் அத்தனை சோகமும் அவன் கண்களில் தெரிந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">உ</span>ண்மையில் இந்த சுதந்திரம் என்பது கூட ஒரு கற்பிதமாக இருக்கலாம். அல்லது அதுவும் ஒரு நம்பிக்கைதான் நான் சுதந்திரமாக இருக்கிறேன் என உணர்வதுதான் சுதந்திரம். பத்துவருடம் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்கிற நிர்ப்பந்தம் இருக்கும்போது சுதந்திரம் பறிக்கப்பட்டதாய் உணர்வோம். ஆனால் பத்து வருடமாக ஒரேநாட்டிலேயே எங்கும் போகாமல் இருப்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை. நாம் எப்போதும் எந்தநாட்டுக்கும், ஏன் எந்தக் கிரகத்துக்கும் போகலாம், வரலாம் என்கிற மனநிலைதான் சுதந்திரமாய் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடுமையான கெடுபிடிகள் இருந்த யுத்த காலம். அலுவலகத்தில் உடன் வேலைபார்த்த இரண்டு நண்பர்களைப் போலீஸ் தவறான தகவலின் அடிப்படையில் கைது செய்துவிட்டது. உடனடியாகத் தகவல் தெரிந்து அலுவலகமே பரபரப்பானது. உயர்மட்டத்தில் செல்வாக்குள்ள நிர்வாகி இரண்டே நாட்களில் நேரில் சென்று அவர்களை அதிரடியாக விடுவித்து அலுவலகம் அழைத்து வந்தார். நடந்ததை அவர்களால் நம்பவே முடியவில்லை.<br /><br />கைது செய்யப்பட்ட விதத்தைப் பார்த்தபோது மீண்டும் வெளியில் வருவோம் என்றே நம்பவில்லையாம். இரவு முழுவதும் தூங்காமல் ஒருவரியோருவர் பார்த்து அழுதுகொண்டிருந்திருக்கிறார்கள். அன்று அவர்கள் உணர்ந்ததுதான் உண்மையான் சுதந்திரம் என்று தோன்றுகிறது. அப்படியொரு மலர்ச்சியை அவர்கள் முகத்தில் என்றும் பார்த்ததில்லை. அதே காலப்பகுதியில் ஒருவித பயத்துடன் கொழும்பிலிருந்த நண்பர்கள் சிலர் இந்தியா சென்றிருந்தார்கள். அவர்கள் பின்பு இங்கு வந்தபின் சொல்வது தாம் தமிழனாக சுதந்திரமாக, எந்தவித பயமுமின்றி உணர்ந்தது சென்னையில்தான் என்பார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">எ</span>ங்களுக்கே எந்த அளவிற்குச் சுதந்திரம் இருக்கிறது என்கிற கேள்வி ஏதுமில்லாமலே, யாருக்காவது சுதந்திரம் வழங்கிவிடும் ஆர்வம் மட்டும் எல்லோருக்குமிருக்கிறது. அது ஓர் போதை. நாங்களும் வழங்கியிருந்தோம். எங்களால் வெள்ளைக்காரன் மாதிரி நாட்டுக்கா வழங்கமுடியும். ஒரு வீட்டுக்குச் சுதந்திரம் வழங்கியிருந்தோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நண்பன் ஒருவன் யாழ்ப்பாணத்தில் வந்து தங்கிப் படித்துகொண்டிருந்த வீடு அது. கடும் கண்டிப்பான உரிமையாளர் மனைவியுடன் கொழும்புசெல்ல, வீடு ஒருவாரம் எங்கள் கட்டுப்பாட்டில்! முதல்நாள் மாலையே ஒரு குறூப் டீவி, விசிடி பிளேயர் சகிதம் தரையிறங்கியது. இன்னொரு குறூப் அட்டைப் பெட்டிகள், நீலாம்பரி ஹோட்டல் அசைவ உணவு வகைகளுடன் முன்னிரவு நேரத்தில் களத்தில் இறங்கியது. <br /><br />அயலவர்கள் இரண்டே நாட்களில் மிக்க மகிழ்ச்சி தெரிவித்தார்கள். "தம்பி இந்த வீடு இப்பதான் இவ்வளவு கலகலப்பா இருக்கு. எனக்குத் தெரிஞ்ச நாள் துவக்கம் ஒரு விறுத்தமில்லாமத்தான் இருந்திருக்கு" - உண்மையாகவே பாராட்டினார் பக்கத்து வீட்டு அங்கிள். <br />பின்னர் தெரிந்தது - நீண்டநாள் பகையாம்! </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கேயொரு நாய் இருந்தது. அதை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை, பாவம். நண்பன் கேற்றை திறந்து வைத்தான். நாய் பொருட்படுத்தவில்லை. அதை வெளியே அழைத்துச் சென்றான். அடக்குமுறையிலேயே வளர்ந்ததில் வெளியே வந்தால் ஓடித் தப்பலாம் என்கிற பொது அறிவெல்லாம் அதற்கு இருக்கவில்லை. 'உச்சு வா' என்று கூட்டிக் கொண்டே நண்பன் ஓட, அதுவும் சேர்ந்து ஓடியது. அப்படியே ஓடிப்போனது, நாய்க்கும் சுதந்திரம்! ஏதோ எங்களால் முடிந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம் மக்கள் எப்போதெல்லாம் சுதந்திரம் கிடைத்ததைப் போல மகிழ்ந்திருக்கிறார்கள் என்று யோசித்தால்? <br />எனக்குத் தெரிந்து 87 ஆம் ஆண்டில் ஒருமுறை. அப்படி ஒரு மகிழ்ச்சி எல்லோருக்கும். இந்திய அமைதிப்படை வந்தது அப்போது. பின்பு 94 ஆம் ஆண்டில். சந்திரிகா இலங்கையின் ஜனாதிபதியானார். துரதிருஷ்டவசமாக இந்த சுதந்திர மனநிலை எல்லாம் சில நாட்களுக்குத்தான் நீடித்தது. அதன்பின் தெளிந்துவிடார்கள். மற்றபடி, சுதந்திரம் என்கிற உணர்வை முழுமையாய் அனுபவித்தில்லை. அதற்கு அளவுமுறையும் கிடையாது. சமயங்களில் அடக்குமுறையின்போதுதான் நாம் அதுவரை அனுபவித்த சுதந்திரத்தை உணர்ந்துகொள்கிறோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடுமையாக நோயுற்று படுக்கையிலிருந்து எழுந்து வெளியே உலாவச் செல்லும் அந்த முதல் மாலைப்பொழுதில் முடிகலைத்து வீசுவதுதான் மீண்டெழுந்த ஒருவனின் சுதந்திரக் காற்று! நான் சமீபத்தில் உணர்ந்ததும் அதுதான். சமயங்களில் மனதிற்கு பிடிக்காமல் போய்விட்ட நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு வெளியே வரும்போது இருப்பதும்கூட ஒரு சுதந்திர உணர்வே! இன்னும்கூட சுதந்திரம் எப்படியிருக்கும்? என்றுகேட்டால் மறுபடியும் 'கப்பலேறிப் போயாச்சு' பாடலுக்குத்தான் போகவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-53302553065790406682017-02-02T19:43:00.000+05:302017-02-02T19:43:41.953+05:30அவர்களுக்குத் தெரியுமா?<div style="text-align: justify;">
<span style="font-size: large;">"எ</span>ப்பிடி போகுது...என்ன உங்கள் ஆட்சிதானே?" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரேரா அங்கிள் நேற்றுத் தொலைபேசினார். மகிந்த தோற்றதால் இப்போது தமிழர்களின் ஆட்சியாம். அப்படித்தான் பல சிங்களவர்கள் நினைக்கிறார்கள். பெரேரா தீவிர மகிந்தாபிமானி. பழைய அலுவலகத்தில் அடிக்கடி அரசியல் பேசி என்னைக் கடுப்பேற்றிக் கொண்டிருப்பார். பதிலுக்கு நானும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்துகொண்டிருப்பேன். மகிந்த அரசாங்கம் செய்வதெல்லாம் நாட்டு நன்மைக்கே என்கிற கொள்கையுடையவர். அவர் பௌத்தமதத்தைப் பின்பற்றும் தீவிர அடிப்படைவாதி. ஆனால் நல்லவர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ச்சே அந்த வன்னிச் சனங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நல்ல சாப்பாடு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு, என்ன கொடுமையெல்லாம் அனுபவித்திருப்பார்கள்?" என பெரேரா அவ்வப்போது கவலைப்படுவார். அவரது நினைப்பெல்லாம் புலிகள் தமிழ் மக்களைக் காலங்காலமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர், அரசாங்கம் அவர்களை மீட்டு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது என்பதுதான். இங்கே பலரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நவநீதம்பிள்ளை இங்கே வந்திருந்த சமயம், ஒருநாள் பெரேரா பரபரப்பாக, <br />"அவர் முள்ளி வாய்க்காலில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முயன்றிருக்கிறார். அது எப்படி நியாயமாகும்?" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br />"அவர் புலிகளுக்குச் சார்பானவர் இல்லை. இறுதிப்போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள் அவர்களுக்குத்தான் அந்த அஞ்சலி"</div>
<div style="text-align: justify;">
<br />"அவ்வளவு பொதுமக்கள் இறந்தி ருக்கிறார்களா? இந்த விஷயம் எனக்குத் தெரியாது " என்றார் அதிர்ச்சி படிந்த முகத்துடன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாவம் பெரேரா படிப்பது ஒரு இனவாதப் பத்திரிக்கை. பார்ப்பது அரச தொலைக்காட்சி, நம்புவது முற்றுமுழுதாக அரசாங்கத்தை. எப்படி உண்மை தெரியும்? அவரைப் பொறுத்தவரை அரசாங்கம் அறிவித்தபடி, இறுதிப்போரில் இறந்தவர்கள் அனைவருமே புலிகள்தான். இன்றுவரை சிங்களவர்கள் பலரது நம்பிக்கையும் அதுதான்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்கள் பிரச்சினை அவர்களுக்குத் தெரியுமா? என்பதுதான் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்வியாக இருக்கிறது. எப்போதுமே அது அப்படித்தான். அவர்கள் எந்தளவிற்குப் தமிழர் பிரச்சினையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">இ</span>றுதிப்போர் ஆரம்பிக்கும் வரையில் இங்கேயுள்ள படித்த சிங்களவர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலரும் யுத்தம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை - நான் சந்தித்த அனுபவங்களின்படி. புலிகள் குறித்து ஒரு பயம், பிரமிப்பு இருந்தது. விழிகள் விரியப் பேசிக் கொள்வார்கள். சமாதான காலத்தில் யாழ் சென்று வந்தவர்கள் சிலர் வன்னியில் புலிகளைச் சந்தித்தது பற்றியும் அவர்கள் தமக்கு உதவியது பற்றியும் கூறுவார்கள். சிலர் அவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு, வீதி ஒழுங்கமைப்பு விதிகள் பற்றிச் சிலாகித்துப் பேசுவார்கள். யுத்தம் என்பது செய்திகளில் கேட்பது மட்டுமே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அநேகமாக நான் வேலை பார்த்த அலுவலகங்களில் நான் மட்டுமே தமிழனாக இருப்பேன். மதிய உணவின்போது நான் எல்லோருடனும் சேர்ந்து கூட்டமாகச் சாப்பிடுவதை எப்போதும் விரும்புவதில்லை. அது ஏனோ ஒரு அசௌகரியம். ஒருவேளை ஆரம்பகால அனுபவமாகவும் இருக்குமோ என யோசித்ததுண்டு. கொழும்பு வந்த புதிதில் சாமாதான காலம் முடியப் போவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கின. அப்படியே நடந்து மாவிலாறு சம்பவமும் நடைபெற்றிருந்தது. <br /><br />சாப்பாட்டு மேசை உரையாடல்களில் முக்கிய பேச்சே யுத்தமும் புலிகளும்தான். ஆரம்பத்தில் யுத்தம் பற்றிய எனது பார்வை, தமிழர்களின் நிலை பற்றி என்னிடம் ஆர்வமாகப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் என்ன நினைத்தார்களோ, புலிகள் தரப்பில் 'பேசவல்ல அதிகாரியாக' என்னைப் பாவித்துக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். நானும் முடிந்தவரை பதிலளிப்பேன். சிலநாட்களில் அநேகமான என் பதில்கள், 'இந்தக் கேள்வி எனக்குப் பிடிச்சிருக்கு', 'இந்தக் கேள்வி சுத்தமாகப் பிடிக்கவில்லை'.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லோரும் நல்ல நண்பர்களாக, உதவி செய்பவர்களாக இருந்தாலும், ஒரிருவரிடம் மட்டும் 'இனத்துவேஷம்' அவ்வப்போது பேச்சில் கிண்டலாக வெளிப்படும். ஒருமுறை காலி சென்றிருந்தபோது, கடலில் தூரத்தில் தெரிந்த படகொன்றைக்காட்டி ஒருவர் கேட்டார், "உமா அது எல்டிடி படகுதானா என்று பார்த்துச் சொல்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் சந்தித்த யுத்தத்தை கொழும்பிலும், வேறு இடங்களிலும் பேரூந்துக் குண்டுவெடிப்புகளூடாகத்தான் நேரடியாகத் தெரிந்துகொண்டார்கள். அது நிச்சயமாக எம்மைப் புரிந்துகொள்ளும் அனுபவமாக இருக்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேரூந்துக் குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஒரு காலைப்பொழுதில், ஹர்ஷா சோகமும் கோபமுமாக என்னிடம் வந்தான். 'நீங்கள் எங்கள் ஜனாதிபதியைக் கொல்லுங்கள், அமைச்சர்களைக் கொல்லுங்கள்.. ஏன் அநியாயமாகக் குழந்தைகளை எல்லாம் கொன்றிருக்கிறீர்கள்?' என்றான். உடனே புள்ளி விபரங்களை எடுத்துக்கூறி, நீங்கள் கொல்கிறீர்கள், அதனால் நாங்களும் என்று சொல்வதைப் போன்ற அபத்தம் வேறேதும் இருக்க முடியாது என்பதால் அன்றைய பொழுது மௌனமாகவே கடந்துபோனது. அன்று யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்கள் பிரச்சினை அவர்களுக்குத் தெரியுமா? எந்த அளவிற்கு அவர்கள் நம் பிரச்சினையைப் புரிந்துகொண்டுள்ளார்கள்? அதைத் தெரிவிப்பதற்கான வழிவகைகள் ஏதேனும் தமிழர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டதா என்பது தெரியவில்லை, ஆனால் சிங்களவர்கள் சிலர் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருகோணமலையில் வேலை செய்த அலுவலகத்தில் ஒரு சிங்கள அங்கிள். நல்ல மனிதர்தான். ஆனால் பாருங்கள் ஓர் புத்தகம் வைத்திருந்து அவரைச் சந்திக்க வரும் சிங்கள நண்பர்களுக்கு அன்பளிப்பது வழக்கம். எழுதியது அவரது நண்பராம். இனப் பிரச்சினையைப் பற்றிப் புரிந்துகொள்ள கட்டாயம் படிக்கவேண்டும், வரலாறு தெரியவேண்டும் என்பதற்காக அதனை வழங்குவதாகக் கூறினார். அந்தப்புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவத்தினரைப் புலிகள் கொன்றதிலிருந்துதான் இனப்பிரச்சினை ஆரம்பிக்கிறது. அதுதான் தோற்றுவாயாம். இப்படி ஆளாளுக்கு தங்கள் விருப்பப்படி வரலாற்றை எழுதிப் பரப்பிக் கொண்டுள்ளார்கள். அலுவலகங்களில் பேசிப்பழகிய வரையில் எங்காவது ஓரிருவர் தவிர, அவர்கள் யாருக்கும் எந்தப் புரிதலும் இல்லை என்பதுதான் உண்மை. அல்லது புரிந்துகொள்ள விருப்பமில்லை. படித்தவர்கள், இணையத்தை நாள்தோறும் பயன்படுத்துபவர்கள் நிலைமையே இப்படி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">சி</span>ங்களவர்களில் பலருக்கு இன்னும் தமிழர்கள் யார் என்பது தெரியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவில் இருந்தோ, ஆபிரிக்காவில் இருந்தோ வந்தவர்களாக இருக்கலாம். அல்லது செவ்வாய்க் கிரகத்திலிருந்துகூட வந்திருக்கலாம். பலர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என நம்புகிறாரகள். ஆனால் தமிழர்கள் வந்தேறிகள் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அப்படித்தான் அரசியல்வாதிகளால் அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவர்களின் வரலாற்றுப் பாடப்புத்தகம்கூட அப்படிச் சொல்லிக் கொடுக்கலாம். தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வக்குடிகள் அல்ல. அவர்கள் இங்கே வாழலாம் ஆனால் நாட்டைப் பிரிக்க, அதிகாரத்தில் உரிமை கோர எல்லாம் முடியாது என்பதுதான் இனவாத அரசியல்வாதிகளின் பேச்சாக இருந்துவருகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதற்காக இந்த யுத்தமெல்லாம்? அடிப்படையில் என்னதான் பிரச்சினை? என்கிற விவரமெல்லாம் சாதாரண ஒரு சிங்களப் பிரஜைக்குத் தெரியாது. அல்லது தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அதனைச் சிங்கள அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ தெரியப்படுத்த விரும்பியதில்லை. நன்கு படித்த சிங்களவர்களுக்கே இனப் பிரச்சினை பற்றிய தெளிவில்லை எனும்போது சாதாரண ஒரு சிங்களப் பிரஜை, எங்கோ கிராமத்தில்வாழும் பாமர மக்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் பார்வையில் இனப்பிரச்சினை என்பது, வந்தேறிகளான தமிழர்கள் புலிகள் மூலமாக நாட்டைத் துண்டாட முயற்சித்தார்கள். அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து, படையினரின் உயிர்த்தியாகத்தின்மூலம் தீவிரவாதிகளை ஒழித்து நாட்டைக் காப்பாற்றிவிட்டார்கள். புலிகள் ஒரு மோசமான தீவிரவாதிகள். அவர்கள் நம் நாட்டின் ஒருபகுதியைப் பிடித்து வைத்திருந்தார்கள். அரசாங்கம் அவர்களிடமிருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்து அமைதியான வாழ்வுக்கு வழி செய்திருக்கிறது என்பதுதான் பலரது புரிதல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் இப்பொது ஒரு அமைதியான, சுபீட்சமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பெரும்பான்மையானோரின் நம்பிக்கை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">"இ</span>னி நீங்க யாழ்ப்பாணம் போகலாம் என்ன?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சந்தோஷமாக சிரித்துக்கொண்டே உடன் வேலை பார்க்கும் சிங்கள நண்பர்களால் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம். 'ஒக்கம இவறாய்' (எல்லாம் முடிந்தது) எனக் குறிப்பிடப்பட்ட இறுதி யுத்ததின்பின்னர் அவர்களின் விசாரிப்பு அது. அவர்களைப் பொருத்தவரை யாழிலும் யுத்தம் நடைபெற்றது. அதனால்தான் நாங்கள் போகமுடியாமல் கொழும்பில் இருக்கிறோம் என்றே நம்பிக்கொண்டிருந்தார்கள். பலருக்கு யாழ்ப்பாணம் வன்னியில்தான் இருக்கிறது அல்லது வன்னி யாழில் இருக்கிறது என்கிற நம்பிக்கை. யுத்த காலத்தில் இலங்கை இணையத்தளங்களில் இராணுவம் அப்போது முன்னேறிய நிலைகளை அப்டேட் செய்துகொண்டிருந்தார்கள். எனது அலுவலகத்தில் பலர் அப்போதுதான் இலங்கை வரைபடத்தையே முதன்முதல் பார்ப்பதுபோல பார்த்தார்கள். ஒரு நண்பருக்கு மதவாச்சி வவுனியாவுக்குக் கீழே இருந்தது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதுவரை அவர் மேலே இருந்ததாக நம்பிக் கொண்டிருந்தாராம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதை கிடையாது என்பதே அவர்களுக்குப் பேரதிர்ச்சி. கப்பலிலும், விமானத்திலும்தான் செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது, தேவையுமில்லாதது. இவர்கள் எல்லோரும் நாளாந்தம் இணையத்தைப் பயன்படுத்தும் வசதியுள்ளவர்கள். அநேகமானோர் பொறியியல் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இனி உங்களுக்கு எல் டி டி பயம் இல்லைத்தானே நீங்க யாழ்ப்பாணம் போகலாம் என்ன?” என ஒரு படி மேலே சென்று அதி விவரமாகப் பேசுபவர்களிடம், 'ஙே' என்றொரு பார்வை பார்ப்பதே மிகச்சிறந்த பதிலாக இருந்திருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறோமோ இல்லையோ ஆனால் தீர்வு சொல்வதில் எல்லோருக்குமே ஒருவித ஆர்வமிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">இ</span>றுதிப்போர் உச்சமடைந்திருந்த காலம். புதிய வீட்டுக்கு மாறிக் கொண்டிருந்தோம். பொருட்களை ஏற்றிக்கொண்டு Canter Lorry யின் முன்புறம் நானும் நண்பனும் டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தோம். டிரைவர் சிங்களவர்தான். வாட்டசாட்டமாக இருந்தார். பேச்சுக் கொடுத்தவர் நாங்கள் யாழ்ப்பாணம் என்று தெரிந்ததும். நானும் அங்கே இருந்திருக்கிறேன் என்றார். மாதகல், காரைநகர், ஊர்காவற்துறை, காங்கேசன்துறை எல்லா இடமும் பரிச்சயம் அருமையான இடங்கள், எதுக்கு இந்தச்சண்டை என்றார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர் கடற்படையில் இணைந்திருந்தார் எனவும், பின்னர் வேலையை விட்டுவிட்டு மத்திய கிழக்கு சென்று சிலவருடங்கள் வேலை பார்த்திருக்கிறார். பணம் சேர்ந்ததும் வாகனத்தை வாங்கி இங்கேயே இருப்பதாகவும் சொன்னார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஒருவேளை ஓடிவந்திருப்பான்" என்றான் நண்பன் மெதுவாக. </div>
<div style="text-align: justify;">
"ஓடி வரல தம்பி ரிட்டையர் பண்ணிட்டு வந்தது "<br />, இப்போது கொச்சையான தமிழில் பேசினார். அசடு வழிந்துவிட்டு நண்பன் தொடர்ந்தும் பேசினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யுத்தம் அவருக்குப் பிடிக்கவில்லை. எதுக்கு இந்தச்சண்டை என அடிக்கடி சலித்துக் கொண்டார். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஓர் நல்லிணக்கத் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தார். நாங்கள் வெலவெலத்துப் போனோம். இதுவரை யாருமே அப்படியொரு யோசனை சொன்னதாகத் தெரியவில்லை. அவர் சர்வசாதரணமாகக் கூறிவிட்டார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இப்ப பாருங்க மட்டக்களப்ப கருணா அம்மானிட்ட குடுத்தாச்சு அதேமாதிரி யாழ்ப்பாணத்த பிரபாகரனிட்ட குடுத்தா எல்லபிரச்சினையும் ஓவர்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">'யா</span>ழ்ப்பாணத்துக்கு ரயில் விட்டாச்சு', 'நல்ல ரோட் போட்டிருக்கு இதெல்லாம் இவ்வளவு நாளா இல்லாம சனம் எவ்வளவு கஷ்டப்பட்டிச்சு?', 'முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததால்தானே இதெல்லாம் சாத்தியமானது?' என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும் மகிழ்ச்சி தெரிவிக்கும் பலர் இருக்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதெல்லாம் முப்பது வருஷத்துக்கு முதலே இருந்ததுதான் என்பதெல்லாம் பெரியவர்கள் சிலருக்கும் மட்டுமே தெரியும். இளைஞர்கள்? உண்மையில் நாங்கள் யுத்தம் ஆரம்பிக்கும்போது இருந்ததைவிட இன்னும் பின்னோக்கி வந்துவிட்டோம். இவ்வளவுகால இழப்புகளும், வலியையும் கடந்து இப்போது யோசித்தால் முதலில் இருந்த நிலையை அடைவதேகூட சாத்தியமில்லையோ என்கிற அவநம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
போரினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகள் மக்களிடம் திரும்பக் கையளிக்கப்பட்டதா? உடைமைகளை இழந்தவர்களுக்கு சரியானபடி ஈழப்பீடுகள் வழங்கப்பட்டனவா? பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள், தொழில் முயற்சிகள் பற்றியதெல்லாம் சம்பந்தப்படவர்களின் தனிப்பட்ட கவலைகள் என்பதில் எல்லோருமே தெளிவாக இருக்கிறார்கள். தொண்ணூறாம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு இன்னும் விடுவிக்கப்படவில்லை. எல்லாமே பயிர்ச்செய்கை நிலங்கள். அதே முல்லைத்தீவுப் பிரதேசத்திலும். பாதுகாப்புக் காரணங்கள்காட்டி உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவம் கையகப்படுத்தியதை முற்றாக விடுவிப்பார்கள் என்கிற நம்பிக்கையே பலரிடம் இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையில் 96 இல் யாழ்ப்பாணத்தில் இராணுவம் கைப்பற்றியபோதே வலிகாமம் வடக்கு பிரேதேசத்தை மக்களிடம் கையளித்திருக்க முடியும். அண்மையில் வலிகாமம் பகுதியில் ஒரு குறித்தபகுதி காணிகள் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக, அல்லது பார்வையிட அனுப்பதிப்பதாகச் செய்திகள் வெளியாகின. அதுவே சிங்களப் பெரும்பான்மையினரால் என்னவோ தமிழர்களுக்குப் பெரியதொரு தீர்வுத்திட்டத்தைக் கொடுப்பதுபோலவே ஒரு பரபரப்புச் செய்தியாகப் பேசப்பட்டிருக்கும். ஊடகங்கள் வாயிலாகச் சிங்களமக்கள் அப்படித்தான் உணரக்கூடும். மக்களின் சொந்தக் காணிகளைத் திருப்பிக் கொடுப்பதே என்னமோ அரசாங்கம் பெரியதொரு விட்டுக் கொடுப்பைச் செய்வதுபோல, என்னமோ தமிழீழத்தைப் பெறுவதைப்போல சிக்கலான விடயமாகிவிட்டது. இதற்காகத்தான் தமிழர்கள் போராடினார்கள் என்றுகூட ஒரு பெருங்கூட்டம் நம்பலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமீபத்தில் ஒரு சர்ச்சை. இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாடுவது பற்றியது. பாடலாம் அப்படித்தான் இருந்தது என்பது பலர் கருத்து. இல்லை தமிழில் பாடக்கூடாது என ஏதோ ஓர் அமைப்பு சர்ச்சையைக் கிளப்பியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் சொந்தமண்ணுக்குத் திரும்ப அனுமதிக்கப்படாமல் இருக்கும் ஓர் வன்னி விவசாயக் குடிமகனோ, யுத்தத்தில் அவயத்தை இழந்து வாழ வழியின்றிக் கஷ்டப்படும் ஓர் இளைஞனோ தேசிய கீதத்தைத் தமிழில் பாடியேயாக வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருப்பார்கள் என்றோ, தமிழில் பாடியே தீரவேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் என்றோ நான் நம்பவில்லை. <br /><br />ஆனால் இதையெல்லாம் பார்த்து, தமிழர்கள் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்குத்தான் சண்டைபிடித்தார்கள் என நம்பும் ஒரு கூட்டம் தென்னிலங்கையில் இருக்கும் என நம்பலாம்.<br /><b><span style="font-size: x-small;"><br /><span style="background-color: white; box-sizing: border-box; font-family: latha, sans-serif; outline: none !important;">4tamilmedia</span><span style="background-color: white; box-sizing: border-box; font-family: latha, sans-serif; outline: none !important;"><span style="box-sizing: border-box; outline: none !important;">வில் 2015ல் வெளியானது.</span> </span></span></b></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-32125545895721083132017-01-30T11:40:00.000+05:302017-02-02T17:59:07.438+05:30Living Together - காதல் தாண்டிய நம்பிக்கை!<div class="MsoNormal" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-kS7fl7VDRe4/WJMl-Jlxt6I/AAAAAAAAAJ4/34sMbhIMMLMmNXxsT3bmh0GRT3TNCLqlACLcB/s1600/living-together.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="195" src="https://1.bp.blogspot.com/-kS7fl7VDRe4/WJMl-Jlxt6I/AAAAAAAAAJ4/34sMbhIMMLMmNXxsT3bmh0GRT3TNCLqlACLcB/s400/living-together.jpg" width="400" /></a></div>
<span style="font-family: "latha" , sans-serif;"><span style="font-size: large;"><br />ப</span>த்து ஆண்டுகளுக்குமுன், கொழும்பு வந்த புதிது. வெள்ளவத்தையில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சற்றுத்தள்ளி எதிரிலிருந்த வீட்டில் அறுபது வயதைக் கடந்த தம்பதிகள் இருவர். ஆங்கிலம் பேசும் சிங்களவர்கள். அநேகமான காலைப்பொழுகளில் அலுவலகம் புறப்படும்போது அந்த வீட்டுப் பெண்மணி கடற்கரைக்கு நாயை அழைத்துக்கொண்டு செல்ல, கையசைத்து விடைகொடுத்துவிட்டுப் பூக்கன்றுகளுக்கு நீரூற்றிக் கொண்டிருப்பார் அந்த அங்கிள். <br /><br />ஒருநாள் நண்பன் சொன்னான், 'டேய் இதுகள் ரெண்டும் கல்யாணம் கட்டேல்ல லிவிங் டுகெதரில இருக்குதுகள்' என்றான். சொல்லும்போதே அவன் தொனியில் ஒரு ஒவ்வாமை கலந்திருந்தது. லிவிங் டுகெதர் என்பதை ஒரு வித கெட்ட வார்த்தைபோல ஆக்கிவிட்டார்களோ என்று தோன்றியது. ஆனால் என்னை ஆச்சரியப்படுத்தியது அந்தத் தம்பதியரின் வயது. அதுவரை நாங்கள் பேசிக் கொண்டிருந்த லிவிங் டுகெதர் இளமைப் பருவத்தை மட்டுமே கருத்திற்கொண்டிருந்தது. முதுமைப் பிராயம் பற்றிச் சிந்தித்ததில்லை.</span><span style="font-family: "latha" , sans-serif;"><br /></span><br />
<span style="font-family: "latha" , sans-serif;">பள்ளி இறுதிநாட்களில், வீதியோர அரட்டைகளில் நண்பர்கள் அவ்வப்போது லிவிங் டுகெதர் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். அதுதான் சிறந்த வாழ்க்கைமுறை என்பதில் அப்போதெல்லாம் எங்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. அதற்கான அப்போதைய பிரதான் காரணம் திருமணம் நமக்கு ஒத்துவராத பெண்ணிடம் மாட்டிக்கொண்டால் என்னாவது? காலம் முழுக்கக் கண்ணீரோடு(?!) வாழ்ந்து தொலைக்க வேண்டுமே என்கிற பயம்தான். கூடவே, நம் சுதந்திரம் பறிபோய்விடும். ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டுவிடுவோம். மற்றையது பொறுப்பெடுத்துக் கொள்ளுதல் பற்றிய பிரச்சினை. அதிலும் நாம் - அதாவது ஆண்கள் புதியதொரு பந்தத்துக்குள் பிணைத்துக் கொள்வதற்கு ஒருவித பயமும் தயக்கமும் எப்போதும் இருக்கிறது. <br /><br />பெரும்பாலான ஆண்கள், பெண்களுடன் ஒப்பிடுகையில் மனதைரியம் குறைந்தவர்களாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. பொதுவான நம் தமிழ்ச்சமூகத்தில் விடலைப் பையன்களாக இருக்கும் காலத்திலிருந்து திருமணம் செய்துகொள்ளும் காலம்வரை எதையும் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத, பொறுப்புகள் ஏதுமற்ற விளையாட்டுத்தனமான விடலைப் பையன் மனநிலையோடே இருப்பதில் யாருக்கும் எந்தப் புகார்களும் இருப்பதில்லை. திடீரென்று திருமணம் என்பதைப் பற்றிச் சிந்திக்கும்போது நம் சுதந்திர வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விடுவோமோ என்கிற அச்சம் பீடித்துக் கொள்கிறது. இப்போதும்கூட இதே பிரச்சினைகள், பயம் இருக்கத்தான் செய்கிறது. </span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;"><span style="font-size: large;">இ</span>யக்குனர் மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' படம் வெளியாகப்போவதை அண்மித்த நாட்களில் லிவிங் டுகெதர் பற்றி பேச்சுக்களும் ஆரம்பமாகிவிட்டிருந்தன. படம் அதுபற்றியது என்று சொல்லப்பட்டது. Living Together சரியானதா? அது நம் சமூகத்துக்கு ஒத்துவருமா? போன்ற கேள்விகள் சமீப காலத்தில் நண்பர்களிடையே, ஃபேஸ்புக்கில் பேசப்பட்டன. கவிஞர் வைரமுத்து வேறு இந்தப்படம் கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தும் எனக் கூறியிருந்தார். திருமணம் செய்துக்கொள்ளாமல் இருவர் சேர்ந்து வாழ்வதை நம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது முற்றிலும் காமம் சார்ந்ததாகவே பார்க்கப்படும் என்பது உண்மைதான். நம் சமூகத்தில் திருமணம் நிச்சயமான காதலர்கள் சேர்ந்து வாழ்வதைப் பெற்றோரே அனுமதித்தாலும் மற்றோருக்குப் பிரச்சினைதான். ஆனால் லிவிங் டுகெதர் பற்றி இப்போதுதான் தமிழ்ப் படம்பார்த்துக் கலாச்சார அதிர்ச்சியடையும் நிலையில் நம்சமூகம் இல்லை என்றே நம்புகிறேன்.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;">வாசிப்புப் பழக்கமுள்ள வீடுகளில் பழைய கல்கி, குமுதம் இதழ்களில் வெளிவந்த தொடர்கதைகளை பக்கங்களைப் பிரித்து பைண்ட் செய்து வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். அப்படி பொன்னியின் செல்வனை வாசித்தபோது கூடவே, குமுதம் இதழ்களில் வெளிவந்த 'நியூ வேவ் கதைகள்' என்கிற உபதலைப்புகளுடன் வெளியான நாவல்கள் அந்தக்காலத்துக்குக் கலாச்சார அதிர்ச்சி கொடுக்கக்கூடியவைதான். பதின்ம வயதுகளில் பெரியவர்கள் கண்ணில் படாமல் படிக்கவேண்டிய நாவல்களாக இருந்தது கூடுதல்சிறப்பு! <br /><br />ரேஸ்கிளப், நைட் பார்ட்டி, டிஸ்கோ, போதை ஊசி தாராளமாகப் புழங்கும். கைகளில் புகையும் சிகரெட்டுடன், பெல் பொட்டம் அணிந்திருக்கும் ஸ்டைலான பெண்கள். ஷேர்ட் அணிந்து கீழ் மூன்று பட்டங்கள் பூட்டாமல் அப்படியே வயிற்றுக்கு மேலே முடிச்சிட்டிருப்பார்கள். 'இப்படியா இருந்திருக்கிறார்கள்?' ஓவியங்களைப் பார்க்கும்போதே ஆச்சரியமாக இருக்கும். அந்தக் கதைகளிலுள்ள வாழ்க்கை இன்னும் தமிழ்ப்படங்களில் வந்ததாகத் தெரியவில்லை. முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்னரே தமிழ் வெகுசன இதழ்களில் லிவிங் டுகெதர் பற்றிப்பேசும் கதைகள், நாவல்கள் வந்திருக்கவேண்டும். ஆக, நம் சமூகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. நடைமுறையில் மிக அரிதாகவேயிருந்தாலும் இந்த வாழ்க்கை முறை தெரிந்ததுதான்.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif; font-size: large;">லி</span><span style="font-family: "latha" , sans-serif;">விங் டுகெதர் நம்பிக்கையின் அடிப்படையிலானது. நம்பிக்கைக்குக் கால எல்லை கிடையாது. ஒரு வருடத்திற்கு ஒன்றாக வாழ்ந்து பிரிந்து விடுவோம் என்கிற ஒப்பந்த அடிப்படையில் செய்துகொண்டால், அது லிவிங் டுகெதரில் சேருமா? அப்படியாயின் பின்னர் ஆறு நாட்கள் லிவிங் டுகெதர் அப்படியே இன்னும் விவரமாக ஆறு மணித்தியாலம் லிவிங் டுகெதர் என்று அபத்தமாகிவிடும். லிவிங் டுகெதர் என்கிற வார்த்தையை ஒவ்வொருவரும் தம் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்வதில் ஒட்டுமொத்தமாகத் தவறாகவே பார்க்கப்படுகிறது.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;">லிவிங் டுகெதர் ஒரு கோட்பாடோ, நெகிழ்வுத் தன்மைகளற்ற கடும் விதிகளுடன் கடைப்பிடிக்கப்படுகிற கொள்கையோ அல்ல. அது ஒரு முடிவெடுத்தல் நிலை என்பதே எனது புரிதல். அது பின்னர் ஒருகட்டத்தில் திருமணத்தில் முடியலாம். அல்லது இறுதிவரை அப்படியே சேர்ந்து வாழலாம். துரதிருஷ்ட வசமாக இடையில் ஒத்துவராமல் பிரிந்தும் செல்லலாம். இந்த 'பிடிக்காவிட்டால் பிரிந்து சென்றுவிடலாம்' என்பதை மட்டும் பிரதானப்படுத்தி, லிவிங் டுகதர் என்பதே இடையில் விட்டுவிட்டு ஒடுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. முழுமையாகக் காமம் சார்ந்தது. பெண்களைப் பயன்படுத்திவிட்டு விலகிச் செல்ல வழிசமைப்பது என்பதாக மட்டுமே நம் சமூகத்தில் நம்பப்படுகிறது. அதற்கேற்றாற்போலவே நாம் அன்றாடம் கேள்விப்படும் காதல் கதைகளும் அமைந்துவிடுகின்றன. லிவிங் டுகெதர் குறித்துச் சார்பான கருத்துக்களைக் கொண்டவர்களே அவ்வளவு நல்லவர்களாக இருக்கமுடியாது என்கிற கருத்து இன்றைய இளையோரிடமே இருக்கிறது. ஆக பெரியவர்கள் பற்றிப் பேச வேண்டியதில்லை.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;"><span style="font-size: large;">"உ</span>னக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்கா?"</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;">பொதுவாக அலுவலகத்தில் கூட வேலைசெய்யும் சிங்களவர்கள், பெரியவர்கள் அப்படித்தான் ஒருவித அக்கறையுடன் கேட்பார்கள். அது அவர்கள் வழக்கம்.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br />அது ஒரு அவுட்சோர்சிங் நிறுவனம். அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கானது. அங்கு எங்களுக்கு பயிற்சியளித்த சிங்களப் பெண்மணியும் அதே கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொள்ளவார், 'பயிற்சிக்காலம் முடிந்ததும் ஒரு நண்பியைத் தேடிக்கொள்' என்கிற மேலதிக அறிவுரையையும் வழங்குவார். </span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;">ஒருமுறை திருமணம் பற்றி ஏதோ பேச்சு வந்தது. எப்போது செய்துகொள்வதாக உத்தேசம் என்றார் பயிற்சியாளர். 'யாழ்ப்பாணத்தில் நாங்கள் முப்பது வயது கடந்துதான் திருமணம் பற்றி யோசிப்போம். அதுதான் எங்கள் வழக்கம்' என்றான் நண்பன். கூடவே யாழ்ப்பாணத்தின் சீதன விவரம் பற்றித் தான் தெரிந்துகொண்டதையும் விழிகள் விரிய ஆச்சரியமாகச் சொல்லிக் கொண்டார். என்னைப்பார்த்து '<br />உனக்கு எப்போ திருமணம்?'</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;">சற்றும் யோசிக்காமல் 'எனக்கு அதிலெல்லாம் ஆர்வமில்லை.. லிவிங்டுகெதர்தான்' என்றேன்.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;">அவ்வளவுதான்! மிகுந்த அதிர்ச்சியடைந்துபோனவர் போல ஒரு பார்வை பார்த்தார். உண்மையிலேயே என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறி, 'இது நல்லதில்லை இப்பிடியிருந்தால் எப்படி? என்மகளை உனக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பமாட்டேன் என்றார். யாரும் அதைச்சரியாகக் கவனிக்கவில்லை என்று நினைத்தேன். பின்னர் நண்பன், "ஏண்டா அப்படிச்சொன்னே? மனிசி தன்ர மகளைக் கட்டிவைக்கிற ஐடியாவில இருந்திருக்கு நீ கெடுத்துட்ட" என்று சிரித்தான்.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;"><span style="font-size: large;">'ஓ</span> காதல் கண்மணி' படத்தில் நாயகன் ஆதி, நாயகி தாரா அறிமுகமாகி ஒருவர் பாலொருவர் ஈர்க்கபடுகிறார்கள். சிலமாதங்களில் இருவரும் அமெரிக்கா, பிரான்ஸ் செல்லவேண்டும். அதுவரையில் காதல், பிரிவு, வலி போன்ற உணர்வுகளுக்கு இடம்கொடுப்பதில்லை என்கிற நிபந்தனையுடன் தம்மைப் பகிர்ந்துகொள்ளச் சம்மதமாயிருக்கிறார்கள். இருவரும் ஒன்றாகத் தங்கிக் கொள்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல 2004 இல் வெளியான மணிரத்னத்தின் ஆய்த எழுத்தில் சித்தார்த், த்ரிஷா டேட்டிங் செய்வார்களே அதேதான். என்ன ஒன்றாக ஒரே அறையில் தங்கிக் கொள்வது என்பது புதிதாக இருக்கலாம். இந்த உறவு முறையை எப்படி அழைப்பது? லிவிங் டுகெதர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;">மற்றபடி படம் லிவிங் டுகெதர் பற்றிப் பேசவில்லை. பேச வேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில் அது லிவிங் டுகெதர் அல்ல. அப்படி அழைத்துக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். அவர்களிடயான ஈர்ப்பு அல்லது காமம் ஒருநிலையில் அன்பு, அக்கறையாக மாறுகிறது. அதைத்தானே காதல் என்கிறோம். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அழகான காதல் கதையாக, இந்த உறவுமுறை திருமணத்தில் முடிவதுதான் சரியானது என்று சொல்கிறது படம்.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;">லிவிங் டுகெதரில் இணைந்துகொள்ள, திருமணம் செய்துகொள்வதை விட மிகப்பெரிய பொறுப்புணர்வு, நம்பிக்கை தேவை. அது நம்மிடையே இருக்கிறதா? என்பது அவசியமான கேள்வி. திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துவிட்ட இருவர் ஒரிருமாதம் ஒன்றாகத்தங்கி ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பின்னர் திருமணம் செய்துகொள்ளுதல் அல்லது ஒத்துவராவிட்டால் நண்பர்களாகப் பிரிதல் என்கிற நடைமுறை மேலை நாடுகளில் இருக்கிறது. அதனை நம் தமிழர்களும் இப்போது செயற்படுத்துகிறார்களாம் என சில வருடங்களுக்குமுன் என் அலுவலகத் தோழி குறிப்பிட்டிருந்தார். </span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;">'நாங்களும் வெள்ளைக்காரர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல' என்கிற கொள்கையுடைய அதிகார்வலரான லண்டனில் வாழும் அவரது உறவுக்காரப் பெண்மணி தன் மகளுக்குத் திருமணம் பேசியிருந்தார். அதுமுக்கியமல்ல, ஒருமாத கால புரிந்துகொள்ளும் 'லிவிங் டுகெதரில்' மகளை வாழ அனுமதித்திருந்ததைப் பெருமையாகக் கூறியிருக்கிறார். வீட்டிலிருந்த பழமைவாத அம்மம்மா 'அதெப்பிடி பிள்ள சரியாவரும்?' என ஆட்சேபனைக் குரல் எழுப்பியிருக்கிரார். </span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;">"நீங்கள் சும்மா இங்க இருந்துகொண்டு பட்டிக்காடுகள் மாதிரிக் கதைக்காதையுங்கோ மாமி.. அங்க இப்ப எல்லாம் அப்பிடித்தான்" என்று வாயை அடைத்துவிட்டார். தோழி இதனை ஆச்சரியமாகக் கூறிக்கொண்டிருந்தார். </span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;">இந்த இடத்தில்தான் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது. அது காதல் திருமணம் அல்ல. இருவீட்டார் பேசிச் செய்வதுதான். நம் மக்களின் நேர்மையை நம்பி.... எனினும் இதுபற்றித் தோழியிடம் கேட்பது பட்டிக்காட்டுத்தனமாய் ஆகிவிடுமோ என்பதால் மௌனமாக இருந்துவிட்டேன். <br /><br />சில வாரங்கள் கழிந்து அந்தப்பெண்மணி மிகவும் மனமுடைந்து போய்விட்டார் என்றார். அந்தத்திருமண ஒப்பந்தம் ஏதோ சீதனப் பிரச்சினையில் ரத்தாகிவிட்டது. </span><br />
<span style="font-family: "latha" , sans-serif;">"மாமி நீங்க அப்பவே சொன்னீங்க நான்தான் அறிவில்லாமல் விட்டுடேன்" என்று அடிக்கடி அரற்றிக் கொண்டிருந்தாராம். </span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;">நம் பெரியவர்கள் ஊர், சாதி பார்த்து, ஜாதகப் பொருத்தம் பார்த்து, சீதனப் பேரம்பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இப்படி ஒத்திகை பார்க்க ஆசீர்வாதம் செய்து அனுப்பிவைப்பது என்ன நடைமுறை என்பது புரியவில்லை. நிச்சயம் 'வெள்ளைக்காரன் தமிழர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய' முறை அது என்று தோன்றியது.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;"><span style="font-size: large;">உ</span>ண்மையில் லிவிங் டுகெதர் நம் சமூகத்தின் அடிப்படைச் சிந்தனைவாத முறையில் வளர்ந்தவர்களின் வாழ்க்கை முறைக்கு ஒத்து வராது என்றே நம்புகிறேன். ஆண்களைப் பொறுத்தவரை அதிகமான பொறுப்புகளை எடுத்துக்கொள்ள நேரிடும். இந்த வாழ்க்கை முறையில் ஆண், பெண் இருவரும்தம் உழைப்பில் தன்னிறைவு அடையக்கூடியவகையில் வேலைபார்ப்பவர்களாக இருப்பார்கள். பெண்கள் தம் சொந்த உழைப்பில் தனியாக வாழக்கூடியவர்களாக, ஆண்களிடம் தங்கியிருக்க வேண்டிய நிலை இருக்காது. அது அவர்களைச் சுதந்திரமாக உணரவைக்கும். <br /><br />அதே நேரத்தில் ஆண்களுக்கு அதிக பொறுப்பும், வேலைப்பழுவும் சேர்ந்துகொள்ளும். அதாவது வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்ய நேரிடும். மேலை நாட்டு ஆண்களுக்கு இதில் எந்தச் சிரமமுமில்லை. ஆனால் நம்மவர்? பெரும்பாலும் சமைலறைப் பக்கமே எட்டிப் பார்க்காமல், வீட்டு வேலைகள் செய்து பழக்கப்படாமல் தமிழ் அம்மாக்களால் வளர்க்கப்படும் ஆண்களுக்கு இதெல்லாம் ஒத்துவர வாய்ப்பில்லை.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;">இருவருக்கிடையில் ஆழமான அன்பும், நம்பிக்கையும் நேர்மையும் இருக்கும்போது காலம் முழுவதும் இணைந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரமும், சமய சடங்குகளும் அவசியமில்லை என்பது உண்மையே. மத நம்பிக்கையில்லாதவர்கள் தாலி கட்டிக் கொள்ளாமல் திருமணம் செய்து வாழ்வது இங்கே சாதாரணம். ஆனால் சட்டபூர்வமாகப் பதிந்து கொள்ளாமல் வாழ்வது பின்னர் நடைமுறைச் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பதாலேயே அவர்களும் பதிந்துகொள்கிறார்கள் என நம்புகிறேன். குழந்தைகள் பெற்றுக்கொள்வது, சொத்துச்சேர்ப்பது போன்ற விஷயங்களில் சட்ட, நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள திருமணத்தில் முடிவதாகவே இருக்கும். தவிர, சட்டபூர்வமான திருமணம் பெண்களுக்குப் பாதுகாப்பைக் கொடுப்பதாகவே உள்ளது.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "latha" , sans-serif;">நம் சமூகத்தில் ஆங்காங்கே பரவலாகக் காணப்படும் லிவிங் டுகெதர் எனச்சொல்லப்படும் வாழ்க்கை முறை குறுகிய காலத்திற்கான இடைக்காலத் தீர்வாகவே இருக்கிறது. பொறுப்புகளை எடுத்துகொள்ள விரும்பாத இரண்டுபேர் லிவிங் டுகெதரில் இணைந்துகொள்வது என்பது இளமை வேகத்திலான ஓர் அவசரகாலத் தீர்மானமாகவே இருக்க முடியும். முதுமைப் பிராயம் பற்றியே சிந்தனையே அதில் வருவதில்லை. அதுதான் அந்த வயதான லிவிங் டுகெதர் தம்பதிகளைப் பார்த்ததும் என்னை ஆச்சரியப்படுத்தியது. <br /><br />'ஓ காதல் கண்மணி' படத்திலும் அப்படியேதான். தாராவும், ஆதியும் தமது நிகழ்காலத் தேவைகளுக்காகவே இணைந்துகொள்கிறார்கள். பின்னர் கணபதி, பவானி என்கிற தம்பதிகளின் இயல்பான வாழ்வு அவர்களின் வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றுகிறது.</span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br />முதுமைப் பிராயம் குறித்த சிந்தனைதான் அவர்கள் மனதை மாற்றியிருக்க வேண்டும். திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு இருவரும் மனதளவில் தயாராகிவிடும்போது, தாரா, ஆதியிடம் கேட்பதும் அப்படித்தான் இருக்கிறது. </span><br />
<span style="font-family: "latha" , sans-serif;"><br />'வயசானபிறகு என்னை இப்பிடிப் பார்த்துக் கொள்ளுவியா?'<br /><br /><b>4tamilmedia</b><span style="font-size: x-small;"><b>வில் 2015ல் வெளியானது.</b> </span> </span></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-72429193662706667812017-01-11T20:18:00.000+05:302017-01-11T20:23:55.434+05:30காதலும், நம் சமூகமும் மற்றும் இயக்குனர் விக்கிரமன் படங்களும்!<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-qK8lcz5HpU4/WHZFV0eTs7I/AAAAAAAAAJU/MPBHuE0h7q4IGxemrnFJiSy5omYutyILQCLcB/s1600/vik%2B1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://3.bp.blogspot.com/-qK8lcz5HpU4/WHZFV0eTs7I/AAAAAAAAAJU/MPBHuE0h7q4IGxemrnFJiSy5omYutyILQCLcB/s400/vik%2B1.jpg" width="400" /></a></div>
<b><br /><br />Horror sentiment Family Drama</b> பாணியிலான திரைப்படங்கள் முன்னொரு காலத்திலே தமிழில் சரமாரியாக வெளிவந்து கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்தவரையில் தொண்ணூறு ஆறு தொடக்கம் இரண்டாயிரம் வரையிலான காலப்பகுதி அவ்வகைத் திரைப்படங்களின் பின்னைய பொற்காலம் எனலாம்.<br />
<br />
ஆரம்பகாலத்தில் தமிழ் சினிமா கேட்சி ஊடகமாக இருந்தது. பின்னர்தான் காட்சி ஊடகமாக மாறியது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பார்க்காமலேயே கேட்டுணரும் பாணியிலானவை அவை. ஊரின் சிறுவயது ஞாபகம் உங்களுக்கும் இப்போதும் இருக்கக் கூடும். "இஷைத்தமிழ் நீ ஷெய்த அரும் ஷாதனை.." பாடல் முடிந்ததும் "டிர்ர்ர்ர்ர்ர்..றி...ய்ங்.." என்கிற இசையில் திருவிளையாடல் படத்தின் காட்சி மாறிவிட்டதை நாம் கோவில் திருவிழா குழாய் ஸ்பீக்கரில் கேட்டே அறிந்துகொண்டோமல்லவா?<br />
<br />
பின்னைய காலத்தில் தமிழ்சினிமாவும் காட்சி ஊடகமானாலும் மறுபடியும் அவ்வப்போது யாராவது வந்து பழையபடி கையைப் பிடித்து இழுத்துச் செல்வதுண்டு. ஹொரர் செண்டிமெண்ட் ஃபாமிலி டிராமா அநேகமாக அந்தப் பணியைச் செய்தவை.<br />
<br />
யாழ்ப்பாணத்தின், வன்னியின் மின்சாரமில்லா காலங்கள், வவுனியாவின் 96,97 களின் இடம்பெயர் இடநெருக்கடிக் காலங்கள், யாழ்ப்பாணத்தின் 97 களுக்குப் பின்னைய 2000 வரையான மின்சாரப் பற்றாக்குறை காலகட்டங்களில் படம் பார்ப்பது என்பது ஒரு சடங்கு. அது போலவே படம் கேட்பது என்பது அதனோடு இணைந்த ஒரு சம்பிரதாயம். ஒருவீட்டில் படம் ஓட்டுவித்தால் சுற்றுச் சூழலில் ஆறேழு வீடுகளுக்கு படம் கேட்கும். அந்தப் படங்களில் படங்கள் இப்படங்கள் முக்கியமானவை. இப்போது இந்தப் படங்களின் இசை குறித்த முக்கியத்துவம் புரிந்திருக்கும்<br />
<br />
.தமிழின் ஹொரர் செண்டிமெண்ட் ஃபாமிலி டிராமா பாணியிலான திரைப்படம் உங்கள் அயல் வீடுகளில் ஒளிபரப்பிய காலத்தைச் சற்று நினைவு கூருங்கள். ஓரிரு குரல்கள் தொடர்ச்சியாக இடைவிடாமல் பேசுகின்றன. வெவ்வேறு மாடுலேஷனில், ஏற்ற இறக்கங்களோடு, மூக்கை உறிஞ்சிக் கொண்டு, அழுதுகொண்டு, அரற்றிக் கொண்டு ..மொத்தத்தில் பேசிக்கொண்டே...யிருப்பார்கள். சிறிது இடைவெளி கிடைக்கும்போது இசையமைப்பாளர் 'லாலா லாலால லாலா லாலால' இசைக்கோர்வையை ஒலிக்க விடுவார். இப்போது நாம் புரிந்துகொண்டிருப்போம், அவை இயக்குனரின் விக்கிரமனின் படங்கள் என்பதை!<br />
<br />
பின்னர் மீண்டும் பேச்சு. சில இடங்களில் பேச்சு சற்றுக் குறைவாக இசை அவ்வப்போது "டுடுடிய்ங்.." சற்று நேரம் கழித்து இன்னொரு "டுடுடிய்ங்.." - இது நகைச்சுவைக் காட்சி என்பதை நாம் நாலு வீடு தள்ளியிருந்தே புரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு வகை இசைக்கோர்வைகள் இந்தப் படங்களின் இசையின் அடிநாதம். எஸ். ஏ. ராஜ்குமார் என்பவர் இதில் சிறந்து விளங்கினார். இரண்டு இசைக் கோர்வைகள், ஐந்து பாடல்கள் மட்டுமே வைத்துக் கொண்டு பத்து வருடங்களுக்கு மேலாக, பலபடங்களுக்கு இசையமைத்த அவர் திறமை அசாத்தியமானது என இப்போதும்கூட பலரும் வெகுவாகச் சிலாகிப்பதை நாம் பார்க்கிறோம்.<br />
<br />
விக்கிரமன் சார் படங்களின் மையக்கருவை 'உழைத்தால் நிச்சயம் உயர்வுண்டாகும்', 'நல்லவனுக்கு நல்லதே நடக்கும் கெட்டவன் அழிந்துபோவான்', 'ஒருவருக்குத் தீங்கு செய்தால் அவனைக் கடவுள் தண்டிப்பார்' என்கிற சிறுவர் நீதிக் கதைகளின் பெரியதிரை வடிவமாகக் கூடக் கொள்ளலாம். பார்ப்பவர்கள் யாரின் மனநிலைக்கும் தீங்கு விளைவிக்காத இவ்வகைத் திரைப்படங்கள் வெளிவந்தபோது டீவி சீரியல்களின் ஆதிக்கம் இப்போது போலில்லை. உண்மையில் பழக்கமில்லாமல் சடுதியாகப் பார்ப்பவர்களை மிக மோசமாக பாதிக்கும் இந்த வகை டீவி சீரியல்களை எப்போதாவது பார்க்க நேரிடுகையில் விக்கிரமன் சாரை நன்றியுடன் நினைத்துக்கொள்வதுண்டு.<br />
<br />
நேர்மறைச் சிந்தனையை வளர்ப்பதில் அவர் படங்கள் பெரும்பங்காற்றியிருக்கின்றன. உதாரணமாக, புளியம்பட்டி டூ பொள்ளாச்சி தினமும் பேரூந்தில் ஏற்றிச் செல்லும் அவ்வளவு பிரயாணிகளுக்கும் மாதமுடிவில் பெரிய சில்வர்குடம் பரிசளிக்க முடியுமா? என்றால் முடியும். அந்தப் பழைய பேரூந்தை வந்தவிலைக்கு விற்றுவிட்டால் முடியும். ஆனால் பேருந்தையும் விற்காமல், சில்வர்குடமும் பரிசளித்து, பணக்காரராகவும் ஆகிவிடுவது எப்படிச் சாத்தியம்? (சூர்ய வம்சம்) இங்கேதான் இயக்குனரின் நேர்மறை அணுகுமுறையை உணர்ந்துகொள்ளலாம். அந்த நம்பிக்கைதான் விக்கிரமன் சார் படங்கள்!<br />
<br />
அதனை விட விக்கிரமன் சாரின் படங்கள் நம் சமூகத்தில் தாக்கம் செலுத்தியது நம் அழுகுணிக் குமார்களின் அணுகுமுறையில் என்றால் அது மிகையல்ல!<br />
<br />
நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் அழுகுணிக் குமார்களை நாமறிவோம். காலத்துக்குகேற்ப அவர்களின் அணுகுமுறைகள் மாறிக்கொன்டே இருந்தாலும் கொள்கையளவில் அவர்கள் எப்போதும் ஒரேமாதிரியானவர்கள்தான். 'இந்தப் பெண்களே இப்படித்தான்' என்பதே அவர்களின் ஏகோபித்த தாரக மந்திரம். 'பெண்கள் ஏமாற்றுப்பேர்வழிகள்' எனும் பொருள்பட ஃபேஸ்புக் உள்ளிடட சமூகவலைத்தளங்களையும் கண்ணீரும் கம்பலையுமாக பதிவிட்டு வரும் அவர்களின் அன்றைய காலத்து ஒரே ஆறுதலாக விக்கிரமன் சார் படங்கள்தான் விளங்கின என்றே சொல்லலாம்.<br />
<br />
அழுகுணிக் குமார்கள் காதலில் விழுந்துவிட்டதாக, அல்லது அப்படி அவர்களே நம்பத் தொடங்கும்போது, அவர்தம் கூட இருக்கும் நண்பர்களுக்கு ஏழரை ஆரம்பமாகிவிடும். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தம் நிலையைச் சொல்ல எதுவித முயற்சிகளும் எடுக்காமல் ஒருவகையினர். இவர்கள் இதயம் முரளியாகத் தங்களை பாவித்துக் கொள்பவர்கள். இன்னொருவகை காதலைச் சொல்லி செருப்படி வாங்காத குறையாக அல்லது நண்பர்களாக இருப்போம் என்கிற பதிலைப் பெற்றவர்கள். இது செருப்படியை விட வீரியமானது (அதாவது பிஞ்ச செருப்பை சாணியில் முக்கி அடித்ததுபோல) எனினும் குமார்கள் அதனைப் புரிந்துகொள்ளும் அறிவோடு இருப்பதில்லை. ஒரு கௌரவமாகவே கருதிக் கொள்வர். நண்பர்களும் அப்படியே விட்டு விடுவார்கள்.<br />
<br />
அதெப்படி சம்பந்தமேயில்லாமல் ஒருவர் காதலைச் சொன்னவுடன் நண்பனாகி விடுவார்? குமார்களின் (இனி அழுகுணிக் குமார்களைக் குமார்கள் என்றே அழைப்போம்) தொண தொண தொல்லையிலிருந்து தப்பிக்க பெண்கள் கைக்கொண்ட ராஜதந்திர ரீதியான உத்தி அது! சமயங்களில் ஒரு விசுவாசமான வேலைக்காரனாகவும், சிறந்த எடுபிடியாகவும் அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவகையில் குமார்களின் நண்பர்களுக்கும் இந்த ஏற்பாடு ஆசுவாசத்தைக் கொடுத்தது என்பதே உண்மை.<br />
<br />
இவ்வாறான குமார்களைப் புத்துணர்ச்சி கொள்ள வைத்தது விக்கிரமன் சாரின் 'பூவே உனக்காக' திரைப்படம். படம் வந்ததிலிருந்து குமார்களின் தோரணையே மாறிவிட்டது. தங்களைத் தியாகிகளாகவே நினைக்கத் தலைப்பட்டார்கள். ஆளாளுக்கு 'காதல்ங்கிறது ஒரு செடியில் பூத்த ரோஜா மாதிரி..அது ஒருமுறைதான்' என்று பேசிக் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவுக்கு அணுக்கமான இன்னொரு நண்பர் குழுவிலிருந்த குமார் ஒருவர், தனது பதினெட்டாவது காதல் முயற்சி தோற்றபோதும் ‘காதல்ங்கிறது ஒருமுறைதான்’ வசனத்தை சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தார்.<br />
<br />
இது ஒருவிதமான புரட்சியையே ஏற்படுத்தியது. குமார்கள் தாங்கள் தியாகம் செய்ததாக நம்பிக் கொண்டதில் அவர்களுக்கு ஒருவித பெருமிதத்தையும், நண்பர்களுக்கு நிம்மதியையும் ஒருங்கே கொடுத்தன என்றால் அது மிகையாகாது.<br />
<br />
இன்னும் சில குமார்களை நேரடியாக ‘எடுபிடி’ அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து வைத்திருப்பார்கள் பெண்கள். இந்தவகைக் குமார்கள் தம்மை ஒரு லட்சியக் காதலானாகவே கருதிக் கொண்டு ரகசியமாகக் காதல் செய்து வருவார்கள். காதலை தெரிவிக்க சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். தம் காதலியினதும்(?!) தமக்குமான ரசனைகள் ஒத்துப் போவதையும், போகாவிட்டாலும் வலுக் கட்டாயமாகப் போகவைத்தும் அவருக்குப் பிடித்ததெல்லாம் தனக்கும் பிடிப்பதான பிரமையிலும் - அரிதாக உண்மையாகவும், அடிக்கடி இருவர் விருப்பங்களைச் சோதித்துப் பார்த்து, திருப்திப்பட்டு காதல் வளருவதான பிரமையுடன் - மொத்தத்தில் பிரமை பிடித்து வாழ்ந்து வருவார்கள்.<br />
<br />
ஏதோ ஒரு துணிச்சல் பெற்ற, சுபயோக சுபதினத்தில் காதலைச் சொல்லி அசிங்கப்பட்டு வரும் குமார்கள் காட்டும் சோகத்தைவிட நண்பர்கள் காட்டும் அறச்சீற்றம் அளவிடமுடியாதது. அது ஏற்கனவே எங்கேயோ பட்டு உணர்ந்ததன் வெளிப்பாடாக இருக்ககூடும். இந்த வகையான சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு பாடல் வெளிவந்தது. அது 'யுத்' படத்தின் 'சர்க்கரை நிலவே' என்பதாகும். பாடல் ‘உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய்?’ என்கிற அறிவு பூர்வமான, காத்திரமான கேள்வியை முன்வைத்தது. குமார்கள் இந்தவரிகளை உறுதியாகப் பற்றிக் கொண்டார்கள். இதுவரை காலமும் ஆண்வர்க்கத்திற்கு நேர்ந்த அவலநிலையை தட்டிக் கேட்டதாக அப்போது கன்சல்டன்ட்ஸ் ஆகியிருந்த முன்னாள் குமார்களும் உவகையடைந்தார்கள். அந்த வரிகளை எழுதிய பிரகிருதி யாரெனத் தெரியவில்லை. என்னவொரு சிந்தனை பாருங்கள்! சாதாரணமாக இப்படி யோசிக்க முடியுமா? அபத்தமான இந்த வரிகளை மேற்கோள் காட்டியே குமார்கள் ஆக்ரோசமாக கேள்வி எழுப்பினார்கள். அதானே? ஏன்னா நியாம்பா இது? நியாயப்படி பிடிச்சுத்தானே ஆகணும்?<br />
<br />
ஆனாலும் சமூக ரீதியில், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் இந்தப்பாடல் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என குமார்கள் விசனமடைந்திருந்தார்கள். வழக்கம்போல ‘பெண்களே இப்படித்தான்’ என அதற்கும் நண்பர்களையே வதைத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான சூழ்நிலையில் விக்கிரமன் சாரின் படங்கள் குமார்களின் காயங்களுக்கு ஒருவித ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தன என்றால் மிகையல்ல. சமயங்களில் சில பெண்களும் சேர்ந்து குமார்களை ஆதரவளித்து உற்சாகப்படுத்தினர் என்பதுதான் இங்கே உச்சகட்ட நகைச்சுவை!<br />
<br />
விக்கிரமன் சார் படங்களின் 'சோப்ளாங்கி' ஹீரோக்களாக (உதாரணமாக உன்னை நினைத்து) தங்களை நினைத்துக் கொண்டனர். தான் காதலிக்கும் பெண் வேறொருவரைக் காதலிப்பதாகத் தெரிந்த பின்னரும் அந்தக் குடும்பத்து உதவுவது போல குமார்கள் தம் காதலிகளுக்கு உற்ற நண்பனாக இருப்பர்கள். ஒருகட்டத்தில் நல்ல மனம்கொண்ட 'சோப்ளாங்கி' ஹீரோவை விட்டு மோசமான நபரைக் காதலித்துவிட்டதை எண்ணி காதலி மனம் வருந்துவார் என்பது குமார்களின் ஆழ்ந்த நம்பிக்கை. அத்தகைய சந்தர்ப்பத்தில் தாம் பெருந்தன்மையாக, ஒரு கனவானாக நடந்துகொள்ளவேண்டும் கூறி நட்பை மெய்ப்பிக்க வேண்டும். இதற்காகவே, நம் குமார்கள் தமது காதலிகளின் காதல் எப்போது ஊற்றிக் கொள்ளும் என உள்ளூர எதிர்பார்ப்புடன் எடுபிடியாகத் தமது பணியினை மேற்கொள்வர்.<br />
<br />
ஆனால் நடைமுறை சினிமாவுக்கு சம்பந்தமில்லாதது. குமார்களின் எதிர்பார்ப்பின்படியே காதலிகளின் காதல்கள் ஊற்றிக் கொண்டாலும் அவர்கள் குமார்களைப் பொருட்படுத்துவதில்லை. விவரமாக வேறொரு காதலனோ, வெளிநாட்டு மாப்பிள்ளையோ கிடைத்து அவர்கள் பாட்டுக்குச் சென்றுகொண்டாயிருப்பார்கள். குமார்களும் அதே ஏக்கப் பார்வையுடன் அலைந்துகொண்டிருந்தார்கள். ஆனாலும் உள்ளூர குமார்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும். அதனை விக்கிரமன் சாரின் 'சூர்யவம்சம்' போன்ற படங்கள் கொடுத்திருந்தன.<br />
<br />
காதலனைக் கைவிட்டுச் செல்லும் காதலிகள் என்றோ ஒருநாள் அதற்கான தண்டனையைப் பெறுவார்கள். வருந்துவார்கள். அப்போது தாம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என அடுத்தகட்டத் தயார்படுத்தலில் இருப்பார்கள். எஞ்சினியரான அவள் புருஷனுக்கு வேலை போனால் உங்களைத் காண வருவாள். அவனுக்கு உங்கள் பஸ் கம்பனியில் டிகக்ட் கிழிக்கும் வேலை வேண்டி! உண்மையில், அவனுக்கு வேலை போனால் அவன் இன்னொரு கம்பெனியில் என்ஜினியராக வேலை தேடிக்கொள்வான். டிக்கட் கிழிக்க வரமாட்டான் என்பதுதான் யதார்த்தமாக இருந்தாலும், காதல்வயப்பட ஆரம்பத்திலிருந்து தமது மூளையை ஒருவித கொழுப்புப் பதார்த்தமாகவே பேணிக் கொள்வதால் குமார்கள் இதனை உணர்ந்துகொள்வதில்லை.<br />
<br />
சமயங்களில் பெண்கள் மிகத் தெளிவானவர்கள். உண்மையில் ஒருபெண் பட்டுணர்ந்து தான் காதலிப்பவனை விட்டு விலகும்போதே அவள் வாழ்க்கை நன்றாகச் செல்ல ஆரம்பித்துவிடுகிறது என்பதே நாம் அனுபவத்தில் கண்டது. அதனைக் குமார்கள் அன்றும் இன்றும் என்றும் புரிந்துகொண்டதேயில்லை.<br />
<br />
ஏதோ ஒருகட்டத்தில் எல்லாக் குமார்களும் ஒரு புள்ளியில் இணைந்துகொண்டுவிடுவார்கள். உண்மையில் காதலில் இருந்து ஒருகட்டத்தில் காதலிகள் சுதாகரித்து கழற்றிவிடப்படட குமார்கள், எடுபிடிகளாக நியமிக்கப்பட்டு தமக்குள்ள காதலை வளர்த்து கவிதை வரைந்து காவியக் காதலில் ஈடுபட்ட குமார்கள், காதல் விண்ணப்பப் படிவங்களை திரும்பத் திரும்ப அனுப்பிய குமார்கள் எல்லோருமே காதலியால் ஏமாற்றப்பட்ட பட்டியலில் விரும்பி இணைந்துகொள்வார்கள். இதில் இன்னொரு விசித்திர வகைக் குமார்களும் அடக்கம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே தெரியாமல் ஐம்பது மீட்டர் தூரத்தில் சைக்கிளில் துரத்திய குமார்கள்கூடாத் தாங்களும் ஏமாற்றப்பட்டதாக ஏதோ ஒரு புரியாத தர்க்கத்தின் அடிப்படையில் தாங்களும் வஞ்சிக்கப்பட்டதாக அவர்களே நம்பிக்கொண்டிருப்பார்கள். அவர்களும் இந்தப்புள்ளியில் இணைவதுதான் உச்சகட்ட அவலம் எனலாம்.<br />
<br />
இவர்களுக்காகவே ஒருபாடல் உருவாக்கி வெளியிட்டார் விக்கிரமன் சார். பட்டி தொட்டியெங்கும் குமார்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. குமார்கள் புத்துணர்ச்சியுடன், முக மலர்ச்சியுடன் பாடித் திரிந்தார்கள். அது, 'பொம்பிளைங்க காதலைத்தான் நம்பி விடாதே!'. குமார்களின் தேசிய கீதமாகவே ஆகிப்போனது. அப்போதே பெரிய சந்தேகம் ஒன்றிருந்தது. பெண்களை நம்பாமல் வேறு யார் காதலை நம்புவது? ஒரு ஆண் பெண்ணின் காதலைத்தானே நம்ப வேண்டும்? என்ன அபத்தம் இது? கொஞ்சம் ஆழமாக யோசித்தால் வில்லங்கமாக அல்லவா வருகிறது? உண்மையில் அப்படி இருந்தால் குமார்கள்தான் எவ்வளவு பாவப்பட்டவர்கள்? ஆண் ஓரினச் சேர்க்கையாளருக்காக உருவாக்கப்பட்ட பாடலை குமார்கள் தமக்கான தேசிய கீதமாக வரித்துக்கொண்டதுதான் இந்த நூற்றாண்டின் மகத்தான சோகம் எனலாம்.<br />
<br />
எது எப்படியோ இன்றைய காலகட்டத்தில் டீவி சீரியல்கள் வரவேற்பறைகளை ஆக்கிரமிக்க, வன்மமும் குரோதமும் வஞ்சகமும் அதிர்வலைகளாக உருவாகி நிறைந்துள்ளதாகப் பலரும் அஞ்சுகிறார்கள். உண்மையில் நம் சமூகத்தில் அன்பும், நம்பிக்கையும் பாசமும் பெருக்கெடுக்க, ஒன்றாகக் குழுமியிருந்து படம் பார்த்துக் களித்த காலமொன்று உண்டெனில் அது இயக்குனர் விக்கிரமன் படங்கள் வெளிவந்த காலம் எனலாம். அதற்காகவே நாம் என்றென்றும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்<br />
<div>
<br /></div>
</div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-50394967896278529302016-12-15T18:58:00.000+05:302016-12-15T18:58:01.070+05:30அசுரன் - வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம்!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-bISJKt2ROyA/WFKYricwK_I/AAAAAAAAAI8/9CavVqRmRXoR2tfYEf6f7yqB7d2lI89mgCLcB/s1600/asuran.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://3.bp.blogspot.com/-bISJKt2ROyA/WFKYricwK_I/AAAAAAAAAI8/9CavVqRmRXoR2tfYEf6f7yqB7d2lI89mgCLcB/s400/asuran.jpeg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large; font-weight: bold;"><br />"</span><b>இந்தியாவின் தலைவிதியும், அசுரர் சாம்ராஜ்யத்தின் தலைவிதியும், கோடிக்கணக்கான கறுப்பர்களின் தலைவிதியும் என்றென்றைக்குமாகத் தீர்மானிக்கப்பட்டது. என் அறிவு கூறியதை நான் கேட்டிருந்தால், என் தலைவிதி வேறுவிதமாக அமைந்திருக்கும். ஆனால், நான் எப்போதுமே உணர்ச்சிவசப்பட்ட ஒரு ஜீவனாக இருந்தேன். நான் ராவணனைப் போல வாழ்ந்திருந்தேன், ராவணனைப் போலவே இறப்பேன். கச்சிதமான மனிதனும் கடவுளுமான ராமனாக ஆவது எனது நோக்கமாக இருக்கவில்லை. என் நாட்டில் கடவுள்களுக்கு ஒருபோதும் பஞ்சம் இருக்கவில்லை. </b><b>மனிதர்களின் எண்ணிக்கைதான் குறைவாக இருந்தது</b><b><span style="font-size: large;">"</span></b><b style="font-size: x-large;"> </b><b>- </b><b>ராவணன்</b></div>
<div style="text-align: justify;">
<br />'இராமாயணம்' சின்னவயதில் கேட்டபோதும், பிறகு கொஞ்சம் வளர்ந்து வாசித்தபோதும் பெரிதாக என்னை ஈர்த்ததில்லை. 'மகாபாரதம்' மிகப்பிடித்திருந்தது. பிறகு யோசித்துப்பார்த்தால் ராமாயணம் பெரிதாகக் கவராமல் போனதற்கு காரணம், அது தனி ஒருவனைத் துதிபாடும், ஒருவனைக் கடவுளாக்கும். கதாநாயகன் என்பவன் எந்தவித எதிர்மறையான குணங்களும் எல்லாவிதத்திலும் கச்சிதமான ஒருவனாக இருப்பான். அவன் செய்யும் எல்லா செயல்களும் ஏதோ ஒருவிதத்தில் நியாயப்படுத்தப்படும். <br /><br />மாறாக, மகாபாரதத்தில் எல்லோரும் சராசரி மனிதர்கள் போன்றவர்கள். கோபம், குரோதம், நயவஞ்சகம், சூழ்ச்சி, பொறாமை கொண்டவர்கள். யாரிடத்திலும் கடவுள்தன்மை இல்லை. அதைவிட முக்கியமானது ஒன்று. சிஸ்டம்! நேரடியாகச் சொல்லாது நாங்களாக யோசித்துப் பார்த்தால், ஒரு சிஸ்டம் எப்படிச் செயல்படும். அது தனக்குத் தேவையானவர்கள் தவிர, மற்றவர்களை எப்படியெல்லாம் பந்தாடும்? சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை அதன் தாக்கங்களை விரிவாகச் சொல்லும். அப்படியே இன்றைய நிலைக்கும் பொருத்திப் பார்க்கமுடியும். அதேபோல ராமாயணத்தை யோசித்தால், ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.<br /><br />ஆனால், ஆனந்த் நீலகண்டன் எழுதிய 'அசுரன்' சிஸ்டம் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. ராவணன் பார்வையிலும், ஓர் அடிநிலை மனிதன் பத்ரனின் பார்வையிலும் பேசப்படும் கதை என்றென்றைக்குமானது. நாம் கண்ட அனுபவங்களில் பொருந்திப் போகக்கூடியது.<br /><br />கேரளத்தைச் சேர்ந்த மகாபலி என்கிற அசுரகுல மாவீரன் வாமனனால் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவரது சாம்ராஜ்யம் சிதைகிறது. சமத்துவமான வாழ்க்கைமுறையினைக் கொண்ட அசுரர் குலத்தவர்களின் வாழ்க்கையிலும், ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட தேவர்களின் வர்ணாசிரம வேறுபாடுகள் திணிக்கப்பட்டு, கலந்துவிடுகிறது. அதிகாரம், அடக்குமுறை, தீண்டாமை எல்லாமே உருவாகிவிடுகிறது. இலங்கையைச் சேர்ந்த அசுரர்குலத்தமிழன் ராவணன். மீண்டும் மகாபலியின் பொற்காலத்தைக் கொண்டுவரவேண்டும் என்கிற கனவோடு வாழும் சாதாரண ஏழை இளைஞன். அதிகாரமையங்களை எதிர்க்கும் மனநிலையோடு வாழும் ராவணனுக்கு சந்தர்ப்பம் அமைகிறது. வழமை போலவே அதிகார மையங்களை எதிர்த்துப் போராடுபவனே விரும்பியோ, விரும்பாமலோ ஒரு அதிகார மையமாக மாறுகிறான்.<br /><br />ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்கிற லட்சியத்தோடு இருந்தவன் ராவணன். அரசு அதிகாரம் அவனிடம் வரும்போது, அவனே அறியாமல், சமயங்களில் அறிந்தும் வேறு வழியில்லாமல் சிஸ்டத்தில் சிக்கிக் கொள்கிறான். அவனது அடிமனதில் அன்பாலமைந்த சாம்ராஜ்யம் பற்றிய அவன் கனவு அப்படியே இருக்கிறது. நடைமுறையோ அவனின் லட்சிய பாதையிலிருந்து வெகு தொலைவில்! அவ்வப்போது கனவும், நிஜமும் அவனை அலைக்கழிக்கின்றது. அவனால் எதையும் மாற்றவோ, அமைப்பின் பிடியிலிருந்து விடுபடவோ முடிவதில்லை. <br /><br />எப்போதும் தன்னைக் கேள்வி கேட்டுக் கொள்கிறான். இறுதியில் அவனிடம் கேள்விகளே எஞ்சியிருக்கின்றன. அமைப்பிலிருந்து விலகி, அவன் தன்னிச்சையாக எடுத்த சில முடிவுகளே அவனது வாழ்வில் வரலாற்றுத் தவறுகளாக அவனுக்கு எதிராகத் திரும்பியிருப்பதை உணர்கிறான். எல்லாத்தவறுகளையும் நேர்செய்து கொள்ளும் இனியொரு சந்தர்ப்பம் என்கிற நடக்கமுடியாத ஒன்றை யோசித்துப் பார்க்கிறான். அவன் ஒருபோதும் தான் கடவுளாக மாற நினைத்ததில்லை. ஆனாலும் அவனையறியாமல் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தானா?<br /><br />எந்த யுத்ததர்மத்தையும் கடைப்பிடிக்காத காட்டுமிராண்டித்தனமான ராமனின் படை. சூழ்ச்சியாலும், உடனிருந்தவர்களின் துரோகங்களாலும் ராவணனின் படைபலம் சிதைக்கப்படுகிறது. ஒருதொகுதி படை அவனுக்கெதிராகவே திரும்புகிறது. தனது ஒருபடைவீரன் ஆறு எதிரிப்படை வீரர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், தோல்வி நிச்சயம் எனத்தெரிந்தும், தப்பிச்செல்ல விரும்பாமல் இறுதிவரை தன்னை நம்பிய மக்களுக்காகப் போராடக் களம் புகுகிறான்.<br /><br />யுத்தம் எப்போதும் அடித்தட்டு ஏழை மக்களையே பாதிக்கிறது. அரசனுக்கு நெருக்கடி என்று வரும்போது ஏழைகள் மட்டுமே கூடவே துணையாக வருகிறார்கள். போரிட்டு மடிகிறார்கள். அரசுக்கு நெருக்கமான உயர்வர்க்கத்தினர், பெரு வியாபாரிகளும் மாயமாகி விடுகிறார்கள். மீண்டும் இன்னொருவன் ஆட்சிக்கு வரும்போது மீண்டும் புதிய அரசுக்கு நெருக்கமாகிவிடுகிறார்கள். மாறாக யுத்தத்தின் வெற்றியையும், தோல்வியையும் என்றும் சுமப்பவர்களாக ஏழைகளும் அடித்தட்டு மக்களுமே இருக்கிறார்கள். வெற்றியை அதிகாரத்தரப்பும், உயர்வர்க்கமும் பகிர்ந்துகொள்ள அதன் இன்னொரு விளைவான உயிர், அவய இழப்புகளையும், அதனால் ஏற்பட்ட ஏழ்மையையும் அவர்களே சுமக்கிறார்கள். வென்றபின் அவர்கள் அதிகாரத் தரப்புக்குத் தேவையில்லாதவர்கள்தான், இன்னோர் யுத்தம்வரை! <br /><br />வெற்றிபெற்ற யுத்தத்திற்கே அந்தநிலை எனில், தோற்றுப்போனால்? தோற்றுப்போனவர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப்படுவார்கள். யாருக்காகப் போரிட்ட்டார்களோ அவர்களாலும் கண்டுகொள்ளப்படாமல் வாழ்நாள் முழுதும் வலியோடு வாழ விதிக்கப்பட்டவர்களாகிறார்கள். பத்ரனின் பார்வையினூடு சொல்லப்படும் கதைகள் இன்னும் மனதுக்கு நெருக்கமானவை. தொடர்ந்துகொண்டிருப்பவை!<br /><br />ராவணன் முதன்முறையாக மண்டோதரியைக் காண்கிறான். மிக அறிவார்ந்தவளாக, சகல துறைகளிலும் தேர்ந்த, நேர்கொண்ட பார்வையும், கம்பீரமாக தோன்றும் மண்டோதரியை எதிர்கொள்ள ராவணன் தயங்குகிறான். தனியாக முதன்முறை சந்திக்கும்போது எப்படியாவது தப்பி ஓடிவிடவேண்டும் என ராவணன் சிந்திப்பதும், அவள்பற்றி ராவணன் யோசிக்கும்போதும் ரகளை! ஏனோ நம் சாருவின் ஞாபகம். ஒருவேளை எழுத்தாளரும் சாருவின் வாசகராக இருப்பாரோ?<br /><br />ராவணனின் வாழ்க்கையில், சூர்ப்பனகை, விபீஷணன், வருணன், ஜம்புமாலி மட்டுமல்ல. நம் தமிழ் மொழிபெயர்ப்பாளரும் சேர்ந்து விளையாடிவிட்டார் என்பது தெரிகிறது. ரௌடி, வைன், அக்கவுண்ட் பில், ஆரஞ்சு நிறம் என்கிற வார்த்தைகள் அப்போதே புழங்கியிருப்பதாகச் சொல்கிறார். அடுத்தபதிப்பில் திருத்தினால் நலம்.<br /></div>
<div style="text-align: justify;">
ஆரம்பத்தில் அப்படி என்னதான் இருக்கப்போகிறது என்கிற மனநிலை. புத்தகத்தைக் கையில் எடுத்ததும் வைக்க மனமில்லை. சிலநாட்கள் மனதை அலைக்கழிப்பதுமாக இருந்தது.. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில சமயங்களில் யோசித்துப் பார்த்தால், வரலாறு என்பது திரும்பத் திரும்ப ஒரே மாதிரிதான் நிகழ்கின்றதா எனத் தோன்றுகிறது! </div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-66570127298990455192016-04-10T09:31:00.000+05:302016-04-10T09:31:38.738+05:30காமிக்ஸ்<div class="MsoNormal" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-eTVDXpwmRGM/VwnOMIh3b-I/AAAAAAAAAII/BL-kqNb3N7ICfSDaiw7_U3IlvOx5gEiYA/s1600/comics2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://1.bp.blogspot.com/-eTVDXpwmRGM/VwnOMIh3b-I/AAAAAAAAAII/BL-kqNb3N7ICfSDaiw7_U3IlvOx5gEiYA/s400/comics2.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மாலை மணி </span>4.30, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நியூயோர்க் நகர
வீதி.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
"<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஐயோ!</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அது என்ன</span>?"
- <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எல்லோரும் சிதறி
ஓடினார்கள்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">திவாகரனின் கதை இப்படித்தான் ஆரம்பிக்கும். நான்காம் வகுப்பு படிக்கும்போது</span>,
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பள்ளியில் எனக்குப்
பக்கத்திலிருப்பான். வரிகளற்ற குறிப்புப் புத்தகத்தில் பெட்டி போட்டு</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான்கைந்து பேர் ஓடிக் கொண்டிருப்பதைப் போல
அழகாகப் படங்கள் வரைந்து</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவன் எழுத
ஆரம்பித்த காமிக்ஸ் கதை அது. அவன் மனதில் இருந்த கதையைச் சரியாக வெளிப்படுத்த
முடியவில்லையோ என்னவோ</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான்கைந்து முறை
மீண்டும் மீண்டும் அதே இடத்திலிருந்து ஆரம்பித்துக் கொண்டிருந்தான்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சின்ன வயதில் நாங்கள் விரும்பிய</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ரசித்த விஷயங்கள் வளர்ந்தபின் மறந்து போய்விடுமா</span>? <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அல்லது மறந்து விட வேண்டுமா</span>? <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவை எங்களை மீண்டும் அந்த வயதிற்கே அழைத்துச்
செல்வதை உணர்ந்திருக்கிறோம்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இல்லையா</span>? <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அப்படி சிறுவயதில் ஆக்கிரமித்துக் கொண்ட ஒரு
விஷயம்தான் காமிக்ஸ்! எத்தனை வயதானாலும்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">காமிக்ஸ் வாசித்தவர்கள் உள்ளூர அதனை ரசிக்கத்தான் செய்வார்கள்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">செய்கிறார்கள்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆறு வயதில் பெரியமாமா வீட்டில் ஒரு புத்தகம் இருந்தது. </span>'<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இயந்திரமனிதன்</span>'- <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ராணி காமிக்ஸ். அதுவரை அம்புலிமாமா</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கோகுலம் தவிர</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அப்படியொரு புத்தகத்தை நான் பார்த்ததில்லை. ஒரு
படம் பார்ப்பதைப் போலவே புத்தகமா</span>? <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மிகப்புதுமையான
அனுபவமாக இருந்தது. அதன் பிறகு அங்கு செல்லும்போதெல்லாம் அந்தப்புத்தகத்தை எடுத்து
வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். வேறு புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. </span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
1992<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> இல் பள்ளிவிடுமுறை நாட்களில்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நாச்சிமார் கோவிலடி நூலகமே கதியாக இருந்தபோது
அங்கு சில ராணி காமிக்ஸ் புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. ஆனாலும் முதன்முதல்
வாசித்த </span>'<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இயந்திரமனிதன்</span>'
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">போல படங்களோ</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கதையோ கவரவில்லை. மாயாவி கதைகளில்
ஆர்வமேயில்லாததால் பெரிய ஈடுபாடில்லாமல் அவ்வப்போது புரட்டிக் கொள்வதோடு சரி.
தற்செயலாக ஓர் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தபோது முத்து காமிக்ஸ் புத்தகமொன்றைப்
பார்த்தேன். அது ஒரு </span>'<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">டெக்ஸ்வில்லர்</span>'
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கதை. உயிரோட்டமான அந்தப்
படங்கள்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">முற்றிலும்
பார்த்திராத கதை நிகழும் சூழல்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">விறுவிறுப்பு
என்னை மிகவும் கவர்ந்தது.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அந்த நேரத்தில் அறிமுகமான நண்பன் கௌரி சில முத்துகாமிக்ஸ் புத்தகங்கள்
வைத்திருந்தான். தவிர ஏனைய</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அப்போது
வாசிப்புப் பழக்கமிருந்து</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆரம்பித்த எங்கள்
நண்பர்கள் அனைவருக்குமே அதுதான் பிடித்திருந்தது. முத்துகாமிக்ஸ் நிறுவனத்தினரின்
பிற வெளியீடுகளான லயன்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">திகில்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மினி எல்லாமே எங்களை ஒரு தீவிர காமிக்ஸ்
ரசிகர்களாக்கியது. அப்போது தமிழர்கள் வழக்கப்படி ரஜினி-கமல் ரசிகர்கள் மாதிரி</span>,
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதிலும் இரண்டு வகையான
கட்சி இருந்தது. முத்துகாமிக்ஸ் - ராணிகாமிக்ஸ் என்று இரண்டு பிரிவு. நானும்
நண்பர்களான கௌரி</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சஜீவன்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ரதீபன்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சிறி</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தீனு</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஜனா எல்லோருமே முத்துகாமிக்ஸ் வாசகர்கள். அதில் எங்களுக்கு
சற்றுப் பெருமையும் இருந்தது</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எங்களது ரசனை
தரமானது என. </span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-K5d557aUDFY/VwnO-yspOCI/AAAAAAAAAIc/A-MAw761GQI_iyWzArghBe4BMe8CJLkfg/s1600/comics%2B3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://4.bp.blogspot.com/-K5d557aUDFY/VwnO-yspOCI/AAAAAAAAAIc/A-MAw761GQI_iyWzArghBe4BMe8CJLkfg/s400/comics%2B3.jpg" width="276" /></a></div>
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span>
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span>
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">வழக்கம்போல</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எங்கள்
முத்துகாமிக்ஸ் பிரிவில் மிகக் குறைந்த அளவு ஆட்கள்தான். ராணிகாமிக்ஸ் நிறையப்
பேர் வாசிப்பதால் எங்கும் கடைகளில் கிடைக்கும். லயன்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">முத்து எல்லாம் இலகுவாகக் கிடைக்காது. நிறையத்
தேட வேண்டும். எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் தெரியாமல் அலைந்து
திரிந்திருக்கிறோம். எங்களில் கௌரிதான் ஒரு வெறித்தனமாக கடை கடையாகத் தேடுவான்.
பழைய புத்தகக் கடைகளெல்லாம் விடாது தேடிக் கொண்டிருப்பான். அவனது தீராத தேடலின்
பலனாக அம்மா புத்தகசாலையைக் கண்டறிந்திருந்தான். யாழ்ப்பாணம் தட்டாதெருச்
சந்தியிலிருந்து அரசடி வீதியூடாக வரும்போது</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சீனியர் ஒழுங்கை வந்து சந்திக்கும்
இடத்தினருகில் இருந்தது.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">யாழ்ப்பாணத்தில் அப்போது மின்சாரம் கிடையாது. சினிமாப்படங்கள் பார்க்கும்
சாத்தியங்கள் மிகக்குறைவு. எப்போதாவது உறவினர் வீட்டுகளில் திருமணம் நடந்தால் அந்த
வீடியோ காசெட் பார்க்கும்போது சின்னத்தம்பி</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எஜமான் போன்ற படங்கள் மட்டுமே வெற்றிகரமாக
ஓடிக்கொண்டிருந்தன. அப்போதெல்லாம் எங்கள் ஹீரோக்களாக இரும்புக்கை மாயாவி</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">டெக்ஸ்வில்லர்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஸ்பைடர்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">லக்கிலுக்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆர்ச்சி</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மாண்ட்ரேக்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ரிப்போர்ட்டர் ஜானி</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பிரின்ஸ் போன்றவர்களே இருந்தார்கள். சினிமாவின்
தாக்கம் இல்லாததால் காமிக்ஸ் உலகமே எங்களை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. எங்கள்
கற்பனைகளும் அதைச்சுற்றியே இருந்தன. அவ்வப்போது டெக்சாஸ் மாநிலத்தின் மணற்பாங்கான
பிரதேசத்தில்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒரு மாலைநேர
வெயிலில் பக்கத்தில் குதிரையில் பயணிக்க முடிந்தது. பக்கத்தில் ஷெரீப்பும்
வந்துகொண்டிருப்பார் என்பது இங்கே முக்கியமானது. </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஹாலிவுட் படங்களுக்கு முன்னரே
எங்களுக்கு எப்.பி. ஐ பற்றி அறிமுகப்படுத்தியது முத்து காமிக்ஸ்தான். சமயத்தில்
எப்.பி. ஐ ஏஜன்டுகளாக மாறிவிடுவோம். அவ்வப்போது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து
செய்யும் அப்போதைய எங்கள் </span>'<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சாகச
முயற்சிகளின்</span>' <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">போது பெருச்சளிப்
பட்டாளமாக மாறிவிடுவோம். சற்றே </span>'<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சைசாக</span>' <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இருந்த சிறியை </span>'<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஜான்</span>' <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்று அழைப்பதுண்டு. </span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அப்போது பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் அந்தந்த வகுப்பு மாணவர்களின்
பங்களிப்பில் புத்தகங்களைச் சேர்த்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் நூலகம்
திட்டம் சில ஆசிரியர்களின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டது. உடனடியாகவே</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பக்கத்து வகுப்பில் காமிக்ஸ் கண்டால் அதை
கடத்திக் கொண்டுவரும் ரகசியத்திட்டம் நண்பர்களால்
நடைமுறைப்படுத்தப்பட்டது.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-ihCzuYEOqG0/VwnOalP2qWI/AAAAAAAAAIM/5xWbAb0OeAEZHu5_kKk5fNPGnlVNg2KEQ/s1600/comics.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://1.bp.blogspot.com/-ihCzuYEOqG0/VwnOalP2qWI/AAAAAAAAAIM/5xWbAb0OeAEZHu5_kKk5fNPGnlVNg2KEQ/s400/comics.jpg" width="286" /></a></div>
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span>
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span>
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நாங்கள் எல்லோரும் </span>1995<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> ம் ஆண்டு தீபாவளியை ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். புதிய
உடைகள்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கொண்டாட்டம்
என்பதெல்லாம் எங்களில் யாருக்குமே</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எப்போதும் ஒரு
பொருட்டாக இருந்ததில்லை. அன்றுதான் லயன்காமிக்ஸ் இன் </span>'<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">லயன் </span>TOP<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> </span>10' <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">வெளிவருகிறது என்பதால் மட்டுமே. தீபாவளி வந்து
போனது. லயன் வரவில்லை. அந்தக் காலப்பகுதியில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">யாழ்ப்பாணத்திற்கு</span>,<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">
அநேகமான பொருட்களுக்கு கடல் வழியாகவே விநியோகம். இந்தியாவில் வெளியாகும்
புத்தகங்கள் தாமதமாகவே கிடைக்கும். அதுவும் ஒழுங்காக வராது. ஒருமுறை அப்பா தன
நண்பர் ஒருவர் கொழும்பு சென்று திரும்பும்போது</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சுஜாதாவின் </span>' <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஏன்</span>? <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எதற்கு</span>? <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எப்படி</span>?' <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சொல்லி வாங்கியிருந்தார். லயன் டாப்
டென்னுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். வந்தது</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பாரிய இடம்பெயர்வு!</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சில மாதங்களின் பின்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">வவுனியாவுக்கு
வந்து சேர்ந்த அன்று. நண்பர்கள் எல்லாரும் பிரிந்து</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">யார் எங்கெல்லாம் இருக்கிறார்களோ என எதுவுமே
தெரியாத நிலை. காமிக்சையெல்லாம் மறந்து விட்டிருந்த ஒரு பொழுதில்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அண்ணாவின் புத்தக அலுமாரியில் </span>'<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">லயன் </span>TOP<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> </span>10<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">!</span>' <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தொடர்ந்து பயணித்த சலிப்போ என்னவோ முதலில் அவ்வளவு ஆர்வம் இருக்கவில்லை.
மறுநாள் முழுவதும் மகிழ்ச்சியோடு</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கூடவே
நண்பர்களின் கனத்த நினைவுகளோடும் வாசித்துக் கொண்டிருந்தேன்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதன் பிறகு நான்கு வருடங்கள் கடந்தபின்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மீண்டும் யாழ்ப்பாணத்தில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கௌரி</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சிறி</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ரதீபன் மட்டுமே இருந்தோம். தெரிந்தோ</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தெரியாமலோ காமிக்ஸ் பற்றிப் பேசுவதையே நாங்கள்
ஐந்து வருடங்களாக நிறுத்தியிருந்தோம். அதுபற்றியே நினைவுகளே இல்லாததுபோல.
எல்லோரும் ஒருநாள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">விஜயன் என்றொரு பெயர் வந்தது.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சிறி சிரித்துக்கொண்டேகேட்டான் </span>“<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எஸ்.விஜயனா</span>?”<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , sans-serif;">கௌரி சிரித்தவாறே </span>“<span lang="TA" style="font-family: "latha" , sans-serif;">நீயும் இன்னும்
மறக்கலையா</span>?”</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
“<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மறக்கிற பேராடா அது</span>?”<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">விஜயன் என்ற பெயர் கேட்டதுமே ஆசிரியர் பெயரை நினைவுக்கு கொண்டுவருமளவிற்கு
லயன் காமிக்ஸ் எங்களை ஆக்கிரமித்திருந்தது யாருக்கும் ஆச்சரியமளிக்கவில்லை. நீண்ட
இடைவேளைக்குப் பிறகு அன்று முழுவதும் எங்கள் பழைய காமிக்ஸ் அனுபவங்களைப் பற்றியே
மகிழ்ச்சியுடன் பேசித் தீர்த்தோம்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒருமுறை வவுனியாவில் சித்தப்பா வீட்டில் அண்ணனுடன் 'இரத்தப்படலம்</span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">' </span><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
குழந்தைக்குச் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த அண்ணி இருவரையும் சற்று
வித்தியாசமாகப் பார்த்ததைப் போலிருந்தது</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என் பிரமை என்றே இப்போதும் நம்புகிறேன்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-cB5R-hEzWg4/VwnOtEx28PI/AAAAAAAAAIU/frD1dAYOFsMDKUr519Dpme2GhbtbtSNaA/s1600/comics%2B1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://1.bp.blogspot.com/-cB5R-hEzWg4/VwnOtEx28PI/AAAAAAAAAIU/frD1dAYOFsMDKUr519Dpme2GhbtbtSNaA/s400/comics%2B1.jpg" width="307" /></a></div>
<br />
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இரத்தப்படலம். </span>XIII <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்ற பெயரில்
வந்த மிகப்பிரபலமான பிரெஞ்சு - பெல்ஜியம் காமிக்ஸ் தொடர்! தான் யார் என்பது
தெரியாமல்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உண்மையான பெயர்
தெரியாமல் </span>XIII <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்று பச்சை
குத்தப்பட்ட இலக்கத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இருக்கும் நாயகன். அவனைச்
சுற்றியுள்ள மர்மங்கள்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இடைவிடாது துரத்தும்
எதிரிகளிடையே</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தன்னைத்
தேடிக்கொண்டிருப்பவனின் கதை! </span>1984<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> இல் முதலாம்
அத்தியாயம் வெளியானது. பிரபல காமிக்ஸ் கதாசிரியர் </span>Jean Van Hamme, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஓவியர் </span>William Vance <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இருவரின் கடுமையான உழைப்பு கதையை
வாசிக்கும்போது புரியும். தமிழில் முதல் பத்து புத்தகங்கள் </span>24<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> ஆண்டுகளில் வந்து இறுதியில் இரண்டு ஆண்டுக்கு
முன்னர் முழுப்புத்தகமாக வெளிவந்தது. </span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அன்று சித்தப்பா வந்திருந்தார். அண்ணனைப் பார்க்க அவுஸ்திரேலியா செல்ல
வேண்டியிருந்தது. காலையில் எங்கோ கிளம்பிச் செல்லும்போது அண்ணனின் நண்பர் ஒருவரைச்
சந்திக்க வேண்டுமென்றும் அண்ணனுக்காக ஏதோ புத்தகம் தருவார் என்றும்
கூறிக்கொண்டிருந்தார். "ஏதோ எஞ்சினியரிங் புக் எண்டு நினைக்கிறேன்"
என்றார். </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">திரும்பி வரும்போது குழம்பிப் போயிருந்தார். கையில் இரத்தப்படலத்தை
வைத்துக் கொண்டு பரிதாபமாக "மாறித் தந்திருப்பாங்களோ</span>? <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான் கேக்கேல்ல. இது எதுக்கு</span>? <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குழந்தைகளுக்கு தமிழ் படிப்பிக்கவா</span>?"
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பாவமா இருந்தார்.
"இல்லை இதேதான்! அவனுக்குத்தான்! எனக்கு அப்பவே டவுட்டா இருந்திச்சு" -
என்னிடம் இருந்த புத்தகத்தையும் காட்டி</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதனுடனான எங்கள் வரலாறு சொன்னேன். ஆச்சரியம் விலகாமல் கேட்டுக்
கொண்டிருந்தார்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இரத்தப்படலம்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒவ்வொரு பாகமும்
ஒவ்வொரு காலப்பகுதியில்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">வெவ்வேறு
ஊர்களில்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சூழ்நிலைகளில்
வெளியானதால் மனதை அந்தந்த நாட்களுக்குச் சென்று சேர்த்துவிடுகிறது. முழுமையாக
ஒன்றவிடாது நினைவுகள் குறுக்கிடுகின்றன. இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசிக்க
முடியவில்லை. ஒவ்வொரு முறை பக்கங்களைப் புரட்டும்போதும் ஏதேதோ தோன்றுகிறது.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">காமிக்ஸ் பற்றி பேசும்போதெல்லாம்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நண்பர்களின் நினைவுகளுடன் கூடவே முதன்முதல் காமிக்ஸ் கதை எழுதிய திவாகரனும்!
நான்காம் வகுப்புக்குப் பின்னர் அவனைச் சந்திக்கவில்லை. எட்டு வருடங்களுக்குமுன்
கெளரி சொன்னான்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவன் வன்னியில்
இருப்பதாகவும்</span>, <span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒருமுறை யாழ்
வந்தபோது தன்னைச் சந்தித்ததாகவும். இப்போ
எங்கே என்று தெரியவில்லை. </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவனிடம் கேட்கவேண்டுமெனத் தோன்றுகிறது. அந்தக் கதையை
எழுதி முடித்தானா?</span></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
- 4tamilmedia<span style="font-size: x-small;"> வில் வெளியான பதிவு இது -</span></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-66985623049243887832015-12-31T01:23:00.000+05:302015-12-31T01:23:11.576+05:30கடந்து செல்லல்!<div style="text-align: justify;">
பனி படந்த அழகான குளிர்காலைப் பொழுது. யாழ்நகரம். பரபரப்பாக மக்கள். அலுவலகம் செல்லும் வழியில் வீதியில் நடந்துகொண்டிருந்தேன். ஒருகணம் துணுக்குற்றேன். எதிரே தூரத்தில் எழுத்தாளர் ஙேநா வந்துகொண்டிருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஙேநாவின் படைப்புகளை அவ்வளவு இலகுவில் நாம் கடந்துசெல்ல முடியாது. ஙேநாவையும் அவ்வளவு இலகுவாக நாம் புறம்தள்ளிக் கடந்துவிட முடியாது. உண்மையைச் சொன்னால், யாழ்ப்பாணத்தில் யாரையும் அவ்வளவு இலகுவில் கடந்துவிட முடியாது. வீதிப்போக்குவரத்து முறை அப்படி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரு வருடங்களுக்குமுன்னர் வந்தபோது, 'வீதியில் இடையிடையே என்ன மஞ்சள் வர்ணத்தில் கோடு? யாரும் கண்டுகொள்ளாமல் எதுக்கு டிசைன்? என ஆச்சரியமடைந்தேன். 'அது பாதசாரிகள் கடவை. ஆனால் கவனம். பயன்படுத்தினால் உயிருக்கு உத்தரவாதமில்லை' என்றார்கள். இப்போதும் கடக்கும்போது எந்திரசாரிகள் விரோதமாக முறைக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமீபத்தில் புத்தகம் வெளியிட்ட எழுத்தாளரை எதிரே காணும்போது உடனே அருகிலிருக்கும் சந்துக்குள் புகுந்து தெறித்து ஓடிவிடவேண்டும் என்கிற தமிழ்கூறும் நல்லுலகின் நம்பிக்கையை நான் பின்பற்றுவதில்லை. ஆனாலும் பேய் நம்பிக்கை இல்லாமலே நாம் பேய்க்குப் பயப்படுவதில்லையா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்முன் இரண்டு மோசமான தெரிவுகள் மட்டுமே உள்ளபோது அதில் வலுக்குறைந்ததைத் தேர்வதுதானே முறை? ஙேநாவின் சமீபத்திய படைப்பு தமிழ் எழுத்துலகில் ஒரு மைல்கல். நேராக நம் தலையிலேயே 'ணங்'கென்று போட்டது போலிருக்குமாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆபத்துக்குப் புண்ணியமில்லை. உயிராவது கூந்தலாவது என்று வீதியைக் கடந்துவிட்டேன். ஆக, ஙேநாவை கடந்துவிட்டேன் என்பதே ஆசுவாசமாக இருந்தது. மனிதர் லேசுப்பட்டவர் இல்லை. பேசப்பிடித்துக் கொண்டால் விடமாட்டார்.</div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-52929905154132868012015-12-30T08:31:00.000+05:302015-12-30T08:31:24.165+05:30விவாதம்!<div style="background-color: white; margin-bottom: 6px;">
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் தேவை கணபதி அங்கிள்களா? பவானி ஆன்டிகளா? - அருமையான விவாதத்தலைப்பு. </span></span><span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">சங்க காலத்திலேயே நின்றுகொண்டிருந்தால் எப்படி? சமகாலத்தையும் கவனிக்க வேண்டாமா?</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">நம் சமூகத்தில் கணபதி அங்கிள்கள் இல்லை என்றே படுகிறது. கணபதிபோல அங்கிள்கள் பரந்தளவில் நிறைந்திருந்தாலும் அவர்கள் கணபதி அங்கிள்களாக இல்லை. முன்னொரு காலத்தில் அங்கிள்கள் தாமுண்டு தம் நியூஸ் பேப்பர் உண்டு. கிரிகெட் உண்டு என்று வாழ்ந்தார்களாம். இப்போது உண்டு இல்லை என்று கேள்வி கேட்கிறார்களாம் - டீவி சீரியல்கள் அனுசரணையில்.</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">அப்படியே அரிதாக ஒரு கணபதி அங்கிள் சிக்கினாலும் அவருக்கு ஒரு அல்சைமர் பவானி ஆன்டி வாய்த்திருப்பது... வாய்ப்பே இல்லை. இதற்கு நேர்மாறாக நம் ஆண்டிகள் மிகக் கொடூரமான ஞாபகசக்தியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">ஆனால் கொடுமையைப் பாருங்கள். இளைஞர்களுக்கு - நம் நண்பர்களுக்கு, எனக்கு, உங்களுக்கு - எல்லோருக்குமே திடீரென்று தாக்கும் குறுகியகால அல்சைமர் ஒன்று அவ்வப்போது வந்து தொலைத்துவிடுகிறது. அதில் எந்தப் பாதகமுமில்லை. அசந்தர்ப்பத்தில் மீண்டும் நினைவு திரும்புவதுதான் பாதிப்பு - கூடவே இருக்கும் நண்பருக்கு.</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">நண்பருடன் வீதியில் நின்றுகொண்டிருக்கிரீகள். நண்பன் ஓர் பெண்ணைப் பார்த்து அல்சைமர் தாக்கி, விழித்தொடர்கிறான்.</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">இப்போது உங்களிருவர்முன் ஓர் கொடூர ஞாபகசக்தி ஆன்டி தோன்றுகிறார்.</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">"தம்பி என்னைத் தெரியுதே... ஆரெண்டு சொல்லும் பாப்பம்... சின்னனில பாத்தது வளந்துட்டீர் இப்ப நல்லா...!"</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">'அஞ்சாப்பு படிக்கேக்க பாத்திருப்பீங்க... வேற வழியில்லாம வளர்ந்துட்டேன்' </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">ஆன்டியின் விடாத சொற்பொழிவுக்கு, அவ்வப்போது பு'ண்'னகையுடன் தலையசைத்து 'அருமை' கமெண்ட்!</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">இப்போது ஆன்டி முக்கியமான கேள்வியொன்றை முன்வைக்கிறார்.</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">"என்ன இங்க ரோட்டில நிக்கிறீர்... அலுவலோ?"</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">சரியாக இந்தநேரம் பார்த்து சுயநினைவுக்கு மீண்ட நண்பன், சுற்றுச் சூழலைக் கவனிக்காமல்,</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">"டேய்!!!! செம்ம ஃபிகர் மச்சி... கவனிச்சியா?"</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.32px;">சுபம்!</span></span></div>
</div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-89278664015088848282015-12-30T00:30:00.000+05:302015-12-31T01:17:09.401+05:30தீவிரவாதம்!<div style="text-align: justify;">
புடைப்பாளி நண்பர் சொன்ன தகவல் ஆச்சரியமளித்தது. நண்பர் தீவிர புடைப்பாளி. இந்த 'தீவிர' என்பது சமயத்தில் மிகுந்த பீதியைக் கொடுத்துவிடுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தீவிர பத்திரிகை மரண அறிவித்தல் வாசகர், தீவிர டீவி சீரியல் பார்க்குநர், தீவிர குத்துப்பாட்டு பொழிப்புரை அறிஞர், தீவிர பஜனை பாடுநர் என இப்போதெல்லாம் எங்கும் தீவிரவாதம் தலைதூக்கியுள்ளது கவலைக்குரியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருவருக்குள் தீவிர தேடல், தீர்க்கமான கொள்கை, அறிவு இருக்கும்பட்சத்தில் அது முகத்தில், இயல்பில் தெரியும் என்பர். ஆனால் வலுக்கட்டாயமாக பொருத்தமில்லாத தீவிர முகமூடி அணிந்துகொண்டு, விறைப்பாக முறைப்பாக இருத்தல், வடிவேலு நகைச்சுவைக்காட்சியைக்கூடச் சிரிக்காமல், நுண்மையாக அவதானிக்கும்பொருட்டு(?) பூதக் கண்ணாடியூடு முறைத்துக்கொண்டே பார்ப்பதெல்லாம்.... பள்ளிக்கூட நாடகம் போல அதாவது பாகுபலி படத்தில் தமன்னா புரட்சிப்பெண்ணாக முறைத்துக் குபீர்ச்சிரிப்பை வரவழைத்தது போலாகிவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையில் தீவிரம் முகத்தில் தெரிய வேண்டியதில்லை. தீவிர புடைப்பாளி நண்பரின் முகம் காட்டிக் கொடுக்காது. உடல் சமரசம் செய்து கொள்வதில்லை. ஃப்ரீ சைஸ் ஷர்ட்டும், 40 சைஸ் பாண்டும் அணிந்துகொண்டு அப்படி என்னதான் சமரசம் செய்வது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நண்பர் சொன்ன அதிர்ச்சியான தகவல் - எடை குறைக்க நடைப்பயிற்சி செய்யப்போகிறாராம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'நம்மூர் நாய்களுக்கு நடைப்பயிற்சி பரிச்சயமானதா?' என்கிற காத்திரமான கேள்வியை முன்வைத்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நடைப்பயிற்சியின்போது கைகளை வேகமாக வீசிக் கொண்டு, எட்டு அல்லது பத்துக் கிலோமீட்டர் வேகத்தில் சீராக நடக்கவேண்டும். ஒரு ஊக்கத்திற்கு நாய் சீரான வேகத்தில் துரத்துவதாக நினைத்துக் கொள்ளலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கவனிக்க; நடக்கவேண்டுமே தவிர ஓடக்கூடாது. ஓடினால் உண்மையான நாய்கள் துரத்த ஆரம்பித்துவிடலாம். நாய்கள் ஓடினால்தான் துரத்துமாம் என்கிறார்கள். (நாய்கள் அப்படி உறுதிமொழி கொடுத்ததாகத் தகவல்களில்லை. எனினும் அது இப்போது இங்கே முக்கியமல்ல)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என் கவலை எல்லாம் நடைப்பயிற்சி பற்றித் தெரியாத நாய்கள், நண்பர் ஏதோ வினோதமான முறையில் ஓடுகிறார் என்று நினைத்துக்கொண்டு துரத்த ஆரம்பித்தால் நிலைமை தீவிரமாகிவிடுமல்லவா?</div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-5360622391026313452015-12-25T12:19:00.000+05:302015-12-25T12:19:27.912+05:30உரையாடல்!<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;">'நாய் வாலை நிமிர்த்த முடியாது' என்றார் தூரத்து நண்பர். </span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;">தூரத்து நண்பர்களுடன் பேசும்போது மிகுந்த குழப்பமாகி விடுகிறது. நாம் விளையாட்டாகப் பேசுவதை அவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளலாம். நாம் சீரியசாகப் பேசுவதை விளையாட்டாக எடுத்துவிடலாம். அதைவிடக் கொடுமை, அவர்கள் மிகுந்த சீரியசாகப் பேசும்போது நாம் இசகுபிசகாகக் குபீரென்று சிரித்துத் தொலைத்துவிடலாம். </span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;">இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க நான் கையாளும் உத்தி எதிரிலிருக்கும் நபர் பேசும் அதே பாணியிலேயே பதிலுரைப்பது.</span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;">நண்பரின் முகத்தைப் பார்த்தேன் சீரியசாகத் தோன்றினார்.</span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;">'எனக்கு அதில் எந்த ஆர்வம்மில்லை' என்றேன் சீரியசாக. </span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;">கொஞ்சம் குழப்பமானர். தெளிவுபடுத்தினேன்.</span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;">'என் பரட்டைத்தலையையே படிய வைக்க முடியாத நிலையில் நாய் வாலை நிமிர்த்துவது பற்றியெல்லாம் நான் யோசித்ததில்லை'.</span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;">அதுசரி நாய்வாலை நாம் ஏன் நிமிர்த்த வேண்டும்? அதுகுறித்து நாய்களுக்கு ஏதேனும் புகார்கள் இருக்கின்றனவா? ஆனாலும் நம் முன்னோர் அந்தக்காலத்தில் எதையும் தம் அனுபவத்திலேயே உணர்ந்து, தெளிந்துதான் பழமொழிகளை உருவாக்கினார்கள் எனச் சொல்லப்படுகிறது. அந்தவகையில் நாய்வாலை தனித்தனியாகவோ குழுமுயற்சியாகவோ நிமிர்த்துவதற்கு கடும் முயற்சி செய்திருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை.</span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;">'நீங்கள் சொல்வதில் ஒரு நியாயமிருக்கிறது. அதுதான் உண்மை என்று நானும் நம்புகிறேன்' என்றேன். </span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;">'நேரமாகிவிட்டது' என்றார்.</span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; text-align: justify;">
<span style="color: #141823; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;">தூரத்து நண்பர்களுடனான என்னுடைய இந்த உரையாடல் உத்தி இப்போதெல்லாம் நல்ல பலனைக் கொடுகிறது. அநேகமாக அவர்கள் இன்னொருமுறை நம்மிடம் எந்த முடிவுகளையும் தெரிவிப்பதோ சந்தேகம் கேட்பதோ இல்லை.</span></span></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-22333555700817716642015-12-24T16:53:00.000+05:302015-12-24T16:53:31.577+05:30ஓர் பயணக்கட்டுரை! <div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px; text-align: justify;">
நன்கு திட்டமிட்டு நிகழ்த்திய தொலைதூரப் பயணமொன்றின் மறுநாள் காலையில் டூத் பேஸ்ட் உள்ளிட்ட வஸ்துகளை எடுத்துவைத்துக்கொண்டு சரியாக பிரஷ்ஷை மட்டும் மறந்து தொலைத்ததை உணரும் 'ஙே' ரகமா நீங்கள்? </div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px; text-align: justify;">
அப்படியானால் நீங்களும் நானும் ஒரே பேரூந்தில் ஏறிவிடுகிறோம்!</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
பாரிய திட்டமிடல் சிக்கல்களை உருவாக்காத பயணங்களே உண்மையான பயண இன்பத்தை நல்குபவை என்பது என் கருத்து. தவிர, தொலைதூரப்பயணம் என்பது உண்மையில் பயணத்தூரம் சார்ந்ததல்ல.. மனவோட்டமும், காலமும் சேர்ந்தது என்கிற கிரேக்க அறிஞர் ஜியோக்கிரீட்டசுவி<span class="text_exposed_show" style="display: inline;">ன் (கி.மு.792 - 756) கூற்றையும் நாம் நினைவு கொள்ளவேண்டும்.</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">
<div style="margin-bottom: 6px; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: 6px; text-align: justify;">
இந்தப் பேரூந்தில் பயணிக்கும் மனிதர்களின் முகங்களைப் பார்க்கும்போது... (மனிதர்களின் முகங்கள் எப்போதும், எங்கும் மனிதர்களின் முகங்களைப் போலவேதான் இருக்கின்றன. ஆனால் ஒரு பயணக்கட்டுரையை எழுதும்போது வேற்றுக் கிரகவாசிகளைப் பார்த்ததுபோல அல்லது நாம் செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்தவர்களைப் போலவே பாவனை செய்யவேண்டும் என்பது மரபாம். ஆகவே..) டிப்பொசிட் இழந்த வேட்பாளர்களைப் போல சிலர், சொந்தமாக எதுவும் இல்லாமல் குத்துமதிப்பாக அடுத்தவர்களைக் குறை சொல்லும் அரசியல்வாதிகள் போல சிலர், எங்கட சனத்துக்குப் புத்தியே வராது என இரண்டு நாட்களில் திட்டப் போகிறவர்கள் போலச் சிலர், மற்றும் ஏராளமான என்னத்த வோட்டுப் போட்டு...</div>
<div style="margin-bottom: 6px; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
இந்தவகைப் பேரூந்துப் பயணத்தில் எந்தவிதமான சிக்கல்களுமில்லை. இரண்டு சீட்களுக்கு இடையிலுள்ள கைப்பிடியில் யார் கை வைப்பது என்பதில் சிவாஜி, கமலுக்கிணையான சிறந்த தூக்கக்கலக்க நடிகருக்கான போட்டியில்லை. சமயங்களில் பயணங்களில் 'எங்கே செல்லும் இந்தப்பாதை' என்கிற ஞான நிலையை அதாவது இந்த மனித வாழ்வின் சாரத்தைப் புரிந்துகொள்கிறார்கள். வாழ்வின் சாரத்தைப் புரிந்தவர்களுக்கு என்ன கவலை? ஏது குழப்பம்? எது தடை? எந்த நெருக்கடியிலும் தூங்கிவிடுகிறார்கள்.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
இங்கே சீட் தேவையேயில்லை. பயப்படாதீர்கள் நீங்கள் தேவையென்றாலும் கூட யாரும் தரமாட்டார்கள். உணவுக்கட்டுப்பாடு அவசியமில்லை. விரும்பிய இடத்தில் இடையில் இறங்கி டீ குடிக்கலாம். யாரும் கேட்க மாட்டார்கள். நீங்கள் வந்த பஸ் போய்விடுமா என்கிற கவலை வேண்டாம். இன்னொரு பஸ்ஸில் தொடரலாம். கொஞ்சம் வேகமாக முயற்சித்தால் நீங்கள் வந்த பஸ்ஸையே பிடித்துவிடலாம். </div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
அவ்வளவு ஏன் உங்களுக்கு அவசரமில்லையெனில் திரும்ப வீட்டுக்குப் போய் தூங்கிவிட்டு நாளைக்குக் கூடச் செல்லலாம். மொத்தத்தில் அருமையான பயண அனுபவம்.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
</div>
<div style="text-align: justify;">
வெள்ளவத்தை டு தெஹிவளை - பயணத்தூரம் 2.5 km </div>
<div style="text-align: justify;">
நடந்து செல்ல 1/3 மணிநேரம்..பேரூந்தில் 40 நிமிடங்கள் மட்டுமே!</div>
</div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-48977947042868242382015-06-29T16:48:00.000+05:302015-06-29T16:48:06.892+05:30The Wayward Cloud (2005)<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-z_Tq8AFAfEo/VZEmNMaRQaI/AAAAAAAAAHs/A2gzvR5kZRU/s1600/wayward_cloud.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="404" src="http://4.bp.blogspot.com/-z_Tq8AFAfEo/VZEmNMaRQaI/AAAAAAAAAHs/A2gzvR5kZRU/s640/wayward_cloud.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /><br />படம் பார்ப்பதற்கான மனநிலை என்பது என்னிடம் எப்போதும் வாய்த்திருப்பதில்லை. ஓரிரு நாட்களுக்கு முன்னர் தோன்றியபோது, எந்தத் தீர்மானங்களுமின்றிக் கணணியில் சேமித்து வைத்திருந்த படங்களில் ஒன்றை எழுந்தமானமாகத் தெரிவு செய்தேன். அது The Wayward Cloud ஆக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தின் ஆரம்பம் மிக நீளமான ஷொட். ஒரு கட்டத்தினுள்ளே நான்கு கொரிடோர்கள் சந்திக்கும் இடமாக இருக்கவேண்டும். இரண்டு நீண்ட கொரிடோரை பார்த்தவாறு கமெரா நிலையாக அப்படியே இருக்கிறது. சிறிது நேரத்தில் இரு புறமும் தூரத்திலிருந்து இரண்டு பெண்கள் நடந்து வருகிறார்கள். ஒருவரையொருவர் தாண்டிச் செல்கிறார்கள். மிக நீளமான இந்தக் காட்சியைப் பார்த்ததும், உடனடியாக இயக்குனர் மிஷ்கின் ஞாபகத்தில் வந்தார். தொடர்ந்து பார்க்கையில் படத்தில் காட்டப்படும் தனிமை, ஆரம்பத்திலேயே அது மனதளவில் பார்வையாளனைத் தயார்படுத்தும் உணர்வு, எனக்கு The Hole (1998) படத்தை நினைவுபடுத்தியது. ஒரு பாடல்வேறு இடம்பெற்றிருந்தது. உடனேயே தேடிப்பார்த்தேன். எதிர்பார்த்தது போலவே அது இயக்குனர் Tsai Ming-liang இன் படம்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாயகி வோட்டர் மெலன் பழத்துண்டுகளைச் சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாள். தொலைக்காட்சியில் வோட்டர் மெலன் பற்றிய பரிந்துரைகள் இடம்பெறுகின்றன. மினரல் தண்ணீர்ப் போத்தல்களை விட ஒரு வோட்டர் மெலன் ஜூஸ் விலைகுறைந்தது என்கிறார்கள். ஒரூ பெண் பழங்களின் அளவை வைத்துக்கொண்டு பெண்களின் குணாதிசயங்களுடன் ஒப்பிடுகிறாள். பழ விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரம், லாபம் குறித்துப் பேசுகிறார்கள். வோட்டர் மெலன் பழங்கள் சாப்பிடும் போட்டி ஒளிபரப்பப் படுகிறது. நீருக்குப் பதிலீடாக வோட்டர் மெலன் பழங்கள் உண்ணப் பரிந்துரைக்கப்படுகிறது. இதெல்லாம் எதற்காக? இன்னொரு செய்தி காட்டப்படுகிறது. அதில் தாய்வானின் நீர்வழங்கலுக்கான பிரதான நீர்நிலை வறண்டு போய்விட்டது. சில நாட்களுக்குத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்துகிறார்கள். நாயகியின் வீட்டுக் குளியலறை முழுவதும் ஏராளமான மினரல் தண்ணீப் போத்தல்கள் நிரம்பியிருக்கின்றன. நீர்க்குழாயில் சுத்தமாகத் தண்ணீர் வருவது நின்றுபோயிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாயகி தனது சூட்கேசை திறக்க முயற்சிக்கிறாள். முடியவில்லை. சலிப்புடன் திறப்பை வீசுகிறாள். அது யன்னலூடு வெளியே விழுந்துவிடுகிறது. கீழே வருகிறாள். வீதியைச் செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சில தொழிலாளிகள். தேடுகிறாள். 'திறப்பு ஒன்றும் இங்கே இல்லை, வேலை செய்யும்போது இங்கே நிற்பது ஆபத்து' என்று சொல்கிறார்கள் அவர்கள். மறுநாள் காலை கீழே வந்து பார்க்கிறாள். இரவு செப்பனிடப்பட்ட வீதியில் தாரில் பதிந்து போயிருக்கிறது அவளது சூட்கேஸ் திறப்பு. அதை இன்னொரு திறப்பால் எடுக்க முயற்சிக்கிறாள், முடியவில்லை. அப்படியே வீதியில் நடந்து செல்கிறாள். ஒரு பையில் வெற்றுப்போத்தல்களை வைத்திருக்கிறாள். நீர் சேகரிக்க வேண்டும். வீதியின் அருகாக ஓடும் பெரியதொரு கழிவுநீர் கால்வாயில் ஏராளம் வோட்டர் மெலன் பழங்கள் மிதந்து செல்வதைக் காண்கிறாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாயகன் வீதியோரமுள்ள பூங்காவொன்றில் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனருகே வோட்டர் மெலன் பழம் ஒன்றுடன் வரும் நாயகி, அவனருகே இருக்கும் தண்ணீர்ப் போத்தலை எடுத்துப் பழத்தைக் கழுவித் துடைக்கிறாள். போத்தலை இருந்த இடத்தில் வைத்துவிட்டுச் செல்கிறாள். சற்று நேரத்தில் மீண்டும் சென்றவழியே வருகிறாள். நாயகன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவனெதிரே இருக்கையில் அமர்ந்திருக்கிறாள். அவனைத் தேடித்தான் வந்திருக்கிறாள். அவனிடம் பேச வேண்டும் என்கிற முடிவில் தூங்கும் அவனை எழுப்பலாமா வேண்டாமா என்கிற குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அப்படியே தூங்கியும் விடுகிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தூக்கத்திலிருந்து எழும் நாயகன் அவளைப் பார்க்கிறான். அவளும் விழித்துக் கொள்கிறாள். சற்றுக் கண்களைச் சுருக்கிப் பார்த்துவிட்டு அவள் பேச ஆரம்பிக்கட்டுமென்று காத்திருக்கிறான். இருவரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள். அவனுக்கும் பார்த்த பரிச்சயம் இருக்கிறது. இதுவரை பேசிக்கொண்டதில்லை. அவள் ஆரம்பிக்கிறாள், "நீ இன்னும் கைக்கடிகாரங்கள் விற்கிறாயா?". ஆக, அவனைப்பற்றி அவளுக்கு மேலதிகமாக இன்னொரு விடயமும் தெரிந்திருக்கிறது. சிறுபுன்னகையுடன் இல்லை என்பதாய்த் தலையசைக்கிறான். வேறெதுவும் சொல்லவில்லை. அவன் ஒரு தொழில்முறை நீலப்படநடிகனாக இருக்கிறான். அவனது வேலைநேரம் இரவு. பகலில் தூக்கமும் தனிமையுமாகப் பொழுதைக் கழிப்பவன். நாயகிக்கு அவன்மீது அந்தச் சந்திப்பிலேயே காதல் வந்துவிட்டது எனச் சொல்கிறது தொடர்ந்து வரும் பாடல். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாயகன் தாரில் பதிந்து கிடக்கும் அவளது சூட்கேஸ் திறப்பைக் கிளறியெடுத்துக் கொடுக்கிறான். அவளது வீட்டில் சூட்கேசைத் திறக்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டிருக்க, நாயகி, வோட்டர் மெலன் ஜூஸ் தயாரித்து வந்து கொடுக்கிறாள். அவனுக்கு வோட்டர் மெலன் ஜூஸ் இப்போது குடிக்கும் மனநிலையிலை. முந்தையநாள் இரவின் படப்பிடிப்பில் வோட்டர் மெலன் பழமொன்று பிரதான பங்கேற்றிருந்தது. அவன் மிகக் கவனமாக அவள் கவனிக்காதவண்ணம் யன்னலைத் திறந்து வெளியே கொட்டிவிட்டு அவளிடம் புன்னகையுடன் கண்ணாடிக் குடுவையைக் கொடுக்கிறான். அவள் மீண்டும் ஜூஸ் நிரப்பிக் கொண்டுவந்து கொடுக்கிறாள். அவள் எதிரிலேயே நின்று கொண்டிருப்பதால், வேறுவழியில்லாமல் குடிக்கிறான். இருவருக்கும் சேர்த்து அவன் உணவு தயாரிக்கிறான். மகிழ்ச்சியான அந்தத்தருணத்தை இருவரும் மிகவும் ரசிக்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மின்தூக்கியில் கூடவே வந்து அவனை வழியனுப்புகிறாள். கதவு மூடிக்கொள்கிறது. தனது தளத்துக்குச் செல்லவேண்டிய எண்ணை அழுத்த மறந்து கனவு காண்பவள் போல லயித்து நிற்கிறாள். சிறிது நேரத்தில் கதவு திறக்கிறது. எதிரே நாயகன். சுய உணர்வு பெறுகிறாள். இருவரும் சிரிக்கிறார்கள். அவள் தளத்தின் எண்ணை அவனே அழுத்திவிட்டு விடைபெறுகிறான். அவள் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்குத் தயாராகவே இருக்கிறாள். தனது உடல்மொழியில் சற்று வெளிப்படுத்துகிறாள். அவன் கவனிக்கவில்லை, அல்லது தவிர்த்துவிடுகிறான். ஆயினும் அவள் மிக உற்சாகமாக ஒரு பாடலை முணுமுணுத்துகொண்டு செல்கிறாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னொருமுறை இருவரும் சந்திக்கும்போது வீட்டில் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகி விடுகிறார்கள். அவள் முழுவதும் தயாராகும்போது அவன் அவள் காலைக் கட்டிக் கொண்டு தூங்கி விடுகிறான். அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அன்றைய இரவில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நாயகி, குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, அதன்முன்னே அமர்ந்து உள்ளேயிருக்கும் முழுதான வோட்டர் மெலன் பழம் ஒன்றை உணர்ச்சிப் பெருக்குடன் முத்தமிடுகிறாள். அதே நேரத்தில் இன்னோர் தளத்தில் நீலப்பட படப்பிடிப்பு முடிந்து, நடிகை தனிமையில் குளியலறையிலிருந்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறாள். அதனை மறைந்து நின்று பார்த்தபடியே நாயகனும்! </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த இரவில் மூன்று பேருமே தமது உடல்வேட்கையைத் தனிமையில் தீர்த்துக் கொள்கிறார்கள். நாயகிக்கு ஆண் துணை தேவை, கிடைக்கவில்லை. தேவையான மற்றைய இருவருக்கும் துணை ஒருபிரச்சினையில்லை. மேலும் அவர்கள் இருவரும் நீண்ட உடலுறவில் ஈடுபட்டுவிட்டுத்தான் இருக்கிறார்கள். அது தொழில். அவர்களின் சொந்த உடல் சார்ந்த தேவை தீரவில்லை. ஒருவேளை அவனுக்கு பெண்ணுடல் அலுத்துப்போய் இருந்திருக்கலாம். பெண்ணுடன் உறவு கொள்வதென்பது தொழில் என்பதாகிவிட்ட மனநிலையில் அவன் வாழ்ந்துகொண்டிருக்கலாம். படப்பிடிப்பில் எப்போதும் நான்குபேர் அருகிலிருக்க இயந்திரத்தனமாய் இயங்கிமுடித்துவிட்டுத் தனிமையில் குளியலறையில் அரைகுறை அடையணிந்த பெண்களின் புகைப்படங்களடங்கிய சஞ்சிசிகைகளை வைத்துக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபடுவதுதான் அவனது சொந்தத் தேவைக்கான தீர்வாக இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாயகியின் யாருமற்ற தனிமை அவளை மிகவும் வாட்டுகிறது. நள்ளிரவு நேரங்களில் அவளின் உலகம் வேறானதாக இருக்கிறது. வோட்டர் மெலன் பழம் ஒன்றை தனது ஆடைக்குள் வயிற்றுப் பகுதியில் குழந்தை போல வைத்துக்கொண்டு, கர்ப்பிணிப் பெண்போல தடவிக் கொடுக்கிறாள். அப்படியே பாவனை செய்கிறாள். ஆயாசமாக இடுப்புக்கு ஒரு கையைக் கொடுத்துக்கொண்டு கொண்டு நடக்கிறாள். மாடிப்படிகளில் மிகுந்த சிரமத்துடன் மூச்சு வாங்கிக்கொண்டு, கால்களை அகட்டி வைத்து ஏறி இறங்குகிறாள். ஒருமுறை பிரசவ வலி கண்டு அப்படியே படியில் உட்கார்ந்து வழியில் முனகி குழந்தை பெறுகிறாள். அப்படியோருமுறை மாடிப்படியில் அவள் நடந்துகொண்டு வரும்போது, அங்கே நாயகன் வேலைநேரம் முடிந்து வந்து நிற்கிறான். நாயகி பார்வையில் பட்டுவிடாமல் ஒளிந்துகொள்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருநாள் நீலப்பட நடிகை போதை மயக்கத்தில் மின்தூக்கியில் சரிந்துகிடக்கிறாள். அவளைத் தன்வீட்டுக்குக்கொண்டு வருகிறாள் நாயகி. தன்னிடமுள்ள நீலப்பட டிவிடிக்களில் அவள்நடித்த படமும் இருப்பது கண்டு டிவியில் பார்க்கிறாள். பார்ப்பவள் அதிர்ச்சியடைகிறாள். அங்கே நாயகனைப் பார்த்துவிடுகிறாள். அவன் பற்றித்தெரிந்து கொண்டுவிடுகிறாள். படத்தயாரிப்பாளருடன் அவளும் சேர்ந்து அந்த நடியையைத் தூக்கிச் செல்கிறாள். அங்கே அவனையும் காண்கிறாள். அன்றைய படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கிறாள். இறுதிக்காட்சியில் அவரவருக்கான தீர்வைக் கண்டுகொண்டார்களா? என்பதுதான் சொல்லப்படுகிறது என நம்புகிறேன். இந்தக்காட்சி அருவருப்படையவும் செய்யலாம். படத்தில் நாயகன், நாயகிக்கிடையில் வரும் ஒரே வசனம் அவள் அவனிடம் கேட்கும், 'நீ இன்னும் கைக்கடிகாரங்கள் விற்கிறாயா?' என்பதுதான்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாயகியின் உலகம் முழுக்க முழுக்கத் தனிமையாலானது. அது அவள் விரும்பாத, அவளாகத் தேர்ந்தெடுக்காத அப்படியே அமைந்துவிட்ட, நிர்ப்பந்திக்கப்பட்ட தனிமையாக இருக்கலாம். அது வாழ்வில் வெறுமையையும், சில சமயங்களில் ஒருவித இனம்புரியாத பயத்தையும் கொடுத்துவிடுகிறது. அப்படியே அது ஓர் அதீத எச்சரிக்கையுணர்வையும் எப்போதும் கொடுத்துக்கொண்டிருக்கும். ஒருமுறை டிவிடி லைப்ரரியில் படங்கள் தெரிந்தெடுக்கிறாள். அங்கே அநேகமானவை நீலப்படங்கள். அங்கே வரும் ஒருமனிதனைக் கண்டு சற்றுப் பதற்றமடைந்துவிடுகிறாள். தன் வீட்டுக்கு திரும்ப லிஃப்ட்டுக்குள் நிற்கிறாள். கதவு மூடும் சமயத்தில் திடீரென ஒரு கை கதவைத் தடுக்கிறது. அதே மனிதன் இப்போது அவளுடன் லிஃப்ட்டுக்குள். அவன் அவளைப்பின்தொடர்வது போலவே படுகிறது. ஒருகணம் மிகுந்த பயம், பதற்றத்துடன் பார்க்கிறாள். தனது தளம் வந்ததும் மிக அவசரமாக வெளியேறுகிறாள். அவன் அவளைச் சட்டை செய்யவில்லை. மேலே தான் செல்ல வேண்டிய இடத்துக்குப் போகிறான். மின்தூக்கியின் கதவுகள் மறுபடி மூடிக்கொண்டதும், நாயகி திரும்ப வந்து மறைந்து நின்று கவனிக்கிறாள். அதீத எச்சரிக்கையா? அல்லது அதனுடன் கூடிய எதிர்பார்ப்பா என்பது அவளுக்கும் சரியாகப் புரியாத குழப்பத்துடன் பார்க்கிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாயகிக்கு இயல்பான ஒரு வாழ்க்கை வேண்டும். ஆண்துணை, குழந்தைகள் பற்றிய கனவுகள் அவளிடம் எப்போதுமுண்டு. அவளுக்கு இயல்பாக எழும் பாலியல் இச்சை நாயகனால் தீர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். அதுதான் அவள் தேவை, ஒருவகையில் வறட்சி. நாயகனுக்கு பெண்ணுடல் எப்போதும் கிடைக்கிறது. துரதிருஷ்டவசமாக அதனால் தேவை தீர்வதில்லை. வடிகாலாகவுமில்லை. அவனது வாழ்வும் யாருமற்ற தனிமையும் வெறுமையும் நிரம்பியதாய் இருக்கிறது. காதலில்லாத, காமமும் உறவும் கொடுக்கும் ஒருவகையான வறட்சி எப்போதும் அவனிடம் இருக்கிறது. அவன் எதிர்பார்க்கும் ஏதோ ஒன்று நாயகியிடம் கிடைக்கிறது. உடல்சார்ந்த தேவையைத் தவிர்த்து, ஒரு அர்த்தபூர்வமான மகிழ்ச்சியை அவளுடன் பழகும்போது உணர்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப்படம் பார்ப்பதற்கான மனநிலையை ஏற்படுத்திக் கொடுத்தது இயக்குனரின் The Hole படம்தான். அதுதான் இயக்குனரின் காட்சியமைப்பைப் பொறுமையையாகப் பார்ப்பதற்கு, திரைமொழியை உள்வாங்குவதற்கு தயார்படுத்தியது. The Hole படத்தில் வருவது போலவே இதிலும் தனிமை என்பதுதான் பிரதானமாக சொல்லப்பட்டிருகிறது. ஆட்கள் அதிகமில்லாத அடுக்குமாடிக் குடியிருப்பு. எப்போதும் படம் முழுவதும் கூடவே இருக்கும் ஈரம். The Hole படம் முழுவதும் மழை பெய்துகொண்டே இருக்கும். பார்க்கும்போதும், படம் முடிந்தபின்னரும் எங்களுக்கு வெளியே மழை பெய்வது போன்ற உணர்வே இருக்கும். இந்தப்படத்தில் வறட்சி! எனினும் இதிலும் ஒரு ஈரம் பரவியிருப்பதையே உணரமுடியும். நீளமான காட்சியமைப்புகள். மிகக்குறைந்த அளவிலான வசனங்கள். இயக்குனரின் படங்களில் ஆச்சரியமளிப்பது பாடல்கள். தமிழ் சினிமா போலல்லாது கனவுப் பாடல்கள் கதாபாத்திரங்களின் மனநிலையை ஏக்கங்களைச் சொல்வது போல, படத்தின் கதையை நகர்த்துவதுபோன்ற அமைந்திருக்கும். இந்தப்படத்தில் முதலாவதாக நாயகன் பாடும் பாடலில் நிலவு, தனிமை, நிறைவேறாத கனவுகள் பற்றிய வரிகளைக் கொண்ட பாடல் பற்றிய அவனது வாழ்க்கை பற்றிச் சொல்வதாகவே இருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வறட்சி அல்லது தாகம் இன்னொரு விதத்தில் தேவை என்றுகூடச் சொல்லலாம் - படம் ஒருவிதமான தேவைகளும் அதற்கான தீர்வுகள், பிரதியீடுகள் பற்றியே பேசுகிறது என நம்புகிறேன். நம் எப்போதும் தேவைகளுக்கான தீர்வுகளைக் கொடுக்கிறோமா அல்லது தீர்வுகளுக்கான பிரதியீடுகளை வழங்கிக் கொள்கிறோமா? என்றுகூட யோசிக்கலாம். பிரதியீடுகள் எப்போதுமே நம் தேவைகளுக்கான சரியான தீர்வாக இருப்பதில்லை. நீர், வோட்டர்மெலன் என்பவை குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நாயகியின் அந்த சூட்கேஸ்கூட அப்படியாக இருக்ககூடும். அவ்வப்போது நாயகன் திறக்க முயற்சிக்கிறான், இறுதிவரை திறக்கப்படவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படியெல்லாம் இருக்கலாம் என்றுதான் சொல்ல முடிகிறது. திட்டவட்டமாகச் சொல்ல முடியாமைக்குக் காரணம் இருக்கிறது. அதை இயக்குனரே ஒரு சந்தர்ப்பத்தில் இப்படிச் சொல்கிறார்,</div>
<div style="text-align: justify;">
<br /><i>"எனக்கு வசனங்களிலோ, கதை 'சொல்வதிலோ' ஆர்வமில்லை. படங்களில் தெளிவான ஒரு செய்தியைச் சொல்ல முயற்சிப்பதில்லை. ஒவ்வொரு தருணமும் உடல் மொழி, உடற்செயற்பாடுகள் அவை என்ன சொல்ல வருகின்றன என்பது பற்றியே. அவை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதவை என உணர்கிறேன். படம் என்ன சொல்ல வருகிறது என்பது முக்கியமல்ல. நீங்க என்ன உணர்கிறீர்கள் என்பதுதான் முக்கியமானது. நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்!"</i><br /><br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;">(பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதியது)</span></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-81953958372930079902015-04-30T16:09:00.000+05:302015-04-30T16:09:18.353+05:30The Star Maker (1995)<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-1YJDVEl_Nrk/VUDDu7twdHI/AAAAAAAAAG0/PRFGsDGRkX4/s1600/star%2Bmaker%2B1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-1YJDVEl_Nrk/VUDDu7twdHI/AAAAAAAAAG0/PRFGsDGRkX4/s1600/star%2Bmaker%2B1.jpg" height="420" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருக்கும் நண்பன் ஒருவன் இருக்கிறான். சினிமா, டீவி சீரியல் நடிகர்கள், கலைஞர்கள் அதிகமாக நிறைந்திருக்கும் பகுதி. அவனிடம் எப்போதும் ஏராளமான கதைகள் இருக்கும். சில ஆச்சரியகரமானவை, சில அதிர்ச்சியானவை. ஆனால் பேசுவதற்கு சந்தர்ப்பம்தான் வாய்ப்பதில்லை. ஒருமுறை கொழும்புவந்தபோது பேசிக்கொண்டிருக்கையில் சொன்னான். பக்கத்து வீட்டிலிருந்த நண்பர்கள் ஒருமுறை அவனை அழைத்திருந்தார்கள். ‘இப்போது நீயொரு தயாரிப்பாளர். வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறாய். உன் தமிழில் பேசு’. இதெல்லாம் எதற்காக என்றால், நடிகையாக ஆசைப்படும் ஒரு பெண்ணை அழைத்து வருகிறார்கள். நண்பன் பழிபாவங்களுக்கு அஞ்சுபவன் என்பதால் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டான். அதனால் என்ன, இன்னொரு தயாரிப்பாளர் அங்கே வந்திருப்பார், அவ்வளவுதான்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அதிசயம். சிறுவர், பெரியோர், ஏழை, பணக்காரன், வர்க்க, மத பேதமின்றி எல்லோரையும் சென்றடைந்த, கவர்ந்த, ரசிக்கப்படுகின்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பு - சினிமா! அதற்கிருக்கும் கவர்ச்சி, அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும், புகழ் பெறவேண்டும் என்ற ஆசையில் எல்லாவற்றையும் உதறிவிட்டு வந்தோர், வருவோர் எத்தனையாயிரம் பேர். 'ஹீரோ' ‘ஹீரோயின்'களாக தமது பெயரை டைட்டிலில் பார்க்க ஆசைப்பட்டு 'மற்றும் பலர்' இல் இடம் பிடித்தவர்களே இங்கு ஏராளம். அப்படியிருந்தும் அதற்கான கவர்ச்சி எப்போதும் குறைந்ததில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்படி வருபவர்களின் ஆசையையே மூலதனமாக்கி அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் சுரண்டுவதற்காக காத்திருக்கும் 'உப்புமா' கம்பனிகளையும், போலி ஆசாமிகளையும்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு போலி ஆசாமியைப் பற்றிய படம் தான் The star maker.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜோ மொரெல்லி அவன் பெயர். சிறிய ட்ரக் வண்டியொன்றில் அந்தக் கிராமத்துக்கு வருகிறான். வீதிகளில் வண்டியைச் செலுத்திக்கொண்டே ஒலிபெருக்கியில் பேசுகிறான். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயோதிபர் அனைவருக்கும் வேறுபாடின்றிய அழைப்பு அது. அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக்கும் அருமையான வாய்ப்பு என்கிறான். ரோமிலிருக்கும் universal studios என்கிற சினிமா கம்பனி ஊடாக வருவதாகக்கூறி, அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறான். சினிமாவில் புதுமுக நடிகர்களுக்கான தேர்வு அது! </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிராமத்தில் கூடாரமடித்துத் தங்கிக் கொள்கிறான். காமெரா உள்ளிட்ட ஒளிப்பதிவு சாதனங்களுடன் ஊர் ஊராகச் சென்று தான் சினிமாவில் நடிப்பதற்கு புது முகங்களை தேர்வு செய்வது அவன் வேலை என்றும், இன்று யாரென்றே தெரியாமலிருக்கும் நீங்கள், தேர்வு செய்யப்படும் உங்களிலொருவர் நாளை உலகம் முழுவதும் அறிந்த புகழ்பெற்ற நடிகர்களாகி விடலாம் என அறிவிக்கிறான். மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆர்வமுடையவர்கள் அதற்கான கட்டணம் 1500 lire செலுத்தி தேர்வில் கலந்து கொள்ளலாம் எனக்கூறுகிறான். தவிர, தான் சந்திக்கும் ஒவ்வொருவரையும் உற்றுப்பார்த்து, 'அருமையான முகம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது' என சபலத்தை உண்டுபண்ணிவிடுகிறான். அன்று அந்தக் கிராமம் முழுவதும் எல்லா வீடுகளிலும் இதுபற்றிய பேச்சாகவேயிருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மறுநாள் அவன் தங்கியிருக்குமிடத்தில் குழுமி நிற்கும் மக்களில் ஒவ்வொருவராக அழைத்து வசனம் பேச வைத்து, சற்றே மேக்கப் சரிசெய்து கூடாரத்தினுள் அழைத்துப் பேசவைத்து ஒளிப்பதிவு செய்கிறான். என்ன வசனம் பேசுவது என்கிற குழப்பத்தைத் தவிர்க்க ஆண்களுக்கு நீலநிறத்திலும், பெண்களுக்கு ரோஸ் நிறத்திலும் வசனம் அச்சிட்ட சிறு தாள்களைக் கொடுக்கிறான். கிராமம் முழுவதும் அந்த தாள்களைக் கையில் வைத்துக்கொண்டு வசனத்தை மனப்பாடம் செய்து, ஏற்ற இறக்கங்களுடன் பேசிக்கொண்டே அலைகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒளிப்பதிவு முடிந்ததும் பணத்தைப் பெற்றுக் கொண்டு, 'நான் எந்த நம்பிக்கையும் கொடுக்க முடியாது. எனது வேலை ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து, தயாரிப்பர்களிடம் கொடுப்பது மட்டுமே. இந்தப்பணம் படப்பிடிப்பு செலவுக்கானது. நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் ரோமில் இருந்து உங்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கான அழைப்பு வரும்' என்கிறான். முடிந்தளவு ஊரிலுள்ள எல்லாரையும் பங்கெடுக்க வைத்து, பணம் சம்பாதித்தபின் அங்கிருந்து வெளியேறி, இன்னொரு ஊர், புதிய ' புதுமுகங்கள்'.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெயாதாவுக்கு பெற்றோர், உறவினர்கள் என்று யாருமில்லை. யார் வீட்டிலாவது சிறு வேலைகள் செய்து சம்பாதித்து வாழ்கிறாள். ஊரிலுள்ள கன்னியாஸ்திரி மடத்தில் தங்கியிருக்கிறாள். அவள் கிராமத்தில் சினிமா நடிகர்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்புக் கேட்கிறது. எப்படியாவது கலந்துகொண்டு நடிகையாகிவிட்டால் அவள் துன்பமெல்லாம் நீங்கிவிடும். தேர்வுக்கு வருகிறாள். அவளிடமிருப்பாது 300 lire க்கள் மட்டுமே. ஜோ அவளைத் துரத்திவிடுகிறான். குழுமி நிற்கும் ஊரவர்கள் வழக்கம்போல அவளைக் கிண்டல் செய்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பணம் புரட்டவேண்டும் என யோசிக்கும் பெயாதா தான் வழமையாக வேலை செய்யும் ஒரு கனவான் வீட்டுக்குச் செல்கிறாள். தனது பணத்தேவையைச் சொல்கிறாள். அதற்கென ஒரு யோசனையைத் தெரிவிக்கிறார் அந்தக் கனவான். அவளது நிர்வாண உடலைப் பார்க்க அனுமதிக்கும் பட்சத்தில் அவள் கேட்கும் பணம் கிடைக்கும் என்பதுதான் அது. முதலில் மறுத்துத் திருப்பிச் செல்ல முனைகிறாள் பெயாதா. தூரத்தில் நாளைதான் கடைசிநாள் என்பதாக ஒலிபெருக்கி அறிவிப்புக் கேட்கிறது. உடனடியாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்புகிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீண்டும் ஜோவிடம் வருகிறாள் பெயாதா. கமெரா முன் அமர்ந்திருக்கும் அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான் ஜோ. அவளைப் பற்றிக் கேட்கிறான். அப்பாவித்தனமும், நேரிடையான பேச்சும், மன உறுதியுடனும் பேசுகிறாள் அவள். எங்கிருந்து பணம் கிடைத்தது என்பதையும் சர்வசாதாரணமாக விவரிக்கிறாள். அவள் வேலை செய்யுமிடங்களில் பணம் கொடுக்கும்போது, அவள் மார்பையும், கால்களையும் சமயங்களில் முழு உடலையும் பார்ப்பதற்கு அனுமதி கேட்பது சாதாரணமாக நிகழ்வது, அவர்களைக் கை தொடமட்டும் அனுமதிப்பதில்லை எனக்கூறுகிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜோ இதுவரை சந்தித்த மனிதர்களிடமிருந்து அவளைப் பார்க்கும் பார்வை சற்றே மாறுகிறது. இறுக வாரிக்கட்டிய மிக அடர்த்தியான அவள் கூந்தலை அவிழ்த்துவிடுகிறான். புருவங்களைத் திருத்துகிறான். மீண்டும் கமெராவில் பார்க்கும்போது மிக மிக அழகானவளாகத் தெரிகிறாள் அவள். 'நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்' எனத் தனக்குள் கேட்டுக் கொள்கிறான் ஜோ. அவள் பணம் கொடுக்கும்போது தேவையில்லை என்கிறான். 'நான் பொருத்தமாக இல்லையா' எனக்கேட்கிறாள் அவள். அருமையாக இருப்பதாகக் கூறுகிறான். மீண்டும் அவள் பணம் கொடுக்க முயல, கோபத்துடன் மறுக்கிறான். கூடாரத்தைவிட்டு வெளியேறும் பெயாதாவை எல்லோரும் அதிசயமாகப் பார்க்கிறார்கள். அவள் மிக அழகாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அவள் மிகவும் அழகானவள் என்று ஊராரும் ஏன், அவளுமே உணர்ந்து கொள்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த ஊரில் தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு கிளம்புகிறான் ஜோ. வழியில் டிரக்கினுள்ளே சத்தம்வர இறங்கிப்பார்க்கிறான். உள்ளே பெயாதா திருட்டுத்தனமாகத் தன்னுடன் வருவது தெரிகிறது. அவனுடனேயே தங்கி, அவனுக்குப் பணிவிடைகள் செய்வதாகவும் தன்னை அனுமதிக்குமாறு கோருகிறாள். அதற்காக எதையும் செய்கிறேன் என்கிறாள். ரோமிலிருந்து உனக்கு அழைப்பு வரும்வரையில் காத்திருக்கச் சொல்லி அவளை மீண்டும் கிராமத்துக்குக் கொண்டுவிடுகிறான் ஜோ.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வரும் வழியில் ஜோவின் டிரக் பழுதாகி நின்றுவிடுகிறது. மிடுக்காக உடையணிந்த பெண்ணொருத்தி அவனுக்கு உதவுவதாகச் சொல்லி அழைத்துச் செல்கிறாள். அது சனநடமாட்டமற்ற பாழடைந்த நகரம். அங்கே தனியாக அமர்ந்திருக்கும் ஒருவர் இந்த நகரத்தின் இளவரசர் என்றும் அந்தப்பெண் ராணி என்றும் அறிந்துகொள்கிறான் ஜோ. அவர்களுடன் இரவு உணவு விருந்தில் கலந்துகொள்கிறான். காலையில் கண்விழிக்கும்போது அங்கே யாரும் இல்லை. ஜோவின் டிரக், அவனது பணம் உட்பட எதுவுமில்லை. முதன்முறையாக ஜோவிடமே கைவரிசையைக் காட்டிவிட்டார்கள் இருவர். சத்தமாகப் புலம்பிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வருகிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
போலீஸ் மீட்டு வைத்திருக்கும் ஜோவின் காரை அவனிடம் கொடுக்கும்போது, 'அவர்களிருவரும் தேர்ந்த திருடர்கள்! உங்கள் பொருட்கள் பத்திரமாக மீட்கப்பட்டன, உங்கள் காதலியின் உதவியினால்' என்கிறது. ஜோ புரியாமல் திகைத்து நிற்கும்போது அங்கே வருகிறாள் ‘காதலி’ பெயாதா. சினிமாக்காரனுடன் சென்ற அவளை கன்னியாஸ்திரிகள் தம்மிடத்தில் தங்க அனுமதிக்காததால் ஜோவைத் தேடி வந்ததைச் சொல்கிறாள். முதலில் அவளிடத்தில் கடுமையாக நடந்துகொள்ளும் ஜோவுக்கும் இப்போது அவளிடம் காதல் வர, உறவு கொள்கிறான். இருவரும் சேர்ந்து புதிய இடத்தில் நடிகர் தேர்வுக்குத் தயார் செய்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கே திடீரென வரும் போலீஸ் அதிகாரி, ஜோ செய்த குற்றங்களைச் சத்தமாக வாசித்துக்காட்டி, அவனைக் கைது செய்து அழைத்துச் செல்கிறார். அதிர்ச்சியாகி நிற்கிறாள் பெயாதா. அவளைப்பொறுத்தவரை ஜோ நல்லவன். அவனையே முழுமையாக நம்புகிறாள். போலீஸ் எடுத்துச் செல்லும் ஜோவின் டிரக்கில் தானும் மறைந்து தொற்றிக்கொண்டு செல்கிறாள். அந்தப் போலீஸ் அதிகாரியும் ஜோவிடம் வாய்ப்புக்கேட்டு நடித்தவர்தான் என்பது அவன் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. சிறைச்சாலை செல்லும் வழியில் வேறொரு குழுவிடம் ஜோவை ஒப்படைக்கிறார். அவர்கள் சரமாரியாகத் தாக்கத்தைத் தொடங்குகிறார்கள். பெயாதா அழுதுகொண்டே ஓடிவந்து தடுக்க முயல்கிறாள். செய்வதறியாது மண்ணில் புரண்டு கதறுகிறாள். குற்றுயிராக சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்படுகிறான் ஜோ.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு வருடத்தண்டனை முடிந்து, ஜோ சிறையிலிருந்து வெளிவருகிறான். அவனது டிரக் பின்புறம் திறந்து பார்ப்பவன் யாரோ பயன்படுத்தியது தெரிந்து காவலாளிகளிடம் வினவுகிறான். ஒரு பெண் தங்கியிருந்ததைச் சொல்கிறார்கள். பெயாதாவின் கிராமத்துக்கு வருகிறான். அவள் முன்பு தங்கியிருந்த கன்னியாஸ்திரிகள் மடம் இப்போது வாகனங்கள் திருத்துமிடமாகிவிட்டது. அநேகமாக எல்லோரும் ஜோவை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பெயாதா பற்றி யாரும் அவனிடம் எதுவும் கூற மறுக்கிறார்கள். ஒரு பெண் ரகசியமாக ஜோ அருகில் வந்து, பெயாதா மனநோய்க் காப்பகத்தில் இருப்பதாகச் சொல்கிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனநோயாளர் காப்பகத்தில் பெயாதா ஓட்ட வெட்டப்பட்ட தலைமுடியுடன் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கிறாள். ஜோவை அவளால் அடையாளம் காண முடியவில்லை. ஜோ இறந்துவிட்டதாகச் சொல்கிறாள்.</div>
<div style="text-align: justify;">
'அது உண்மையில்லை. நான்தான் ஜோ உன்னை ரோமிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்'. </div>
<div style="text-align: justify;">
'நான் ரோமில் இருந்திருக்கிறேன். ஸ்விம்மிங் பூல், அமெரிக்கன் கார் என்று நான் பணக்காரியாக இருந்த பொழுது, ஜோவுடன் உலகம் முழுதும் சுற்றியிருக்கிறேன். அவர்கள் எங்களிருவரையும் பிரித்தபோது ஜோ இறந்துவிட்டான்' என்கிறாள் பெயாதா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'ஆம் ஜோ இறந்துவிட்டான், நான் அவனது நண்பன். அவன் இறக்கும்போது உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்ளச்சொன்னான். உனக்கு ஒன்று தெரியுமா? ஜோ இந்த உலகத்திலேயே உண்மையாகக் காதலித்த ஒரே பெண் நீ மட்டும்தான். நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது அதை அவன் உணரவில்லை. அவன் தாமதாகவே புரிந்துகொண்டான், துரதிருஷ்டசாலி'</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘நான் வேலை தேடிச்செல்கிறேன். கொஞ்சம் பணம் சம்பாதித்தபின் உன்னை வந்து அழைத்துச் செல்கிறேன். இருவரும் ஒன்றாகவே இனி இருப்போம். உன்னைக் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்’ எனக்கூறி அவளிடம் விடைபெறுகிறான் ஜோ. கனத்த மனதுடன் புதிய மனிதனாகத் திரும்பும் ஜோ தனது ஒலிப்பதிவுக் கருவியை இயங்கச் செய்கிறான். அவன் சந்தித்த மனிதர்கள் படப்பிடிப்பின்போது பேசிய வார்த்தைகள் ஒலிக்க, அந்தக் காட்சிகள் அவன் மனத்திரையில் விரிகின்றன. இறுதியாக பெயாதாவின் காட்சிகளுடன் படம் நிறைவடைகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆரம்பத்தில் பெயாதாவிடம் பேசும்போதே ஜோவுக்கு அவளிடம் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது. அவள் அவனிடம் காதல் கொள்ளும்போதும் ஜோ தன்னிலையுணர்ந்து விலகிச் செல்கிறான். அவளை மட்டும் அவன் ஏமாற்ற விரும்பவில்லை. பணம் வாங்கவில்லை. இது அவன் இயல்புக்கு முற்றிலும் மாறானது. வேறு யாராக இருந்தாலும் தனது 'தொழில்தர்ம'த்தைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் ஜோ அவளிடம் மட்டுமே மனச்சாட்சிப்படி நடந்துகொள்கிறான். வழக்கமாக 'தொழில்' நிமித்தமாக தங்குமிடங்களில் வலிய வரும் பெண்களை உபயோகித்துக் கொள்ளும் அவன், பெயாதா தயாராக இருந்தும் கண்ணியமாக இருக்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இறுதி சில காட்சிகளைத் தவிர படம் முழுவதும் மிகவும் நகைச்சுவை இழையோடியபடியே நகர்கிறது. ஏதோ பரீட்சைக்குத் தயார் செய்வது போல் கிராமத்தின் சின்னஞ்சிறிசுகள் முதல் இன்றோ, நாளையோ எனக்காத்திருக்கும் பெரியவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் என எல்லோருமே வசனங்களை மிகுந்த சிரத்தையுடன் மனனம் செய்து, குழுவாகத் தமது நண்பர்களுடன் அமர்ந்து ஒத்திகை பார்க்கிறார்கள். கொலைகாரக் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொள்ளும்போது அவர்களுக்கும் சினிமா ஆசைகாட்டி, அவர்களிடமே 'கைவரிசை' காட்டுதல். ஓர் இறுதிச் சடங்கைப் படமெடுக்கும் காட்சி எனச் சுவாரசியங்கள் ஏராளம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறுவன் ஒருவனை அவன் தாத்தா ஜோவிடம் அழைத்து வருவார். தன் காதலியை நினைத்து சுய இன்பத்திலீடுபட்டவாறே பேசுவதுபோல நடிக்கவேண்டும். சிறுவன் தயங்க, தாத்தா கையை அசைத்துக்காட்டி, அவனுக்கு உற்சாகமூட்டுகிறார். அவன் நடிக்கும்பொது அவன் திறமைகண்டு, உணர்ச்சி வசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுகிறார் தாத்தா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சினிமா ஒரு போதைபோல, சிறிது சபலத்தை ஏற்படுத்தியதுமே எல்லோரையும் முழுவதும் ஆட்கொண்டுவிடுகிறது. மகளை நடிகையாக்க விரும்பும் தாய் தன்னிடம் பணம் இல்லையென்பதால் தன்னை ஜோவிடம் கொடுக்கிறாள். சிறுவயதில் தான் நடிக்க ஆசைப்பட்டதையும், தன்னை என்ன வேண்டுமானலும் செய்துகொள் மகளை நடிகையக்கிவிடு என்று புணரும்போது இடைவிடாமல் பேசிக்கொண்டேயிருக்கிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கமெரா முன்னால் பேசுவது பலரையும் வழக்கம்போலப் பதற்றமாக்குகிறது. அதேபோலப் பலரை முதன்முறையாக மனம்விட்டுப் பேசவைக்கிறது. மனதில் பொத்திவைத்த யாரிடமும் பகிர்ந்திராத ரகசியங்களை, மனக்குமுறல்களைக் கொட்ட வைக்கிறது. ஊரிலிருந்து ஒதுங்கி காட்டில் திரியும் ஆட்டிடையன் வானம், நட்சத்திரங்கள் பற்றிக் கவிதைத்தனமாகப் பேசுவது, ஊராரினால் ஒதுக்கப்பட்ட பெண் தனது கதையைச் சொல்வது, நீண்ட காலமாக வாய் பேசாதிருக்கும் இராணுவத்திலிருந்த பெரியவர் பேச ஆரம்பிப்பது என்பன நெகிழ்வான காட்சிகள் ஏராளம். எனக்கு மிகப்பிடித்த படமான 'சினிமா பரடைசோ', மற்றும் 'மெலினா' படங்களின் இயக்குனரான Giuseppe Tornatore இயக்கத்தில் 1995 இல் வெளியான இந்த இத்தாலியப்படம் இது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;">(பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதியது)</span></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-73835994371124156302015-03-25T17:31:00.000+05:302015-03-27T20:03:23.940+05:30திரைக்கதை எழுதலாம் வாங்க - ராஜேஷ்<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-o2re4z2eJfQ/VRKo-3Ejp9I/AAAAAAAAAGg/zxJgY30epqo/s1600/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%2B%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%2B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%2B1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-o2re4z2eJfQ/VRKo-3Ejp9I/AAAAAAAAAGg/zxJgY30epqo/s1600/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%2B%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%2B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%2B1.jpg" height="500" width="640" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ராஜேஷின் 'திரைக்கதை எழுதலாம் வாங்க' புத்தகம் கடந்தமாதத்தின் காலைப்பொழுதொன்றில் கைகளில் கிடைத்ததில், அது இந்த ஆண்டின் மிக மகிழ்ச்சியான நாளானது. இதில் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் எதுவுமில்லை. சமீப காலத்தில் இல்லை என் வாழ்க்கையிலேயே ஒரு புத்தகத்திற்காக நீண்டநாட்களாய் இவ்வளவு எதிர்பார்ப்புடன் காத்திருந்தது கிடையாது. ஆச்சரியமாக இருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்காக நான் திரைக்கதை எழுதப்போகிறேன் என்று யாரும் பயந்துவிடாதீர்கள். சினிமா பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான் சிறுவயதில் அவ்வளவாக சினிமா பார்த்ததோ, தற்போதும் நிறைய சினிமா பார்ப்பதோ கிடையாது. கருந்தேள் தனது வலைத்தளத்தில் எழுதத் தொடங்கியபோதே எதிர்பார்த்திருந்தேன். உண்மையில் பத்துவருடமாகக் காத்திருந்தேன் என்றுகூடச் சொல்லலாம். டெக்னிக்கலாகத் தமிழில் சினிமா பற்றி எழுதியதைப் படிக்கவேண்டும் என்கிற ஆவலில் சுஜாதாவின் 'திரைக்கதை எழுதுவது எப்படி' புத்தகத்தை 2005 இல் யாழ்ப்பாணத்தில் தேடி, பின்னர் கொழும்புவந்து தேடியும் கிடைக்கவில்லை. ராஜேஷ் எழுதிய இந்தப்புத்தகம் சுஜாதா எழுதியதைவிடவும் விரிவாக, தெளிவாக இருக்கும் என நம்பினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏனெனில் சுஜாதா சினிமா டெக்னிக் பற்றிப் பேசும்போதெல்லாம் ஷங்கர், மணிரத்னம், ராஜீவ்மேனன் படங்களில் இருந்துதான் உதாரணம் காட்டுவார். அவற்றில் ஷங்கர் படம் தவிர, மற்றதெல்லாம் படுமொக்கையான உதாரணமாகத்தான் இருக்கும். தமிழின் ஏனைய சிறந்த திரைக்கதையமைப்புள்ள படங்கள் பற்றியெல்லாம் பேசியதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் தமிழ்சினிமா உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கும் இந்தப்புத்தகம் நிச்சயம் புதிதாகவே இருக்கும். சுஜாதா இருந்திருந்தால், இந்தப்புத்தகம் குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப்புத்தகத்தைப் பெற்றுக்கொடுத்த தோழிகளுக்கு நன்றி. தேர்தல், நாட்டுநிலைமை தபால்துறையின் தாமதங்களால் ஒருமாதம் காத்திருந்து, பார்சலைப் பிரித்துப் புத்தகத்தைப் பார்த்தபோது முதலில் ஏமாற்றமாக இருந்தது, 'என்னடா புத்தகம் சின்னதா இருக்கே?' என்று தோன்றியது. ஆனால் வாசிக்கத் தொடங்கியதும் அப்படித் தோன்றவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சினிமாவிற்கான கதை என்பது சினிமாத்துறை சார்ந்தவர்களிடமிருந்து மட்டும் வரவேண்டியதில்லை. அது சாதாரணமாக என்னிடமிருந்தோ, உங்களிடமிருந்தோ, யாரிடமிருந்தும் வரலாம். நாம் எதிர்கொள்ளும் அனுபவங்கள், சாதாரணமாக நாம் பார்க்கும் சம்பவங்களிருந்தோ ஒரு சிறந்த கதை உருவாகலாம். நம்மைச்சுற்றி ஏராளம் கதைகள் இருக்கின்றன. அவற்றை நல்ல திரைக்கதையாக மாற்ற முடிந்தால் நாங்களும் திரைக்கதை ஆசிரியர்களே. அப்படித்தான் 'சூது கவ்வும்' பட இயக்குனர் நலன் குமாராசாமி எழுதியிருக்கும் சிறப்புரையும் சொல்கிறது. 'ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேளுங்கள்' என்ற தலைப்பில் திரைக்கதை எழுதுவதிலுள்ள சிக்கல்களையும், ஒரு திரைக்கதையாசிரியருக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வு பற்றியும் சொல்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிட் ஃபீல்டிடம் முறையாக அனுமதி பெற்று, அவரது <b>‘Screenplay: The Foundations of Screenwriting’</b> என்ற புத்தகத்தை மையக்கருத்துக்களை எடுத்துக்கொண்டு, புத்தகத்திலுள்ள 55 அத்தியாயங்களும் ஸிட் ஃபீல்டின் திரைக்கதை கோட்பாட்டை விளக்கியும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட தமிழ் சினிமா காட்சியமைப்பை விவரிக்கிறார். தவிர்க்கமுடியாத, தெளிவான காட்சியமைப்புகளுக்காக மட்டும் ஹொலிவூட். 312 பக்கங்களில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களுடன் (வண்ணப் படங்களெனில் இன்னும் நன்றாக இருந்திருக்கும்) அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாசிக்கக்கூடிய வகையில் தெளிவாக அச்சிடப்பட்டிருந்தாலும் சில பக்கங்கள் அநியாயத்துக்கு நெருக்கமாக இருப்பதாக எண்ணவைக்கிறது. பொருளடக்கம் இல்லாதது சிறுகுறையே, அடுத்தபதிப்பில் சரிசெய்யப்படலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புத்தகம் சிட் ஃபீல்டின் 3 Act Structure முறையிலமைந்த திரைக்கதையமைப்பை அடிப்படையாகக் கொண்டது. முதல் அத்தியாயத்தில் Setup, Confrontation, Resolution பற்றியும் திரைக்கதையை ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு நகர்த்தும் இரண்டு Plot point கள் பற்றியும் சுருக்கமாக கூறிவிட்டு, 'ஆரண்ய காண்டம்' படத்தின் காட்சிகளூடாக விவரிக்கப்படுகிறது. ஷொட், ஸீன், சீக்வென்ஸ், சப்ஜெக்ட், சப்ஜெக்டின் இரண்டு அம்சங்களான கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் போன்ற அடிப்படை விஷயங்களைப்பேசி - பின்னர் கதாபாத்திரந்தின் இயல்புகளைக் கட்டமைத்தல், பிரதான கதாபாத்திரத்தின் குறிக்கோளை இனங்காணுதல், குறிக்கோளை அடைவதற்கான இடையூறுகளை உருவாக்குதல் பற்றி விரிவாக உதாரணங்களுடன் விவரித்துவிட்டு, ஆசிரியர் நம்மிடம் கேட்டுக்கொள்வது - திரைக்கதை ஆர்வமுள்ளவர்கள் படம் பார்க்கும்போது இந்த அடிப்படை விதிகள் எப்படிப் பயன்படுத்தப்படிருக்கின்றன, அவற்றை இனங்கண்டு கொள்ளுங்கள், கவனியுங்கள் என்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திரைப்படமொன்றைப் பார்க்கும்போதே, அதன் திரைக்கதை கட்டமைக்கப்பட்டிருக்கும் முறையையும் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் நண்பர்கள் எனக்கும் இருக்கிறார்கள். என்னால் அப்படி முடிந்ததில்லை. படம் பார்க்க ஆரம்பிக்கும்போது ‘தெளிவாக’ இருந்தாலும் ஓரிரு காட்சிகளில் அப்படியே ஒன்றிப்போய் விடுவேன். உண்மையில் ஒரு நல்ல படம் அப்படித்தான் இருக்கவேண்டும். பார்வையாளனைத் தன்னுள் ஈர்த்துக் கொள்வதாக! திரைக்கதை அமைப்பு பற்றிப்படித்து தெரிந்து கொள்வதைவிட, நிறையப்படங்கள் பார்த்து அதன்மூலம் கட்டமைப்பைப் புரிந்துகொண்டு அதன்பின்னர் கோட்பாடுகள் பற்றி ஆராய்வது நல்லது. ஆசிரியர் ராஜேஷ் அப்படித்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அண்ணன் செங்கோவியும் அப்படியே! அவர் எழுதிக்கொண்டிருக்கும் <a href="http://sengovi.blogspot.com/2015/03/ii-39.html" target="_blank"><span style="color: blue;">திரைக்கதை சூத்திரங்கள் தொடரில்</span></a> சொல்கிறார். <i>"ஒரு படத்தை முதல் இரண்டுமுறை பார்க்கும்போது, கதையில் இன்வால்வ் ஆகிவிடுவோம். அதன்பிறகு பார்க்கும்போதே, அதில் உள்ள விஷயங்கள் பிடிபடத்துவங்கும்"</i> இந்தத் தொடரும் புத்தகமாக வெளிவந்தால் மகிழ்ச்சி. தமிழில் சினிமா தொடர்பான புத்தகங்களின் தேவை இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் அதற்கு முயற்சிக்காத, அல்லது வாய்ப்புகள் அமையாத என்போன்றவர்களுக்கு ஒரு படத்தை அதன் கட்டமைப்பு தொடர்பில் எப்படி அணுக வேண்டும் எனச்சொல்கிறது இந்தப்புத்தகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாவற்றையும் விவரித்துவிட்டு இறுதியில், திரைக்கதை எழுதும்போது உண்டாகும் சோர்வு மன உளைச்சல் பற்றிச் சொல்கிறார். ஒருகட்டத்தில் சிக்கி, முற்றிலும் தடைபட்டுப்போய் நமக்கு இதெல்லாம் சரிப்படாது என்கிற நிலை வரும் - அது இயல்பாக எல்லோருக்கும் நேர்வதுதான், அதையெல்லாம் கடந்து வாருங்கள் என்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்வரையில், இது வழமையாக நாம் சொல்லிக் கொள்வதுபோல ஒரே மூச்சில் வாசிப்பதுபோன்ற புத்தகமல்ல. சில பக்கங்கள் கடந்து போவது அவ்வளவு கடினமானது. ஆசிரியர் உதாரணங்காட்டும்தமிழ்சினிமாக் காட்சிகளை, கட்டமைப்புகளை நாமும் யோசித்துப் பார்க்கபோய் அப்படியே ஒரு சுற்று போய்வர.... சவாலாகவே இருந்தது. திரைக்கதை எழுத, கட்டமைப்பைப் புரிந்துகொள்ள ஆர்வமுள்ளோருக்கு நல்லதோர் தோழனாக இருக்கும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Go Write your Screenplay எனக்கூறி முடிக்கும் ராஜேஷ், திரைக்கதை எழுத விரும்பும் ஒருவருக்கேனும் இந்தப்புத்தகம் உபயோகப்பட்டால எழுதப்பட்ட லட்சியம் ஈடேறிவிட்டது என்கிறார். இப்படியொரு புத்தகத்தை எழுதியதற்காக மகிழ்ச்சியுடன் நாமும் அவர் பாணியில் சொல்லிக் கொள்ளலாம்..... <span style="font-size: large;">Cheers!</span></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-17388337414314658062015-03-14T10:28:00.000+05:302015-03-14T18:33:26.943+05:30மச்சி இருக்கிறியாடா?<div style="text-align: justify;">
<span style="font-size: large;">"ம</span>ச்சி இருக்கிறியாடா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீண்ட நாட்களின் பின்னரான சஞ்சய்க்கும் எனக்குமான செல்பேசி உரையாடல் இப்படித்தான் ஆரம்பிக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதென்னவோ தெரியவில்லை. உரையாடலின் ஆரம்பத்தில் இருவருக்குமே நாம் உயிருடன் இருக்கிறோமா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. நண்பர்களுக்கிடையே தொடர்புகளைப் பேணிக் கொள்வதில் நான் மிகுந்த சோம்பேறி. நம் நண்பர்களும் அப்படியே இருப்பதால் பிரச்சினையேயில்லை. மிக நெருக்கமான நண்பர்களாயிருந்தாலும் அடிக்கடி என்றில்லை, அவ்வப்போதுகூடப் பேசுவதில்லை. நேரில் சந்திக்கும்போது பத்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தாலும் விட்ட இடத்திலிருந்து அதே பழைய தொனியில் பேசிக் கொள்வோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘மச்சி இருக்கிறியாடா?’ என்பது பின்னர், ‘மச்சி வேலையை விட்டுட்டியாடா?’ என்பதாக மாறிவிட்டது. பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை சடுதியாக விட்டுவிடுவது, வேறு வேலைக்குத் தாவுவது என்பதெல்லாம் இப்போது அவ்வளவு அதிர்ச்சி கொடுக்கும் விஷயங்கள் எனில், நீங்கள் முப்பது வருஷம் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்ந்த அரசாங்க உத்தியோகத்தர் அல்லது ஒரே வேலையில் உறுதியாக நின்று வாழ்ந்துவிட முடிவெடுத்துவிட்ட இலட்சிய இளைஞர். சடுதியாக வேலையை உதறிவிடும் சாகசங்களை இருவரும் மாறி மாறி நிகழ்த்திக் கொண்டிருந்ததால் மச்சி வேலையை விட்டுட்டியா? அதே வேலையா? என்பதெல்லாம் சாதாரண விசாரிப்புகள் மட்டுமே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில நாட்களுக்குமுன் அவனுடன் எப்படியும் பேசிவிடவேண்டும் என நினைத்தேன். அது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. அவன் பெயரில் குறைந்தது நான்கு தொலைபேசி எண்கள் என் செல்பேசியில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அதைவிட ஆறு இலக்கங்களை அவன் மாற்றியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முயன்று பார்த்தேன். முடியவில்லை. நாங்கள் இருவரும் பேசி மூன்று வருடங்களாகியிருந்தது. இது மிகப்பெரிய இடைவெளிதான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருகோணமலையில் அலுவலகத்தில் நான் மட்டுமே தனியாக இருந்த இனிய காலைப் பொழுது. சுழல் இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து அருகிலிருந்த இன்னோர் இருக்கையில் கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, கைகளைத் தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தேன். ரிசர்சன் காரணமாக வேலையிழந்து, வழமைபோல பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்ததில் நீண்ட இடைவெளியாகி, வாழ்க்கையில் அடிபட்டு நொந்து நூடுல்ஸாகி பிறகு கிடைத்திருந்தது வேலை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இனியொருதரம் அப்படி ஒரு சம்பாவிதம் நிகழ அனுமதிக்கக் கூடாது என நினைத்துக் கொண்டேன். விளையாட்டுத்தனம் இல்லாமல் இந்த ப்ராஜெக்ட் முடியும்போது இன்னொன்றில் இணைந்துவிட வேண்டும். இந்த நினைப்பும் கடையில் சாப்பிட்ட முட்டை பரோட்டாவும் அந்தக் காலை வேளையில் மிகுந்த உற்சாகத்தையும் ஒருவித மமதையையும், கிறக்கத்தையும் ஒருங்கே கொடுத்தது. அப்படியே தலையை நன்கு பின்னுக்குச் சாய்த்து வலது பக்கமாக முப்பது டிகிரி கோணத்தில் சரித்து மேலே சீலிங்கைப் பார்க்கையில், மனதில் பறவைகள் கிரீச்சிட்டன. ஒரு கிட்டார் ஒலிக்க, தொடர்ந்து வயலின்கள் ரட்ரட்ரா ரட்ரட்ரா .. 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலின் ஆரம்ப இசை தொடங்கவும் என் செல்பேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது. சஞ்சய் காலையிலேயே அழைத்தான்.</div>
<div style="text-align: justify;">
"---" </div>
<div style="text-align: justify;">
"மச்சி வேலைய விட்டுட்டியா?"</div>
<div style="text-align: justify;">
"டாய்.... ^%@&#%^&#** ^$%#&#^@#$&&" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">சி</span>ன்ன வயதில் முத்திரை சேகரித்தது, ஸ்டிக்கர் சேகரித்ததுபோல தொலைபேசி இலக்கங்களைச் சேகரிக்கும் வினோதமான பழக்கம் ஏற்பட்டிருக்குமோ எனச்சந்தேகிக்கும் வகையில் சஞ்சய், அவ்வப்போது நடந்துகொள்வான்.<br />
<br />
வெள்ளவத்தையில் ஐபிசி ரோட்டைக் கடந்து வருகிற நண்பனை, இங்கே கொமர்ஷல் வங்கிக்கு அருகே நின்று தூரப்பார்வையிலேயே கண்டுபிடித்து, உற்சாகமாகக் கையசைத்து இடையில் நடந்துசெல்லும் ஏராளமானோரைக் குழப்பி, சடுதியாக வீதியின் குறுக்காக ஓடிக்கடந்து கார்கில்ஸ்க்கு முன்னால் வழிமறித்து...உஸ்ஸ் மூச்சு வாங்கி.... "மச்சி உன்ர நம்பரை மிஸ் பண்ணிட்டன்டா ஒருக்கா சொல்லு!" என்பான்.</div>
<div style="text-align: justify;">
<br />
இரவு ஏழு மணிக்கு, தூரத்தில காட்டி கேட்பான்.</div>
<div style="text-align: justify;">
"மச்சான் அவன தெரியுமாடா? எங்கயோ பாத்த மாதிரி இருக்கு"</div>
<div style="text-align: justify;">
"கேர்ள் ஃபிரண்டோட வர்றாண்டா எப்பிடிறா எங்களுக்குத் தெரிஞ்சவனா இருப்பான்?" </div>
<div style="text-align: justify;">
சொல்லி முடிக்கமுதலே வந்தவனை வழிமறித்து, "மச்சான் நீ மணில படிச்சனிதானே?"</div>
<div style="text-align: justify;">
யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம். இரவு. திடீரென ரோட்டில் ஒருத்தன் கருப்பு சட்டை போட்டுக் கொண்டு வழிமறித்து சம்பந்தமில்லாமப் பேசுறானே என அவன் பீதியாகி முழிச்சிட்டிருப்பான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சஞ்சய் கன்டினியூ பண்ணுவான், "ஏழாம் ஆண்டில... மணி டியூஷன்.... விடிய ஆறு மணி.... வேலாயுதத்திட்ட மத்ஸ்.. சிவப்புக் கலர் முக்காச் சைக்கிள்ள நீ வருவ இல்ல.."</div>
<div style="text-align: justify;">
"ஆமால்ல"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போ அவனுக்குள்ளயும் ஒரு லாலாலா மியூசிக் கேட்டு, வளையம் வளையமா ஃபிளாஷ்பாக் ஒப்பினாகி சீனுக்குள்ள போயிருப்பான். தொடர்ந்து ஃபீலிங்க்ஸ்லயே பேசிக்கொண்டிருப்பார்கள்.<br />
<br />
ஐந்துநிமிடங்கள் கடக்கும். அதுவரைக்கும் இன்முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காதலியின் பார்வை இப்போது வன்முகமாக மாறுவது போலிருக்கும். ஆனால் சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் கண்டுக்காமலே, 'மச்சி கார்த்திக் இப்ப எங்க?', 'டேய் ரமணன் அப்பவே போயிட்டான்ல?' பசங்களின் வழக்கப்படி லிங்க் பண்ணி லிங்க் பண்ணி பேசிக்கொண்டே போவார்கள். திடீரென்று ஓரிடத்தில ஸ்ட்ரக் ஆகி இப்போ எதுக்கு இந்தக் கதை வந்திச்சுன்னு யோசிக்கிறவரைக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போது காதலி கணிசமான அளவு கடுப்பாகியிருப்பார். தனியாகப் போனதும் காதலனுக்கு கண்டபடி திட்டு விழலாம். குட்டுக் கூட விழலாம். அது அவன் பிரச்சினை. ஆனால் இப்போ? லைட்டா எங்களப் பார்க்கிற பார்வையிலேயே அப்பிடியே மைண்ட் வொயிஸ் கிளியராக் கேட்கும்.<br />
<br />
‘யார்ரா நீங்கெல்லாம்? எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க? இருந்திருந்து எப்பவாவது இப்பிடி ஒண்ணாச் சேர்ந்து வெளிக்கிட்டா சந்திக்குச் சந்தி நிண்டு தொலைக்கிறீங்க... உங்களுக்கெல்லாம் வாழ்க்கைல கேர்ள் ஃபிரண்டே கிடைக்க மாட்டாடா....காலம் முழுக்க மொட்டப் பசங்களாவே சந்தில நிப்பீங்கடா!’. நாங்களும் பழைய பாரதிராஜா படங்களில் வருவதுபோல, சின்னப்பையன் அறிவுபூர்வமாகக் கேள்விகேட்டதும் ஞானம் பிறந்து, மானசீகமாக கன்னத்தில் சப் சப்பென்று அறை வாங்கும் ஊர்ப்பெருசு போல போஸ் கொடுப்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது எதையுமே கவனிக்காம பேசிட்டிருந்த நம்மாளுங்க ஒரு மாதிரியா நிகழ்காலத்துக்கு வந்து, 'மச்சி உன் நம்பர சொல்லுறா' சின்சியராக பரிமாறிக் கொள்வார்கள். அப்பதான் ஒரு சந்தேகம் வரும். உண்மையிலேயே சஞ்சய் அவனுக்கு ஃபோன் பண்ணுவானா? இல்ல அவன்தான் இவன் நம்பர வச்சிருப்பானா? கொஞ்ச தூரம் போனதும் அவன் காதலியே அந்த நம்பர கடுப்பில டிலீட் பண்ணிடுவாளா? ஆனா ஒண்ணு நம்மாளு புதுசா ஒரு நம்பர கலக்சன்ல சேர்த்துட்டான். அங்கதான் நிக்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் சஞ்சய் தொலைபேசி இலக்கங்களை அப்படியே வைத்திருப்பான் என்பது நேற்றுத்தான் தெரிந்தது. அவன் ஒன்றரை வருடங்களாக லண்டனில் இருக்கிறானம். விடுமுறையில் வந்திருக்கிறான். இந்தமுறை வித்தியாசமாக பேசினான்,<br />
"மச்சி எங்க இருக்கே?"<br />
<br /></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-69866686041773738272015-02-10T16:04:00.000+05:302015-02-10T16:04:36.435+05:30Good Bye, Lenin! (2003)<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-CK8cYyXvKGE/VNnayzwnjCI/AAAAAAAAAFc/ZXa_NcAugCo/s1600/Good%2Bbye%2BLenin!.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-CK8cYyXvKGE/VNnayzwnjCI/AAAAAAAAAFc/ZXa_NcAugCo/s1600/Good%2Bbye%2BLenin!.jpg" height="480" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அது தொண்ணூற்று ஏழாம் ஆண்டு. இந்திய அணி களத்தடுப்பிலிருந்தது. எங்கள் எண்பது வயதுப் பாட்டியம்மாவும் கண்களைச் சுருக்கியவாறு பார்த்துகொண்டிருந்தார். திடீரென்று அசுவாரசியமாகச் சொன்னார், "என்ன பழைய ஆக்கள் ஒருத்தரையும் காணேல்ல". நான் உட்பட கூடி இருந்து பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் சிரித்தோம். பாட்டியம்மா கிரிக்கெட் பற்றிப்பேசியதுதான் பலருக்கும் புதினமாகத் தெரிந்தது. சற்று யோசித்துப் பார்த்ததில் பாட்டியம்மா கடைசியாக ஒரு கிரிக்கெட் போட்டியைச் சாவகாசமாக அமர்ந்து பார்த்தது யாழ்ப்பாணத்தில் எண்பத்தேழு, அதற்குமுதல். ஆக, அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் சிலவேளைகளில் மிக அநியாயமாகவும் அவர் பேசுவதுண்டு. இரண்டாயிரத்து மூன்றாமாண்டு அவர் வீட்டிற்கு எதிரே ஒரு பெரிய மூன்று மாடி வீடொன்று கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. வீட்டு கேற்றடியில் என்னுடன் வந்து நின்றவர், இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு கண்களால் அளவெடுப்பதுபோன்ற தோரணையுடன் பார்த்துச் சடுதியில் ஒரு ‘எஸ்டிமேட்’ போட்டிருந்தார். கொஞ்சம் அதிர்ச்சியடைந்தவர்போலப் பேசினார். ‘எவ்வளவு பெரிய வீடு, கட்டி முடிக்க எவ்வளவு காசு செலவளியும்! ம்ம்ம்… எப்பிடியும் ஒரு லட்சம் தாண்டும்’ என்றாரே பார்க்கலாம். மயக்கம் போடாத குறையாக அப்படியே வெலவெலத்துப் போய்ப் பார்த்தேன். அவர் சீரியசாகத்தான் பேசினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர் போட்ட கணக்கு எத்தனையாம் ஆண்டிற்கானது என்பது புரியவில்லை. அந்த ஆண்டின் நாணயப் பெறுமதியைத் தாண்டி அவர் வரவில்லை, அங்கேயே தேங்கிவிட்டார் போலும். வயதானவர்களுக்கான பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கவேண்டும். காலையில் என்ன சாப்பிட்டார்கள் என்பது நினைவிருக்காது. இருபத்திரண்டு வயதில் நடந்த கதையை அவ்வளவு துல்லியமாக நினைவு வைத்துச் சொல்வார்கள். அவரிடம் போய் இன்றைய நிலவரத்தைச் சொல்வது அவசியமில்லை. இன்னும் சில ஆண்டுகளோ மாதங்களோ வாழப்போகும் பெரியவர்களிடம் போய் அவர்கள் ஆழமாக நம்பும் ஒரு விடயத்தை எதற்குக் குழப்ப வேண்டும்? இறுதிக்காலத்தில் ஏன் வீணான மன உளைச்சலை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஓர் உண்மையைச் சொல்லாது விடுவது அப்படியொன்றும் கடினமானதல்ல. ஆனால் நாம் வாழும் சூழலில், கண்ணெதிரே நிகழும் சடுதியான மாற்றத்தை நம் அன்புக்குரிய ஒருவரிடம் மறைப்பதற்காகப் பொய் சொல்லவேண்டி நேர்ந்தால் அது எவ்வளவு சவாலானதாக இருக்கும்? அலெக்ஸுக்கு அப்படியொரு சிக்கல்தான். கொள்கைவாதியான, தேசத்தை மிகவும் நேசிக்கும் ஒருவருக்கு தாய்நாட்டில் சடுதியாக ஏற்படும் அரசியல் மாற்றங்கள், வாழ்நாளில் கற்பனை செய்தேயிராத காட்சிகளை எதிர்கொள்வது தீராத மன உளைச்சலையே கொடுத்துவிடும். சிறு அதிர்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாத மோசமான உடல்நிலையிலுள்ள தன் தாயாரிடமிருந்து நாட்டில் நிகழும் முக்கியமான மாற்றங்களை மறைக்க வேண்டிய சூழ்நிலை அலெக்ஸுக்கு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1978 சிறுவயது அலெக்ஸ் தனது அக்காவுடன் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறான். கிழக்கு ஜெர்மன் உலகளாவிய ரீதியில் பெருமைப்படும் விதத்தில் அவர்கள் நாட்டு வீரர் Sigmund Jahn விண்வெளிக்குப் போவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் வீட்டில் அந்த அதிர்ச்சியான சம்பவம் தெரியவருகிறது. அலெக்ஸின் அப்பா, அவன் அம்மாவைப் பிரிந்து மேற்கு ஜெர்மனியிலுள்ள பெண்ணுடன் சென்றுவிட்டார். அம்மா உடைந்துவிடுகிறாள். சிலநாட்கள யாருடனும் பேசுவதில்லை. பிரமை பிடித்தவள்போல இருக்கிறாள். பின்பு மிகத் தெளிந்துவிடுகிறாள். சோஷலிச கருத்தாளராகவும், ஆளும்கட்சியின் ஆதரவாளராகவும் மாறி நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துச்சேவை செய்கிறாள். சிறந்த மக்கள் சேவைக்கான உயர்ந்த விருது பெறுகிறாள். தனது சோஷலிச நாட்டையே மணந்துகொண்டவள் போல மாறிவிடுகிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பத்து வருடங்கள் சென்றபின்பு, இளைஞனான அலெக்ஸ் அரசாங்க எதிர்ப்புக் கொள்கைகளோடு வளர்கிறான். அம்மாவின் சோஷலிச கொள்கைகளை, அரசாங்கச் செய்திகளைச் சலிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். கிழக்கு ஜெர்மானியக் குடியரசின் நாற்பதாவது ஆண்டுவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றுமாலையே நூற்றுக்கணக்கானவர்கள் சோஷலிச அரசாங்கத்திற்கு எதிராக ஊர்வலம் செல்கிறார்கள். எமக்குப் பத்திரிகைச் சுதந்திரம் வேண்டுமென்று கோஷமிடுகிறார்கள். காரில் வந்துகொண்டிருக்கும் அம்மா சோஷலிசத்துக்கு எதிரான அந்தக்கூட்ட்டத்தை அதிர்ச்சியுடன் பார்க்கிறாள். அந்தக்கூட்டத்தில அலெக்ஸ் இருப்பதையும், அவனை போலீசார் இழுத்துச் செல்வதையும் பார்த்த அதிர்ச்சியில் மயங்கிவிழுகிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மருத்துவமனையில் சோகமாக நிற்கிறான் அலெக்ஸ். ஹார்ட் அட்டாக் வந்து அம்மா கோமாவில் இருக்கிறாள். அவளுக்கு நினைவு திரும்புமா, மீண்டும் இயல்புக்கு வருவாளா என்பது பற்றி எதுவும் கூற முடியவில்லை என்கிறார் மருத்துவர். அரசாங்க எதிர்ப்பு ஊர்வலத்தில் தன்னைக் கவர்ந்த அழகிய பெண் லாரா, அந்த மருத்துவமனையில் தாதியாகக் கடமையாற்றுவது தெரிகிறது. இருவரும் நெருங்கிவிடுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எட்டு மாதங்களின் பின்னர் அம்மாவுக்கு நினைவு திரும்புகிறது. எல்லோருடனும் பழையபடி பேசுகிறாள். அதுகுறித்து ஆச்சரியம் தெரிவிக்கும் மருத்துவர் அம்மாவின் மூளை பாதிப்படைந்திருப்பதால் ஒரு சிறு அதிர்ச்சியும் அவளது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என எச்சரிக்கிறார். அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவதுதான் பாதுகாப்பானது எனமுடிவுசெய்கிறான் அலெக்ஸ். அக்கா அது சரியான முடிவல்ல என்கிறாள். அலெக்ஸ் பிடிவாதமாக இருக்கிறான். இபோதுள்ள நாட்டின் நிலைமை அம்மாவுக்குத் தெரிந்துவிடவே கூடாது என அதற்கேற்ப ஒவ்வொன்றையும் திட்டமிடுகிறான். அது ஒன்றும் அவ்வளவு இலகுவானதாக இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மா சுயநினைவின்றியிருந்த நாட்களில் அப்படி என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து முடிந்திருகின்றன? கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் உடைக்கப்பட்டுவிட்டது. இருநாடுகளும் ஒன்றிணைந்துவிட்டன. சடுதியாக எல்லாமே மாறிவிட்டன. கொக்காகோலா முதலில் வந்துவிடுகிறது. மதுவிடுதிகள் வந்துவிட்டன. நீலப்பட கஃபேக்கள், நைட் கிளப்கள் வந்துவிட்டன. வீதியில், வாகனங்களில் சத்தமாகக் கடவுள் வாழ்த்துச் சொல்லிக் கோஷமிட்டுச் செல்லும் இளைஞர்கள். பொதுத்தேர்தல் நடைபெற்றிருக்கிறது. மேற்கத்தியப் பொருட்கள், துரித உணவுக்கடைகள் அறிமுகமாகிவிட்டன. அலெக்ஸின் அக்கா, கல்லூரிப்படிப்பை நிறுத்திவிட்டு, 'பேகர் கிங்' இல் வேலை செய்கிறாள். அவளுக்கு ஒரு மேற்குக்காதலன் இருக்கிறான். சாதாரண மக்கள் பலர் தங்கள் வேலையை இழக்கிறார்கள். அலெக்ஸ் டிஷ் அண்டெனா விற்கும் கடையில் வேலை செய்கிறான். வீட்டில் யன்னல் திரைச்சீலை முதற்கொண்டு மேற்கத்தைய, நவீன பாணிக்கு மாறிவிட்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போது மீண்டும் அம்மாவின் அறையைப் பழையபடி, எட்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே நண்பனின் உதவியுடன் மாற்றுகிறான் அலெக்ஸ். காதலி லாராவின் உதவியுடன் அம்புலன்சில் அம்மாவை வீட்டுக்கு அழைத்துவருகிறான். வரும் வழியில் வானொலிச் செய்தி அறிவிக்கிறது, 'கிழக்கு ஜெர்மனிப் பணம் இன்னும் இரண்டு வாரங்களுக்குமேல் செல்லாது உடனே மாற்றிக் கொள்ளுங்கள்'. செய்தி அம்மாவுக்குக் கேட்டுவிடாமல் ஒலியைக் குறைக்கச் சொல்கிறான். அக்கம்பக்கத்தில் யாரும் அம்மாவுடன் பேசவிடாதபடி பாதுகாப்பாக அறைக்குக் கொண்டுவந்துவிடுகிறான். படுக்கையிலிருக்கும் அம்மாவை மாறி மாறிக் கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறார்கள் அலெக்ஸும் அவன் சகோதரியும். 'அறையில் ஒரு டீவி இருந்தால் பார்த்துக் கொண்டிருக்கலாம்' என்கிறாள் அம்மா. நண்பன் உதவியுடன் நாடு இணைவதற்கு முன்னரான பழைய செய்திகளடங்கிய காசெட்டுகளைப் பக்கத்து அறையில் இருந்து அம்மாவின் டீவியில் தெரியச்செய்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மாவின் பிறந்தநாள் வருகிறது. அம்மாவின், வயதான இயக்கத் தோழர்களைச் சந்தித்து நாட்டின் மாற்றங்கள் எதுவும் அம்மாவுக்குத் தெரியவேண்டாம் எனச் சொல்லிப் பிறந்தநாளுக்கு அழைக்கிறான். அந்தக் குடியிருப்பில் இருக்கும் சிறுவர்களுக்கு அம்மா சொல்லிக் கொடுத்த நாட்டுப்பற்றுப் பாடல்களைப் பாடவேண்டும் என பணம் கொடுத்துக்கேட்டுக் கொள்கிறான். எல்லாம் திட்டமிட்டபடியே நடக்கிறது. எல்லோரும் அலெக்ஸ் சொல்லிக் கொடுத்தபடியே மிகுந்த படபடப்புடன் கஷ்டப்பட்டுப் பொய் சொல்கிறார்கள். அம்மா மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். எல்லோரும் ஆசுவசமடைந்து கொள்ள. அலெக்ஸ் இறுதியாகப் பேசுகிறான். ஆனால் அம்மாவின் பார்வை மாறுகிறது. குழப்பத்துடன் அலெக்ஸை அழைக்கிறாள். 'என்ன அது?' என்கிறாள். எல்லோரும் அவள் பார்த்த திசையில் யன்னலூடு பார்கிறார்கள். அங்கே சற்றுத் தொலைவிலுள்ள கட்டடத்தின் சுவரில் பிரமாண்டமாகக் கோக்காகோலாவின் பானர் கட்டித் தொங்கவிடப்படுகிறது. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கும் என அப்போதைக்கு அம்மாவைச் சமாதானம் செய்கிறான். பின்பு, அதற்கும் நண்பன் உதவியுடன் ஒரு கதையைத் தயாரித்துச் சமாளிக்கிறான் அலெக்ஸ்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருமுறை அலெக்ஸ் கதிரையில் அமர்ந்தவாறே தூங்கிக்கொண்டிருக்கிறான். அம்மா மெதுவாகக் கட்டிலை விட்டிறங்குகிறாள். தன்னால் நடக்கமுடிகிறது என்கிற மகிழ்ச்சியுடன் நிதானமாக, மெதுவாக வீட்டிலிருந்து விதிக்கு இறங்குகிறாள். அங்கே அவள் பார்க்கும் காட்சிகள் அதுவரை அவள் காணாதவையாக இருக்கின்றன. கீழே புதிதாகக் குடிபுகும் குடும்பமொன்றின் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு இயேசு படம் இருக்கிறது. அவர்கள் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் எனத்தெரிந்து குழப்பமடைகிறாள். பெரிய அளவிலான பிரேசியர் விளம்பரத்தட்டி, புதிய கார்கள் எல்லாவற்றையும் காண்கிறாள். உச்சகட்டமாக ஒரு ஹெலிகொப்டரில் கட்டித் தூக்கிச்செல்லப்படும் லெனின் சிலை. அதேநேரம் அவளைத்தேடி வரும் அலெக்ஸ் மீண்டும் வீட்டுக்குக் கூட்டிச்செல்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-n7RBAUUUPuw/VNncIhD_iOI/AAAAAAAAAFw/peH71Trq_LI/s1600/Good%2Bbye%2BLenin%2B2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-n7RBAUUUPuw/VNncIhD_iOI/AAAAAAAAAFw/peH71Trq_LI/s1600/Good%2Bbye%2BLenin%2B2.jpg" height="260" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மறுநாள் அலெக்ஸின் ஏற்பாட்டில், அவன் நண்பன் வாசிக்கும் டீவி செய்தியில் புதிய தகவல்கள் வெளிவருகின்றன. அதாவது, மேற்கு ஜெர்மனியில் முதலாளித்துவத்தை எதிர்க்கும் ஏராளம் மக்கள் கிழக்குக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டியது நமது கடமை என்கிறது செய்தி. அம்மா நம்பி விடுகிறாள். அப்படியே வெளியில் பார்க்கிறாள். ஏராளமான புதியரக கார்கள் வீதியில் செல்கின்றன. ‘இவ்வளவு அகதிகளா? அவர்களுக்கு நாம் உதவவேண்டும்’ என்கிறாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மாவை ஊரில் பழைய வீட்டுக்குக்குக் கூட்டிச் செல்ல முடிவு செய்கிறான் அலெக்ஸ். ஆனால், வீதியில் செல்லும்போது மாற்றங்கள் தெரிந்துவிடும். எனவே 'சஸ்பென்ஸ்' என்று கண்களைக் கட்டிப் புதிதாக வாங்கிய காரில் குடும்பமாக அழைத்துச் செல்கிறார்கள். அங்கே தன் கணவனுடன் வாழ்ந்த நாட்களை நினைவு கூர்கிறாள். அவர் தனக்கும் பிள்ளைகளுக்கும் எழுதிய கடிதங்களை மறைத்துவிட்டதைச் சொல்கிறாள். பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்கிறாள். ஒருமுறை தன் கணவரைப் பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். அன்று அவள் உடல்நிலை மோசமடைகிறது. இம்முறை உயிர் பிழைப்பது கடினம் என்கிறார் மருத்துவர். அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற அப்பாவை அழைத்து வருகிறான் அலெக்ஸ். அவரிடமும் நாடு பற்றி எதுவும் சொல்லிவிட வேண்டாம் எனக்கேட்டுக் கொள்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரு நாடுகளும் ஒன்றிணைந்த நாளின் கொண்டாட்டம் நிகழவிருக்கிறது. அதற்கு ஓரிரு நாட்கள் கழித்துத்தான் பழைய சோஷலிசக் குடியரசுதினம். ஆக, இந்தக் கொண்டாட்டத்தை குடியரசுதினக் கொண்டாட்டமாக மாற்றிவிடலாம் என முடிவுசெய்யும் அலெக்ஸ் முதற்கட்டமாக அம்மா தூங்கும்போது நாட்காட்டியில் சில தாள்களைக் கிழிக்கிறான். நண்பனுடன் இணைந்து ஒரு செய்திப்படம் தயாரிக்கிறான். அவர்கள் தயாரித்த மிகச்சிறந்த படம் இதுதான் என்கிறான் நண்பன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மாவுடன், அலெக்ஸ், அக்கா, லாரா எல்லோரும் அமர்ந்து டீவி பார்க்கிறார்கள். விசேட செய்தி விவரணங்களுடன் ஒளிபரப்பாகிறது. கிழக்கு ஜெர்மன் தலைவர் பதவி விலகுகிறார். ஸ்டேட் கவுன்சில் சேர்மனான முன்னாள் விண்வெளி வீரர் சிக்மண்ட் ஜான் உரையாற்ற வருகிறார். ‘ஜான்?’ அம்மா ஆச்சரியத்துடன் கேட்கிறாள். ஆமாம் ஜானாக மாறியிருக்கும், அலெக்ஸ் சந்தித்த வாடகைக்கார்ச்சாரதி உரையாற்றுகிறார். அந்த உரையில் முக்கியமாக, தாங்கள் எதிரிகளாகக் கருதிய மேற்கு ஜெர்மன்காரர்கள் ஆயிரக்கணக்கில் சென்ற வருடம் தமது நாட்டில் வாழ விரும்பி வந்ததைக் குறிப்பிடுகிறார். ‘சோஷலிசம் என்பது எங்களைச் சுற்றிச் சுவர் எழுப்பிக் கொள்வதல்ல. எல்லோரோடும் இணைந்து வாழ்வதே, கனவு மட்டும் காண்பதல்ல, அதைச் செயற்படுத்துவதே, அதனால் பெர்லின் எல்லையைத் திறக்க முடிவு செய்தேன்’ என்கிறார். தொடர்ந்து பெர்லின் சுவர் உடைக்கப்படுவதையும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடுவதும் காண்பிக்கப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அலெக்ஸ் இடையிடையே அம்மாவைத் திரும்பிப் பார்க்கிறான். புன்னகைக்கிறான், அம்மாவும். அம்மா இம்முறை செய்திகளைக் கவனிப்பதைவிடவும் ஆர்வமாக அலெக்ஸை அவனறியாமல் பார்க்கிறாள், அர்த்தம் பொதிந்த அழகான புன்னகையுடன்! அவை பொய்யான செய்திகள் என்பது அவளுக்குத் தெரியும். எனினும் அலெக்ஸுக்காகப் பார்வையில் ஆச்சரியம் காட்டுகிறாள். அம்மாவுக்கு அன்று காலையிலேயே நாடுகள் ஒன்றிணைந்துவிட்ட செய்தியைச் சொல்லிவிடுகிறாள் லாரா. செய்திப்படம் முடிந்ததும் அலெக்ஸை மகிழ்ச்சியுடன் பார்த்துப் புன்னகைக்கிறாள். வாணவேடிக்கைகள் ஆரம்பமாகின்றன. இரவு முழுவதும் தொடர்கின்றன. சிறுபுன்னகையுடன், மனநிறைவுடன் கண்களை மூடுகிறாள் அம்மா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மாவின் ஆசை அவளது சாம்பல் சுதந்திர சோஷலிச நாட்டின் காற்றில் கலக்க வேண்டுமென்பது. அதன்படி சாம்பலை ஒரு வாணவேடிக்கை ரொக்கட்டில் வைத்து வானத்தில் வெடிக்கவைக்கிறான் அலெக்ஸ். அப்பா, குடும்பத்துடன் அக்கா, லாரா, அம்மாவின் பழைய தோழர்கள் எல்லோரும் உடனிருக்கிறார்கள். 'அம்மாவின் இறுதி மூச்சுவரை நம்நாடு அவள் நம்பியபடியே இருப்பதாக நாம் பார்த்துக் கொண்டோம். அப்படி இனி ஒருபோதும் ஆகிவிடாது என்கிறபோதிலும், அம்மாவின் நினைவுகளில் நாடும் அப்படியே இருக்கும்' என்கிற அலெக்ஸின் குரலுடன் படம் முடிகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரக் கொள்கை மாற்றம் எப்படியெல்லாம் அன்றாடவாழ்வில் சடுதியாகப் பிரதிபலிக்கிறது? அம்மா வருடக்கணக்காக உழைத்துச் சம்பாதித்த பழைய பணத்தை வங்கிக்குக் கொண்டு செல்கிறான் அலெக்ஸ். காலக்கெடு இரண்டு நாளுக்குமுன் முடிந்துவிட்டதால் வங்கியில் மாற்றிக்கொடுக்க மறுக்கிறார்கள். விரக்தியுடன் அவ்வளவு பணத்தையும் கிழித்து எறிகிறான் அலெக்ஸ்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மா கேட்கும், அவள் விரும்பும் ஊறுகாய்ப் போத்தல்கூட எங்கும் கிடைக்கவில்லை. பல்பொருள் அங்காடியில் இருப்பவை ஹொலண்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்கிறார்கள். இறுதியில் அலெக்ஸ் குப்பைத் தொட்டியிலிருந்து வெற்றுப்போத்தலை எடுத்து, சுடுநீரில் அவித்து, அதற்குள் புதியதைக் கொட்டி, லேபில் ஒட்டிக் கொடுக்கிறான். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் மினக்கெடுகிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மாவுக்காகத் தயாரிக்கப்படும் செய்திப்படங்களுக்கான பின்னணியும், அவற்றின் பின்னாலுள்ள செய்திகளும், சோகமும் ஆழமானவை. அம்மா வீதியில் இறங்கிச்செல்லும்போது அங்கிருந்து அகற்றிச் செல்லப்படும் லெனின் சிலையின் கை தன் தோழரை நோக்கி நீளுவது போலவே அம்மாவை நோக்கி வரும் காட்சி மென்சோகத்துடன் கூடிய அழகு. Wolfgang Becker இயக்கத்தில் 2003 இல் வெளியான ஜெர்மானியப்படம் ஏராளமான விருதுகளைப் பெற்றிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மா இறுதிச்செய்திப்படத்தைப் பார்க்கும் காட்சி மிக நெகிழ்ச்சியானது. அதுவரை தான் நம்பிக் கொண்டிருந்த கொள்கைகள், சித்தாந்தங்களின் மதிப்பீடுகள் சரிந்து போனது தெரிந்தும் புன்னகையுடன் கடந்துவிடும் அம்மாவின் மௌனம் அர்த்தபூர்வமானது. சிறுகுழந்தை சொல்லும் சாகசக்கதைகளைப் பொய்யென்று தெரிந்தே ரசிக்கும் தாயின் அன்பு மட்டுமல்ல அது. தன் அன்புக்குரியவளின் நம்பிக்கை எத்தருணத்திலும் தகர்ந்துபோய்விடக்கூடாது, என்கிற அலெக்ஸின் அர்ப்பணிப்பை முழுமையாகப் புரிந்துகொண்ட மனநிலையும்கூட. சிறுபுன்னகையுடன் லாரா பார்க்கும் பார்வையும் அதைத்தான் சொல்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;">(பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதியது)</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-50584611774976535182015-01-27T16:35:00.000+05:302015-01-27T16:35:09.237+05:30பேசும் கலை!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-tqIS1UFg7P8/VMdwQK2jpoI/AAAAAAAAAFE/iYVzxRxxI84/s1600/Vadivelu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-tqIS1UFg7P8/VMdwQK2jpoI/AAAAAAAAAFE/iYVzxRxxI84/s1600/Vadivelu.jpg" height="212" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">அ</span>ழகாக, சுவாரசியமாகப் பேசுவது ஒரு கலை. அப்படிப்பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசுவது அதைவிடப் பெரிய கலை. சிலர் பேசும்போதே 'நான் சுவாரசியமாகப் பேசக் கூடியவன்' என்று குறிப்பிடுவார்கள். அங்கே இங்கே பராக்குப் பார்த்தவர்கள் எல்லோரும் உடனே சீரியசாகக் கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். நீங்கள் கவனித்திருக்கக்கூடும். ஆனால் அந்தப் பெண் பேசியது உண்மையிலேயே கேட்க நன்றாக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஒரு டிக்கட் எடுத்தால் போதுமானது.. உங்கள் கேர்ள் ஃபிரண்டையும் அழைத்துச் செல்லலாம்" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த புதுவருடத்திற்கு நான்கைந்து நாட்கள் முன்பாக, நடைபாதையில்.</div>
<div style="text-align: justify;">
கடற்கரை உணவுச்சாலை ஒன்றின் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கான டிக்கட்களை வைத்திருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தப்பெண்மணி 'பேரழகி'யாக இருந்தார். நீங்கள் சாருநிவேதிதாவை வாசிப்பவர்களாக இருந்தால் இந்த இடத்தில் குபீரென்று சிரித்துவிடலாம். அது உங்கள் தவறல்ல. ஆனால் இது ஒன்றும் அவர் சொல்வது போலல்ல. உண்மையிலேயே அந்தப் பெண் உண்மையிலேயே அழகி. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதைவிட அழகு, அந்தப்பெண் என்மீது வைத்திருந்த நம்பிக்கை. நான் கேர்ள் ஃபிரண்டை அழைத்துக் கொண்டு வருவேன் என்று நம்புகிறாரே! அந்த நம்பிக்கை எவ்வளவு பெரிய விஷயம்? அவரிடம் நான் ஓரிரு வார்த்தைகள் பேசுவதுதானே மரியாதை? பேசினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சரி டிக்கட் நான் எடுக்கிறேன் அந்த கேர்ள் ஃபிரண்ட் எப்பிடி? நீங்கள் அரேஞ்ச் பண்ணுவீங்களா?" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவ்வளவுதான் நான் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டதுபோல முறைத்துக்கொண்டே விலகிச் சென்றுவிட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">எ</span>ன்னதான் நாம் அமைதியாக இருந்தாலும் சமயங்களில் எங்களையும் மீறி நம் பேச்சுத்திறன் காரணமாக வோன்டட்டாக வடைச்சட்டிக்குள் வாயை வைத்துவிடுவோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது ஆரம்பகால அலுவலகம். என் இரு பக்கத்திலும் இரண்டு அழகான பெண்கள் ஒருவர் கருப்பாக மெல்லிய உடல்வாகுடன் இருந்தார். மற்றையவர் மிக வெள்ளையாக முதலாமவருடன் ஒப்பிடுகையில் சற்றுப் பருமனான இருந்தார். தீவிரமாக ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நீ நல்ல ஸ்லிம்மா இருக்கே"</div>
<div style="text-align: justify;">
"உன்னோட பொடி செம்ம ஷேப்பா இருக்கு"</div>
<div style="text-align: justify;">
"இல்லடி உன்னோட ஹிப் கேவ்ஸ் எல்லாம் நல்லா இருக்கு ஜிம் போறமாதிரி"</div>
<div style="text-align: justify;">
"எனக்கு உன்னோட.."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"டாய்ய்ய்...! என்ன நடக்குதிங்க.. நடுவில ஒருத்தன் இருக்கான்னு பாக்காம கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லாம மாத்தி மாத்தி புளுகிட்டு.." - தீர்ப்பைக் கூறிவிடலாம் என்கிற யோசனையுடன் ஆரம்பித்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி சரி இப்ப என்ன... ரெண்டு பேரும் கொக்காகோலா போத்திலும், ஹோர்லிக்ஸ் போத்திலும் மாதிரி இருக்கிறீங்க போதுமா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கொக்காகோலா சிரிக்க ஆரம்பித்தார். ஹோர்லிக்ஸ் முறைத்துக் கொண்டிருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இல்ல..வெள்ளையா கோக்காகோலா இருக்காதா..எம்ப்டி கோக் போத்தில்னும் சொல்ல ஏலாது..ஒரு டைமிங்கா, ரைமிங்கா வந்திச்சா அதான்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">செ</span>ல்பேசி உரையாடல்கள் நம் பேசும் கலையையை வளர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றுபவை. ஆனால் என்னதான் நாம் சுவாரசியமாகப் பேசினாலும் சமயங்களில் தோழிகள் சடுதியில் கட் செய்துவிடுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செல்பேசியில் தோழி, "விண்ணைத்தாண்டி வருவாயா படம் பிடிக்குமா உனக்கு?"</div>
<div style="text-align: justify;">
"ம்ம்ம்...ஆங் ஒரு மாதிரியா... பிடிக்கும்.."</div>
<div style="text-align: justify;">
"அதில உனக்கு பிடிச்ச ஸீன் எது?"</div>
<div style="text-align: justify;">
"அது...வந்து..பொதுவா கவுதம் மேனன் படம்னா ஸீன் எல்லாமே..."</div>
<div style="text-align: justify;">
"உனக்கு ரொம்பப் பிடிச்ச ஸீன் எது?"</div>
<div style="text-align: justify;">
"ம்ம்ம்...அந்த கணேஷ், சிம்புகிட்ட சொல்லுவாரே ஒரு பிரச்சினைல இருக்கும்போது ஒரு பஸ் வரும். அது சரியான இடத்துக்கு கொண்டுபோகும்னு... அது ரெண்டுபேரையும் திரும்ப கொண்டுவந்து மாட்டிவிடும்ல அந்த ஸீன் பிடிக்கும்"</div>
<div style="text-align: justify;">
"ம்..."</div>
<div style="text-align: justify;">
"ஹலோ என்னாச்சு"</div>
<div style="text-align: justify;">
"ஒண்ணுமில்ல.. வேற எந்த ஸீன்?</div>
<div style="text-align: justify;">
"ஆங்..அந்த போலீஸ் ஸ்டேஷன்ல எவ்ளோ பொண்ணுங்க இருக்க ஏன் நீ இந்தப்பொண்ண லவ் பண்ணினேன்னு சிம்பு டயலாக்கையே கணேஷ் மாத்தி சொல்றது செம்மையா இருக்கும்ல"</div>
<div style="text-align: justify;">
"ம்" </div>
<div style="text-align: justify;">
"அப்புறம் அந்த..."</div>
<div style="text-align: justify;">
"போதும்....அப்ப உனக்கு விண்ணைத்தாண்டி வருவாயால சிம்புவும் கணேஷும் வர ஸீன்ஸ்தான் பிடிச்சிருக்கு?"</div>
<div style="text-align: justify;">
"ம்ம்ம் ஆமா நல்லாருக்கும்ல"</div>
<div style="text-align: justify;">
"ம்" </div>
<div style="text-align: justify;">
"ஏதும் தப்பா சொல்லிட்டனா?</div>
<div style="text-align: justify;">
"இல்ல..நான்தான் தப்பா கேட்டுட்டேன்"</div>
<div style="text-align: justify;">
"??"</div>
<div style="text-align: justify;">
"அப்புறம் நான் 'என்றென்றும் புன்னகை' பாத்தேன் நீ பாத்தியா?</div>
<div style="text-align: justify;">
"ஓ! அப்பவே பாத்திட்டேன்"</div>
<div style="text-align: justify;">
"அதில எந்த ஸீன் பிடிச்சிருந்துது?"</div>
<div style="text-align: justify;">
"அந்த..சந்தானம் தண்ணியடிச்சுட்டு வீட்ட வர்ற ஸீன் செமையா இருக்கும்ல ஹா ஹா ஹா... ஹலோ ஹல்லோ... ஹல்லல்லோ..."</div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-26192597873735480362014-12-19T17:00:00.001+05:302014-12-19T19:42:58.968+05:30மச்சான் (2008)<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-Nv-I6jQlB0Y/VJQGL_YSWdI/AAAAAAAAAEk/ZUOEbsr-oww/s1600/Machan-la-vera-storia-di-una-falsa-squadra-vcd-front.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-Nv-I6jQlB0Y/VJQGL_YSWdI/AAAAAAAAAEk/ZUOEbsr-oww/s1600/Machan-la-vera-storia-di-una-falsa-squadra-vcd-front.jpg" height="320" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜெர்மனியின் Bavaria நகரில் நடைபெறும் 2004 ஆம் ஆண்டுக்கான Hand Ball Tournament இல் ஜேர்மனியும் இலங்கையும் மோதிக் கொள்ளும் போட்டி ஆரம்பமாகிறது. முற்றிலும் வித்தியாசமான போட்டி அது. இலங்கை அணி புதிதாகத் திகைத்து நின்று வேடிக்கை மட்டும் பார்த்துகொண்டிருக்க, ஜெர்மனி விளையாடி வென்றுவிடுகிறது. ஏதோ சந்தேகம் தோன்ற, ஜெர்மன் போட்டி அமைப்பாளர்கள், இலங்கை ஒலிம்பிக் கமிட்டியிடம் விசாரிக்கிறார்கள். கமிட்டியின் பதில், இலங்கையில் Hand Ball டீம் என்ற ஒன்றே கிடையாது. தவிர, Hand Ball விளையாட்டுக்கென்று ஒரு கழகம் கூட நம்நாட்டில் கிடையாது'.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இத்தாலிய இயக்குனர் <b>Uberto Pasolini</b> இயக்கிய படம் சிங்களத் திரைப்படம் 'மச்சான்'</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதிகாலைப்பொழுது. ஆளரவமற்ற கொழும்பு நகரப்பகுதி. மனோஜ், ஸ்டான்லி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அருகில் கட்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் இன்னொரு நண்பன் விஜித். அவன்மூலம் கிடைத்த பகுதிநேர வேலை அது. மனோஜ் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பரிசாரகனாக வேலை பார்க்கிறான். அவனை நம்பியிருக்கும் குடும்பம், படிக்கும் தம்பிகள், தங்கைகளுக்காக மேலதிகமாக இந்த வேலை. ஸ்டான்லி வீதியில் தோடம்பழம் விற்பது தொடக்கம் கிடைத்த வேலைகளையெல்லாம் செய்கிறான். கணவனைப் பிரிந்து பிள்ளைகளுடன் வந்திருக்கும் அக்கா, வயதான இரு பாட்டிகள், பள்ளிக்குப் போகாமல் சொல்பேச்சுக் கேட்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் சின்ன வயதுத்தம்பி என்று ஏராளம் பிரச்சினைகளுடன் வாழ்பவன். மேலதிகமாக படகில் வெளிநாடு செல்வதற்காக அக்காவின் கணவர் சுரேஷிடம் பணம்பெற்று முகவரிடம் மூன்றுலட்சம் கொடுத்துவிட்டு அவருக்கு ஒழித்துத் திரிகிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலை ஜெர்மன் தூதரகத்திற்கு செல்வதுபற்றிப் பேசுகிறார்கள். வேலைக்காக ஜெர்மனி செல்வதற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள் மனோஜ், ஸ்டான்லி. விஜித்திற்கு அந்த யோசனையில் உடன்பாடில்லை. அது சாத்தியமில்லை என்கிறான். "வெளிநாட்டவருக்கு நம் நாட்டிலிருந்து மருத்துவர்கள், தாதிகள்தான் வேண்டும். எங்களைப் போன்றவர்களல்ல" என்கிறான். மனோஜ் சொல்கிறான், "நல்ல நாடு, நல்ல மக்கள். வேலை வாய்ப்புகள் அதிகம். நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம்" என்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்ன இருந்தாலும் அங்கே நாங்கள் அங்கே இண்டாம்தரப் பிரஜைகள்தானே?" - விஜித்.</div>
<div style="text-align: justify;">
ஸ்டான்லி தன் அழுக்கான பழைய டி ஷர்ட், காற்சட்டையைக்காட்டி, "பார் இங்க மட்டும் நாங்கள் என்ன முதல் தரப் பிரஜைகளாகவா வாழ்கிறோம்?" - நண்பர்கள் மூவரும் சிரித்துக் கொள்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜெர்மன் தூதரகத்தில் மனோஜும் ஸ்டான்லியும் அமர்ந்திருக்கிறார்கள். ஸ்டான்லியின் சட்டைப்பையிலிருந்த பேனா மை கசிந்து, இதற்காகவே அவன் வாங்கியிருந்த புதுச் சட்டையில் ஊறியிருப்பதைக் கவனிக்கிறார்கள். அதேநேரம் அவர்கள் பெயர் அழைக்கப்பட, அவசர அவசரமாக அங்கிருந்த ஒரு பேப்பரால் துடைத்து விடுகிறான் மனோஜ்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதிகாரி கேட்கிறார், "நீங்கள் அரசியல் ஜெர்மனியில் தஞ்சம் கோருகிறீர்களா?"</div>
<div style="text-align: justify;">
"இல்லை நாங்கள் உங்கள் கருணையை எதிர்பார்க்கவில்லை. அங்கு சென்று உழைக்கவே விரும்புகிறோம்"</div>
<div style="text-align: justify;">
விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. ஆயாசமாக வெளியே செல்லும்போது மனோஜ் இயலாமையுடன், ஏமாற்றமுமாக "எங்களைப் போன்றோருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துதவ மாட்டீர்களா?" என்கிறான்.</div>
<div style="text-align: justify;">
வீடு வரும் ஸ்டான்லியைப் பார்த்துவிட்டு அவன் அக்கா கேட்கிறாள், "இப்போ இருக்கிற நிலைமையில் உனக்குப் புதுச்சட்டை அவசியம்தானா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாலைநேரம். கடற்கரையில் மனோஜும், ஸ்டான்லியும் அமர்ந்திருக்கிறார்கள். ஸ்டான்லிக்கு சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தேடும் மனோஜ், காற்சட்டைப் பையிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துப் போடுகிறான். அப்போது ஜெர்மன் தூதரகத்தில் ஸ்டான்லியின் சட்டை மைக்கறையைத் துடைத்த பேப்பர் இருக்கிறது. எடுத்துப் பார்க்கிறான் ஸ்டான்லி. அது ஒரு விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பு அறிவித்தல். Handball tournament 2004 - Bavaria என்றிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-DkaOZG7rQFo/VJQGvzJBb-I/AAAAAAAAAE0/2ylgCozGVNk/s1600/Scene-from-Machan-2008-001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-DkaOZG7rQFo/VJQGvzJBb-I/AAAAAAAAAE0/2ylgCozGVNk/s1600/Scene-from-Machan-2008-001.jpg" height="240" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Handball அது என்ன விளையாட்டு? அப்படியொன்றை அவர்கள் அதுவரை கேள்விப்பட்டிருக்கவில்லை. சற்றுத் தொலைவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கும் தெரியவில்லை. புதிதாக இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்டான்லி கேட்கிறான், "நாங்கள் போலியாக ஒரு handball டீம் அமைத்து ஏன் ஜெர்மனி செல்லக் கூடாது?"</div>
<div style="text-align: justify;">
"ஆனால் எங்களுக்கு அப்படி ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாதே!". வெளிநாட்டு நண்பிகள் அதிகம் கொண்ட இன்னொரு நண்பனான பியலிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடிவு செய்கிறார்கள். அவன் மனோஜ் பணிபுரியும் ஹோட்டலிலேயே கிகிளோவாக இருப்பவன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்டான்லி, மனோஜ், பியல், விஜித் நால்வரும் கடற்கரையில் அமர்ந்திருக்கிறார்கள். ஸ்டான்லி சொல்கிறான், "சிம்பிள் நாங்கள் ஜெர்மன் விளையாட்டுத்துறைக்கு கடிதம் அனுப்புகிறோம். அவர்கள் அழைப்புக் கடிதம் அனுப்புவார்கள். விசா கிடைத்துவிடும்". விஜித் மட்டும் அதெல்லாம் சாத்தியமில்லை என்பதுபோல் சிரித்துக் கொண்டே மறுக்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி விளையாட்டுக் குழுவிற்கு என்ன பெயர் வைப்பது? "மட்டக்குளி எருமைகள்' (mattakkuli Buffaloes) என்று வைக்கலாமா?" என்கிறான் ஸ்டான்லி. "இலங்கையில்தான் handball என்பதே கிடையாதே. Srilanka National Hand Ball Team என்று வைத்துவிடலாம்" மனோஜ் சொல்ல, அப்படியே முடிவாகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜெர்மன் விளையாட்டுத்துறையிடமிருந்து பியலுக்குத் தொலை பேசி அழைப்பு வருகிறது. சீருடையுடன், முகாமையாளர், மருத்துவர் உள்ளிட்ட 'டீம்' புகைப்படம் அனுப்புச் சொல்கிறார்கள். பரபரப்பாகிறார்கள் நண்பர்கள். ஸ்டான்லி தனது தம்பியுன் உதவியுடன் பேரம்பேசி, வீதியோர நடைபாதைக் கடையொன்றில் இலங்கை கிரிக்கட் சீருடையை ஒத்த டி ஷர்ட்டுகள் தெரிவுசெய்து வாங்குகிறான். Srilanka National Hand Ball Team எனப் பெயர் பொறித்து சீருடைகள் இப்போது தயார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்டான்லி தனது பணத்தேவைக்காக முகவர் றுவானிடம் சென்று தனது பணத்திலிருந்து கொஞ்சம் பெற்றுக் கொள்கிறான். வெளிநாட்டுக்குச் செல்ல முகவர்களிடம் பணம்கட்டி ஏமாந்த பலரது கதை நமக்குத் தெரிந்திருக்கும். அப்படியொரு ஏமாற்றுப் பேர்வழி முகவர்தான் றுவான். ஸ்டான்லி போலவே, அவனிடம் ஆஃகானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் பிரயாணிகள் படகில் செல்வதற்குபோ பணம்கட்டிவிட்டு அலைந்துகொண்டிருக்கிறார்கள். 'இதோ படகு வந்துகொண்டிருக்கிறது', 'வழியில் மூழ்கிவிட்டது' என்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறான். உபரியாக அறிவுரை வேறு வழங்குகிறான், 'இங்கே வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்காதீர்கள், போலீஸ் கைதுசெய்துவிடலாம்!'</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மிக இரகசியமாக இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என முடிவு செய்திருந்தும், ஸ்டான்லி குழுவினர் ஜெர்மனி செல்லும் விடயம் மெல்ல வெளியே கசிந்து புதிது புதிதாக ஆட்கள் வந்து அவர்களுடன் சேர்கிறார்கள். ஸ்டான்லிக்கு வெளிநாடு செல்ல பணம் கடன் வாங்கி ஏற்பாடு செய்த, அவன் அக்காவின் கணவன் சுரேஷ் மிகவும் சிரமப்படுகிறான். 'இந்தவட்டியே எங்களைத் தின்றுவிடும்' எனக்கூறும் அவன்மனைவி மத்தியகிழக்கு நாடொன்றுக்குச் செல்ல தயாராகிறாள். சுரேஷ் அதை விரும்பவில்லையெனினும் வேறு வழியில்லை. இந்நிலையில் சுரேஷும் 'டீமில்' இணைந்து கொள்கிறான். ஜெர்மனுக்கு விண்ணப்படிவத்தை அனுப்பும்போது தபால் நிலையத்தில் சந்திக்கும் முஸ்லிம் பெண்ணொருவர் "என்ன ஸ்டான்லி ஜெர்மனிக்குக் கடிதமா?" எனக் கேட்க, ஸ்டான்லி பந்தாவாக "கடிதம் மட்டுமில்லை, ஜெர்மனிக்கே போகப் போகிறேன்" என்கிறான். அந்தப்பெண்மணி தன் கணவனிடம் இதுபற்றிக் கூறுகிறாள். அவள் கணவனும் அவர்களுடன் இணைந்துகொள்ள வருகிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"வெளியே விஷயம் தெரிகிறது ஆட்கள் அதிகரிக்கிறார்கள்" என மனோஜ் அலுத்துக் கொள்கிறான். ஒரு சிறிய மைதானத்தில் அனைவரும் கூடி நிற்கும்போது திடீரெனப் புதிதாக ஒருவன் வர, "யாரது?" பியல் சொல்கிறான் "என்னுடைய மச்சான்". "வேறு யாருக்கும் சொல்லவில்லைத்தானே" இல்லையென்கிறான். தூரத்தில் இன்னொருவன் சைக்கிளில் வருகிறான். "அது யார்?" இப்போது பியலின் மச்சான் சொல்கிறான் "அவன் என்னுடைய மச்சான்".</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது, திடீரென ஒரு போலீஸ் ஜீப் அங்கே வருகிறது. 'டீமில்' சிலர் அங்கிருந்து கலைந்து ஓட முயல, யாரும் ஓடக்கூடாது என்கிறார் போலீஸ் அதிகாரி. டீம் உறுப்பினர்கள் அனைவரதும் விண்ணப்படிவங்கள் அடங்கிய ஃபைலை வாங்கிப் பார்க்கிறார். ஒவ்வொருவர் முகங்களையும் கவனித்துப் பார்க்க, 'அவ்வளவுதான் மாட்டிக் கொண்டோம்' என்ற மனநிலையில் சிலர் மறைத்து கொள்ள முனைகிறார்கள். போலீஸ் அதிகாரி நிதானமாகத் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு நிரப்பிய விண்ணப்படிவத்தை எடுக்கிறார், கூடவே வந்த கொன்ஸ்டபிளினதும். இப்போது அவர்களும் டீமில்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பித்துவிட்டு நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். நிராகரிக்கப்படுகிறது. ஸ்டான்லி மிகவும் சோர்வடைந்து விடுகிறான். சில நாட்களில் ஸ்டான்லியும் நண்பர்களும் சந்தித்து மது அருந்திக் கொண்டிருக்கும்போது அங்கே அவனது வெளிநாட்டு முகவர் றுவானும் இணைந்திருக்கக் காண்கிறான். மனோஜ் சொல்கிறான் "இவர் உதவியுடன் இன்னொருமுறை முயற்சி செய்யலாம்" என. முகவர் றுவான் தான் உள்ளிட்ட தனது பிரயாணிகளையும் டீமில் சேர்க்க வேண்டும் என்கிறான். இரண்டாம் முறை முயற்சிக்கிறார்கள். றுவான் தனது வெளிநாட்டுப் பிரயாணிகளிடம் சொல்கிறான், "எனக்கு இன்னும் கொஞ்சம் பணம் தரவேண்டும். படகு அல்ல விமானத்தில் உங்களை அழைத்துச் செல்கிறேன். தவிர, முதலில் உங்களுக்கு முதலில் ஸ்ரீலங்கன் பாஸ்போர்ட் தயார் செய்ய வேண்டும்". "வெளிநாட்டுக்காரரை நம்முடன் அழைத்துச் செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தாதா அவர்களுக்கு?" என்ற ஸ்டான்லியின் கேள்விக்கு, "இல்லை அவர்களுக்கு நாம் எல்லோருமே கறுப்பர்கள்தான்" என்கிறான் றுவான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அனுமதி மறுக்கபட்டமைக்கான காரணத்தை ஆராய்கிறார்கள். இலங்கை விளையாட்டுக் கமிட்டியின் கடிதம் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் தேவை, முக்கியமாக இலச்சினைகளுடன். முகவர் றுவான் தனது அனுபவத்தின் மூலம் சரியான ஆட்களை இனங்கண்டு முக்கியமான கடிதங்கள், அரசாங்க இலச்சினைகளை பிரதியெடுத்து போலிகள் தயாரித்து இம்முறை மிகக் கச்சிதமாக திட்டமிடுகிறார்கள். இடையில் Handball விளையாடிப் பழகுவது என்றோர் திட்டமும். பந்தை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு மாதிரி விளையாடுகிறார்கள். அப்போது, முகவரின் பிரயாணிகளுடன் பிரச்சினையாகி அடிதடியாகிவிடுகிறது. றுவான் சொல்கிறான், "நாம் எதற்கு இப்படி விளையாடிப் பிரச்சினைப்பட வேண்டும்? நாம்தான் அங்கே சென்றவுடனேயே தப்பியோடி விடுவோமே?" அவன் யோசனை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இம்முறை கனகச்சிதமாகத் திட்டமிட்டு, மிகச்சரியாக ஏமாற்றியதால், விசா கிடைத்துவிடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நண்பர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். இறுதி நேரத்தில் மனோஜ் மனம் மாறிவிடுகிறான். குடும்பத்தைவிட்டுப் பிரிய மனமின்றி இங்கேயே தங்கிவிடுகிறான். புறப்படும் நேரம்வரை அவனை எதிர்ப்பார்த்து விமான நிலையத்தில் காத்திருக்கும் ஸ்டான்லியுடன் விஜித் இணைந்துகொள்ள, டீம் ஜெர்மனிக்குச் செல்கிறது. குடிவரவு அதிகாரிகளின்முன் கலவரத்துடன் வரிசையில் காத்திருக்கிறார்கள். பிரச்சினையின்றி அனுமதித்தும் எல்லோரும் நிம்மதியுடன், நம்பிக்கையுடன் கடவுச்சீட்டைக் கொடுக்கிறார்கள். தனக்கான உள்நுழையும் அனுமதி கிடைத்ததும் முகவர் றுவான் குடிவரவு அதிகாரியிடம் நன்றி சொல்லும் பாணியில் சிங்களத்தில் 'Fuck You' எனக்கூற, அதிகாரியும் அமர்த்தலாக அந்த நன்றியை ஏற்றுக் கொள்கிறார்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-1kpUbqrI1OU/VJQGhkXMvvI/AAAAAAAAAEs/CyU7C7Ro_fY/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-1kpUbqrI1OU/VJQGhkXMvvI/AAAAAAAAAEs/CyU7C7Ro_fY/s1600/images.jpg" height="245" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கை அணியை வரவேற்று அழைத்துச் செல்கிறார்கள் ஜெர்மன் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள். தனது பிரயாணிகளுடன் முகவர் றுவான் விமான நிலையத்திலிருந்தே தனியாக தப்பியோட முனையும் திட்டம் தோல்வியில் முடிந்துவிட வேறு வழியின்றி அவர்களும், டீமுடன் பிரத்தியேக பேரூந்தில் செல்கிறார்கள். 'நாளைதான் உங்களுக்கான போட்டி. இன்று ஒய்வெடுத்துச் சுற்றிப் பாருங்கள்' என்கிறார்கள். காலை உணவு உட்கொண்டதும் போலி முகவர் கையில் ரயில் டிக்கட்டுகளுடன் வருகிறார். 'ஐந்து யூரோ இப்போதே புறப்படுங்கள்' என்கிறான். சரியாக அதே நேரத்தில் உள்ளே வரும் ஏற்பாட்டாளர் ஒருவர், "சிறு மாற்றம் செய்ய நேர்ந்துவிட்டது. இன்று உங்களுக்கான போட்டி, விளையாடிவிட்டு நாளை ஓய்வெடுங்கள்" என்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வேறுவழியின்றி நண்பர்கள் விளையாடத் தயாராகிறார்கள். அதுவரை பார்த்தேயிராத விளையாட்டு. என்ன செய்வதென்றே தெரியாதநிலையில் தயங்கியவாறு நிற்கிறார்கள். எதுவாகினும் எதிர்கொள்ளலாம் எனச்சிலர் களத்தில் இறங்க, ஜேர்மனி 59 - 0 இல் வென்றுவிடுகிறது. ஒருநாள் கழித்து இன்னுமொரு போட்டி. இம்முறை இலங்கை அணி ஏதோ விளையாட முயற்சிக்கிறார்கள். கடுமையாகப் போராடி ஒரு கோல் போடுகிறார்கள். மிகுந்த ஆரவாரமிடுகிரார்கள். மிகக்கடினமான ஒரு விக்கெட்டை எடுத்ததுபோன்ற கிரிக்கெட் அணிபோல உற்சாகத்தில் கூச்சலிட, பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். எதிரணியினரும் சேர்ந்து இவர்களை உற்சாகப்படுத்தி கைதட்ட, அன்றைய ஆட்டம் 57-1 என்ற கணக்கில் முடிகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்றிரவு விடுதியில் நண்பர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்கள் ஒன்றாக இணைந்து பயணித்த அவர்கள், விடைபெற்றுக் கொள்ளும் தொனியில், இனிமேல் சந்திக்க முடியுமா? இல்லையா என்பது தெரியாமல் மகிழ்ச்சி, துயரம், புதிய நம்பிக்கை எனக் கலவையான உணர்வுகளுடன் ஒவ்வொருவரும் ஸ்டான்லிக்கு நன்றி சொல்கிறார்கள். ஸ்டான்லி எதுவும் பேசாமல் நெகிழ்ச்சியுடன் இருக்கிறான். அனைவரும் இரவு வணக்கம் சொல்லி, விடைபெற்றுத் தங்கள் அறைகளுக்குத் தூங்கச் செல்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறிது நேரத்தில் அங்கே போலீஸ் வருகிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்கள் தங்கியிருக்கும் நான்கு அறைகளின் கதவுகளையும் ஒரே நேரத்தில் சடுதியாகத் திறக்கிறார்கள். அங்கே யாரும் இல்லை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
டீம் நண்பர்கள் ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நாடுகளுக்குத் தப்பிச் செல்கிறார்கள். இறுதியில் ஸ்டான்லி, சுரேஷ், விஜித், றுவான் நால்வரும் இங்கிலாந்து செல்ல முடிவெடுக்கிறார்கள். ஜெர்மானிய அரசாங்கம் 'டீம்' நண்பர்களைப் பிடிக்க ஆணை பிறப்பிக்கிறது. ஆனால், இன்றுவரை (படம் வெளியாகும்வரை) அவர்கள் யாரும் இனங்காணப்படவில்லை என்கிறது படம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
போலீஸ் அறைக்குள் சென்றபோது, அங்கே இருந்த காகிதத்தில் எழுதியிருந்தது, 'We love Germany thanks for everything'. ஜெர்மன் விளையாட்டுத் திட்ட ஒருங்கமைப்பாளர் நொந்துபோய்க் கூறியது, "இதுவே இறுதித் தடவையாக இருக்கும். இலங்கையிலிருந்து இனி எந்த டீமையும் அழைப்பதாகத் என்னிடம் திட்டம் இல்லை" 'அவர்கள் அழுக்கு உடைகளை அப்படியே விட்டுச் சென்றுவிட்டார்கள்' என மேலதிகமாகக் கவலை தெரிவித்திருந்தாராம். அவர்கள் ஃபிரான்ஸ் சென்றிருக்கலாம் என ஜெர்மன் தெரிவித்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் படம் பார்க்க ஆரம்பிக்கையில் என்ன இது? ஒளிப்பதிவு ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது, எனத் தோன்றியது. பின்னர் யோசித்தால், அதிகாலை நேரத்தின் கொழும்பு புறக்கோட்டை, மருதானை பகுதியின் ஒப்பனையில்லாத நிறம் அதுதான். ஒரு சேரிப்பகுதியின் இயல்பான, மழைநாளின் ஈரலிப்பும், இருண்மையும் அப்படியே இயல்பாகப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கதை மாந்தர்கள் யாவரும் சேரிப்பகுதியைச் சேர்ந்தவர்கள். மிகுந்த நெருக்கடிகளுக்கிடையில் வாழும் அவர்களின் அவல வாழ்வை அப்படியே இயல்பாகச் சொல்கிறது படம். ஒவ்வொருவருக்கும் பிரச்சினை. ஆனாலும் நண்பர்கள் இணைந்திருக்கும்போது அதையெல்லாம் மறந்து அதையும் இலகுவாகவே எடுத்துக் கொள்கிறார்கள். பார்வையாளர் நாமும் அப்படியே! கொண்டாட்டமாகவே அணுக வைக்கிறது காட்சிகள் ஒவ்வொன்றும். பின்னணி இசையும் அப்படியே. சட்டவிரோதமாக அவர்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையிலும், நாங்களும் சேர்ந்து பங்கு பெறுவது போலவே உணர்கிறோம். அடிப்படையில் நம் நாட்டைவிட்டு, நல்லதோர் நாட்டிற்குச் சென்றுவிடவேண்டும் எனும் எண்ணம் நம்மையறியாமலே அடிமனதிலிருக்கிறது போலும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கை - ஐரோப்பியக் கூட்டுத் தயாரிப்பான இப்படத்தை இயக்கியவர் இத்தாலிய இயக்குனர் உபர்ட்டோ பசோலினி. தயாரிப்பாளர்களில் ஒருவர் பிரசன்ன விதானகே. படத்தின் உருவாக்கத்தில் அவரே அதிகம் பங்காற்றியிருப்பார் என நம்புகிறேன். படம் தயாரிப்பில் இருக்கும்போது பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக உண்மையில் பிரசன்ன விதானகேயின் படமாகவே அறிமுகமானது மச்சான். அதுவே பார்க்க வேண்டிய ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரசன்ன விதானகேயின் 'புரஹந்த களுவர' (1997) (Death on a Full Moon Day) பார்த்ததனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உயிர் பிழைக்கவும், உழைக்க வேண்டியும் வேறுவழியின்றி, ஐரோப்பிய நாடொன்றுக்கோ, கனடாவுக்கோ செல்வதைக் கனவாகக் கொண்டு உயிரைப் பொருட்படுத்தாது சாகசப் பயணங்களை மேற்கொண்ட பலரின் கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். சந்தித்திருக்கிறோம். நிச்சயமாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொருவருடைய நெருங்கிய உறவினர்களிடம், நண்பர்களிடம் அப்படியொரு கதை இருக்கும். கடும் குளிரில் காடு மேடுகளில், நடந்து சென்றவர்கள்,படகுகளில்,பயணித்தவர்கள், கண்டெய்னர்களில் பதுங்கியிருந்து வெறும் கோக் மட்டும் அருந்தியவாறு நாட்களையும் எல்லையையும் கடந்தவர்கள், அந்த முயற்சியிலே அந்நிய மண்ணில் அடையாளம் இல்லாமலே தொலைந்து போனவர்கள் பலரது கதைகள் நம்மிடமுண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவை இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.இதோ எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் யாரோ ஒருவர் தனது குடியுரிமை விண்ணப்பம் அனுமதிக்கப்படுமா நிராகரிக்கப்படுமா எனத் தவித்துக் கொண்டிருப்பார். யாரோ ஒருவர் முகவரால் ஏமாற்றப்பட்டிருக்கலாம். உயிரைப் பணயம் வைத்து ஒரு கடற்பிரயாணத்துக்குத் தயாராகியபடி ஒருவர், நடுவழியில் தவித்துக் கொண்டு ஒருவர் இருக்கக்கூடும். ஏன் இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடமும்கூட மறக்கமுடியாத ஒரு அனுபவம் இருக்கக்கூடும்.</div>
<div style="text-align: justify;">
<br />
<span style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;">பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதிய கட்டுரை இது!</span></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-73014426211716254702014-10-24T17:07:00.000+05:302014-10-24T20:15:56.286+05:30கத்தி!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-bOP5_h6c-G0/VEo5JEn7tbI/AAAAAAAAAEM/2priqCqStic/s1600/kaththi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-bOP5_h6c-G0/VEo5JEn7tbI/AAAAAAAAAEM/2priqCqStic/s1600/kaththi.jpg" height="218" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த வருடம் 'நய்யாண்டி' சம்பவத்துக்குப் பிறகு, திரையரங்கில் பார்த்த ஒரே படம். முதலில் ஆர்வம் இருக்கவில்லை. திடீரென நண்பர் அழைத்ததில் சென்று பார்த்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விஜய் - இந்தவருடம் இன்னும் நான்கு வயது குறைந்திருக்கிறது. அறிமுகப் பாடல் காட்சியில் பார்க்கும்போது இன்னும் இருபது வருடங்களுக்கு தமிழ்சினிமாவின் யுத் ஹீரோ விஜய்தான் எனத் தோன்றுகிறது. உறுதிப்படுத்தினார்கள் அந்நாளைய இளைஞர்களான பின்வரிசைச் சிறுவர்கள். நான் பார்த்த இன்றைய காட்சியில் ஐந்தாறு வயது வாண்டுகள் மட்டுமே பெரிதாகச் சத்தமிட்டார்கள், ரசித்துச் சிரித்தார்கள். என்வரையில் விஜய் பஞ்ச் டயலாக் பேசாமல் நடித்தாலே வித்தியாசமான நடிப்புத்தான். வெட்டி சவடால் பேச்சு, எரிச்சலூட்டும் தொனியில் இழுத்து இழுத்துப் பேசாமல் இயல்பாக இருக்கும் விஜயை யாருக்குத்தான் பிடிக்காது? இதில் கதிரேசன் வழக்கமான அதேசமயம் அலட்டலில்லாத கலகலப்பான விஜய். ஜீவானந்தம் நரைத் தாடி மின்ன அநியாயத்துக்கு அமைதியாக இருக்கிறார். நடிக்க வேண்டிய ஒரிருகாட்சிகளிலும் அப்படியே இருக்கிறார். ஏனென்று தெரியவில்லை. நிச்சயமாக விஜய் இதைவிட நன்றாக நடித்திருக்கக் கூடியவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்திற்குச் சமந்தா தேவைப்படவில்லை.துரதிருஷ்டவசமாக அனிருத் இரைச்சலுடன் கூடிய சில பாடல்கள் போட்டிருந்ததால் சமந்தா கதைக்கு அவசியப்பட்டுவிட்டார். அறிமுகமாகும் காட்சியில் பக்கென்று அதிர்ச்சியளித்தார். பின்னர் பழகிவிட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'துப்பாக்கி' எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. 'கஜினி' படத்துப்பிறகு முருகதாஸ் படங்களில் ஏனோ ஒரு டீவி சீரியல் சாயல் இருப்பதாகத் தோன்றியது. துப்பாக்கியைவிடக் கத்தி நல்ல படமாகத் தெரிகிறது. கிராமத்து காட்சிகளை ஆவணப் படம்போல இல்லாமல் அதை இன்னும் ஆழமாகப் பதிய வைத்திருக்கலாம். ஏனெனில் அங்கேதான் கதை ஆரம்பிக்கிறது. பிரச்சினை சொல்லப்படுகிறது. அதன்பிறகுதான் படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. மொக்கைப் பாடல்கள் இல்லாமலே இருந்திருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தில் சொல்லப்பட்டது மிக முக்கியமான சமூகப் பிரச்சினை. ஏற்கனவே சிட்டிசன், சாமுராய், ரமணா, தூள் போன்ற படங்கள் வந்திருக்கின்றன. சீரியஸாக சொல்ல முயற்சித்து இடையிடையே சிரிப்புக் காட்டி, சொதப்பலாகவே முடிந்தது சிட்டிசன். சாமுராய் சீரியசாகவே சொன்னாலும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு பக்கா எண்டர்டெயினரில் சீரியசான பிரச்சினையைச் சொல்லியிருக்கிறார்கள். சொல்லப்பட்ட விஷயம் எவ்வளவு சீரியசானது என்பதுதான் முக்கியம். உண்மையைச் சொன்னால் எவ்வளவு திருத்தமாக,சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் கமர்ஷியல் சினிமாவுக்கும், பார்வையாளரான நமக்கும் தேவை. மற்றபடி நாங்கள் எந்தப் படம் பார்த்தும் இதுவரை திருந்தியதில்லையே. இனியும் திருந்துவதாகவும் இல்லையே. விஜய் 'கோக்' விளம்பரத்தில் நடித்துவிட்டு கோக் பற்றிய உணமையைப் பேசுவது எப்படி நியாயம்? என்று பலரும் பொங்குவது வேடிக்கையானது. நம்மில் பலரும் படத்தில் 'கோக்' செய்த அநியாயத்தைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட மனதை இடைவேளையின்போது 'கோக்' குடித்துத்தான் ஆசுவாசப்படுத்தியிருப்போம் என்பதுதானே உண்மை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெற்றிகரமான ஒரு கமர்ஷியல் படம், பார்வையாளனை படம் பார்த்துக் கொண்டிருக்கும்வரையில் தர்க்க ரீதியான கேள்விகளை யோசிக்கவிடாது உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது சிந்திப்பதற்கான அவகாசத்தைக் கொடுக்கக்கூடாது. அல்லது பெரிதாகக் கண்டுகொள்ள விடக்கூடாது. கத்தியும் அப்படியே!<br />
<br />
படத்தின் ஆரம்பத்தில் 'லைக்கா' லோகோ தோன்றும்போது ஏனோ விசிலடிக்க வேண்டும்போல அவ்வளவு உற்சாகமாக இருந்தது ஏனெனத் தெரியவில்லை. இந்த 'லோகோ' பிடிக்காமல்தான் பலரும் உணர்வுடன் போராடினார்கள் என்று கேள்வி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'நண்பன்' படத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த விஜய் படம் 'கத்தி'. </div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-14335795400221386042014-09-26T10:24:00.000+05:302014-09-26T10:24:06.172+05:30சந்தியாராகம்! <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-tFcqTfAMnUE/VCTxBr8iDSI/AAAAAAAAAD8/jLUlYryrffw/s1600/director-balu-mahendra.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-tFcqTfAMnUE/VCTxBr8iDSI/AAAAAAAAAD8/jLUlYryrffw/s1600/director-balu-mahendra.jpg" height="225" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br />பாலுமகேந்திரா இறந்து போனபின்புதான் அவர் படங்களைப் பார்க்கவேண்டும் எனத் தோன்றுகிறது. என் வழக்கப்படி, நீண்டநாட்களாக கணினியில் சேமித்து வைத்திருந்த 'சந்தியாராகம்' படத்தைப் பார்த்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிராமத்தில் எந்தக் கவலைகளுமின்றி வாழ்வை அதன்போக்கில் ரசித்து வாழ்ந்துகொண்டிருந்த ஒரு முதியவர், சந்தர்ப்பவசத்தால் நகரத்தின் நெருக்கடி மிகுந்த, கீழ்நடுத்தரவர்க்கத்து பொருளாதாரச் சிக்கல் நிறைந்த வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள நேரிடுகிறது. அதன் பின்னர் சந்திக்கும் அனுபவங்ககள் என்னென்ன? எப்படி அவற்றை எதிர்கொள்கிறார் என்பது பற்றிப் பேசுகிறது படம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரியவர் சொக்கலிங்கம், மனைவி விசாலாட்சியுடன் கிராமத்தில் வாழ்கிறார். பிள்ளைகள் இல்லை. உறவென்று தம்பியின் மகன் மட்டுமே சென்னையில் இருக்கிறான். எந்தக் கவலைகளும் அவருக்கு இல்லை. மனைவி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். அப்பளம் போட்டு கடைகளுக்கு கொடுக்கிறார். அவரது தேவைகள் அதிகமில்லையாதலால் அவரளவில் சொகுசான வாழ்க்கை. இதெல்லாம் ஒரே நாளில் பெரியவருக்கு அர்த்தமற்றுப் போய் விடுகிறது. மனைவி இறந்துவிடுகிறார். தன் ஒரேயொரு உறவான தம்பி மகனிடம், சென்னைக்கு வருகிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பத்திரிகை அலுவலகத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்கிறார்கள் தம்பி மகனும், மனைவியும். பள்ளி செல்லும் சிறு பெண்குழந்தை, இரண்டாவது குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். திடீரென வந்து சேரும் பெரியவரை அன்பாகக் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனாலும் அவர் தொடர்ந்து அங்கேயே தங்கிவிடுவாரோ என்ன செய்வது என ஆரம்பத்தில் பயப்படுகிறாள் மருமகள். அன்று அவள் கவலைகொண்டபோதும் பின்னர் அவரைத் தம் குடும்பத்தில் ஒருவராகவே மகிழ்ச்சியுடன் கவனித்துக்கொள்ளும் மருமகள் ஒரு சிறு சம்பவத்தின் விளைவாக கோபத்தில் கடிந்துகொண்டு பாராமுகமாக இருப்பது பெரியவரைக் காயப்படுத்திவிடுகிறது. அங்கிருந்து சொல்லாமல் வெளியேறிவிடுகிறார். பின்னர் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல வரும் மருமகளிடம் பேசித் தன்முடிவை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் பெரியவர். எளிமையான இந்தக்கதைக்குள் மனிதர்களின் மெலிய உணர்வுகள், உளச்சிக்கல்கள், புரிந்துணர்வு என எந்தக் காலத்துக்கும் பொருந்தும், ஏராளமான விஷயங்களைச் சொல்லப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதியவர்கள் என்றதுமே, பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாரிதாபத்துக்குரியவர்கள், அதனாலேற்பட்ட சுய கழிவிரக்கத்தில் வாழ்பவர்கள் அல்லது முரட்டுத்தனமான வரட்டுப் பிடிவாதக்காரர்கள் என்பதைத்தவிர்த்து, வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகும் முதியவர்களைப் பற்றிய படங்கள் தமிழில் பார்த்ததாக ஞாபகம் இல்லை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகும், முதுமையையும் அவ்வளவு உற்சாகமாக எதிர்கொள்ளும் மனிதர்களும் நம் நகர வாழ்வில் மிக அரிதாகவே இருப்பர்கள் போலும். கிராமங்களில், நம் ஊர்ப்புறங்களில் அட்டகாசம் பண்ணு 'பெருசுகளை' நாம் பார்த்திருப்போம். 'பரதேசி' படத்தில் கவிஞர் விக்கிரமாதித்யன் வருவாரே, படத்திலேயே அதுதான் எனக்கு மிகப்பிடித்தது. சிறிது நேரமே வந்தாலும், அதகளம் செய்திருப்பார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரியவர் சொக்கலிங்கத்தின் கிராமத்து வாழ்க்கை மிக அழகானது. ஆர்ப்பாட்டமில்லாமல் ரசனையோடு எதையும் பார்க்கும் குழந்தைத்தனமும், குறும்பும் கொண்ட மனிதர். காலையில் மனைவி விசாலாட்சி சுடச்சுட பெரிய டம்ளரில் கொடுக்கும் தேநீரை ரசித்துக் குடித்துவிட்டு, குளத்துப் பக்கம் செல்கிறார். சிறுவர்களைப் போல நீர்ப்பரப்பில் கல்லெறிந்து அது நீர்மேற்பரப்பில் தத்திச் செல்வதை ரசிக்கிறார். வரும் வழியில் யாரோ சிறுவர்கள் பொட்டுவைத்த கட்டத்தில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒற்றைக்காலில் தத்தி பாண்டி விளையாடுகிறார். ஆசைதீர ஆற்றுக்குளியல், வெள்ளிக்கிழமைகளில் பிள்ளையார் கோவிலில் ஒரு கும்பிடு, திரும்பும் வழியில் சிறுவர்களுடன் சேர்ந்து பம்பரம் விளையாடுகிறார். கொண்டாட்டமான ஓர் வாழ்க்கை அவருடையது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரியவரின் கிராமத்து வாழ்க்கை, அங்குள்ள மனிதர்களின் அன்னியோன்யம், அக்கறை, அவரின் கௌரவத்தை, சின்னச் சின்ன ஆசைகளை,விளையாட்டுத்தனங்களை ஆரம்பக் காட்சிகள் சொல்கின்றன. இவற்றிற்கு முற்றும் மாறான நகரத்தை காலையில் வந்துசேரும்போதே எதிர்கொள்கிறார் சொக்கலிங்கம். புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களைக் கண்டு பதற்றமடைந்து விலகி நடக்கிறார். அதுவரை எல்லோராலும் 'பெரியய்யா' என அன்போடு அழைக்கப்பட்டவரை 'சாவுக் கிராக்கி' என திட்டுகிறான் அவர்மீது மோதிவிடுவதுபோல் வந்து நிற்கும் ஆட்டோ டிரைவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்த அதிர்ச்சி வீட்டில். குளிப்பதற்கு வெந்நீர் போட்டு வைக்கிறாள் மருமகள். ஆற்று நீரில் நீராடிய பெரியவர் சில கணங்கள் அந்தச் சிறிய வாளியை அந்த யோசனையுடன் பார்த்துவிட்டு பக்கத்திலிருக்கும் நீர்க்குழாயைத் திறக்கிறார். அங்கே குடியிருக்கும் ஒருவன் சொல்கிறான் இன்று நீர் வராது, நாளைதான். அதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றிலும் மாறான புதிய அனுபவம் ஒரே நாளில் ஏற்படுகிறது. ஆனாலும் உடனடியாகவே அவற்றோடு இயைந்து வாழத் தயாராகி விடுகிறார் சொக்கலிங்கம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குழந்தையும் பெரியவரோடு சேர்ந்துவிடுகிறது. பெரியவரும் மருமகளுக்கு ஒத்தாசையாக கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொடுக்கிறார். குழந்தையும் அவருடன் இலகுவாக ஒட்டிக் கொள்கிறது. சாப்பாடு வேண்டாம் என அம்மாவிடம் மறுக்கும் குழந்தை தாத்தா ஊட்டிவிடுவதாகக் கேட்டதும் சம்மதிக்கிறது. குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். 'பெரியவர் இங்கேயே தங்கி விடுவாரோ?' - மருமகளுக்கு அன்றைய இரவில் தோன்றும் சந்தேகம். ஏற்கனவே இடநெருக்கடி, போதாத வருமானம், இதில் புதிதாக ஒருவர் குடும்பத்தில் இணைந்துகொள்வது மருமகளுக்குக் கலவரத்தை ஏற்படுத்துகிறது. கணவனிடம் கேட்கிறாள். என்னைவிட்டா அவருக்கு வேற யார் இருக்காங்க? எங்க போவார்? சமாளிக்க வேண்டியதுதான் எனபதாக அமைகிற அவனது பதில் பொறுப்பற்றதாக, கோபம் கொள்ள வைப்பதாக இருக்கிறது. தவிர்க்க முடியாத இந்தப்பேச்சு, உச்சகட்டத்தை எய்தி, பொறுமையிழந்து உரக்கப் பேசிவிடுகிறான் கணவன். தன பெரியப்பா வந்தது மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பதாகவே தொடர்ந்து அவன் நம்புகிறான். பின்னரும் அடிக்கடி சொல்லிக் காட்டுகிறான். கணவன், மனைவிக்கிடையான பேச்சு சொக்கலிங்கம் காதில் விழ, யோசனையில் ஆழ்கிறார். ஆனாலும் உடனடியாக உணர்ச்சிவசப்படவில்லை. அவர்களின் நிலையையும் தன் நிலையையும் புரிந்துகொள்கிறார் பெரியவர். முடிந்தவரை அவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என நினைக்கிறார். இதுதான் யதார்த்தம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு கீழ் நடுத்தரவர்க்க குடும்பத்தின் தன் குடும்பம் தவிர்த்து உறவுகள் மீது என்னதான் அன்பு, பாசம் இருந்தாலும், அதையெல்லாம் புறந்தள்ளி பொருளாதார நிலை சார்ந்த சிக்கல்கள் இயல்பாகவே முன்னிலைப் படுத்தபடுகிறது. நகர வாழ்வின் நெருக்கடிகளில், பொருளாதாரச் சிக்கல்களில் முதியவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றார்கள் சிலவேளைகளில் தவிர்க்கமுடியாமல் என்பதையும் ஓரிரு காட்சிகளில், அயல் வீட்டில் குடியிருக்கும் பெரியவரின் பேச்சு வாயிலாக சொல்லிவிடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எண்பதுகளில் நடைபெறுகின்ற கதை எனினும், இன்றைய காலகட்டத்திலும், எதிர்காலத்திலும் பலரும் எதிர்கொள்ளும், கொள்ளப்போகும் வாழ்க்கைதான். சொந்த ஊரில், அயலவர்களோடு அளவளாவிக் கொண்டு தம் போக்கில் வாழ்ந்துகொண்டிருந்த நம் தாத்தாக்கள், பாட்டிகள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எல்லா வசதிகளும் இருந்தும், நடைமுறையை ஏற்றுக் கொண்ட போதும், ஏதோ ஒரு தருணத்தில் இழந்துவிட்ட தம் இயல்பான வாழ்க்கையைக் குறித்த ஏக்கத்துடன் வாழ்வதைப் பார்க்கிறோம். வயதானவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் தனிமையுணர்வு, தாம் சரியாக மதிக்கப்படவில்லை எனும்போது அல்லது அப்படித் தோன்றும்போது ஏற்படும் அயர்ச்சி, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இடமாற்றம், அந்த மாற்றங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிக்கள், நகர்புற மத்தியத்தர வாழ்க்கை தரும் பொருளாதார அழுத்தங்கள், அதனாலேற்படும் ஏற்படும் உறவு சிக்கல்கள் இவை பற்றி பேசுவதற்கான தேவை எப்போதுமே இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சொக்கலிங்க பாகவதர். என்ன ஒரு நடிகன்! தமிழ்சினிமாவில் இப்படி ஒரு நடிகரைப் பார்ப்பதே எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது. மிகை நடிப்பு, தேவையே இல்லாமல் உரத்த குரலில் பேசுவது, நாடக பாணியில், குறிப்பாகத் தெருக்கூத்து வகையான நடிப்பையே சினிமாவிற்கும் வழங்கி அதையே நடிப்பு எனக் கொண்டாடி வரும் நமது பாரம்பரியத்தில் சொக்கலிங்க பாகவதர் போன்ற ஒருவர் தமிழ் திரையுலகத்தால் கண்டுகொள்ளப்படாததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இயக்குனர் பாலுமகேந்திராவைத் தவிர வேறு எவரும் அவரை இந்த அளவுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறார்களா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பம்பரம் விடும்போது அவர் முகத்திலிருக்கும் குழந்தைத்தனமான ஆர்வம், ஒரு குறும்புச் சிரிப்பு, தன் மனைவியை அழைக்கும்போது குரலில் இருக்கும் காதல், (ஆம் அப்படித்தான் தோன்றுகிறது. அது பாலுமகேந்திராவின் எப்போதும் தீராத காதலின் தாக்கமாகவும் இருக்கக் கூடும்) குளித்துவிட்டு வரும் பாட்டியைப் பார்த்ததும், "ஏண்டி ஜுரமும் அதுவுமா குளத்துல குளிச்சிட்டு வர? வெந்நீர் போட்டிருக்கலாம்ல?" எனும்போது தெரியும் பரிவு, பாட்டி கொடுக்கும் தேநீரை ஒரு மிடறு குடித்துவிட்டு கொடுக்கும் எதிர்வினை ஒன்றே போதும். தன்மேல் கோபமுற்றிருக்கும் மருமகள் மருத்துவமனை வாசலில் சைக்கிள் ரிக்ஷாவில் வீடு திரும்பப் போகிறாள். தன்னையும் அழைப்பாளா எனத் தயங்கி நிற்கிறார். மருமகள் கூப்பிட்டதும் சிறு சிரிப்புடன் சின்ன குழந்தை போல் ஓடி வருவது, குழந்தை வள்ளியின் கால்களை தன் மடியில் போட்டு கொள்வது, அவ்வப்போது சிரித்துக் கொள்ளும் குழந்தைச் சிரிப்பு என சொக்கலிங்க பாகவதர் அசத்துகிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதியோர் இல்லத்தில் சேரும்போது அவர் பார்த்த தொழில் என்ன என்கிறார்கள். நாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தேன் என்கிறார். வேற என்ன தொழில்? எனக்கேட்க ஒரு பண்ணையாரிடம் கணக்கெழுதிக் கொண்டிருந்ததாகச் சொல்கிறார். ஆயினும் தனது தொழிலை 'நடிகன்னே போட்டுக்க' எனச்சொல்லும்போது முகத்தில் அப்படியொரு பெருமை, சிரிப்பு! தொடர்ந்து தான் நடித்த நாடகத்தின் காட்சியொன்றை பாடி, நடித்துக் காட்டுகிறார். அதுவரை இருந்த சொக்கலிங்க பாகவதர் ஆளே மாறிப்போய் இளைஞனாகியதுபோல மிடுக்குடன் நிற்கும் காட்சி, பின்னர் தன்னை பார்க்க வரும் மருமகளை தன் சகாக்களிடம் அறிமுகப்படுத்தும்போது, ஒரு பாட்டிக்கு ரொம்பவே மறதி எனும்போது தனது வாயையும் பொக்கையாகச் செய்து காட்டுவது என அதகளம் செய்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த முதியோர் இல்ல வாழ்க்கை அவருக்கு ஏராளமான நண்பர்களைப் பெற்றுக் கொடுக்கிறது. இழந்துவிட்ட பழைய கொண்டாட்டமான வாழ்க்கையை மீட்டுக் கொடுப்பதாக இருக்கிறது. சொக்கலிங்க பாகவதர் தன் மருமகளுக்கு முதியோர் இல்லத்தைச் சுற்றிக் காட்டும் காட்சியைக் கவனித்துப் பார்த்தால் புரியும். தன் சொந்த வீட்டைச் சுற்றிக் காட்டுவதுபோல ஒரு பெருமை, பூரிப்பு அவர் முகத்தில். சூழ்நிலை காரணமாக தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட அழகான வாழ்க்கை மீளக் கிடைத்துவிட்டதைப் போன்ற உற்சாகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போது சினிமா ஆர்வலர்களால் முக்கியமானதாகக் கவனிக்கப்படுகிற ஈரானிய சினிமா எப்போது உருவானது அல்லது எப்போது முதல் உலகின் பரவலான கவனத்தைப் பெறத் தொடங்கியது எனத் தெரியவில்லை. எனது நண்பன் யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது Baran படத்தைப் பார்த்துவிட்டு அதுபற்றிச் சொல்லியிருந்தான். நான் முதன்முதலில் பார்த்தது 2007ல் Children of Heaven திரைப்படம். வெளியாகிப் பத்து வருடங்களின் பின்னரே. இங்கே ஈரானிய சினிமா பற்றிப் பேசியது ஏனெனில், சந்தியாராகம் பார்க்கும்போது எனக்கு ஈரானியப் படங்கள் பார்ப்பது போன்ற ஒரு உணர்வே ஏற்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஈரானியப் படங்கள் போல என்று சொன்னதற்கு இன்னுமோர் காரணம், படத்தில் எல்லோருமே நல்லவர்கள். அன்பு நிறைந்தவர்கள். அதை, வெளிப்படுத்தும் விதம் வேறுபடுகிறது. தவிர, சூழ்நிலை, இயலாமை காரணமாக அவ்வப்போது தமக்குள் முரண்பட்டுக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். இயக்குனர் பாலுமகேந்திராவுடன் பழகியவர்கள் கூறும் சம்பவங்கள் நினைவுகள் ஒவ்வொன்றும் அழகானவை. முழுக்க முழுக்க அன்பாலும், ரசனையாலும் நிரம்பிய வாழ்வைக் கொண்டாடிய கலைஞன். அவர் படைப்புகளிலும் அதையே பிரதிபலிக்கக் காண்கிறோம். அவற்றில் அன்பும், மெல்லிய உணர்வுகளும், உளச்சிக்கல்களும், தீராத காதலும் நிறைந்த அழகியல் விரவிக் கிடக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்சினிமாவில் பாலுமகேந்திரா சரியானபடி பேசப்படவில்லையோ, கொண்டாடப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. தமிழர்களின் வழமைபோல இறந்த பின்னர், சமீப காலமாகத்தான் அதிகம் பேசப்படுகிறார். ஒரு நல்ல படைப்பாளியின் உண்மையான வெற்றி என்பது அவர் உருவாக்கிச் சென்ற, தன் நீட்சியாக விட்டுச் சென்றிருக்கும் படைப்புகள் மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கான தன் வாரிசுகளும்தான். அவரின் சிஷ்யர்களே போதும் - அவர்கள்மீது எவ்வாறான விமர்சனங்கள் வைக்கப்ப்படும்போதிலு! பாலா, ராம், வெற்றிமாறன் போன்றோர் அவர்பற்றிக் கூறும்போதெல்லாம் பிரமிக்க வைக்கிறது, அன்பினால் கட்டமைக்கப்பட்ட அவர் சாம்ராஜ்யம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதிகாலையில் கிராமத்தில், பெண்கள் நடந்து செல்லும் படத்தின் ஆரம்பக் காட்சி, குளத்தில் ஆரவாரமாக செல்லும் எருமைகள், சென்னையில் நடுத் தெருவில் மரங்களின் ஊடே விழும் சூரிய ஒளி போன்ற கட்சிகளைப் பார்த்தபோது வண்ணத்திரைப்படமாக எடுத்திருந்தால் இன்னும் நன்றாயிருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனாலும் கருப்பு - வெள்ளை காட்சிகளின் ஆழத்தை, தாக்கத்தை அதிகமாக்கும் என்பதால் அதுவே பாலுமகேந்திராவின் விருப்பமாகவும் இருந்ததாகச் சொல்கிறார்கள். நண்பர்கள் சிலர் அப்படியும் சொல்கிறார்கள் வண்ணத் திரைப்படமாகப் பார்த்ததாக. நான் யூ-டியூபில் தரவிறக்கியே பார்த்தேன். பாலுமகேந்திராவின் படங்களை அப்படித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது என்பது மிகுந்த கவலைக்குரியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சந்தியாராகத்தை வண்ணத்திரைப்படமாகப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படக் இன்னுமோர் காரணம், 'அழியாத கோலங்கள்' படம்தான். ஆணுறையில் பலூன் செய்து விளையாடியபடி long shot இல் சிறுவர்கள் நடந்து வரும் காட்சி ஒன்றே போதும் ஒளிப்பதிவு பற்றிச் சொல்லிவிட. அவ்வளவு அழகானது. பாலுமகேந்திராவின் இளமைக்காலத்தின் பாதிப்பெனில், என்னமாதிரியான கொண்டாட்டமான வாழ்க்கை அது! என்னை மிகக்கவர்ந்த படம். அதையும் இந்த வருடம்தான் பார்த்தேன். விடலைப் பருவப் பையன்களின் உணர்வுகளை, வாழ்க்கையை தமிழில், வேறெந்தப் படமும் பதிவு செய்ததில்லையெனச் சொல்லப்படுகிற அற்புதமான, ரகளையான படைப்பு. மிக முக்கியமாக ஒளிப்பதிவு. அந்த வயதினருக்கே உரிய குறும்பும், விளையாட்டுத்தனங்களும், புதிதாக அறியும் எதையும் முயன்று பார்க்கும் ஆர்வமும் அப்படியே பதிவுசெய்யப்பட்டிருக்கும். சிகரெட் பிடிக்கும் காட்சியும் அப்படியே. ஓர் இளைஞன் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதைப் பார்த்துவிட்டு அதனால் கவரப்பட்டு, ஒருமுறையேனும் முயன்று பார்த்தவர்கள், ஊதுபத்திக் குச்சியைப் பேப்பரால் சுத்தி புகைத்தவர்கள், குறைந்தபட்சம் நினைக்காதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதேபோல, 'வீடு' - மத்தியதர வர்க்கத்தினரின் மிக முக்கியமான கனவு பற்றிய படம். இன்றும், எந்தக்காலத்திற்கும் பொருத்தமான படம். காலத்தால் அழியாத படைப்பு என்றுமட்டும் பாலுமகேந்திரா படங்களைச் சொல்ல முடியாது. ஏனெனில் அவரின் அநேகமான படங்களுக்கான பிரதிகள் அவரிடமே இல்லையென, அழிந்துபோய்விட்டதென வருத்தப்பட்டிருந்தார். எந்தக் கலைஞனுக்கும் நேரக்கூடாத சோகம் அது. உலக சினிமா விரும்பிகள் அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டிய படங்கள் 'சந்தியாராகம்', 'அழியாத கோலங்கள்', 'வீடு'. தமிழிலும் பல வருடங்களுக்கு முன்பே உலக சினிமா எடுத்த படைப்பாளி இருக்கிறான் எனக் கொண்டாடலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதிய கட்டுரை இது!</div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-62845526658412089712014-09-08T10:38:00.002+05:302014-09-08T10:38:23.393+05:30A Gun and a Ring : புதிய ஆரம்பம்!<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-4WRkEspmRls/VA01pQS6E0I/AAAAAAAAADs/gkdGw9ykW9M/s1600/A-Gun-And-A-Ring.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-4WRkEspmRls/VA01pQS6E0I/AAAAAAAAADs/gkdGw9ykW9M/s1600/A-Gun-And-A-Ring.jpg" height="245" width="400" /></a></div>
<br />
<br />
ஆரம்பத்தில் அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கவில்லை. காரணம் நாம்தான். 'எம்மவர் படைப்பு' என்ற அடையாளம், மிகைப்படுத்தப்பட்ட பெருமைகளுடன் வெளியாகும் வஸ்துகள்- ஈழத்து முயற்சி என்று ஆரம்பித்தாலே தெறித்தோடும் நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. நேர்மையாகச் சொன்னால், சில நண்பர்களின் முயற்சிகள் தவிர, 'ஈழம்', 'இலங்கை' என்றாலே படமோ, பாட்டோ எதுவானாலும் நான் மறந்தும் 'கிளிக்' செய்வதில்லை.<br />
<br />
A Gun and a Ring படம் குறித்துப் பேசப்பட்டபோதும் வழமை போலவே முதலில் நினைத்தேன். பின்பு வழமையான முயற்சிகளை விட நல்லதாக இருக்கலாம் என நம்பினேன். பார்த்தபோதுதான் தெரிந்தது நிச்சயமாக எம்மவரின் பெரியதொரு பாய்ச்சல். கொழும்பிலிருந்து கொண்டு படம் பார்க்க வராதவர்கள், ஒரு நல்ல அனுபவத்தைத் தவற விட்டுள்ளார்கள். நிச்சயமாக அவர்கள் மீது மட்டும் தவறல்ல. மேற்சொன்ன 'ஈழத்து, அனுபவம்தான் முக்கிய காரணம்!<br />
<br />
எமது ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளை, புலம்பெயர் நாடொன்றில் பிறந்து வளரும் இளம் சமுதாயத்தின் உணர்வுகளை, அவர்களுக்கும் பாரம்பரிய சமூகக் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பெற்றோருக்குமிடையான முரண்பாடுகளை, பாதுகாப்பான நாடு என நாம் நம்பிக் கொண்டிருக்கும் வெளிநாடுகளில் துரதிருஷ்டவசமாக எதிர்கொள்ள நேரிடும் பிரச்சனைகளை, முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, எப்போதும் உடனிருந்து கொல்லும் உளவியல் பிரச்சனைகளை மிகை நடிப்போ, திணிக்கப்பட்ட வசனங்களோ இல்லாது மிக இயல்பாகப் பேசுகிறது படம்.<br />
<br />
சமூக சேவகியான மனைவியைப் புரிந்து, இலங்கையில் விட்டுவிட்டு குழந்தையின் நலனுக்காக வெளிநாட்டுக்கு வந்த, பிறருக்கு உதவும் உறுதியான மனம் படைத்த நல்லவரான சொர்ணம் - ஆரம்பகால இந்திய பயிற்சி முகாமிலிருந்து வெளியேறி கனடா வந்த, எளிதில் பதற்றமடையும், பழைய நினைவுகளால் அலைக்கழிப்பால் எதையும் உருப்படியாகச் செய்ய முடியாத குழப்பவாதியான ஞானம் - போரினால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தில் தான் மட்டுமே எஞ்சிய, பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்யும் இலட்சியத்தில் ஒருவனால் வரவழைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்ட திடமான இளம்பெண் அபி - எப்போதும் நிதானமாக, உணர்ச்சி வசப்படாத, குற்ற உணர்ச்சியில்லாமல் பழைய வாழ்க்கையை வன்முறையை மறந்து விட்டு அல்லது உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்க அமைதியாக வாழும் அரியம் - தனது இரையைத் தேர்ந்தெடுத்துவிட்ட ஒரு சைக்கோ சீரியல் கொலைகாரனைக் கண்காணிக்க வரும் பொலிஸ் புலனாய்வாளன் ஜோன் - அப்பாவின் அறிவுரையைக் கேட்டு விலகிய தன்னால்தான் நண்பன் தற்கொலை செய்துகொண்டான் என நம்பும் ஓரினச் சேர்க்கையாளன் ஆதி - இவர்களைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு நகர்கிறது கதை.<br />
<br />
இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேடிக்கொள்ளும் முடிவுகள் தனித்தனியான தலைப்புகளுடன் (அத்தியாயங்கள்?), அவை ஒன்றுடனொன்று எப்படிச் சம்பந்தப்படுகின்றன என்பதையும் தெளிவான திரைக்கதையூடாக இணைக்கப்பட்டிருக்கின்றது. (இந்த தலைப்புகள் போடுவதை பார்த்ததுமே மிகுந்த உற்சாகமானேன். படத்தின் இயக்குனர், டெரண்டினொவின் தீவிர ரசிகராக இருப்பாரோ என்று தோன்றியது)<br />
<br />
படத்தின் ஆரம்பக் காட்சிகளிலும், இடையிலும் தொடர்ந்து சில கேள்விகள் எழ வைத்து, பின்னர் படிப்படியாக முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே செல்கிறது படம். ஒரு அத்தியாயத்தின் காட்சியில் பார்வையாளனுக்குத் தோன்றும் கேள்விக்கு, இன்னொரு அத்தியாயத்தின் முடிவில் பதில் கிடைக்கிறது. ஒரு சில காட்சிகள் நம்மை ஒன்று நினைக்க வைத்து அதற்கு மாறாக, சில சமயங்களில் அது ஒரு விஷயமாகவே இல்லாமல் ஆக்கிவிடுவது ரசிக்க வைக்கும் உத்தி.<br />
<br />
கத்தியைக் கண்டு பதற்றமடைகிறது ஒரு பாத்திரம். அதற்குக் காரணம் கத்தி சார்ந்து ஒரு அதிர்ச்சிகரமான பழைய சம்பவம் இருக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால் அப்பிடியிருக்க எந்த அவசியமும் இல்லை. வாழ்க்கையில் சிலவிஷயங்களிற்குப் பதில் 'அது அப்படித்தான்' மட்டுமே!<br />
<br />
இருள் சூழ்ந்த அறையில் கையில், பச்சை குத்திய காதலியின் பெயரை அழிக்கமுயலும், கைத்துப்பாக்கியால் தற்கொலைக்கு முயற்சிக்கும் ஒரு பாத்திரம் போதைப்பொருள் கடத்துபவனாகவோ, சமூக விரோதியாகவோ, கோழையாகவோ இருக்க வேண்டிய அவசியமுமில்லை. நேர்மையான, மனச்சாட்சியுள்ள பொலிஸ் புலனாய்வாளனாகக் கூட இருக்கலாம்.<br />
<br />
என்னை மிகக்கவர்ந்தது அரியம்- ஞானம் காட்சிகள்தான். "…ஏனண்ணே கொல்லுறதெண்டு முடிவெடுத்தா எத்தின வழி இருக்கு. கத்தி இருக்கு... ஏன் அடிச்சு..?" என்று கேட்கும்போது ஞானத்தின் முகத்தில் இயலாமை, விரக்தி, மன்றாட்டம் போன்ற உணர்ச்சிகள்! அப்படிக்கேட்கும்போது இலேசாக சிரிக்கக்கூடத் தோன்றியது எனக்கு மட்டும்தானா தெரியவில்லை. அதுபோல அரியம் திடீரென மாறும் பழைய இரும்பனாக திகைக்க வைக்கிறார்.<br />
<br />
ஆரம்பத்தில் குழப்பவாதியாக அறிமுகமாகும் ஞானம், எப்போதும் அப்படியே இருக்கிறார். எதிலும் தெளிவில்லாதவர்கள் எளிதில் பதற்றமடைபவர்கள் தமக்கு மட்டுமன்றிக் கூட இருப்பவர்களுக்கும், சமயத்தில் எந்த சம்பந்தமில்லாதவர்களுக்கும் சேர்த்தே பிரச்சினையை ஏற்படுத்திவிடுகிறார்கள். எளிதில் பதற்றமடையாத சாதுவாக அறிமுகமாகும் அரியம், பின்பு காட்டும் சடுதியான மாற்றம் அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர் எப்போதும் அப்படியே இருக்கிறார். பதற்றமடையாமல் நிதானமாக நடந்துகொள்ளும் அவர் பெயர் வேறு இரும்பன். அட்டகாசமான சேஞ்ச் ஓவர்.<br />
<br />
பக்கத்திலிருந்த நண்பன், 'இரும்பன்' தனது ஊர் என்றார். இன்னொரு நண்பன் இரும்பன் கதாபாத்திரம் யாரென்று இன்னொருவரைச் சொன்னார். இரும்பனின் தோற்றம் பார்த்தவுடனேயே ஒருவரை ஞாபகப்படுத்துகிறது. ஆக, ஒருகாலத்தில் நிறைய இரும்பன்கள் இருந்தது, இப்போதுமிருப்பது தெரிகிறது. படத்தில் யார் எந்த இயக்கம் என்று சொல்லாமலே அவரவர் ஊகத்திற்கு விட்டுவிடுவது மிகக் கவர்கிறது. அது மிகச்சரியான வழிமுறை. உண்மையில் எல்லா இயக்கத்துக்கும் சில பக்கங்கள் ஒரே மாதிரியானவைதான்!<br />
<br />
முதலில் மிகக்கவர்ந்தது தமிழ். யாழ்ப்பாணத்துத் தமிழ் மிகச் சரியாகவே பயன்படுத்தபட்டிருப்பதாக நினைக்கிறேன். (நினைக்கும் அளவுக்குத்தான் எனக்குத் தெரியும்). படம் தொடங்கும்வரை நம்பிக்கையில்லாமல் இருந்தது படத்தின் பேச்சு மொழி குறித்துத்தான்! 'தெனாலி' உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் யாழ்ப்பாணத் தமிழ் பற்றிக் கவலைப்படும் நாங்கள் இலங்கை - புலம்பெயர் படைப்புகளின்(?!) கொடூரங்கள் பற்றிக் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக கதநாயகி எப்படிப் பேசுகிறார் என்பதைப் பார்க்கும் ஆவலிருந்தது. அவர்களுக்கென்றே தனிமொழி இங்கே இருப்பதாகத் தெரிகிறது. சந்தேகமிருந்தால் நம்மவரின் காணொளிகளைப் பார்க்கவும். பேச்சுமொழியைச் சிறப்பாகக் கொண்டுவந்ததற்கே இயக்குனர், நடிகர்களுக்கு விருது கொடுக்கலாம். உண்மையில் வெளிநாடுகளில்தான் எண்பதுகளில் வெளியேறிய நம்மவரிடம்தான் உண்மையான, முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் கேட்ட பேச்சு மொழி இன்னும் வழக்கில் இருப்பதாகத் தோன்றுகிறது.<br />
<br />
எம்மவர்களின் படைப்புகளை ஊக்குவிக்கும் இணையத்தளங்கள் மிகக் கேவலமான குப்பைகளை மன்னிக்கவும் 'படைப்புகளை' எல்லாம் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுகின்றன. இதனால் உண்மையிலேயே நல்ல படங்கள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடும் அபாயம் எதிர்காலத்திலும் நிகழலாம். மிகக் குறைந்தபட்ச பொறுப்புடனாவது நடந்துகொள்வது அவசியம். ஏனெனில், படம் பார்க்க வந்தவர்களில் தமிழர்களை விட சிங்களவர்களே அதிகம் என்று தோன்றுகிறது. இலங்கையில் திரையிடச் சாத்தியமில்லாத, சென்சாரில் தப்ப முடியாத இந்தப்படத்தை சிங்களவர்களுடன் இணைந்து திரையரங்கில் பார்த்தது கூட ஒரு வித்தியாசமான அனுபவமே.<br />
<br />
நம் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் கட்டாயமாகப் பார்க்க வழிசெய்வது நம் சமுதாயத்துக்கு மிகுந்த நன்மை பயக்கும். 'எங்கட பெடியள் ஏதோ செய்ய வெளிக்கிடுறாங்கள். எங்களால முடிஞ்சத செய்யவேணும்' - என்ற நல்ல மனதுடன் என்ன ஏது என்றே கேட்காமல் பணத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய அதிகார்வலர்கள், யாரோ ஒரு 'மங்களம் சாரி'ன் பணத்தில் எதுவுமே இல்லாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் கமெராவைத் தூக்கிக்கொண்டு படம் எடுக்கக் கிளம்புபவர்கள், கொலை வெறியுடன் சுற்றிக் கொண்டிருக்கும் கலையார்வலர்கள் 'படம் பார்க்கக்' கற்றுக்கொள்ளவும், பலர் இதையெல்லாம் கைவிட்டு, மனந்திருந்தி வாழவும் வாய்ப்பிருக்கிறது.<br />
<br />
நடிகர்களின் தேர்வும் நடிப்பும் இயல்பாக, கவர்கிறது. பேச்சு மொழி அவ்வளவு அருமையாக உள்ளது முக்கியமாகக் கதாநாயகியைத் தனியாகவே பாராட்டலாம் - ஏனெனில் அவர்கள்தான் வழமையாக அதிகம் அச்சமூட்டுபவர்கள். இரும்பன், ஞானம் கதாபாத்திரங்களின் பாதிப்பு இரண்டு நாட்களுக்கு இருக்குமென நம்புகிறேன். காட்சிகளின் நீளம், சில தெளிவின்மை, ஒளிப்பதிவு என்பன பற்றி தேர்ந்த விமர்சகர்களுக்கு புகார்கள் இருக்கலாம். உலக சினிமா, ஹொலிவூட், தமிழ் சினிமா என்று ஒப்பிட்டு நம் திறமை சார்ந்து பேசிக் கொள்ளலாம். ஆனால், ஒரு சாதாரண பார்வையாளனான என்னை அப்படியே ஈர்த்துக் கொண்டது. எனக்கு படம் பார்க்கும் அந்த நேரத்தில் கிடைத்த அனுபவம், நான் எதிர்பார்த்ததற்கு மிக மிக அதிகமானது.<br />
<br />
இது முழுக்க முழுக்க எம்மவர் அடையாளத்துடன் வந்திருக்கும் படம். இந்தத் திரைக்கதையமைப்பு தமிழ்ப்படங்களில் இதுவரை வந்ததாகத் தெரியவில்லை. தவிர, எடுத்தாளப்பட்டிருக்கும் பிரச்சினைகள், களம் முழுக்க எங்களின் வாழ்வும், ஒரு முழு நீளத்திரைப்படமாக முற்றிலும் புதிதானது என்றே நம்புகிறேன். நிச்சயமாக, மனப்பூர்வமாகவே எம்மவரின் சினிமா என்று பெருமை கொள்ளலாம்!<br />
<br />
இயக்குனர் - லெனின் M. சிவம்<br />
மொழி - தமிழ்<br />
நாடு - கனடா<br />
<br />
<a href="http://www.4tamilmedia.com/knowledge/essays/25636-a-gun-and-a-ring" target="_blank">(4தமிழ்மீடியாவில் வெளியான என் கட்டுரை இது) </a></div>
jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.com1