Friday, July 26, 2013

இந்த வாய் இருக்கே...



லுவலகத்தின் டைனிங் ஏரியாவில் ஓரிருவர் வேலை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். 
பக்கத்திலிருந்த சிங்களப் பெண், "என்ன சொல்றாங்க?" 
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். உடனே கேட்டாள் 
"உனக்கு சிங்களம் தெரியுது. தெரியாதுன்னு சொல்லிட்டிருக்கே?" ஆகா நமக்கு டெஸ்ட் வச்சிருக்காளா இது தெரியாம..
"அப்பப்ப கொஞ்சம்...வேலை சம்பந்தப்பட்ட விஷயம்னா புரியும்"
"அப்போ நாங்க பேசுறது எல்லாம் கேப்பியா?"
"என்னாதிது? அஃபீஸ்ல இருந்து நீ பேசினா……  ஏதோ ஒட்டுக் கேட்ட மாதிரி ரியாக்ட் பண்றே?"

அவள் சிரிச்சுட்டுத் தன்பாட்டுக்குதான் இருந்தாள். நம்ம வாய் இருக்கே வச்சுட்டு சும்மா இல்லாமல்,

"ஹே நீ ஒண்ணும் கவலைப்படாதே நீ boy  ஃபிரெண்ட் கூடப் பேசுறது எனக்குப் புரியாது. அந்த டெக்னிக்கல் டெர்ம்ஸ்(?!) எல்லாம் எனக்குத் தெரியாது" - அவ்வளவுதான்!

அப்படியே சிரிப்புடன் என்பக்கம் திரும்பி, "உனக்கு கேர்ள் ஃ பிரண்ட் இருக்கா?" 
"இல்ல.." - தேவையா எனக்கு? 
ரோலிங் செயார பக்கத்தில மூவ் பண்ணி 
"பொய் சொல்லாதே! ப்ளீஸ் சொல்லு! ஏன நீ எப்பப் பார்த்தாலும் பொய் சொல்றே?" 
"அடங்கொன்னியா இது வேறையா? ஏய் இது இப்ப ரொம்ப முக்கியம் போ போய் வேலையைப் பாரு வேலையப்பாரு!"  

தேவையிலாத நேரத்தில வாயத் திறக்காம இருந்தாலே வில்லங்கத்தை  தவிர்க்கலாம். அதுக்காக தேவையான நேரத்தில மட்டும் வாயத் திறந்தா வில்லங்கம் வராதுன்னு இல்லை. அப்பவும் வரும்
 - ஆனா தவிர்க்கமுடியாது. 

சரி தேவையிலாத நேரத்திலயும், தேவையான நேரத்திலயும் வாயை திறக்காம இருந்தா வில்லங்கம் வராதா? அப்பிடின்னு கேட்டா…அப்பகூட வரும்! 
ஏன்னா நாமதான் வாய மூடிட்டு இருப்பமே தவிர, நம்ம நண்பர்கள் எங்காவது இசகு பிசகா வாயத் திறந்திருக்கலாம்.

ண்பன் நைனா எதையும் வெளிப்படையாக, யோசிக்காமல் பேசும் நல்லவன். அவன் என் இன்னொரு நண்பனைப் பார்த்திருக்கிறான். அவன் ரொம்ப நல்லவன். சென்சிடிவ்வான பேர்வழி. சின்ன விஷயத்துக்கும் நிறைய ஃபீல் பண்ணுவான்.

நண்பனுக்கு நைனாவை முதலில் சரியாக அடையாளம் தெரியல. அப்பிடியிருக்க, நைனா கீழ்க்கண்டவாறு நலம் விசாரித்திருக்கிறான்.

"என்ன மச்சான் வேலையை விட்டுட்டியா?"
"ஓமடா..யார் சொன்னது?"
"ஜீ சொன்னான்டா"

எல்லாத்தையும் பண்ணிட்டு சின்சியரா எனக்குத் தொலைபேசி,
"மச்சான் Sorryடா இப்பிடிக் கேட்டுட்டன் என்ன நினைச்சானோ? பக்கத்தில வைஃப் வேற..."
"அடப்...பாவி!"

எப்பிடிடா இருக்கே? நல்லா இருக்கியா? இப்பிடித்தானே நலம் விசாரிப்பாங்க? அதானேய்யா உலக வழக்கம்? ‘வேலையை விட்டுட்டியா’- இது புதுசால்ல இருக்கு!

ண்பனைக் கண்டா நலம் விசாரிக்கிறது தப்பில்ல. ஆனா இன்னொரு நட்பைக் கோமா ஸ்டேஜில படுக்க வைக்கிற அளவுக்கு நலம் விசாரிக்கிறதுதான் தப்பு!

தை விட இன்னொரு டைப் இருக்கு. வோன்டட்டா போய் வடைச்சட்டிகுள்ள வாயை வைக்கிறது. வில்லங்கத்தை விலைக்கு வாங்கிறதைவிட நாமளே உருவாக்கினா என்ன? அப்பிடீன்னு யோசிக்கிற விஞ்ஞானிகள் கோஷ்டி!

"ச்சே! செம்ம பல்பு மச்சி! என்ன நினைச்சிருப்பான்... ச்சே"
நண்பன் ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தான்.
"என்னடா?"
"இல்ல மச்சான் அஃபீஸ்ல ஒருத்தி பயங்கர ஓவரா டிரஸ் பண்ணிட்டு வருவாள்"
"தமிழா?".
"ஒரு தமிழ் அப்பிடி வந்தாத்தானடா நியூஸ்?
"ஆமால்ல"

"அவளுக்குச் சம்பந்தமே இல்லாம டைட்ட்ட்டா என்னமோ கவர்ச்சிப் புயல் மாதிரியே வருவாள். சிங்கள கேர்ள்ஸ் கூட அங்க அப்பிடி வர்ரதில்ல. எல்லாரும் ஒரு மாதிரியா, கேவலமா பார்ப்பாங்க. பாக்க எங்களுக்கே அந்தரமா, எரிச்சலா இருக்கும். அண்டைக்கு ஆக ஓவரா வந்தாள் செம்ம காண்டாகி, பக்கத்தில இருந்த ஒரு அண்ணன்கிட்ட புலம்பிட்டேன். இதுகளை மாதிரி ஒண்டு ரெண்டுதான் எல்லாரையும் கேவலப்படுத்துதுகள். தமிழாக்களின்ர மானத்தை வாங்குறதுக்குன்னே வந்திருக்குதுகள். இதை எல்லாம் எங்கிருந்து பிடிச்சுக்கொண்டு வந்தாங்களோ? அப்பிடீன்னு"

"சரி அவன் என்ன சொன்னான்?"
"அவன் ஒரு நல்ல பெடியன் மச்சான். நெத்தியில வீபூதி வச்சுட்டு வாற பழம். அவனும் ஓமோம் எண்டு சீரியஸா கேட்டுக் கொண்டிருந்தான்"

"மச்சி இது நல்லால்ல! ஒருத்தி எப்படி வந்தா என்ன? அவள் டிரெஸ்ல அவளுக்கும், வீட்டுக்காரருக்கும் இல்லாத அக்கறை எங்களுக்கெதுக்கு? உனக்கு பிடிச்சிருந்தா சைட் அடி! பிடிக்கலன்னா கண்டுக்காத! நீங்க கலாச்சாரத்தைக் காப்பாத்துறீங்களா? அதென்ன திடீர்னு தமிழாக்களின் மானம், தமிழன் பெருமைன்னு, நல்லாத்தானே இருந்தே? டீவில ஏழாம் அறிவு பார்த்தியா?"

அவசரமாக இடைமறித்தான், "டேய் அவள் வர்றாள்டா....இங்கதாண்டா இருக்கிறாள் நேற்றுத்தான் தெரியும்" 

இன்னொரு நண்பனின் ஃபிளாட்ஸ்க்கு எதிரில்தான் நின்றுகொண்டிருந்தோம். அவள் கண்டுக்கல! கூட வந்தவர் நண்பனைப் பார்த்துச் சிரித்து "பார்ட்டி ஒண்டுக்குப் போறம்" சொல்லிட்டுப் போனார்.

"பாரு மச்சி! அந்தப் பொண்ணு பார்ட்டிக்கே பவ்வியமா மாரியம்மன் கோயில் குடை மாதிரி பச்சைக்கலர்ல ஒரு சிங்குச்சா சுடிதார் போட்டுட்டுப் போகுது அதப்போய் தப்பா பேசியிருக்க ராஸ்கல்.... ஆனா ஒண்ணு மச்சி இந்தப்பொண்ணு நீ சொன்னமாதிரி டிரஸ் பண்ணும் அப்பிடின்னு யோசிச்சா எனக்குக்கூட  லைட்...டா கோபம் வரத்தான் செய்யுது. அத விடு இப்ப என்ன பிரச்சினை?"

"தேவையில்லாம கதைச்சு... அவளுக்கும் தெரிஞ்சுதோ?"
"அதெப்பிடிறா தெரியும்? அந்தப் பழம் இதைப்போய் சொல்றானா?"
"டேய் அவன்தாண்டா இப்ப அவளோட போனது"

"....??"

"அந்தப்பழம் அவளின்ர அண்ணன்டா நேற்றுத்தான் தெரியும்!"

5 comments:

  1. பேசாம அந்த வாஇயை தைச்சு விட்டுட்டா என்ன?!

    ReplyDelete
  2. ஹா... ஹா....
    இதுதான் வாயைக் கொடுத்து மாட்டிக்கிறதா ஜீ...

    ReplyDelete
  3. 'அந்தப் பழம்'??????????என்ன ஒரு அழகான வாய்?ஹ!ஹ!!ஹா!!!!

    ReplyDelete
  4. பழம் கொடுத்த பல்பு-ன்னு சொல்லலாம் போலிருக்கே? அன்னிக்கே வழ்ழுவர் சொன்னாரு..யாரு கேட்கிறாங்க?

    ReplyDelete
  5. ஏம்பா தம்பி ஆளையே காணலே...........

    ReplyDelete