Tuesday, May 28, 2013

எதையும் பிளான் பண்ணி..



'ஞ்சு மணிக்கே இவ்வளவு வெளிச்சமாவா இருக்கு?'

தூக்கத்திலிருந்து விழித்ததுமே ஆச்சரியம்தான்.

ஒருவேளை லேட்டாயிட்டுதோ? லேசா டவுட் வந்ததுமே பாய்ந்தடிச்சு ஃபோனை பார்த்தால் Off! அய்யய்யோ ஆஃப் ஆகி ஆப்படிச்சிட்டுதே! On பண்ணிப் பார்த்தா நேரம் 7.15. ச்சே! எப்பிடி இப்பிடியெல்லாம்? ஃபோன்ல சார்ஜ் இருக்கே? எல்லாம் நம்ம ராசி! 

6.50 க்கு ட்ரெயின். விம்மி இப்ப மைண்ட்ல எப்பிடி திட்டுவான்? அப்பிடியே கண்ணை மூடி மனக்கண்ணை அப்பிடியே ஒப்பன் பண்ணா ரணகொடூரமாக இருந்தது. அப்பிடியே கட் பண்ணிட்டு, அழைத்தேன். இந்தமாதிரியான தவிர்க்கமுடியாத தருணங்களில் பேச்சை எப்பிடி ஆரம்பிக்கிறதுன்னு இப்ப பார்க்கலாம்.

"சொல்லுடா" விம்மி.
"மச்சி போயிட்டா இருக்கே?" - பின்ன அவன் என்ன தண்டவாளத்திலையா படுத்திருக்கப்போறான்?
"ம்ம்ம்" செம்ம காண்டாகி சைலன்டா  இருந்தான்.
அந்தத் துன்பியல் சம்பவத்தைச் சொன்னேன்.
அவன் என்னமோ 'இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டா என்ன?' கவுண்டமணி மாதிரியே கண்டுக்காம, "சரி முக்கா மணித்தியாலத்துக்கு ஒரு பஸ் இருக்கு பிடிச்சு வந்து சேர்"

ஆனா ஒண்ணு இந்தமாதிரி நேரத்தில திட்டாம சைலண்டா இருக்கானே இதத்தான் பக்குவம்கிறது ட்ரெயினிங்காவும் இருக்கலாம். அசந்தர்ப்பமா அண்ணியைப் பாராட்டத் தோன்றியது.

*********

சரியான திட்டமிடலுடன் செயலாற்றும் காரியம் நிச்சயமாக வெற்றிபெறும் என்பது அறிஞர்கள், ஆன்றோர்கள், அனுபவப்பட்டவர்கள், வெற்றிபெற்ற தொழிலதிபர்கள், தமிழர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் தன்னம்பிக்கையூட்டும் '.....எப்படி?' புத்தகம் எழுதுபவர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னதான் திட்டமிட்டாலும் சரியான் நேரத்தில் கனகச்சிதமாகச் சொதப்பிவிடலாம் என்பதை யாராவது அடிபட்டவர்கள் சொல்லியிருக்கிறார்களா தெரியவில்லை. நேரம், ராசி என்று சொல்லப்படுகிற ஏதோ ஒன்று சரியாக அமைந்திருக்கும் பட்சத்தில் எல்லாமே வெளங்கிரும் என்பது என் அனுபவம்.

சனிக்கிழமை வவுனியா செல்வதாக விம்மியும் நானும் முடிவு செய்தோம். அன்றிரவு ஒரு நண்பர்கள் சந்திப்பு. ஞாயிறு நண்பன் திலீயின் திருமண வரவேற்பு. நண்பர்கள் அனைவருக்குமே வாழ்க்கையில் மறக்கமுடியாத அட்டகாசமான காலப்பகுதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் படித்த காலப்பகுதிதான். 

விம்மி டிரெயினுக்கு டிக்கெட் புக் பண்றது, நண்பர்களை செல்பேசில தொடர்புகொண்டு ஒருங்கிணைக்கிறது போன்ற சின்னச்சின்ன வேலைகளைச் செய்தான். நான் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுறது, 'மச்சி நான் வவுனியா போறேண்டா' என்று வெளிநாட்டில இருக்கிற நண்பர்களைக் கடுப்பேத்திறது போன்ற முக்கியமான விஷயங்களைப் பார்த்துக் கொண்டேன்.

அப்பவே லைட்டா உறுத்திச்சு. வழக்கமா நாம எங்க போனாலும் சைலண்டா போயிட்டு வர்றதுதானே வழக்கம். ஏற்கனவே நம்ம ராசி அப்பிடி. எதுக்கு இந்த வேண்டாத வேலை? அப்பிடியெல்லாம் எதுவும் ஆகாதுன்னு எனை நானே சமாதானப்படுத்திக் கொண்டு, அஞ்சு மணிக்கு அலார்ம் செட்பண்ணிட்டு தூங்கிப் போயிட்டேன்.

*********

இனி என்னத்த அவசரப்பட்டு? சரியா 8.50 க்கு கோட்டையில் இறங்கி, தனியார் பேரூந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். அந்தப்பக்கம் கடைசியா 2008ல போனது. போக வேண்டிய தேவை இருக்கவில்லை. அங்க போனா அடுத்த அதிர்ச்சி! 'அய்யய்யோ இதுலருந்த பஸ் ஸ்டாண்ட் எங்க?' 
பக்கத்தில நின்ற ஆட்டோக்கார அங்கிளிடம் கேட்டேன்.

என்ன இருந்தாலும் சிங்களவர்களுக்கு மொழிப்பற்று அதிகம் இருக்கும்போல. தம் மொழியை யாரும் கொடூரமாகக் கொலை செய்வதை விரும்புவதில்லைப் போலும். ஓரிரு வார்த்தைதான் சிங்களத்தில பேசினேன். அதுக்கே பொறுக்க முடியாமல் உடனேயே தெளிவான தமிழில் பேச ஆரம்பித்துவிட்டார். நம்மைப் போல பலரால் பாதிக்கப்பட்டிருப்பார் போல! "அப்பிடியே நேராப்போய் ரோட் க்ரொஸ் பண்ணினா அந்தப்பக்கமா இருக்கு" நான் வந்த வழியைக் காட்டினார்.

ஆர்வலர்கள் கவனிக்க; தமிழை இப்படியும் வளர்க்கலாம்!

பஸ்ஸைப் பிடிச்சு நாலுமணிக்கு வவுனியா போயிட்டேன். மூன்று மணித்தியாலம் லேட்! மற்றபடி எல்லாம் திட்டமிட்டபடி நிகழ்ந்தது!

அதுக்குள்ளே விம்மி காலைலயே என் ஸ்டேட்டஸ்ல கமெண்ட் பண்ணியிருந்தான். இவ்வளவு பில்டப்புக்கும் நோ யூஸ். கடைசில 'பூட்'  குடுத்துட்டான். (எவ்வளோ நாளைக்குப் பிறகு நாங்க யூஸ் பண்ணின இந்த ஸ்லாங் கேக்கிறேன்)

அடுத்தநாள் ஹோட்டல்ல உள்ள போகும்போதே திலீ அம்மா சிரிச்சுட்டே "எப்ப நேற்று வந்துட்டீங்களா?" கேட்டபோது  எதுவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை. சற்று அநேரத்தில் அங்கிள் கைகுலுக்கி சிரித்துக் கொண்டு சொன்னார், "ஒரு மாதிரி நித்திரை கொண்டு வந்துட்டே என்ன"
'அவ்வ்வ்!'
"விம்மி, திலீ வீட்ட ஒலிபரப்புச் செய்துட்டியா?"
"அதெல்லாம் உடனேயே அப்டேட் பண்ணிட்டேன்"
ஒத்துக்கிடுறேன் நீ ஊடகவியலாளன்டா!

*********

நாம ஒரு விஷயத்தைப் பிளான் பண்ணிப் பண்ணினா அதுக்கு மேலால யாரோ பிளான் பண்ணி மொத்தமா பணால் ஆகிடும். நாங்க சும்மா பிளான் பண்ணினாலே இப்பிடின்னா மாஸ்டர் பிளான் போட்டா என்னவாகும்? கொடுமை என்னவெனில், பெரும்பாலும் பிளான் பண்ணும்போது அது சாதா பிளானா மாஸ்டர் பிளானா என்பது தெரிவதில்லை. அதனைப் பிளான் பண்ணுபவர்கள் தீர்மானிப்பதில்லை. மாறாக, பின்விளைவுகளே தீர்மானிகின்றன.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய்க்கொண்டிருந்த பேரூந்து. அதிகாலைநேரம் வவுனியா தாண்டிக்குளத்தில் தரித்து நின்றபோது, அதற்குள்ளிருந்து நான் பிளான் பண்ணிக் கொண்டிருந்தேன். டினேஷுக்கு ஃபோன் பண்ணலாமா? வேணாமா? டினேஷ் வந்தா வேப்பங்குளத்தில இருக்கிற அவன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போவான். அங்க போனா ரெண்டு மூணு நாளைக்கு அங்கயிருந்து கிளம்ப முடியாது - அன்புத் தொல்லை!

ஆக, யாழ்ப்பணத்திலிருந்து திரும்பி வரும்போது அங்க போகலாம் என்பது 'பிளான்!யாழ்ப்பாணம் போய் இரண்டு மணிநேரத்தில் தெரிந்தது அது 'மாஸ்டர் பிளான்' என்பது. 

செய்தி வந்தது - சண்டை தொடங்கி A9 வீதி மூடப்பட்டதாக!


*********

அந்த மாஸ்டர் பிளானுக்குப் பிறகு மூன்று மாசம் சிக்கி சீரழிஞ்சு எப்பிடிக் கொழும்புக்கு வந்து சேர்ந்தேன் என்பதை வார்த்தைகளில் சொல்வதை விட...


1 comment:

  1. வணக்கம்,ஜீ!நலமா?////ரண களத்திலையும் ஒரு...............................மருந்தே கட்டேல்லையோ?ஹ!ஹ!!ஹா!!!பிளான்,பிளான்,பிளான்!!!!!!!!!!

    ReplyDelete