Friday, July 27, 2012
Tuesday, July 24, 2012
ஜூலை இருபத்துமூன்றுகள்!
"நீ ஏமாத்துறே...நான் போலீசில சொல்லுவேன்!"
"போலீஸ் நான் சொல்றதத்தான் நம்பும். நீ தமிழ் நீ சொல்றதக் கேக்காது"
இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த காலம். கொழும்பில், அயல் வீட்டில் ஐந்து வயதே நிரம்பிய இரு தமிழ், சிங்களக் குழந்தைகளிடையே விளையாட்டின் போதான பேச்சு! நம்பக் கஷ்டமாக இருந்தது. தமிழர்கள் சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அந்தக் குழந்தைக்கு யார் சொல்லிக் கொடுத்தது?
Tuesday, July 17, 2012
Wednesday, July 11, 2012
இணையப் போராளி ஜீ..
இணையப் போராளி ஜீ தீவிர சிந்தனையிலிருந்தான்!
இப்போதெல்லாம் எதற்கு எழுதவேண்டும் என்றொரு கேள்வி அவன் மனதில் அடிக்கடி எழுகிறது! இதே கேள்வி மற்றவர்களிடம் எப்போதோ எழுந்தது வேறு விஷயம் 'இவனெல்லாம் எதுக்கு எழுதுறான்?'
எந்த ஒரு சீரியசான விஷயத்தையும் எள்ளலாக, நக்கலாக கூறிச் செல்லலாம் என முட்டாள்தனமாக நம்பியதால் ஒரு மொக்கைப் போராளியாக பெயர் வாங்கியிருந்தான்! அதெல்லாம் செல்லாது சமூக அக்கறை என்பது ஏ சமூகமே எனக் கேள்வி கேட்பது, உணர்ச்சியுடன் பொங்குவது, விழிப்புணர்ச்சி வழங்குவது மட்டுமே என்கிறார்கள் சமூக போராளிகள்!
Subscribe to:
Posts (Atom)