Wednesday, September 28, 2011

POSITIVE THINKING!


து என்ன மாயமோ மந்திரமோ தெரியல. நான் எதைப் பிளான் பண்ணினாலும் அது ஒண்ணுமே சரியா ஆவுறதில்ல!

Friday, September 16, 2011

இரத்தப்படலம்,விகடன்,பன்னிக்குட்டி ராம்சாமி-நன்றி!

இரத்தப்படலம்! (XIII Comics)
ஒரு வழியா இரத்தப்படலம் கையில கிடைச்சிட்டுது! நீண்ட நாட்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பூபாலசிங்கம் புத்தகசாலையில் (கொழும்பு)சொல்லிவைத்துவிட்டு (அப்போது வரவில்லை) அந்தப்பக்கம் போகவில்லை. சமீபத்தில் பதிவர் Vimalaharan எனது பதிவின் பின்னூட்டத்தில் இது பற்றி தெரிவித்திருந்தார். நன்றி நண்பா! 

எனக்காக ஒரு புத்தகம் எடுத்து வைத்திருந்தார்கள் போய் 'லபக்!'. என்னை மீறி சந்தோஷம் முகத்தில் பரவ...முன் பின் புரட்டிப்பார்க்க - தடவிப் பார்த்ததாகக் கூட ஞாபகம்! - கடையில் நின்ற ரெண்டு அங்கிள்ஸும் சிரித்தவாறே பாத்திட்டிருந்தாங்க! சின்னப்புள்ளத்தனமா இருந்திருக்குமோ?


ஒரு காலத்தில வெறித்தனமா அலைஞ்சு திரிஞ்சது, எவ்வளவோ தேடியும் முதல் மூன்று பாகமும் யாழ்ப்பாணத்தில கிடைக்காதது - எல்லா பிளாஷ் பேக்கும் வந்து போச்சு! இதெல்லாம் அவர்களுக்குத் தெரிய நியாயமில்லையே!

Wednesday, September 14, 2011

திருமணம் நண்பர்களைப் பிரிக்குமா?, அஜீத்தும் ஆச்சரியங்களும்!

திருமணம் நண்பர்களைப் பிரிக்குமா?


நண்பர்களோடு தொடர்புகளைப் பேணுவதில் என்னோட சுறுசுறுப்பு யாருக்குமே வராது. ஆனா நம்ம பிரண்ட்ஸ் இருக்கிறாங்களே அவனுங்க நம்மள விடப் பெரிய கில்லாடிங்க!

Thursday, September 8, 2011

தமிழ்ப்பெண்களா இப்படி?


கஜினி படத்தில் கல்பனா (அசின்) கண்தெரியாத பெரியவர் ஒருவரைக் கை பிடித்து ரோட்டைக் கடகும்போது சுற்றிவர என்ன நடக்கிறது என்பதைச் சொல்லிக்கொண்டே வரும் காட்சியை யாராலும் மறக்கமுடியாது! 

Wednesday, September 7, 2011

The Grand Voyage


பிரான்சில் வாழும் இஸ்லாமியனான ரெடா, மத நம்பிக்கைகள் எதுவுமில்லாதவன். அப்பாவின் முன்னால் எதுவும் எதிர்த்துப்பேச முடியாமல் தலையாட்டிவிட்டு பின்னர் அம்மாவிடம் வந்து குமுறும் சராசரி டீன் ஏஜ் பையன்.

Friday, September 2, 2011

அப்பா!


'அந்தாளோட தொல்லை தாங்கலடா' - அப்பா குறித்து அன்பாக நண்பர்களிடம் அடிக்கடி கூறியதுண்டு! இப்படிச் சொல்லாத பையன்கள் இருக்கிறார்களா?

அப்பரின் தொல்லை தாங்கமுடியவில்லை என்ற மகன்களின் புலம்பலும், என் பேச்சை மதிக்கிறானில்லை என்ற அப்பாக்களின் ஆதங்கங்களும் கலந்த புகார்கள் அம்மாக்களின் பார்வைக்கு வருவதை பல வீடுகளில் பார்க்கலாம்!

சின்னவயதில் அப்பாவின் நெஞ்சில் தூங்கி, அப்பா தூக்கிக்கொண்டு நடந்து செல்கையில் தோளில் முகம்புதைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த நாட்கள் நினைவுகளின் இடுக்குகளில் எங்கோ ஒளிந்திருந்து எப்போதாவது எட்டிப்பார்க்கும்!