எப்படி எடுத்தால் அரசாங்கம் விருது கொடுக்கும் என்று பார்த்து படமெடுத்தால் அவர் மிகவும் திறமைசாலி... இல்லையா?
தொண்ணூறுகளில் அவர் ஒரு நல்ல 'தமிழ்' இயக்குனராக இருந்தார்.குறிப்பாக 'மௌன ராகம்'
அவரது மிகச்சிறந்த படம் (master piece ) 'நாயகன்' அதன் பின் வந்த அவரது எந்த படமும் நாயகனை மிஞ்சவில்லை என்றே நான் நினைகிறேன்.
அவர் கடைசியாக எடுத்த தமிழ் படங்கள் அலை பாயுதே, ஆய்த எழுத்து
மற்றவை எல்லாம் வேற்று மொழிப்படத்தை தமிழில் 'டப்' பண்ணியது போன்ற உணர்வு.
ஆனால் ஏதோ வட்டார 'எபெக்ட்' கொடுப்பதற்காக ' எலே, ச்சொன்னீய, ச்சொல்லுதீய, யாருவே ' போன்ற சொற்கள்.
காட்சியமைப்புகளில், நடிகர்களில் தமிழுக்கு சம்பந்தமே இல்லாமல், படத்துடன் பார்வையாளன் ஒன்றமுடியாமல் இருக்கும்போது வட்டார வழக்கில் பேசினால்?
உதாரணத்துக்கு 'டைட்டானிக்' படத்துக்கு தமிழ் 'டப்' இப்படி இருந்தால்?,
' என்ன ஜாக் ச்சொல்லுதீய? நெசமாத்தான் என்னைய புடிச்சிருக்கா?'
'அட எம்மேல சத்தியமா புள்ள.....நீன்னா உசுரு '
..............
' எலே ஜாக் ஓடுறாமில......அவன புடிலே'
கொடுமையா இருக்காதா?
காஷ்மீர், நாகாலாந்து, நக்சல்கள், தீவிரவாதம்,ஒடுக்கப்பட்டவர்கள், ஏதோ ஒரு இலட்சியத்துக்காக போராடுபவர்களை, அதைப்பற்றிய எந்தவொரு சரியான கண்ணோட்டமும் இல்லாது, அவர்களை ஒரு குழப்பவாதிகளாக சித்தரித்து, முடிந்த வரையில் கொச்சைப்படுத்துவதன் மூலம் இந்திய அரசை மகிழ்வித்து, விருதுகளைப் பெற்றுக்கொள்கிறார்.
மாதவன் ' எதுக்காக இந்த சண்டை எல்லாம்?' ( படத்தில் மாதவன் பத்திரிகையில் உருக்கமாக கதை எல்லாம் எழுதுகிறார் படத்தில் இது தெரியவில்லை ஒருவேளை 'ஹிந்து' தான் வாசிப்பாரோ? )
பிராகாஷ்ராஜ் ' உலக நாடுகளுக்கு ஆயுதங்கள் விக்க வேணும், ஆயுத தரகர்களுக்கும் லாபம் வேணும் ' - இதுதான் மணிரத்னம்.
இதை எல்லாம் கவனிக்காமல் 'ச்சா மணிரத்னம் இலங்கையை பிரச்சனையை காட்டிட்டாண்டா' எனப் புல்லரித்த ஆத்மாக்கள் ஏராளம்.
மணிரத்னம் ஸ்டைல் என்று நாங்கள் ஒருகாலத்தில் சிலாகித்துப் பேசுவது (வசங்களை தவிர்த்து ) ஒளிப்பதிவு (அநேகமாக பி.சி.ஸ்ரீராம் அல்லது சந்தோஷ் சிவன் ) கொஞ்சம் அரையிருட்டாக நன்றாகத்தானிருக்கும்.
நாங்கள் நண்பர்கள் யாரும் எடுத்த கொஞ்சம் இருட்டான புகைப்படங்களை பார்த்தாலே மணிரத்னம் ஸ்டைலா என்று கேட்பதுண்டு.
அப்புறந்தான் தெரிஞ்சுது,
ஹொலிவூட் காரன்களைப் பார்த்து கதையைக் 'கொப்பி' அடிக்கலாம். ஒளி அமைப்பையுமா ?
சாதாரண டிஜிட்டல் காமரா வில் எடுக்கும்போதே இந்தியா,இலங்கை போன்ற நாடுகளுக்கும், ஐரோப்பிய, வட அமெரிக்க, கனடா போன்ற நாடுகளில் எடுக்கப்படும் புகைபடத்துக்குமான வித்தியாசம் எமக்கு தெரியும்.
அது அந்தந்த நாடுகளின் நிலவும் காலநிலைக்கு ஏற்ப இயல்பாகவே அமைந்து விட்ட பிரகாசம் ( lightning )
அந்த நாட்டுக்காரன் ஒரு அறையிலுள்ள யன்னலை திறந்தா, எவ்வளவு வெளிச்சம் வருமோ அதை அவன் தன்னோட படத்தில காட்ட,.... நம்மாளு அதைப் பார்த்துவிட்டு, , இருட்டில படம் எடுக்க,....நாங்க எல்லாம் அத பாத்திட்டு 'ஐயோ ஹோலிவூட் ஸ்டைல்லயே எடுக்கிறாம்பா' ன்னு புல்லரித்து,....என்னத்த சொல்ல.
God father தான் நாயகனாக வந்தது என சொல்ல பட்டாலும் கூட அது படமாக்கப்பட்ட விதத்தில், திரைக்கதையில் ஒரு நேர்மை இருந்தது. அது எங்களுக்கு பிடிச்சிருந்தது.
'மணி இப்போதெல்லாம் ஹொலிவூட் டைவிட்டு இலத்தின் அமெரிக்க சினிமா வைத்தான் பார்க்கிறார்' ன்னு ஒரு செய்தி (செல்வராகவனும் - city of god - புதுப்பேட்டை )
அதில ஒரு வசதி என்னன்னா அதெல்லாம் உலக சினிமால தான் வரும் 'ஹொலிலிவூட்' னா ஈசியா கண்டு பிடிச்சிடுவாங்க. அதோடு வித்தியாசமான, நல்ல கதைகளும் கூட.
அப்படித்தான் Amores perros என்ற Mexican படத்தை பார்த்து ஆய்த எழுத்து உருவானது.
ஒரு நல்ல படத்தை copy அடித்து இன்னொரு நல்ல படத்தை எடுப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அது 'டப்பிங்' படமாக இருக்கக்கூடாது. எங்களுக்கு மணியிடமிருந்து நல்ல 'தமிழ்' படம் வேண்டும்.
நான் ராவணன் இன்னும் பார்க்கவில்லை. ஸ்டில்ஸ் ஐப்பார்க்கும்போது,
கருமை படர்ந்த அடர் காடு, குளு குளு ஆறு,அருவி, கரும்பச்சை மரங்கள் (அமேசன் காடுகள் போல்), முகத்தில் பெயிண்ட் அடித்துக்கொண்டு விக்ரம் குழுவினரையும் பார்க்கும்போது Apocalypto ஞாபகம் வருது.
அபோகலிப்டோ (Apocalypto) - Hollywood நடிகர் Mel Gibson இயக்கத்தில் வெளிவந்த இலத்தின் அமெரிக்க மொழியில் (மாயன்) எடுக்கப்பட்ட படம்.
| Tweet |
|

